Breaking

Sunday, March 22, 2026

10:40:00 PM

TET TNPSC TRB POLICE (6 - 10TH TAMIL ) NEW TEXT BOOK 2025 PDF STUDY MATERIALS


10TH TAMIL CHAPTERS - 1 

10TH TAMIL - அன்னை மொழியே : CLICK DOWNLOAD

10TH TAMIL - தமிழ்ச்சொல் வளம் : CLICK DOWNLOAD

10TH TAMIL - காலக்கணிதம் : CLICK DOWNLOAD

10TH TAMIL - புயலிலே ஒரு தோணி : CLICK DOWNLOAD

10TH TAMIL - சொல் : CLICK DOWNLOAD

10TH TAMIL CHAPTERS - 2

10TH TAMIL - கேட்கிறதா என் குரல்!  : CLICK DOWNLOAD

10TH TAMIL - பரிபாடல் : CLICK DOWNLOAD

10TH TAMIL - மேகம்  : CLICK DOWNLOAD

10TH TAMIL - பிரும்மம்  : CLICK DOWNLOAD

10TH TAMIL - தொகாநிலைத் தொடர்  : CLICK DOWNLOAD

10TH TAMIL CHAPTERS - 3

10TH TAMIL - விருந்து போற்றுதும்  : CLICK DOWNLOAD

10TH TAMIL - காசிக்காண்டம்  : CLICK DOWNLOAD

10TH TAMIL - முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்  : CLICK DOWNLOAD

10TH TAMIL - கோபல்லபுரத்து மக்கள்  : CLICK DOWNLOAD

10TH TAMIL - தொகைநிலைத் தொடர்  : CLICK DOWNLOAD

10TH TAMIL CHAPTERS - 4

10TH TAMIL - மொழிப்பெயர்ப்புக் கல்வி  : CLICK DOWNLOAD

10TH TAMIL - திருவிளையாடற்புராணம்  : CLICK DOWNLOAD

10TH TAMIL - புதிய நம்பிக்கை  : CLICK DOWNLOAD

10TH TAMIL - பொது இலக்கணம்  : CLICK DOWNLOAD
4:48:00 AM

TET TNPSC TRB POLICE (6 - 10TH TAMIL ) NEW TEXT BOOK 2025 VIDEOS STUDY MATERIALS

10TH TAMIL CHAPTERS - 1 

10TH TAMIL - அன்னை மொழியே : CLICK VIDEO VIEW

10TH TAMIL - தமிழ்ச்சொல் வளம் : CLICK VIDEO VIEW

10TH TAMIL - காலக்கணிதம் : CLICK VIDEO VIEW

10TH TAMIL - புயலிலே ஒரு தோணி : CLICK VIDEO VIEW

10TH TAMIL - சொல் : CLICK VIDEO VIEW

10TH TAMIL CHAPTERS -  2

10TH TAMIL - கேட்கிறதா என் குரல்! : CLICK VIDEO VIEW

10TH TAMIL - பரிபாடல் : CLICK VIDEO VIEW

10TH TAMIL - மேகம் : CLICK VIDEO VIEW

10TH TAMIL - பிரும்மம் : CLICK VIDEO VIEW

10TH TAMIL - தொகாநிலைத் தொடர் : CLICK VIDEO VIEW

10TH TAMIL CHAPTERS -  3

10TH TAMIL - விருந்து போற்றுதும் : CLICK VIDEO VIEW

10TH TAMIL - காசிக்காண்டம் : CLICK VIDEO VIEW

10TH TAMIL - முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் : CLICK VIDEO VIEW

10TH TAMIL - கோபல்லபுரத்து மக்கள் : CLICK VIDEO VIEW

10TH TAMIL - தொகைநிலைத் தொடர் : CLICK VIDEO VIEW


10TH TAMIL CHAPTERS -  4

10TH TAMIL - மொழிப்பெயர்ப்புக் கல்வி : CLICK VIDEO VIEW


10TH TAMIL - திருவிளையாடற்புராணம்


10TH TAMIL - புதிய நம்பிக்கை


10TH TAMIL - பொது இலக்கணம்


10TH TAMIL CHAPTERS - 5

10TH TAMIL - பன்முகக் கலைஞர்


10TH TAMIL - கம்பராமாயணம்


10TH TAMIL - பாய்ச்சல்


10TH TAMIL - அகப்பொருள் இலக்கணம்


10TH TAMIL CHAPTERS -  6

10TH TAMIL - சிற்றகல்‌ ஒளி


10TH TAMIL - சிலப்பதிகாரம்


10TH TAMIL - முத்தொள்ளாயிரம்


10TH TAMIL - மங்கையராய்ப்‌ பிறப்பதற்கே


10TH TAMIL - புறப்பொருள் இலக்கணம்

 

10TH TAMIL CHAPTERS - 7

10TH TAMIL - சங்க இலக்கியத்தில்‌ அறம்


10TH TAMIL - தேம்பாவணி


10TH TAMIL - அக்கறை


10TH TAMIL - இராமானுசர்


10TH TAMIL - பா வகைஅலகிடுதல்

6TH TAMIL CHAPTERS - 1

6TH TAMIL - இன்பத் தமிழ் : CLICK VIDEO VIEW

6TH TAMIL - வளர் தமிழ் : CLICK VIDEO VIEW

6TH TAMIL - ஒளி பிறந்தது : CLICK VIDEO VIEW

6TH TAMIL - தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் : CLICK VIDEO VIEW


6TH TAMIL CHAPTERS - 2

6TH TAMIL - ஏதிலிக்குருவிகள்


6TH TAMIL - சிறகின் ஓசை


Saturday, March 21, 2026

8:49:00 AM

6TH TAMIL - கல்விக் கண் திறந்தவர்

  • கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகின்றன.
  • தொடக்கத்தில் ஆசிரியரின் வீட்டிலேயே தங்கி மாணவர்கள் கல்வி கற்றனர்.
  • பிறகு நாள்தோறும் ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கல்வி கற்றனர்.
  • அதன் பிறகு பொதுவான ஓர் இடத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தனர்.
  • இவையே இன்றைய பள்ளிக்கூடங்கள் ஆகும்.
  • முன்பு ஒரு சில ஊர்களில் மட்டும் பள்ளிகள் இருந்தன.
  • இன்று பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • இத்தகைய கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் = கர்மவீரர் காமராசர் ஆவார்.
  • கல்வித்துறை விதிகளை மாணவர்களின் நலனுக்காக மாற்றி, அவர்கள் வாழும் இடங்களிலேயே பள்ளிக்கூடங்களைத் திறக்கச் செய்த சிந்தனையாளர் = காமராசர்.
  • காமராசரை “கல்விக் கண் திறந்தவர்” என்று மனதார பாராட்டியவர் = தந்தை பெரியார்.
  • காமராசர் பதவி ஏற்ற உடனே, தமிழகத்தில் மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டார்.
  • மாநிலம் முழுவதும் அனைவர்க்கும் கட்டாய இலவசக் கல்வி திட்டத்தை நடைமுறைப் படுத்தினார்.
  • மாணவர்கள் பசியை போக்க “மதிய உணவுத் திட்டத்தை” துவக்கி வைத்தார்.
  • பள்ளிகளில் மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வுகளை போக்க “சீருடைத்” திட்டத்தை அறிமுகம் செய்தார்.
  • பள்ளிகளின் வசதியைப் பெருக்க “பள்ளிச்சீரமைப்பு” மாநாடுகளை நடத்தினார்.
  • மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடைமருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாகத் தொடங்கினார்.
  • தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களைத் தொடங்கினார்.
  • மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
  • நடுவண் அரசு 1976இல் பாரதரத்னா விருது வழங்கியது.
  • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம், விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
  • சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
  • சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
  • ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ஜூலை பதினைந்தாம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

காமராசரின் சிறப்பு பெயர்கள்

  • பெருந்தலைவர்
  • படிக்காத மேதை
  • கர்மவீரர்
  • கருப்புக் காந்தி
  • ஏழைப்பங்காளர்
  • தலைவர்களை உருவாக்குபவர்

காமராசருக்குச் செய்யப்பட்ட சிறப்புகள்

  • மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
  • நடுவண் அரசு 1976இல் பாரதரத்னா விருது வழங்கியது.
  • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
  • சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
  • ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ஜூலை பதினைந்தாம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்

அ) ஆடு மேய்க்க ஆள் இல்லை

ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

இ) வழி தெரியவில்லை

ஈ) பேருந்து வசதியில்லை

[விடை : ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை]



2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பசி + இன்றி

ஆ) பசி + யின்றி

இ) பசு + இன்றி

ஈ) பசு + யின்றி

[விடை : அ) பசி + இன்றி]



3. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) படி + அறிவு

ஆ) படிப்பு + அறிவு

இ) படி + வறிவு

ஈ) படிப்பு + வறிவு

[விடை : ஆ) படிப்பு + அறிவு]



4. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) காட்டாறு

ஆ) காடாறு

இ) காட்டு ஆறு

ஈ) காடுஆறு

[விடை : அ) காட்டாறு]



கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க ---------- அறிமுகப்படுத்தினார்.

விடை : சீருடை

2. காமராசரைக் 'கல்விக் கண் திறந்தவர்' என மனதாரப் பாராட்டியவர் --------

விடை : தந்தை பெரியார்



குறு வினா

1. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?

விடை

காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் :

(i) பொறியியல் கல்லூரிகள்

(ii) மருத்துவக் கல்லூரிகள்

(iii) கால்நடை மருத்துவக் கல்லூரிகள்

(iv) ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள்
8:37:00 AM

6TH TAMIL - துன்பம் வெல்லும் கல்வி

நூல் வெளி

எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர். மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.


ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே - நம்
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே

மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது

துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் - நீ
சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - அறிவு
வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்

வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

சொல்லும் பொருளும்

தூற்றும் படி – இகழும் படி
மூத்தோர் – பெரியோர்
மேதைகள் – அறிஞர்கள்
மாற்றார் – மற்றவர்
நெறி – வழி
வற்றாமல் – அழியாமல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர் பிறர் --------- நடக்கக் கூடாது.

அ) போற்றும்படி
ஆ) தூற்றும்படி
இ) பார்க்கும்படி
ஈ) வியக்கும்படி

2. நாம் --------- சொல்படி நடக்க வேண்டும்.

அ) இளையோர்
ஆ) ஊரார்
இ) மூத்தோர்
ஈ) வழிப்போக்கர்

3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கையில் + பொருள்
ஆ) கைப் + பொருள்
இ) கை + பொருள்
ஈ) கைப்பு + பொருள்

4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) மானம் இல்லா
ஆ) மானமில்லா
இ) மானமல்லா
ஈ) மானம்மில்லா

5. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர்

அ) மருதகாசி
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) கண்ணதாசன்
ஈ) வாலி

6. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.

அ) மருதகாசி
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) கண்ணதாசன்
ஈ) வாலி

7. மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

அ) மருதகாசி
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) கண்ணதாசன்
ஈ) வாலி
8:09:00 AM

6TH TAMIL - கல்வியைப் போற்று

நூல் வெளி
  • கா.ப.செய்குதம்பிப் பாவலர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
  • சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்.
  • அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி, சதாவதானி என்னும் பட்டம் பெற்றவர்.
  • இவர் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, திருமதினத்து அந்தாதி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.


சொல்லும் பொருளும்
  • பெருக்கி – வளர்த்து
  • திருத்தி – சீராக்கி
  • மருளை – மயக்கத்தை
  • அருத்துவதும் – தருவதும்
  • திருத்தி – சீராக்கி
  • மதி – அறிவு
  • ஆவி – உயிர்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கல்வியானது நமது ______ துணையாய் அமைகிறது

அ) ஆவிக்குத்
ஆ) கண்ணுக்குத்
இ) உடலுக்குத்
ஈ) செவிக்குத்

2. அருந்துணை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அருந்து + துணை
ஆ) அருமை + துணை
இ) அரு + துணை
ஈ) அருந் + துணை

3. கல்வி + என்றே என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கல்விஎன்றே
ஆ) கல்வியன்றே
இ) கல்வின்றே
ஈ) கல்வியென்றே

4. கா.ப.செய்குதம்பிப் பாவலர் பிறந்த ஊர்
  • செவல்குடி
  • இடையன்குளம்
  • இடலாக்குடி
  • பனையன்குளம்
5. சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்.
  • பாரதிதாசன்
  • கா.ப.செய்குதம்பிப் பாவலர்
  • பாரதியார்
  • திருத்தக்கதேவர்
6. நீதி வெண்பா என்ற நூலின் ஆசிரியர்
  • கா.ப.செய்குதம்பிப் பாவலர்
  • பாரதிதாசன்
  • பாரதியார்
  • கண்ணதாசன்
7. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி என்று இவ்வடிகளில் வரும் தொடை நயம் 
  • எதுகை
  • மோனை
  • இயைபு
  • முரண்
8. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் என வரும் பாடலைப் பாடியவர்
  • ஔவையார்
  • கபிலர்
  • பூதஞ்சேந்தனார்
  • காரியாசான்
9. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் என வரும் பாடல் இடம்பெற்ற நூல். 

அ) கொன்றைவேந்தன்
ஆ) மூதுரை
இ) ஆத்திச்சூடி
ஈ) ஆசாரக்கோவை

10. செய்குதம்பிப் பாவலர் இவ்வாறு அழைக்கப்படுகிறார்
  • சதாவதானி
  • தசதாவதானி
  • மொழிஞாயிறு
  • கவிமணி
11. செய்குதம்பிப் பாவலர் சிறந்து விளங்கிய கலை
  • ஆடல்
  • பாடல்
  • ஓவியம்
  • சதாவனம்
12. சதாவதானி என்பது _______
  • நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது
  • ஆயிரம் யானைகளைப் போரில் கொல்வது
  • நூறு மலர்களை ஒரே இடத்தில் குவிப்பது
  • ஆயிரம் பேருக்கு உணவிடுவது
13. போற்றிக் கற்க வேண்டியது
  • கல்வி
  • நூல்
  • ஒழுக்கம்
  • பண்பு

இலக்கணக் குறிப்பு
  • போற்று, பெருக்கி, 
  • திருத்தி, அகற்றி – வினையெச்சங்கள்
  • அருந்துணை – பண்புத்தொகை
பகுபத உறுப்பிலக்கணம்

1. பெருக்கி = பெருக்கு + இ

பெருக்கு – பகுதி
இ – வினையெச்ச விகுதி

2. திருத்தி = திருத்து + இ

திருத்து – பகுதி
இ – வினையெச்ச விகுதி
7:23:00 AM

6TH TAMIL - முதல் எழுத்தும் சார்பு எழுத்தும்

முதல் எழுத்துகள்
  • தமிழில் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும். அவை,முதல் எழுத்துகள்
  • சார்பு எழுத்துகள்
  • உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.
  • முதல் எழுத்துகள் மொத்தம் = 30
  • பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.
சார்பு எழுத்துகள்

முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள்.
சார்பு எழுத்துகள் பத்து வகைப்படும். அவை,
  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலிகரம்
  6. குற்றியலுகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஔகாரக்குறுக்கம்
  9. மகரக் குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்
உயிர்மெய் எழுத்து
  • மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
  • உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.
  • வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.
  • முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.
  • ஆய்த எழுத்துமூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
  • முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அஃகேனம் என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
  • நுட்பமான ஒலிப்புமுறையை உடையது.
  • தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
  • தனித்து இயங்காது.
  • முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தமிழ் எழுத்து எத்தனை வகைப்படும்.

அ) மூன்று
ஆ) இரண்டு
இ) ஐந்து
ஈ) ஏழு

2. முதல் எழுத்துகள் எத்தனை வகைப்படும்

அ) ஐந்து
ஆ) பன்னிரண்டு
இ) பதினெட்டு
ஈ) முப்பது

3. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்

அ) ஐந்து
ஆ) பன்னிரண்டு
இ) பதினெட்டு
ஈ) பத்து

4. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக

அ) முப்புள்ளி
ஆ) தனிநிலை
இ) ஒற்று
ஈ) முப்பாற்புள்ளி

5. நுட்பமான ஒலிப்பு முறையை உடைய எழுத்து

அ) உயிர் எழுத்து
ஆ) மெய் எழுத்து
இ) ஆய்த எழுத்து
ஈ) உயிர்மெய்

6. சொல்லின் இடையில் மட்டும் வரும் எழுத்து

அ) உயிர் எழுத்து
ஆ) மெய் எழுத்து
இ) ஆய்த எழுத்து
ஈ) உயிர்மெய்