Breaking

Saturday, April 4, 2026

4:36:00 AM

9TH TAMIL - பகுபத உறுப்பிலக்கணம்


  • ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் உணர்த்துவது சொல். இதனைப் பதம் என்றும் கூறுவர்.
  • இப்பதம் பகாபதம், பகுபதம் என இரண்டு வகைப்படும்.

பகாபதம்
  • பிரித்தால் பொருள் தராத சொல் பகாபதம் எனப்படும்.
  • எ.கா. மரம், உண், பல, பிற, சார
பகுபதம்
  • பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள் தரக் கூடியதுமான சொல் பகுபதம் எனப்படும்.
  • எ.கா. நடந்தான், நின்றார்
பெயர்ப்பகுபதம்
  • வேலன் – வேல்+அன் (வேல் – பகுதி, அன் – விகுதி)
வினைப்பகுபதம்
  • செய்தான் – செய்+த்+ஆன் ( செய் – பகுதி, த் – இடைநிலை, ஆன் – விகுதி)
பகுபத உறுப்புகள்
  • பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். 
  • அவை, பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்பனவாகும்
பகுதி
  • பகுபதத்தின் முதல் உறுப்பு பகுதி.
  • ஒரு சொல்லின் அடிச் சொல்லே பகுதியாகும்.
  • இதை முதனிலை என்றும் கூறுவர்.
  • பகாபதமாக அமையும்.
  • ஏவல் (கட்டளை) பொருளில் வரும்.
விகுதி
  • பகுபதத்தின் இறுதி உறுப்பு விகுதி
  • இதனைக் கடைநிலை என்றும் கூறுவர்
  • இவ்விகுதி திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும்.
இடைநிலை
  • பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும் உறுப்புக்கு இடைநிலை என்று பெயர்.
  • வினைப் பகுபதத்தில் வரும் இடைநிலையைக் கால இடைநிலை, எதிர்மறை இடைநிலை என இருவகைப்படுத்துவர்.
  • பெயர்ப் பகுபதத்தில் வரும் இடைநிலையைப் பெயர் இடைநிலை என்பர்.
கால இடைநிலை
  • இறந்தகால இடைநிலைகள - த், ட், ற், இன்
  • நிகழ்கால இடைநிலைகள் - கிறு, கின்று, ஆநின்று
  • எதிர்கால இடைநிலைகள் - ப், வ்
  • எதிர்மறை இடைநிலைகள் – ஆ, அல், இல்
  • பெயர் இடைநிலைகள் - ச், ஞ், ந், த், வ்
சந்தி
  • பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும் உறுப்பு, சந்தி எனப்படும்.
  • சந்தி, பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது பெருவழக்காகும்.
  • பெரும்பாலும் த், ப், க் என்னும் மூன்று எழுத்துகளுள் ஒன்று சந்தியாக வரும்.
  • உடம்படுமெய்கள் (ய். வ்) சந்தியாக வருவதுண்டு.
சாரியை
  • பகுதி, விகுதி, இடைநிலையைச் சார்ந்து வரும் உறுப்பு சாரியை.
  • பெரும்பாலும் சாரியை இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.
  • அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன் என்பன சாரியைகளாகும்.
விகாரம்
  • பகுபத உறுப்புகளில் பகுதியிலும் சந்தியிலும் ஏற்படும் வடிவ மாற்றமே விகாரமாகும்
  • ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்தும் கெட்டும் நெடில் குறிவாகவும் மாற்றம் பெறும். இத்தகைய மாற்றமே விகாரம் எனப்படும்.
எழுத்துப் பேறு
  • பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப் பேறு எனப்படும்.
  • பெரும்பாலும் த் மட்டுமே எழுத்துப் பேறாக வரும்.
  • சாரியை இடத்தில் த் வந்தால் அது எழுத்துப்பேறு
நினைவில் கொள்க.
  • இறந்தகால இடைநிலைகள் – த், ட், ற், இன்
  • நிகழ்கால இடைநிலைகள் – கிறு, கின்று, ஆநின்று
  • எதிர்கால இடைநிலைகள் – ப், வ்
  • எதிர்மறை இடைநிலைகள் – ஆ, அல், இல்
  • தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் – என், ஏன், அல், அன், கு, டு, து, று
  • தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் – எம், ஏம், அம், ஆம், ஓம், கும், டும், தும், றும்
  • முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள் – ஐ, ஆய், இ
  • முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள் - இர், ஈர், மின்
  • படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதிகள் - அன், ஆன்
  • படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதிகள் - அள், ஆள்,
  • படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதிகள் - அர், ஆர், ப, மார், கள்
  • படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் - து, று, டு
  • படர்க்கைப் பலவின்பால் வினைமுற்று விகுதிகள் - அ, ஆ
  • வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க, ய, இயர்
  • தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள் - அ, உம்
  • தெரிநிலை வினையெச்ச விகுதிகள் – உ, இ
3:46:00 AM

9TH TAMIL - தண்ணீர்

நூல் வெளி 

கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றியவர். கவிதைகளையும் எழுதியிருக்கிறார். சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன் முதலியவை இவரது குறிப்பிடத் தகுந்த சிறுகதைத் தொகுப்புகள்.

  • தண்ணீர் சிறுகதையின் வரும் சிறுமி = இந்திரா.
  • நல்ல தண்ணீர் கிடைத்த கிணறு = உலகம்மாள் கோவில் கிணறு.
  • இந்திராவின் ஊருக்கு அருகே உள்ள ஊர் = பிலாப்பட்டி.
  • “தண்ணீர்” என்னும் சிறுகதையின் ஆசிரியர் = கந்தர்வன் என்னும் நாகலிங்கம்.
  • கந்தர்வனின் இயற்பெயர் = நாகலிங்கம்.
  • இவர் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
  • தமிழ்நாடு அரசின் கருவூல கணக்குத்துறையில் பணியாற்றியவர்.
  • கந்தர்வனின் சிறுகதைகள் = தண்ணீர், சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன்.
  • மறைநீர் (Virtual Water) அல்லது “புலப்படாத் தண்ணீர்”.
  • கண்ணுக்குத் தெரியாமல் நாம் இரண்டு வகையில் நீரைப் பயன்படுத்துகிறோம்.
  • முதல் வகை நாம் பயன்படுத்தும் பொருள்கள் வழியாக; இரண்டாவது வகை நாம் உண்ணும் உணவின் வழியாக.
  • “புலப்படாத் தண்ணீர்” என்பது உணவுப் பொருள்களின் உற்பத்தி குறித்தும் அதனை உற்பத்தி செய்யச் செலவிடப்பட்ட தண்ணீர்த் தேவை குறித்தும் பேசுவது ஆகும்.
  • ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய 822லிட்டர் தண்ணீர் தேவை.
  • ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய 1780லிட்டர் தண்ணீர் தேவை.
  • ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 2500 லிட்டர் தண்ணீர் தேவை.
  • ஒரு கிலோ காப்பிக் கொட்டையை உற்பத்தி செய்ய 18,900 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது.
  • நீர்வளத்தைப் பாதுகாக்க நாட்டின் மேல்புற நீர்வளம் மற்றும் நிலத்தடி நீர்வளம் குறித்து அக்கறை கொள்ளவேண்டும்.
  • நீர் அதிகம் தேவைப்படும் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதைத் தவிர்த்து, தேவைக்கேற்ப இறக்குமதி செய்துகொள்ள வேண்டும்.
  • இதனால் நாட்டின் நிலத்தடி நீரும் ஆற்று நீரும் சேமிக்கப்படும்.
  • “கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்” என்ற நூலின் ஆசிரியர் = மா.அமரேசன்.
  • “தண்ணீர் தண்ணீர்” நாவலின் ஆசிரியர் = கோமல் சுவாமிநாதன்
  • “தண்ணீர் தேசம்” கவிதை நூலின் ஆசிரியர் = கவிஞர் வைரமுத்து
  • “வாய்க்கால் மீன்கள்” நூலின் ஆசிரியர் = வெ.இறையன்பு.
  • “மழைக்காலமும் குயிலோசையும்” நூலின் ஆசிரியர் = மா.கிருஷ்ணன்.

1. கந்தர்வனின் இயற்பெயர்

அ) மாணிக்கம்    

ஆ) நாகலிங்கம்

இ) முகிலன்    

ஈ) காத்தவராயன்

2. கந்தர்வனின் சிறுகதைத் தொகுப்பு அல்லாத ஒன்று.

அ) சாசனம்    

ஆ) ஒரு சிறு இசை

இ) ஒவ்வொரு கல்லாய்  

ஈ) கொம்பன்

2:10:00 AM

9TH TAMIL - புறநானூறு


நூல்வெளி

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு. இது பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது. இந்நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.

குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி - வளம்தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சொர்க்கத்து இனிது - சிறுபஞ்சமூலம் 64


வான் உட்கும் வடிநீண் மதில்,
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்றுஅதன்
தகுதி கேள்இனி மிகுதி ஆள!

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!*

வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே ! அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே;
நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம ! இவண் தட்டோரே!
தள்ளாதோர் இவண் தள்ளா தோரே! - (புறம் 18:11 – 30)

(பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது)
திணை: பொதுவியல் துறை: முதுமொழிக்காஞ்சி

சொல்லும் பொருளும்
  • யாக்கை - உடம்பு, 
  • புணரியோர் - தந்தவர், 
  • புன்புலம் - புல்லிய நிலம், 
  • தாட்கு - முயற்சி, ஆளுமை; 
  • தள்ளாதோர் இவண் தள்ளாதோரே - குறைவில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்.
இலக்கணக்குறிப்பு
  • மூதூர், நல்லிசை, புன்புலம் - பண்புத்தொகைகள்;
  • நிறுத்தல் - தொழிற்பெயர் ; 
  • அமையா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். 
  • நீரும் நிலமும், உடம்பும் உயிரும் - எண்ணும்மைகள்; 
  • அடு போர் - வினைத்தொகை.
  • கொடுத்தோர் - வினையாலணையும் பெயர்.
பகுபத உறுப்பிலக்கணம்

நிறுத்தல் - நிறு + த் + தல்

நிறு - பகுதி
த் - சந்தி
தல் - தொழிற்பெயர் விகுதி

கொடுத்தோர் - கொடு +த் + த் + ஓர்

கொடு - பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி


புறநானூறு பொன்மொழிகள்

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!
உண்பது நாழி உடுப்பவை இரண்டே ! (புறம் – 189)

யாதும் ஊரே யாவரும் கேளிர் ! ( புறம் – 192 )

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே ! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ! ( புறம் – 312)

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே ! ( புறம் – 183 )

குடபுலவியனார்
  • “நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
  • “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
  • “உண்டி முதற்றே உணவின் பிண்டம்” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
  • “உணவெனப் படுவது நிலத்தொடு நீரே” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
  • “நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்

1. ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே’ என்னும் பாடலடி இடம்பெற்ற இலக்கியம்.

அ) புறநானூறு    

ஆ) மணிமேகலை

இ) திருமந்திரம்    

ஈ) திருக்குறள்

2. ‘நீரும் நிலமும் புணரியோர் ஈண்டு, உடம்பும் உயிரும் படைத்திசி னோரே’ எனும் அடிகளின் பாடலாசிரியர்.

அ) மாங்குடி மருதனார்  

ஆ) குடபுலவியனார்

இ) காரியாசான்   

ஈ) காக்கைபாடினியார்

3. ‘உணவெனப் படுவது நிலத்தொடு நீரே’ எனக் கூறியவர்

அ) மாங்குடி மருதனார்  

ஆ) குடபுலவியனார்

இ) காரியாசான்   

ஈ) கபிலர்

4. ‘உண்பது நாழி உடுப்பது இரண்டே’ எனக் கூறும் நூல்

அ) புறநானூறு    

ஆ) கொன்றைவேந்தன்

இ) திருமந்திரம்    

ஈ) திருக்குறள்

5. ‘கொடுத்தோர்’ – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அ) பகுதி+விகுதி  

ஆ) பகுதி+இடைநிலை+விகுதி

இ) பகுதி+சந்தி+இடைநிலை+விகுதி

ஈ) பகுதி+சந்தி+இடைநிலை+சாரியை+விகுதி

6. ‘குளம்தொட்டுக் கோடு பதித்து’ எனக் கூறும் நூல்.

அ) அகநானூறு   

ஆ) புறநானூறு

இ) கலித்தொகை   

ஈ) சிறுபஞ்சமூலம்

7. ‘மல்லல் மூதூர் வயவேந்தே’ இவ்வடியில் ‘மல்லல்’ என்பதன் பொருள்.

அ) மறுமை 

ஆ) பூவரசு 

இ) வளம்  

ஈ) பெரிய

8. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க.

அ) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்.

ஆ) சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே.

இ) பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்.

ஈ) யாதும் ஊரே யாவரும் கேளிர்.

9. ‘அடுபோர்’ - இலக்கணக் குறிப்பு தருக.

அ) பண்புத்தொகை   

ஆ) வினைத்தொகை

இ) பெயரெச்சம்   

ஈ) எண்ணும்மை

10. பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்வது.

அ) பதிற்றுப் பத்து   

ஆ) புறநானூறு

இ) பரிபாடல்    

ஈ) கலித்தொகை

1:49:00 AM

9TH TAMIL - பெரியபுராணம்


இலக்கணக்குறிப்பு
  • கருங்குவளை, செந்நெல் - பண்புத் தொகைகள்.
  • விரிமலர் - வினைத்தொகை
  • தடவரை - உரிச்சொல் தொடர்
பகுபத உறுப்பிலக்கணம்

பாய்வன - பாய் + வ் + அன் + அ

பாய் - பகுதி 
வ் - எதிர்கால இடைநிலை, 
அன் - சாரியை
அ - பலவின்பால் வினைமுற்று விகுதி

சொல்லும் பொருளும்:
மா - வண்டு; 
மது - தேன் ; 
வாவி பொய்கை.
வளர் முதல் - நெற்பயிர் ; 
தரளம் - முத்து; 
பணிலம் - சங்கு; 
வரம்பு - வரப்பு.
கழை - கரும்பு ; 
கா - சோலை ; 
குழை - சிறு கிளை; 
அரும்பு - மலர் மொட்டு; 
மாடு - பக்கம்; 
நெருங்கு வளை - நெருங்குகின்ற சங்குகள் ; 
கோடு - குளக்கரை.
ஆடும் - நீராடும் ; 
மேதி - எருமை ; 
துதைந்து எழும் - கலக்கி எழும்; 
கன்னி வாளை - இளமையான வாளைமீன்.
சூடு - நெல் அரிக்கட்டு ; 
சுரிவளை - சங்கு ; 
வேரி - தேன்.
பகடு - எருமைக்கடா ; 
பாண்டில் - வட்டம் ; 
சிமயம் - மலையுச்சி.
நாளிகேரம் - தென்னை ; 
நரந்தம் - நாரத்தை ; 
கோளி - அரசமரம் ; 
சாலம் - ஆச்சா மரம் ; 
தமாலம் - பச்சிலை மரம்; 
இரும்போந்து - பருத்த பனைமரம் ; 
சந்து - சந்தன மரம் ; 
நாகம் - நாகமரம் ; 
காஞ்சி - ஆற்றுப்பூவரசு

1. பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.

அ) திருத்தொண்டத் தொகை – சுந்தரர்

ஆ) திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி

இ) அற்புத திருவந்தாதி – காரைக்கால் அம்மையார்

ஈ) திருத்தொண்டர் புராணம் – சேக்கிழார்

2. சேக்கிழார் வாழ்ந்த காலம்.

அ) எட்டம் நூற்றாண்டு  

ஆ) பத்தாம் நூற்றாண்டு

இ) பன்னிரண்டாம் நூற்றாண்டு 

ஈ) பதினாறாம் நூற்றாண்டு

3. ‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ என்று சேக்கிழாரைப் பாராட்டியவர்.

அ) இரண்டாம் குலோத்துங்கன் 

ஆ) சிவப்பிரகாச சுவாமிகள்

இ) மீனாட்சி சுந்தரனார்  

ஈ) துரைசாமி பிள்ளை

4. சேக்கிழார் யாருடைய அரசவையில் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

அ) இரண்டாம் குலோத்துங்கன் 

ஆ) சீயகங்கன்

இ) கங்கைகொண்டான்  

ஈ) நந்திவர்மன்

5. ‘மாவி ரைத்தெழுந் தார்ப்ப’ எனும் தொடரில் ‘மா’ என்பதன் பொருள்.

அ) பெரிய 

ஆ) பசு  

இ) வண்டு 

ஈ) மரம்

6. பொருந்தாததைக் கண்டறிக.

அ) வாவி – பொய்கை  

ஆ) தரளம் – முத்து

இ) கோடு – குளக்கரை  

ஈ) மேதி – பசு

7. ‘பகடு’ என்பதன் பொருள்.

அ) ஆட்டுக்கடா   

ஆ) எருமைக்கடா

இ) ஆண் பன்றி   

ஈ) ஆண் மான்

8. பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) சந்து – சந்தனமரம்  

ஆ) கோளி – அரசமரம்

இ) சாலம் – பனைமரம்  

ஈ) காஞ்சி – ஆற்றுப் பூவரசு

9. ‘பாய்வன’ பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அ) பகுதி+விகுதி  

ஆ) பகுதி+இடைநிலை+விகுதி

இ) பகுதி+சந்தி+இடைநிலை+விகுதி

ஈ) பகுதி+இடைநிலை+சாரியை+விகுதி

10. பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) வேரி – தேன்   

ஆ) மாடு – பக்கம்

இ) கழை – கரும்பு   

ஈ) சூடு – சங்கு

1:32:00 AM

9TH TAMIL - நீரின்றி அமையாது உலகு






1. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

அ) அகழி     

ஆ) கல்லணை

இ) உறைக்கிணறு   

ஈ) கேணி

2. இயற்கையை வாழ்த்திப் பாடியவர்.

அ) நல்லாதனார்   

ஆ) ஓரம்போகியார்

இ) இளங்கோ    

ஈ) ஔவையார்

3. உலகச் சுற்றுச் சூழல் நாள்.

அ) பிப்ரவரி 21    

ஆ) மார்ச் 15

இ) ஜீன் 5    

ஈ) ஏப்ரல் 22

4. பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியை ....... என்று அழைப்பர்.

அ) அகழி  

ஆ) கேணி 

இ) கண்மாய் 

ஈ) ஊருணி

5. ‘உணவெனப் படுவது நிலத்தொடு நீரே’ எனக் கூறும் இலக்கியம்.

அ) புறநானூறு    

ஆ) பதிற்றுப்பத்து

இ) திருக்குறள்    

ஈ) சிலப்பதிகாரம்

6. இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை’ என அறியப்படுபவர்.

அ) பென்னி குயிக்   

ஆ) விஸ்வேஸ்வரய்யா

இ) சர். பக்கிள்    

ஈ) சர். ஆர்தர் காட்டன்

7. ‘கல்லணைக்கு கிராண்ட் அணை’ எனப் பெயர் சூட்டியவர்.

அ) பென்னி குயிக்   

ஆ) விஸ்வேஸ்வரய்யா

இ) சர். பக்கிள்    

ஈ) சர். ஆர்தர் காட்டன்

8. கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கோதாவரியின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் பெயர்.

அ) தௌலீஸ்வரம்   

ஆ) சர்தார் சரோவர்

இ) நாகர்ஜினா சாகர்   

ஈ) தெரி

9. தௌலீஸ்வரம் அணை கட்டப்பட்ட ஆண்டு.

அ) 1738  

ஆ) 1787  

இ) 1837 

ஈ) 1873

10. ‘தமிழர் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன’ என்று கூறியவர்.

அ) மீனாட்சி சுந்தரம்   

ஆ) தொ. பரமசிவம்

இ) தொ. மு. சி. ரகுநாதன்  

ஈ) கந்தர்வன்

11. ‘குள்ளக் குளிரக் குடைந்து நீராடி’ என்று கூறியவர்.

அ) மாங்குடி மருதனார்  

ஆ) இளங்கோ

இ) ஆண்டாள்    

ஈ) மாணிக்கவாசகர்

12. தெய்வச் சிலைகளைக் குளிர்க்க வைப்பதை எவ்வாறு கூறுவர்.

அ) நீர் ஆடல்    

ஆ) திருமஞ்சனம் ஆடல்

இ) நீராட்டு    

ஈ) தூய்மை செய்தல்

13. ‘சனி நீராடு என்பது ............ வாக்கு.

அ) திருமூலர்    

ஆ) ஔவை

இ) திருவள்ளுவர்   

ஈ) ஆண்டாள்

14. ‘ஜான் பென்னி குவிக்’ கட்டிய அணையின் பெயர்.

அ) முல்லைப் பெரியாறு  

ஆ) பவானி சாகர்

இ) ஆழியார்    

ஈ) சாத்தனூர்

15. ‘நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன’ என்று கூறியவர்.

அ) நல்வேட்டனார்   

ஆ) கணிமேதாவியார்

இ) மாங்குடி மருதனார்  

ஈ) நல்லந்துவனார்

16. பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) குண்டு – குறிப்பதற்கேற்ற சிறுகுளம்

ஆ) அருவி – மலைமுகட்டுத் தேக்க நீர்

இ) அகழி – கோட்டைப் புறத்து நீர் அரண்

ஈ) கூவல் – மக்கள் பருகுநீர்நிலை

17. திருமணம் முடிந்த பின் தொடர் நிகழ்வை ....... என்பர்.

அ) சனிநீராடு    

ஆ) மஞ்சள் நீராட்டு

இ) கடலாடுதல்   

ஈ) பூப்புனித நீராட்டு

18. பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) குண்டம் – குறிக்கும் நீர்நிலை

ஆ) கூவல் -  உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

இ) கண்மாய் – உவர் நீர்நிலை

ஈ) ஊருணி – மக்கள் பருகும் நீர்நிலை

19. அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு ......... எனப்படும்.

அ) அகழி  

ஆ) கேணி 

இ) கண்மாய் 

ஈ) ஊருணி

20. பல்வகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம் .......... எனப்படும்.

அ) இலஞ்சி 

ஆ) கேணி 

இ) கண்மாய் 

ஈ) ஊருணி

Friday, April 3, 2026

6:43:00 PM

9TH TAMIL - எழுத்து - அளபெடை

அளபெடை

அளபெடை என்றால் 'அளபெடுத்தல்' அல்லது நீண்டு ஒலித்தல் என்று பொருள். செய்யுளில் ஓசை குறையும்போதோ அல்லது ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காகவோ ஓர் எழுத்து தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து நீண்டு ஒலிப்பதே அளபெடை ஆகும். இது,  உயிரளபெடை, ஒற்றளபெடை இரண்டு வகைப்படும்:

1. உயிரளபெடை

உயிரளபெடை, செய்யுளிசை அளபெடை,  இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை மூன்று என வகைப்படும்:

செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளபெடை): 
  • செய்யுளில் ஓசை குறையும்போது அதை நிறைவு செய்ய அளபெடுப்பது.
  • எடுத்துக்காட்டு: ஓஓதல் வேண்டும், உழாஅர்.
இன்னிசை அளபெடை
  • செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும், இனிய ஓசைக்காகக் குறில் நெடிலாகி அளபெடுப்பது.
  • எடுத்துக்காட்டு: கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம்.
சொல்லிசை அளபெடை: 
  • செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளபெடுப்பது.
  • எடுத்துக்காட்டு: உரனசைஇ (நசை - விருப்பம்; நசைஇ - விரும்பி).
2. ஒற்றளபெடை
  • செய்யுளில் ஓசை குறையும்போது அதை நிறைவு செய்ய மெய்யெழுத்துகள் (ஒற்றெழுத்துகள்) அளபெடுப்பதே ஒற்றளபெடை ஆகும்.
  • அளபெடுக்கும் எழுத்துகள்: ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்து மெய்யெழுத்துகளும் 'ஃ' என்னும் ஆய்த எழுத்தும் (மொத்தம் 11) அளபெடுக்கும்.
  • எடுத்துக்காட்டு: எங்ஙுறை இறைவன், எஃஃகிலங்கிய
6:14:00 PM

9TH TAMIL - ஆறாம் திணை

நூல்வெளி

எழுத்தாளர் அ. முத்துலிங்கம், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். பணி தொடர்பாகப் பல நாடுகளுக்குப் பயணித்திருக்கும் இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். அக்கா, மகாராஜாவின் ரயில்வண்டி, திகடசக்கரம் உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றார். வம்சவிருத்தி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றவர். வடக்கு வீதி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1999இல் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசையும் பெற்றிருக்கின்றார்.

பனியும் பனி சார்ந்த நிலமும்

சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகையில் ஒன்று ஐங்குறுநூறு. ஐவகை நிலத்திற்கும் ஒவ்வொரு நூறு பாடலாக ஐந்து நூறு பாடல்கள் கொண்டது. அந்நூலில் பனியும் பனி சார்ந்த நிலத்துக்கும் பாடல்கள் இல்லை. புலம்பெயர்ந்த பத்து லட்சம் மக்கள் சென்றடைந்தது பனிப் பிரதேசங்களுக்குத் தான்.

என்னுடைய கிராமம் கொக்குவில். அங்கே காகம் இருந்தது. ஆறுமணிக்குருவியும் இருந்தது. சரியாக காலை ஆறு மணிக்கு இந்தக் குருவி 'கீஈஈஈய்க்' 'கீஈஈஈய்க்' என்று சத்தமிடும். காகத்துக்குப் பறக்கும் எல்லை இரண்டு மைல் தூரம். ஆறுமணிக்குருவிக்கு எல்லையே கிடையாது. இமயமலைக்குப் பறந்துபோய் மீண்டும் திரும்பும். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் இந்த ஆறுமணிக்குருவிபோல. அவர்களுக்கு எல்லையே கிடையாது. அவர் உலகம் பனியும் பனி சார்ந்த நிலமும். ஆம், ஆறாம் திணை

பலவுள் தெரிக

1. கொழும்பில் கலவரம் வந்த ஆண்டு
  • 1957
  • 1958
  • 1959
  • 1960
விடை : 1958


2. அ.முத்துலிங்கம் குறிப்பிடும் ஆறாம் திணை
  • காடும் காடு சார்ந்த இடமும்
  • மலையும் மலை சார்ந்த இடமும்
  • பனியும் பனி சார்ந்த இடமும்
  • கடலும் கடல் சார்ந்த இடமும்
விடை : பனியும் பனி சார்ந்த இடமும்

3. அ.முத்துலிங்கம் பிறந்த இடம்
  • இந்தியா
  • பாகிஸ்தான்
  • வங்கதேசம்
  • இலங்கை
விடை : இலங்கை

4. ராபின்சன் குருசோ என்ற நூலின் ஆசிரியர்
  • பாரதியார்
  • டேனியல் டிஃபோ
  • சாண்டில்யன்
  • சுரதா
விடை : டேனியல் டிஃபோ

5. கடல்புறா நூலின் ஆசிரியர்
  • பாரதியார்
  • டேனியல் டிஃபோ
  • சாண்டில்யன்
  • சுரதா
விடை : சாண்டில்யன்


6. ஒரு இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூலை எரித்தால் போதும் என்று குறிப்பிடும் நூல்
  • கடல்புறா
  • ராபின்சன் குருசோ
  • பறவை
  • ஃபாரன்ஹீட் 451
விடை : ஃபாரன்ஹீட் 451

7. தமிழர் பாரம்பரிய நாள்
  • ஜனவரி 13
  • பிப்ரவரி 13
  • ஜனவரி 14
  • பிப்ரவரி 14
விடை : ஜனவரி 14

8. ஆறாம் திணையின் ஆசிரியர்
  • ஜெயமோகன்
  • முத்துராமலிங்கம்
  • சி.த.செல்லப்பா
  • பிரபஞ்சன்
விடை : முத்துராமலிங்கம்

9. ______ என்னும் சிறுகதை தொகுப்பிற்காக அ.முத்துலிங்கம் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசை பெற்றார்.
  • திகட சக்கரம்
  • அக்கா
  • வடக்குவீதி
  • வம்சவிருத்தி
விடை : வடக்குவீதி

11. கனடாவில் புதிய சாலைக்கு சூட்டப்பட்ட பெயர்
  • காவற்புரைச்சாலை
  • கூழைக்கடை வீதி
  • அகச்சாலை
  • வன்னிவீதி
விடை : வன்னிவீதி

12. அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்படும் நாள்
  • பிப்ரவரி 13
  • பிப்ரவரி 12
  • ஜனவரி 12
  • ஜனவரி 13
விடை : ஜனவரி 12

13. பின்வரும் எந்த தினத்துடன் தாய் மண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • சுதந்திர தினம்
  • அயலகத் தமிழர் தினம்
  • உள்ளாட்சி தினம்
  • குடியரசு தினம்
விடை : அயலகத் தமிழர் தினம்
5:56:00 PM

9TH TAMIL - தமிழோவியம்

நூல் வெளி 

ஈரோடு தமிழன்பன் எழுதிய 'தமிழோவியம்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது. இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒருகுழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று குறிப்பிட்டுள்ளார். 

ஈரோடு தமிழன்பன் புதுக்கவிதை, சிறுகதை முதலான பல வடிவங்களிலும் படைப்புகளை வெளியிட்டுள்ளார். ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்துள்ளார். இவரது வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 'தமிழன்பன் கவிதைகள் தமிழக அரசின் பரிசுபெற்ற நூல். இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.



காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!

அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை
அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்
நிகரிலாக் காப்பியப் பூவனங்கள் - உன்
நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்! - காலம் பிறக்கும் முன்....

ஏனிவ் விருட்டெனக் கேட்டுவரும் - நீதி
ஏந்திய தீபமாய்ப் பாட்டுவரும்
மானிட மேன்மையைச் சாதித்திடக் - குறள்
மட்டுமே போதுமே ஓதி, நட... - காலம் பிறக்கும் முன்....

எத்தனை எத்தனை சமயங்கள் - தமிழ்
ஏந்தி வளர்த்தது தாயெனவே
சித்தர் மரபிலே தீதறுக்கும் - புதுச்
சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே... - காலம் பிறக்கும் முன்...

விரலை மடக்கியவன் இசையில்லை - எழில்
வீணையில் என்று சொல்வதுபோல்
குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக்
கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்! - ஈரோடு தமிழன்பன்

இலக்கணக்குறிப்பு
  • எத்தனை எத்தனை, விட்டு விட்டு - அடுக்குத் தொடர்கள்
  • ஏந்தி - வினையெச்சம்
  • காலமும் - முற்றும்மை
பகுபத உறுப்பிலக்கணம்

வளர்ப்பாய் - வளர் + ப் + ப் + ஆய்

வளர் - பகுதி
ப் - சந்தி,
ப் - எதிர்கால இடைநிலை
ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

தெரிந்து தெளிவோம்

இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் -- பிங்கல நிகண்டு

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம் - பாரதியார்

தெரியுமா?

உலகத் தாய்மொழி நாள் - பிப்ரவரி 21
தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் இலங்கை , சிங்கப்பூர்

1. ‘ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவையில்லை என்று கூறியவர்.

அ) கந்தர்வன்    

ஆ) ஈரோடு தமிழன்பன்

இ) ஆண்டாள் பிரியதர்ஷினி 

ஈ) ந. பிச்சமூர்த்தி

2. ஈரோடு தமிழன்பனின் எந்தக் கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

அ) தமிழோவியம்   

ஆ) வணக்கம் வள்ளுவ

இ) தண்ணீர் தண்ணீர்  

ஈ) தமிழன்பன் கவிதைகள்

3. தமிழக அரசின் பரிசு பெற்ற தமிழன்பன் நூல் எது?

அ) தமிழோவியம்   

ஆ) வணக்கம் வள்ளுவ

இ) தண்ணீர் தண்ணீர்  

ஈ) தமிழன்பன் கவிதைகள்

4. ‘தமிழோவியம்’ என்னும் நூலின் ஆசிரியர்.

அ) பாரதிதாசன்   

ஆ) வாணிதாசன்

இ) இன்குலாப்    

ஈ) ஈரோடு தமிழன்பன்

5. ‘ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ’ எனப் புதுப்புது கவிதை வடிவங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.

அ) கல்யாண்ஜி   

ஆ) பிரியதர்ஷிணி

இ) தமிழன்பன்    

ஈ) கந்தர்வன்

6. ஈரோடு தமிழன்பனின் படைப்புத் தளங்கள் எது?

அ) கவிதை, கட்டுரை   

ஆ) புதுக்கவிதை, சிறுகதை

இ) புதுக்கவிதை, புதினம்  

ஈ) புதுக்கவிதை, நாவல்

7. உலகத் தாய்மொழி நாள்.

அ) பிப்ரவரி 21    

ஆ) மார்ச் 15

இ) ஜீன் 17    

ஈ) ஏப்ரல் 22

8. ‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ எனக் கூறும் நூல்

அ) காக்கைபாடினியம்  

ஆ) பிங்கல நிகண்டு

இ) தொன்னூல் விளக்கம்  

ஈ) குவலயாணந்தம்

9. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள்.

அ) இலங்கை, சிங்கப்பூர்  

ஆ) அமெரிக்கா, கனடா

இ) இங்கிலாந்து, பர்மா  

ஈ) நார்வே, மலேசியா

10. ‘நிகரிலாக் காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்’ என்று கூறியவர்.

அ) கல்யாண்ஜி   

ஆ) பிரியதர்ஷிணி

இ) தமிழன்பன்   

ஈ) கந்தர்வன்