Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, December 1, 2025

Sunday, November 30, 2025

6:13:00 AM

தமிழ் இலக்கிய வினா விடைகள் 150

1. எட்டுத்தொகை நூல்களுள் பாண்டியர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல்கள் யாவை?

விடை: கலித்தொகை, பரிபாடல் 

2. பரிபாடலுக்கு உரை எழுதியவர் யார்?

விடை: பரிமேலழகர் 

3. உலகின் தோற்றம் குறித்து கூறும் நூல் எது?

விடை: பரிபாடல் 

4. கலித்தொகையின் கடவுள் வாழ்த்தில் இடம்பெற்ற கடவுள் யார்?

விடை: சிவன் 

5. கலித்தொகையை முதலில் பதிப்பித்தவர் யார்?

விடை: சி.வை தாமோதரம் பிள்ளை 

6. கலித்தொகையுள் குறைந்த பாடல்களை கொண்ட திணை எது?

விடை: முல்லை திணை 17 பாடல்கள் 

7. பாண்டியரைத் தவிர மற்ற மன்னர்கள் பற்றிய குறிப்பில்லாத சங்க நூல் எது?

விடை: கலித்தொகை 

8. ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல் எது?

விடை: கலித்தொகை 

9. பெருந்திணைப் பாடல்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல் எது?

விடை: கலித்தொகை 

10. காமக்கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் யாது?

விடை: கலித்தொகை  

11. அசோகர் காலத்தில் தமிழ் நாட்டில் பரவிய மதம் எது?

விடை: பௌத்தம் 

12. தமிழில் எழுதப்பட்ட முதல் ஐந்திலக்கண நூல் எது?

விடை: வீரசோழியம் 

13. சந்திரகுப்தன் காலத்தில் பத்திரபாகு முனிவர் மூலம் தமிழகம் வந்த மதம் எது?

விடை: சமணம் 

14. மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட முதல் உரைநடை நூல் எது?

விடை: ஸ்ரீ புராணம் 

15. நிகண்டு என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?

விடை: மண்டலபுருடர் 

16. சித்திரக்கவி பாடுவதில் வல்லவர் யார்?

விடை: சேகனாப்புலவர்

17. யாருடைய படையெடுப்பால் தமிழகத்தில் இஸ்லாம் மதம் பரவியது?

விடை: மாலிக்கபூர்

18. இஸ்லாம் இலக்கியத்தில் பெரியநூல் மற்றும் காப்பிய நூல் எது?

விடை: சீறாப்புராணம் 

19. இஸ்லாமிய மதுரகவி, மதுரகவி ராசன் என்று போற்றப்படுபவர் யார்?

விடை: காசிம் புலவர்

20. வசைபாடுவதில் களமேகத்தை ஒத்தவர் யார்?  

விடை: சவ்வாது புலவர் 

21. காமனின் தம்பி யார்?

விடை: சாமன் 

22. பாரதக்கதைகளை மிகுதியும் கூறும் நூல் எது?

விடை: கலித்தொகை

23. புராணக் கதைகளை மிகுதியும் கூறும் நூல் எது?

விடை: பரிபாடல்

24. நாடகம் போன்று காட்சி அமைப்புகளைக் கொண்ட நூல் எது?

விடை: கலித்தொகை

25. இசையோடு கூடிய உரையாடல் அமைந்த நூல் எது?

விடை: கலித்தொகை

26. அகநானூற்றில் கடவுள் வாழ்த்தில் இடம் பெற்ற கடவுள் யார்?

விடை: சிவன் 

27. ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப்பட்ட ஒரே தொகை நூல் எது?

விடை: அகநானூறு 

28. சங்க இலக்கியத்துள் வரலாற்றுச் செய்திகளை அதிகமாகக் கூறும் அகநூல் எது?

விடை: அகநானூறு 

29. வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகக் கூறும் மிக புலவர்கள் யார்?

விடை: பரணர், மாமூலர் 

30. புறநானூற்றின் கடவுள் வாழ்த்தில் இடம் பெற்ற கடவுள் யார்?

விடை: சிவன் 

31.அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை

விடை: 12

32.அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு

விடை:  வேள்விக்குடிச் செப்பேடு

33.அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள்
விடை: பாலைத்திணை

34.அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும் திணைப்பாடல்கள்

விடை: நெய்தல்திணை

35.அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8,என முடியும் திணைப்பாடல்கள்

விடை:  குறிஞ்சித்திணை

36.அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள்

விடை: முல்லைத்திணை

37.அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள்

விடை:  மருதத்திணை

38.அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்

விடை: நோய்பாடியார், ஊட்டியார்

39.அகநானூற்றின் அடிவரையறை

விடை: 13-31 அடிகள்

40.அகநானூற்றின் இரண்டாம் பகுதி

விடை: மணிமிடைப்பவளம்

41.அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள்

விடை: வேங்கடசாமி நாட்டார், இரா.வேங்கடாசலம்பிள்ளை

43.அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை

விடை: 90

44.அகநானூற்றின் பிரிவுகள்

விடை: 3 (களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை)

45. அகநானூற்றின் முதல் பகுதி

விடை:களிற்றுயானை நிரை

46. அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர்

விடை:வே.இராசகோபால் 16.

47.அகநானூற்றின் மூன்றாம் பகுதி

விடை: நித்திலக்கோவை

48. அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர்

விடை: நெடுந்தொகை

49. அகநானூற்றைத் தொகுத்தவர்

விடை: உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்

50. அகநானூற்றைத் தொகுப்பித்தவன்

விடை: பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

51. அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள்

விடை:  கலிப்பா,பரிபாடல் (தொல்காப்பியர்)

52. அகராதி நிகண்டு ஆசிரியர்

விடை: சிதம்பரம் வனசித்தர்

53. அகலிகை வெண்பா நூலாசிரியர்

விடை: சுப்பிரமணிய முதலியார்

54. அசோகன் காதலி நாவலாசிரியர்

விடை: அரு.ராமநாதன்

55. அசோமுகி நாடக ஆசிரியர்

விடை: அருணாசலக் கவி

56. அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல்

விடை: தழிஞ்சி

57. அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள்

விடை: ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து

58. அடிநூல் ஆசிரியர்

விடை: நத்தத்தனார்

59.  அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர்

விடை: பொன்னப்ப காங்கேயன்

60. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல்

விடை: திருக்குறள்

61. அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர்

விடை: ஔவையார்

62.அந்தகக் கவிராயர் எழுதிய உலா

விடை: திருவாரூர் உலா
63.அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல்

விடை: பதிற்றுப்பத்து -நான்காம் பத்து

67.அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்

விடை: ஆலாபனை – 1999

68. அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம்

விடை:  அரு.இராமநாதன்

69. அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர்

விடை: மறைமலையடிகள் 

70. அம்பிகாபதி கோவையைப் பாடியவர்

விடை: அம்பிகாபதி

71.இடைக்காலத்தில் தோன்றிய நாடகம்

விடை: குறவஞ்சி

72. இடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள்

விடை: 3700

73. இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்

விடை: 59

74. இடைச்சங்க இலக்கியங்கள்

விடை: அகத்தியம்,தொல்காப்பியம், மாபுராணம்,
பூதபுராணம், இசைநுணுக்கம்

75. இடைச்சங்கம் இருந்த இடம்

விடை: கபாடபுரம்

76. இடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள்

விடை: 3700

77. இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல்

விடை: கலித்தொகை

78. இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர்

விடை: வைரமுத்து

79. இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று

விடை: பழந்தமிழர் கண்டுபிடிப்பு

80.இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல்

விடை: துர்க்கேச நந்தினி (1865)

81. இந்தியா எனும் இதழ் நடத்தியவர்

விடை: பாரதியார்

82. இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர்

விடை: இந்திரகாளியர்

83. இந்திராயன் படைப்போர் எழுதியவர்

விடை: புலவர் அலியார்

84. இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல்
விடை: புறநானூறு

85. இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல்

விடை: பிங்கலம்

86.இயற்பா, இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல்

விடை: நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

87. இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை

விடை:470

88. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர்

விடை: படிக்காசுப் புலவர்

89. இரட்சணிய குறள் எழுதியவர்

விடை: எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

90.இரட்டைப் புலவர்கள் பாடிய உலா

விடை: ஏகாம்பரநாதர் உலா

91. இரட்டைப் புலவர்களின் பெயர்

விடை: இளஞ்சூரியன்,முதுசூரியன்

92.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர்

விடை:  மருதூர்

93.இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு

விடை: திருவருட்பா

94. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர்

விடை:  சுப்பிரமணிய முதலியார்

95. இராமானுச நூற்றந்தாதி பாடியவர்

விடை: அமுதனார்

96. இராவண காவியம் நூலாசிரியர்

விடை: புலவர் குழந்தை

97. இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு

விடை: கி.பி.10-ஆம் நூற்றாண்டு

98. இருபத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்

விடை: திருக்குறள்

99.இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல்

விடை: பதிற்றுப் பத்து

100.இருவகை நாடகம்

விடை: இன்பியல், துன்பியல்

101.இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி

விடை: பாணினி

102.இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர்

விடை: சிவஞான முனிவர்

103.இலக்கண விளக்கம் நூலாசிரியர்

விடை: திருவாரூர் வைத்தியநாத தேசிகர்

104. இலக்கணக் கொத்தின் ஆசிரியர்

விடை:  சுவாமிநாத தேசிகர்

105.இலக்கிய உதயம் நூலாசிரியர்

விடை: எஸ்.வையாபுரிப் பிள்ளை

106. இலக்கியம் இதழாசிரியர்

விடை: சுரதா

107.இலங்கேசுவரன் நாடக ஆசிரியர்

விடை: ஆர்.எஸ்.மனோகர்

107.இல்லாண்மை எனும் நூலாசிரியர்

விடை: கனக சுந்தரம் பிள்ளை

108. இளங்கோவடிகளுக்கு கண்ணகி கதையை கூறியவர்

விடை: சாத்தனார்

109. இறந்த மறவன் புகழை பாடுதல்

விடை: மன்னை காஞ்சி

110.வெட்சி

விடை: நிறைகவர்தல்

111.வெண்டேர்ச் செழியனின் காலம்

விடை: இடைச்சங்க காலம்

112.வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர்

விடை: வச்சநந்திமாலை

113.வெறியாட்டு

விடை:  வள்ளிக் கூத்தாடுவது

114.வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர்

விடை: அகிலன்

115.வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர்

விடை: இரேனியஸ்

116.வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர்

விடை: சரபோஜி மன்னர்

117.வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல்

விடை: நீதிநூல்

118.வேய்

விடை: உளவு- ஒற்றாராய்தல்

119.வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர்

விடை: ராஜம் கிருஷ்ணன்

120. வைகறைப் பொழுதுக்குரிய நிலம்

விடை: மருதம்

121. வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர்

விடை: ஆறுமுக நாவலர்

122. ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல்

விடை: புறநானூறு

123. ஜீவகாருண்யம் போதித்தவர்

விடை: வள்ளலார்

124. ஜீவபூமி நாவலாசிரியர்

விடை: சாண்டில்யன்

125. ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர்

விடை: பாரதியார்

126. கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர்

விடை:  நா.காமராசன்

127. அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன்

விடை: மாதவி

128. மணிமேகலைக்கு துறவு தந்தவர்

விடை: அறவண அடிகள்

129.பால் மர காட்டினிலே நாவலாசிரியர்

விடை:  அகிலன்

130.பாலும் பாவையும் நாவலாசிரியர்

விடை: விந்தன்

131. ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர்

விடை: ஒட்டக்கூத்தர்

132. ஈரசைச் சீரின் வேறுபெயர்

விடை: ஆசிரிய உரிச்சீர்

133. ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர்

விடை: பொன்முடியார்

134.உ.வே.சா வின் ஆசிரியர்

விடை: மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை

135. உட்கார்ந்து எதிரூன்றல்

விடை: காஞ்சி

136. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர்

விடை: திருமூலர்

137. உண்டாட்டு

விடை: கள்குடித்தல்

138. உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர்

விடை: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

139. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல்

விடை: புறநானூறு

140. உண்பவை நாழி, உடுப்பவை இரண்டே என்று பாடியவர்

விடை: நக்கீரர்

141. உமைபாகர் பதிகம் பாடியவர்

விடை: படிக்காசுப் புலவர்

142. உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர்

விடை: பாரதியார்

143. இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது

விடை:  தலையொடு முடிதல்

144. இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது

விடை: பாண்பாட்டு – தும்பை

145. இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர்

விடை: நக்கீரர்

146. இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம்

விடை: திருக்கோலக்கா

147. இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர்

விடை: திருப்பெருந்துறை

148. உரிச்சொல் நிகண்டு எழுதியவர்

விடை: காங்கேயர்

149. உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது

விடை: ஒழுக்கம்

150. உரை நூல்களுள் பழமையானது

விடை: இறையனார் அகப்பொருள் உரை – நக்கீரர்