Breaking

Showing posts with label TAMIL ELIGIBILITY TEST. Show all posts
Showing posts with label TAMIL ELIGIBILITY TEST. Show all posts

Friday, April 24, 2026

7:33:00 AM

8TH TAMIL - புணர்ச்சி

நிலைமொழி, வருமொழி

  • சொல்லில் முதலில் உள்ள சொல்லை நிலைமொழி என்றும், பின்னால் வந்து சேரும் சொல்லை வருமொழி என்று கூறுவார்.
  • எ.கா
    • தமிழமுது
    • தமிழ் = நிலைமொழி
    • அமுது = வருமொழி

புணர்ச்சி என்றால் என்ன

  • சொற்கள் சேரும் பொழுது நிலைமொழியின் இறுதி எழுதும், வருமொழியின் முதல் எழுதும் இணையும்.
  • நிலைமொழியின் ஈறும் (இறுதி எழுத்து), வருமொழியின் முதலும் இணைவதைப் “புணர்ச்சி” என்கிறோம்.

உயிரீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன

  • நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால், அது உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும்.
  • எ.கா:
    • சிலை + அழகு = சிலையழகு
  • இதில் “லை” (ல் + ஐ) ஆனது, நிலைமொளியான சிலை என்பதன் இறுதி எழுத்தாகும்.

மெய்யீற்றுப் பௌணர்ச்சி என்றால் என்ன

  • நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால், அது மெய்யீற்றுப் புணர்ச்சி எனப்படும்.
  • எ.கா:
    • மண் + அழகு = மண்ணழகு
  • இதில் நிலைமொழியின் இறுதி எழுத்து “ண்” ஆகும்.

உயிர்முதல் புணர்ச்சி என்றால் என்ன

  • வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால், அது “உயிர்முதல் புணர்ச்சி” எனப்படும்.
  • எ.கா:
    • பொன் + உண்டு = பொன்னுண்டு

மெய்முதல் புணர்ச்சி என்றால் என்ன

  • வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால், அது “மெய்முதல் புணர்ச்சி” எனப்படும்.
  • எ.கா:
    • பொன் + சிலை = பொற்சிலை (சி = ச் + இ)

இயல்பு புணர்ச்சி என்றால் என்ன

  • நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி எனப்படும்.
  • எ.கா:
    • தாய் + மொழி = தாய்மொழி

விகாரப் புணர்ச்சி என்றால் என்ன

  • இரண்டு சொற்கள் இணையும் பொழுது, நிலைமொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.

விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்

  • விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும். அவை,
    • தோன்றல் விகாரம்
    • திரிதல் விகாரம்
    • கெடுதல் விகாரம்

தோன்றல் விகாரம் என்றால் என்ன

  • நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஒரு எழுத்து தோன்றுவது “தோன்றல் விகாரம்” எனப்படும்.
  • எ.கா:
    • தமிழ் + தாய் = தமிழ்த்தாய்

திரிதல் விகாரம் என்றால் என்ன

  • நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது “ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது” திரிதல் விகாரம் எனப்படும்.
  • எ.கா:
    • வில் + கொடி = விற்கொடி

கெடுதல் விகாரம் என்றால் என்ன

  • நிலைமொழியும் வருமொழியும் இணையும் பொது “ஓர் எழுத்து மறைவது” கெடுதல் விகாரம் எனப்படும்.
  • எ.கா:
    • மனம் + மகிழ்ச்சி = மனமகிழ்ச்சி.

ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்தல்

  • இரண்டு சொற்கள் இணையும் போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வதும் உண்டு.
  • எ.கா:
    • நாடகம் + கலை = நாடகக்கலை
  • இங்கு,
    • கெடுதல் விகாரம் படி = நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்தது
    • தோன்றல் விகாரம் படி = க் என்னும் மெய் எழுத்து தோன்றியது.


1.       நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது.

          அ)    இயல்பு புணர்ச்சி                    ஆ)   விகாரப்புணர்ச்சி

          இ)    உயிரீற்றுப் புணர்ச்சி               ஈ)     மெய்யீற்றுப் புணர்ச்சி

2.       நிலைமொழியும் வருமொழியும் சில மாற்றங்களுடன் இணைவது.

          அ)    இயல்பு புணர்ச்சி                       ஆ)   விகாரப்புணர்ச்சி

          இ)    உயிரீற்றுப் புணர்ச்சி               ஈ)     மெய்யீற்றுப் புணர்ச்சி

3.       விகாரப்புணர்ச்சி ............ வகைப்படும்.

          அ)    இரண்டு  ஆ)   மூன்று    இ)    நான்கு     ஈ)     ஐந்து

4.       ‘தாய்+தமிழ்’ என்பது எவ்வகைப் புணர்ச்சி.

          அ)    இயல்பு    ஆ)   தோன்றல்       இ)    திரிதல்    ஈ)     கெடுதல்

5.       ‘மனம்+மகிழ்ச்சி’ என்பது எவ்வகைப் புணர்ச்சி.

          அ)    இயல்பு    ஆ)   தோன்றல்        இ)    திரிதல்    ஈ)     கெடுதல்

6.       ‘வில்+கொடி’ என்பது எவ்வகைப் புணர்ச்சி.

          அ)    இயல்பு    ஆ)   தோன்றல்        இ)    திரிதல்   ஈ)     கெடுதல்

7.       ‘பாலாடை’ என்பது எவ்வகைப் புணர்ச்சி.

          அ)    இயல்பு   ஆ)   தோன்றல்        இ)    திரிதல்    ஈ)     கெடுதல்

8.       ‘பொன்+உண்டு’ என்பது எவ்வகைப் புணர்ச்சி.

          அ)    உயிரீற்றுப் புணர்ச்சி               ஆ)   மெய்யீற்றுப் புணர்ச்சி

          இ)    உயிர் முதல் புணர்ச்சி          ஈ)     மெய் முதல் புணர்ச்சி

9.       ‘பொன்+சிலை’ என்பது எவ்வகைப் புணர்ச்சி.

          அ)    உயிரீற்றுப் புணர்ச்சி               ஆ)   மெய்யீற்றுப் புணர்ச்சி

          இ)    உயிர் முதல் புணர்ச்சி             ஈ)     மெய் முதல் புணர்ச்சி

10.     பொருத்துக.

          அ)    மட்பாண்டம்   -        1.       தோன்றல் விகாரம்

          ஆ)   மரவேர்             -        2.       இயல்பு புணர்சி

          இ)    மணிமுடி                   -        3.       கெடுதல் விகாரம்

          ஈ)     கடைத்தெரு   -        4.       திரிதல் விகாரம்

          அ)    4 2 1 3        ஆ)   4 3 2 1       இ)    4 3 1 2        ஈ)     4 1 2 3

7:24:00 AM

8TH TAMIL - பால் மனம்


கோமகள் ஆசிரியர் குறிப்பு

  • கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி.
  • சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.
  • இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.
  • “அன்னை பூமி” என்ற புதினத்திற்காக தமிழ்நாடு அரசின் விருதை வென்றவர் = கோமகள் எனப்படும் இராஜலட்சுமி.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார்.
  • உயிர் அமுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள், அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
  • பால் மனம் எனும் இக்கதை அ. வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
  • “மீதமிருக்கும் சொற்கள்” என்னும் நூலினை தொகுத்தவர் = அ. வெண்ணிலா.
  • “பால் மனம்” என்னும் சிறுகதையின் ஆசிரியர் = கோமகள் எனப்படும் இராஜலட்சுமி.
7:18:00 AM

8TH TAMIL - சட்டமேதை அம்பேத்கர்



விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்

  • விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் = அம்பேத்கர்.
  • இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் = அம்பேத்கர்.

அம்பேத்கர் வாழ்க்கை குறிப்பு

  • பிறப்பு = 14.04.1891
  • பிறந்த ஊர் = மகாராஷ்டிரா மாநிலத்தின் இரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள “அம்பவாதே” என்னும் ஊர்.
  • அம்பேத்கரின் தந்தை இரானுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
  • கல்வி பயின்ற இடம் = சதாரா
  • அம்பேத்கரின் இயற்பெயர் = பீமாராவ் சக்பால் அம்பவாதேகர்.
  • அம்பேத்கரின் ஆசிரியர் = மகாதேவ் அம்பேத்கர்.
  • ஆசிரியரின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை “பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்” என மாற்றிக் கொண்டார்.

கல்வி பயிலல்

  • அம்பேத்கரின் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்த ஆண்டு = 1904.
  • அம்பேத்கர் மும்பையில் இருந்த எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.
  • அம்பேத்கர் பள்ளிப் படிப்பை முடித்த ஆண்டு = 1907.
  • பரோடா மன்னரின் உதவியுடன் மும்பைப் பல்கலைக்கழகத்தில் படித்து 1912 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார்.
  • சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் உயர்அலுவலராகவும் பணியாற்றினார்.

அமெரிக்காவில் உயர்கல்வி

  • பரோடா மன்னர் = சாயாஜிராவ்.
  • பரோடா மன்னர் சாயாஜிராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார்.
  • அம்பேத்கர் அமெரிக்காவில் கல்வி பயின்ற பல்கலைக்கழகம் = கொலம்பியா பல்கலைக்கழகம்.
  • அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1915 ஆம் ஆண்டு “பண்டைக்கால இந்திய வணிகம்” என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்.

இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

  • இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றைப் படைத்தளித்தார்.
  • அதைச் சிறுபுத்தகமாகவும் வெளியிட்டார்.
  • அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் = இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்.

இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்

  • அம்பேத்கருக்கு “இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்” என்ற ஆய்வுக்காக, கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.
  • அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் = அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம்.

ரூபாய் பற்றிய பிரச்சனை

  • பொருளாதாரம் படிப்பதற்காக அம்பேத்கர் சென்ற இடம் = இலண்டன்.
  • பொருளாதாரம் படிப்பதற்காக அம்பேத்கர் இலண்டன் சென்ற ஆண்டு = 1920.
  • நூலகம் திறக்கும் போது முதல்ஆளாக நுழைந்து மூடும்போது கடைசி ஆளாக வெளியேறுவார் = அம்பேத்கர்.
  • 1921 ஆம் ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார்.
  • 1923 ஆம் ஆண்டு “ரூபாய் பற்றிய பிரச்சனை” என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டமும் பெற்றார்.
  • 1923 ஆம் ஆண்டு சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.

பதினான்கு பெட்டி புத்தகம்

  • வட்டமேசை மாநாட்டிற்கு சென்ற அம்பேத்கர், மாநாடு முடிந்து திரும்பிய போது “பதினான்கு பெட்டிகள்” நிறைய புத்தகங்களைக் கொண்டு வந்தார்.

ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை

  • “ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை” என்ற அமைப்பை நிறுவியவர் = அம்பேத்கர்.
  • “ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை“ என்ற அமைப்பை அம்பேத்கர் துவங்கிய ஆண்டு = 1924.

இலண்டன் வட்டமேசை மாநாடு

  • வட்டமேசை மாநாடு நடைபெற்ற இடம் = இலண்டன்.
  • 1930 ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படும் முன் “என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன்; அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனத்துடன் ஆதரிப்பேன்” என்று கூறினார் அம்பேத்கர்.

இரண்டாவாது வட்ட மேசை மாநாடு

  • ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

பூனா ஒப்பந்தம்

  • இரண்டாவது வட்ட மேசை மாநாட்டின் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது.
  • ஆனால், இதை ஏற்க மறுத்த காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
  • இதன் விளைவாக 1931 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் இருபத்து நான்காம் நாள் காந்தியடிகளும் அம்பேத்கரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
  • அதன்படி ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாகப் பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
  • இந்த ஒப்பந்தமே பூனா ஒப்பந்தம் எனப்பட்டது.

சுதந்திரத் தொழிலாளர் கட்சி

  • மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு = 1935.
  • ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனைப் பாதுகாக்கத் தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார்.
  • அம்பேத்கர் துவங்கிய கட்சி = சுதந்திரத் தொழிலாளர் கட்சி.
  • அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் பதினைந்து பேரும் வெற்றிபெற்றனர்.

ஒடுக்கப்பட்ட பாரதம்

  • அம்பேத்கர் துவக்கிய இதழ் = ஒடுக்கப்பட்ட பாரதம்.
  • “ஒடுக்கப்பட்ட பாரத்” என்ற இதழை அம்பேத்கர் துவக்கிய ஆண்டு = 1927.

சமாஜ் சமாத சங்கம்

  • சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் இவர் சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்;
  • 1930 ஆம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.
  • “நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தை” அம்பேத்கர் நடத்திய ஆண்டு = 1930.

இந்திய அரசியல் சாசன சபையின் தலைவர்

  • 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் பதினைந்தாம் நாள் இந்தியா விடுதலை பெற்றது.
  • ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு

  • 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29 ஆம் நாள் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.
  • அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.
  • இக்குழுவில், கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி. பி. கைதான் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றனர்.
  • இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-இல் ஒப்படைத்தது.
  • அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக்குழு, அப்போது மக்களாட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றிலிருந்து இந்திய நடைமுறைக்குப் பொருந்தும் சட்டக்கூறுகளை, இந்திய அரசியலமைப்பு வரைவில் சேர்த்தது.

மிகச்சிறந்த சமூக ஆவணம்

  • அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமைகளுக்குப் பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்தது.
  • இது மிகச்சிறந்த சமூக ஆவணம் என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுகிறது.

புத்த சமயம் மீது பற்று

  • அம்பேத்கர் புத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டார்
  • 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் நாக்பூரில் இலட்சக்கணக்கான மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
  • அவர் எழுதிய “புத்தரும் அவரின் தம்மமும்” என்னும் புத்தகம் அவரது மறைவுக்குப் பின் 1957 ஆம் ஆண்டு வெளியானது.
  • “புத்தரும் அவரின் தம்மமும்” என்ற நூலின் ஆசிரியர் = அம்பேத்கர்.
  • ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் காலமானார்.
  • அவருடைய மறைவிற்குப் பின், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

அம்பேத்கரின் பொன்மொழி

  • “நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை.” என்று கூறியவர் = அம்பேத்கர்.

இரட்டைமலை சீனிவாசன்

  • இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு செய்ய 1930 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் இங்கிலாந்தில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது.
  • ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளராக அம்பேத்கருடன் தமிழகத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசனும் கலந்துகொண்டார்.

அரசியல் அமைப்புச் சட்டம்

  • உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக இந்தியா விளங்குகிறது.
  • இந்நாட்டில் பல்வேறுபட்ட இன, மொழி, சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றனர்.
  • இவர்களை ஒன்றிணைக்க, ஆட்சி நடத்த அடிப்படையான சட்டம் தேவைப்படுகிறது.
  • இச்சட்டத்தினையே அரசியலமைப்புச் சட்டம் என்பர். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அந்தந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டே இயங்குகின்றன.
  • அஃது எழுதப்பட்டதாகவோ அல்லது எழுதப்படாததாகவோ இருக்கக்கூடும்.