Breaking

Showing posts with label SOCIAL SCIENCE Q & A. Show all posts
Showing posts with label SOCIAL SCIENCE Q & A. Show all posts

Friday, April 24, 2026

10:12:00 PM

6TH SOCIAL SCIENCE Question And Answer - 03

வரலாறு மற்றும் தொல்லியல்

1. வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது எதற்கும் எதற்கும் இடைப்பட்ட காலம்?

விடை: கற்கருவிகளைப் பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளைக் கண்டுபிடிப்பதற்கும் இடைப்பட்ட காலம்.

2. விலங்குகளுக்கு முதன்முதலாக மருத்துவமனை அமைத்துத் தந்த இந்திய அரசர் யார்?

விடை: அசோகர்.

3. நமது தேசியக் கொடியில் உள்ள 24 ஆரக்கால் சக்கரம் எதிலிருந்து பெறப்பட்டது?

விடை: சாரநாத் கற்றூண் முத்திரையிலிருந்து.

4. அசோகர் குறித்த வரலாற்று ஆவணங்களைச் சார்லஸ் ஆலன் எந்தப் பெயரில் நூலாக வெளியிட்டார்?

விடை: The Search for the India's Lost Emperor.

5. 'தம்மா' என்பது பிராகிருத சொல், இதன் சமஸ்கிருதச் சொல் என்ன?

விடை: தர்மா.

1.    மனிதன் சுமார் எத்தனை இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடக்கத் தொடங்கினான்?

விடை: 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்.

2.    ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனிதர்கள் எங்கு தோன்றினர்?

விடை: கிழக்கு ஆப்பிரிக்கா.

3.    இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் கொண்டிருந்த, ஜெர்மனியில் சான்றுகள் கிடைக்கப்பெற்ற பழங்கால மனிதன் யார்?

விடை: நியாண்டர்தால்.

4.    பீகிங் மனிதன் எங்கு வாழ்ந்தான்?

விடை: சீனா.

5.    லண்டன் பகுதியில் வாழ்ந்த பழங்கால மனிதன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?

விடை: ஹைடல்பர்க் மனிதன்.

6.    தொல்பழங்காலப் பாறை ஓவியங்கள் காணப்படும் பொறிவரை எந்த மாவட்டத்தில் உள்ளது?

விடை: நீலகிரி மாவட்டம்.

7.    ஹரப்பா மற்றும் மொஹஞ்ச-தாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்த ஆண்டு எது?

விடை: 1920.

8.    ஹரப்பாவிற்கும் மொஹெஞ்ச-தாரோவிற்கும் பொதுவான அம்சங்கள் இருப்பதை 1924ல் கண்டறிந்தவர் யார்?

விடை: ஜான் மார்ஷல்.

9.    ஹரப்பா நாகரிகத்தின் பரப்பளவு எவ்வளவு?

விடை: 13 லட்சம் சதுர கி.மீ.

10.  மொஹஞ்ச-தாரோவில் இருந்த 20 தூண்கள் மற்றும் 4 வரிசைகளைக் கொண்ட மிகப்பெரிய பொதுக் கட்டடம் எது?

விடை: கூட்ட அரங்கு.

11.  சிந்து வெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கிய அக்காடிய அரசன் யார்?

விடை: நாரம்-சின்.

12.  குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்திலான அளவுகோல் எவ்வளவு சிறிய அளவீட்டைக் கொண்டுள்ளது?

விடை: 1704 மி.மீ.

13.  நடன மாது எனப் பெயரிடப்பட்ட வெண்கலத்தாலான சிறிய பெண் சிலை எங்கு கிடைத்தது?

விடை: மொஹெஞ்ச-தாரோ.

14.  சிந்துவெளி மக்கள் ஆபரணங்கள் செய்ய எந்த நிற மணிக்கற்களைப் பயன்படுத்தினர்?

விடை: சிவப்பு நிற மணிக்கற்கள்.

15.  மனித வரலாற்றில் முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?

விடை: சுமேரியர்களால்.

16.  செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்ட ராகிகர்கி எந்த மாநிலத்தில் உள்ளது?

விடை:  ஹரியான மாநிலம்.

17.  சிந்துவெளி நாகரிகத்துக்கு முன்னோடியாகக் கருதப்படும் மெஹெர்கர் எந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது?

விடை:  போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கு.

சங்க காலம் மற்றும் பண்டைய தமிழகம்

1. பட்டினப்பாலை நூலின் ஆசிரியர் யார்?

விடை:  கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

2. சந்திர குப்தரின் அமைச்சரான சாணக்கியர் மதுரையைப் பற்றி எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்?

விடை:  அர்த்தசாஸ்திரம்.

3. சீன வரலாற்றாசிரியர் யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காக எங்கு இருந்த கடிகைக்கு வந்தார்?

விடை:  காஞ்சி.

4. தமிழ்நாட்டில் 'ஏரிகளின் மாவட்டம்' என்று அழைக்கப்படுவது எது?

விடை:  காஞ்சிபுரம்.

5. சோழநாடு, பாண்டிய நாடு, சேரநாடு மற்றும் தொண்டைநாடு ஆகியவை எதற்குப் புகழ் பெற்றவை?

விடை:  சோழநாடு - சோறுடைத்து, பாண்டிய நாடு - முத்துடைத்து, சேரநாடு - வேழமுடைத்து, தொண்டைநாடு - சான்றோருடைத்து.

6. சேர அரசர்களைப் பற்றிய செய்திகளை வழங்கும் சங்க கால நூல் எது?

விடை:  பதிற்றுப்பத்து.

7. தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட சங்க கால சேர அரசன் யார்?

விடை:  சேரல் இரும்பொறை.

8. கரிகாலன் மூவேந்தர்கள் மற்றும் பதினொன்று வேளிர் தலைவர்களை தோற்கடித்த இடம் எது?

விடை:  வெண்ணி.

9. சேரர்களின் அடையாள மாலை மற்றும் துறைமுகம் யாவை?

விடை:  பனம்பூ மாலை, முசிறி/தொண்டி.

1.    குறுநில மன்னர்களில் 'ஆய்' என்னும் பெயர் எந்தப் பழந்தமிழ்ச் சொல்லில் இருந்து பெறப்பட்டது?

விடை:  ஆயர்.

2.    சங்க காலத்தில் நிலவரியே வருவாயின் முக்கிய ஆதாரம், அது எவ்வாறு அழைக்கப்பட்டது?

விடை:  இறை.

3.    சங்க காலத்தில் எறியீட்டி எவ்வாறு குறிப்பிடப்பட்டது?

விடை:  தோமாரம்.

4.    சங்க காலத்தில் நெய்தல் திணை மக்களின் கடவுளாக வணங்கப்பட்டவர் யார்?

விடை:  வருணன்.

5.    பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள கொடுமணல் ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?

விடை:  ஈரோடு மாவட்டம்.

6.    இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை:  நடுகல்.

9:32:00 PM

6TH SOCIAL SCIENCE Question And Answer - 02

புவியியல் மற்றும் விண்வெளி (Geography and Space)

1.     அண்டத்தைப் பற்றிய படிப்பின் பெயர்அண்டவியல் (Cosmology).

2.     சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை6000°C.

3.     இரட்டைக் கோள்கள் என அழைக்கப்படுபவைவெள்ளியும் புவியும்.

4.     உயிர்க்கோளம் என்று அழைக்கப்படும் கோள்புவி.

5.     மிக அதிகமான துணைக்கோள்களைக் கொண்ட கோள்வியாழன்.

6.     செவ்வாய்க் கோளை ஆராய இஸ்ரோ (ISRO) அனுப்பிய விண்கலத்தின் பெயர்மங்கள்யான்.

7.     தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள்யுரேனஸ்.

8.     76 வருடங்களுக்கு ஒருமுறை விண்ணில் தோன்றும் வால்விண்மீன்ஹேலி.

9.     புவி தன் அச்சில் சாய்ந்திருக்கும் அளவு23½ டிகிரி.

10.   உலகின் மிகப் பெரிய கண்டம்ஆசியா.

11.   உலகின் மிகச் சிறிய கண்டம்ஆஸ்திரேலியா.

12.   "உலகத்தின் கூரைஎன்று அழைக்கப்படுவதுதிபெத் பீடபூமி.

13.   உலகின் மிக உயரமான சிகரம்எவரெஸ்ட் சிகரம் (8848 மீட்டர்).

14.   புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல்பசிபிக் பெருங்கடல்.

15.   பசிபிக் பெருங்கடலின் மிகவும் ஆழமான பகுதியின் பெயர்மரியானா அகழி.

16.   ஆங்கில எழுத்து 'S' வடிவத்தைப் போன்று உள்ள பெருங்கடல்அட்லாண்டிக் பெருங்கடல்.

17.   பாக் நீர்ச்சந்தி இணைப்பதுவங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும்.

18.   "உலகின் பெரும் மருந்தகம்என அழைக்கப்படுவதுவெப்ப மண்டல மழைக்காடுகள்.

19.   வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படும் திமிங்கலப் புனுகு பெறப்படுவதுஸ்பெர்ம் திமிங்கலம்.

20.   ஆசியாவின் மிக நீளமான ஆறுயாங்சி.

21.   உலகின் மிக ஈரப்பதம் வாய்ந்த பகுதிமௌசின்ராம்.

22.   தென்கிழக்கு ஆசியாவின் 'அரிசிக் கிண்ணம்என அழைக்கப்படும் நாடுதாய்லாந்து.

23.   உலகிலேயே நீண்ட இருப்புப்பாதை வழித்தடம்டிரான்ஸ்-சைபீரியன் இருப்புப்பாதை.

24.   ஐரோப்பாவின் மிக நீளமான ஆறுவோல்கா ஆறு.

25.   உலகிலேயே நீர் மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகள்நார்வே மற்றும் ஸ்வீடன்.

அட்சதீர்க்கக் கோடுகள் மற்றும் பொருளாதாரம் (Latitudes, Longitudes, and Economy)

1.     முதன் முதலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவர்தாலமி.

2.     0° அட்சக்கோடு அழைக்கப்படுவதுநிலநடுக்கோடு.

3.     பன்னாட்டு தேதிக்கோடாக நிர்ணயிக்கப்பட்டுள்ள தீர்க்கக்கோடு180° தீர்க்கக்கோடு.

4.     இந்திய திட்ட நேரம் (IST) கணக்கிடப்படும் ஆதாரத் தீர்க்கக்கோடு82½ டிகிரி கிழக்கு தீர்க்கக்கோடு.

5.     உணவுத் தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்முதல் நிலை தொழில்.

6.     சேவைத் துறை என்று அழைக்கப்படுவதுமூன்றாம் நிலைத் தொழில்கள்.

அரசியலமைப்பு மற்றும் இந்தியத் தேசிய சின்னங்கள் (Constitution and Indian National Emblems)

1.     இந்தியாவை “இனங்களின் அருங்காட்சியகம்என்று கூறிய வரலாற்றாசிரியர்வி..ஸ்மித்.

2.     இந்திய அரசால் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழிதமிழ்மொழி (2004).

3.     'டிஸ்கவரி ஆஃப் இந்தியாஎன்ற நூலை எழுதியவர்ஜவஹர்லால் நேரு.

4.     சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறும் இந்திய அரசியலமைப்புப் பிரிவுபிரிவு 14.

5.     தீண்டாமையை ஒழிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுபிரிவு 17.

6.     "இந்திய அரசியலமைப்பின் தந்தைஎனப் போற்றப்படுபவர்டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார்.

7.     இந்தியாவின் 'ஏவுகணை மனிதர்என்று சிறப்பிக்கப்படுபவர்அப்துல் கலாம்.

8.     இந்தியாவின் தேசிய இலச்சினை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆதாரம்சாரநாத் அசோகத் தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம்.

9.     இந்திய தேசிய கீதத்தை வங்காள மொழியில் எழுதியவர்இரவீந்திரநாத் தாகூர்.

10.   தேசியப் பாடலான 'வந்தே மாதரம்பாடலை எழுதியவர்பங்கிம் சந்திர சட்டர்ஜி.

11.   இந்திய ரூபாய் சின்னத்தை (₹) வடிவமைத்தவர்டி.உதயகுமார்.

12.   இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையாகத் தயாராகி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்1949 நவம்பர் 26.

மக்களாட்சி மற்றும் உள்ளாட்சி (Democracy and Local Governance)

1.     மக்களாட்சியின் பிறப்பிடம்கிரேக்கம்.

2.     உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடுநியூசிலாந்து (1893).

3.     இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி அமைப்புசென்னை மாநகராட்சி (1688).

4.     தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சிவாலாஜாபேட்டை நகராட்சி.

5.     தேசிய ஊராட்சி தினம்ஏப்ரல் 24.