Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 28, 2026

7:30:00 AM

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை - 01


வரலாறு மற்றும் காலக்கோடு (History and Timeline)

1.    வரலாறு என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து ('இஸ்டோரியா') பெறப்பட்டது. அதன் பொருள்: விசாரிப்பதன் மூலம் கற்றல்.

2.    வரலாற்றின் தந்தை: ஹெரடோடஸ்.

3.    அசோகர் குறித்த வரலாற்று ஆவணங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்ட ஆங்கிலேயர்: சார்லஸ் ஆலன்.

4.    மனிதர்களின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று: சக்கரம்.

5.    மானுடவியல் (Anthropology) என்பது பெறப்பட்ட மொழி: கிரேக்க வார்த்தை.

6.    குரோமேக்னான்ஸ் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள்: பிரான்சில் உள்ள லாஸ்காஸ் குகைகள்.

7.    நெருப்பின் பயனை அறிந்திருந்த தொடக்ககால மனிதன்: ஹோமோ எரக்டஸ்.

8.    கலிங்கத்தின் மீது அசோகர் போர் தொடுத்தது: கி.மு. 261.

9.    பண்டைய மகதத்தை ஆண்ட முதல் அரச வம்சம்: ஹரியங்கா வம்சம்.

10.   இந்தியாவிலேயே முதன்முதலாகப் பேரரசை உருவாக்கியவர்கள்: நந்தர்கள்.

 

 

சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization)

1.    ஹரப்பா நகரத்தை முதன்முதலில் தமது நூலில் விவரித்த ஆங்கிலேயர்: சார்லஸ் மேசன்.

2.    சிந்துவெளி மக்களுக்குப் பயன் தெரியாத உலோகம்: இரும்பு.

3.    மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம்: செம்பு.

4.    உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்: மெசபடோமியா நாகரிகம்.

5.    இந்திய தொல்லியல் துறை (ASI) நிறுவப்பட்ட ஆண்டு: 1861.

6.    கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் கண்டுபிடிக்கப்பட்ட இடம்: குஜராத்திலுள்ள லோதல்.

சங்க காலம் மற்றும் தொல்லியல் ஆய்வுகள் (Sangam Period and Archaeological Studies)

1.    சங்க காலச் சோழ அரசனின் துறைமுகம்: பூம்புகார்.

2.    மதுரை 'தூங்கா நகரம்' என அழைக்கப்படக் காரணமான அங்காடிகள்: நாளங்காடி மற்றும் அல்லங்காடி.

3.    "நகரங்களில் சிறந்தது காஞ்சி" என்று கூறியவர்: கவிஞர் காளிதாசர்.

4.    "கல்வியில் கரையிலாத காஞ்சி" என்று காஞ்சியைப் புகழ்ந்தவர்: திருநாவுக்கரசர்.

5.    பொருந்தல் அகழாய்வு இடம்: திண்டுக்கல் மாவட்டம்.

6.    கீழடி அகழாய்வு இடம்: சிவகங்கை மாவட்டம்.

7.    சங்க காலச் சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர்: கரிகால் வளவன் (அல்லது) கரிகாலன்.

8.    'கொற்கையின் தலைவன்' எனப் போற்றப்பட்ட பாண்டிய அரசன்: நெடுஞ்செழியன்.

9.    முசிறியை 'இந்தியாவின் முதல் பேரங்காடி' எனக் குறிப்பிட்டவர்: மூத்த பிளினி.

10.   களப்பிரர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த காலம்: சுமார் இரண்டரை நூற்றாண்டுகள்.

மதங்கள் மற்றும் பேரரசுகள் (Religions and Empires)

1.    ஆரியர்களின் கல்வி முறை: குருகுலக் கல்வி முறை.

2.    'சத்யமேவ ஜெயதே' (வாய்மையே வெல்லும்) என்ற வாக்கியம் எடுக்கப்பட்டது: முண்டக உபநிடதம்.

3.    சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர்: ரிஷபர்.

4.    சமண மதத்தின் கடைசி (24வது) தீர்த்தங்கரர்: மகாவீரர்.

5.    கௌதம புத்தரின் இயற்பெயர்: சித்தார்த்தா.

6.    பௌத்த சங்கம் பிரிந்த பிரிவுகள்: ஹீனயானம் மற்றும் மகாயானம்.

7.    புத்தர் தனது முதல் போதனைச் சொற்பொழிவை நிகழ்த்திய இடம்: சாரநாத் மான்கள் பூங்கா.

8.    நாளந்தா பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் தங்கி கல்வி பயின்ற சீனப் பயணி: யுவான் சுவாங்.

9.    மெகஸ்தனிஸ் எழுதிய நூல்: இண்டிகா.

மௌரியர், குப்தர் மற்றும் தென்னிந்திய அரசுகள் (Mauryas, Guptas, and South Indian Kingdoms)

1.    மௌரியப் பேரரசை நிறுவியவர்: சந்திரகுப்த மௌரியர்.

2.    நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்: குமாரகுப்தர்.

3.    சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர்: கௌதமபுத்திர சதகர்ணி.

4.    கனிஷ்கர் கூட்டிய நான்காவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம்: ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தலவனத்தில்.

5.    அஸ்வகோஷர் எழுதிய முதல் சமஸ்கிருத நாடகம்: புத்த சரிதம்.

6.    குப்த அரச வம்சத்தை நிறுவியவர்: ஸ்ரீகுப்தர்.

7.    'கவிராஜா' எனும் பட்டம் பெற்ற குப்த அரசர்: சமுத்திர குப்தர்.

8.    விக்கிரமாதித்யர் என்று அறியப்பட்ட குப்த மன்னர்: இரண்டாம் சந்திரகுப்தர்.

9.    அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர்: சுஸ்ருதர்.

10.   ஹர்ஷவர்த்தனர் எழுதிய புகழ் பெற்ற நூல்கள்: ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்சிகா.

11.   சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவர்: ஹரிசேனர்.

12.   காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர்: இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்மன்).

13.   'மாமல்லன்' என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன்: முதலாம் நரசிம்மவர்மன்.

14.   சாளுக்கியர்களின் தலைநகரம்: வாதாபி (பதாமி).

15.   ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர்: தந்திதுர்க்கர்.

16.   எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை உருவாக்கியவர்: முதலாம் கிருஷ்ணர்.

புவியியல் மற்றும் விண்வெளி (Geography and Space)

1.    அண்டத்தைப் பற்றிய படிப்பின் பெயர்: அண்டவியல் (Cosmology).

2.    சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை: 6000°C.

3.    இரட்டைக் கோள்கள் என அழைக்கப்படுபவை: வெள்ளியும் புவியும்.

4.    உயிர்க்கோளம் என்று அழைக்கப்படும் கோள்: புவி.

5.    மிக அதிகமான துணைக்கோள்களைக் கொண்ட கோள்: வியாழன்.

6.    செவ்வாய்க் கோளை ஆராய இஸ்ரோ (ISRO) அனுப்பிய விண்கலத்தின் பெயர்: மங்கள்யான்.

7.    தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள்: யுரேனஸ்.

8.    76 வருடங்களுக்கு ஒருமுறை விண்ணில் தோன்றும் வால்விண்மீன்: ஹேலி.

9.    புவி தன் அச்சில் சாய்ந்திருக்கும் அளவு: 23½ டிகிரி.

10.   உலகின் மிகப் பெரிய கண்டம்: ஆசியா.

11.   உலகின் மிகச் சிறிய கண்டம்: ஆஸ்திரேலியா.

12.   "உலகத்தின் கூரை" என்று அழைக்கப்படுவது: திபெத் பீடபூமி.

13.   உலகின் மிக உயரமான சிகரம்: எவரெஸ்ட் சிகரம் (8848 மீட்டர்).

14.   புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல்: பசிபிக் பெருங்கடல்.

15.   பசிபிக் பெருங்கடலின் மிகவும் ஆழமான பகுதியின் பெயர்: மரியானா அகழி.

16.   ஆங்கில எழுத்து 'S' வடிவத்தைப் போன்று உள்ள பெருங்கடல்: அட்லாண்டிக் பெருங்கடல்.

17.   பாக் நீர்ச்சந்தி இணைப்பது: வங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும்.

18.   "உலகின் பெரும் மருந்தகம்" என அழைக்கப்படுவது: வெப்ப மண்டல மழைக்காடுகள்.

19.   வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படும் திமிங்கலப் புனுகு பெறப்படுவது: ஸ்பெர்ம் திமிங்கலம்.

20.   ஆசியாவின் மிக நீளமான ஆறு: யாங்சி.

21.   உலகின் மிக ஈரப்பதம் வாய்ந்த பகுதி: மௌசின்ராம்.

22.   தென்கிழக்கு ஆசியாவின் 'அரிசிக் கிண்ணம்' என அழைக்கப்படும் நாடு: தாய்லாந்து.

23.   உலகிலேயே நீண்ட இருப்புப்பாதை வழித்தடம்: டிரான்ஸ்-சைபீரியன் இருப்புப்பாதை.

24.   ஐரோப்பாவின் மிக நீளமான ஆறு: வோல்கா ஆறு.

25.   உலகிலேயே நீர் மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகள்: நார்வே மற்றும் ஸ்வீடன்.

அட்ச, தீர்க்கக் கோடுகள் மற்றும் பொருளாதாரம் (Latitudes, Longitudes, and Economy)

1.    முதன் முதலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவர்: தாலமி.

2.    0° அட்சக்கோடு அழைக்கப்படுவது: நிலநடுக்கோடு.

3.    பன்னாட்டு தேதிக்கோடாக நிர்ணயிக்கப்பட்டுள்ள தீர்க்கக்கோடு: 180° தீர்க்கக்கோடு.

4.    இந்திய திட்ட நேரம் (IST) கணக்கிடப்படும் ஆதாரத் தீர்க்கக்கோடு: 82½ டிகிரி கிழக்கு தீர்க்கக்கோடு.

5.    உணவுத் தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்: முதல் நிலை தொழில்.

6.    சேவைத் துறை என்று அழைக்கப்படுவது: மூன்றாம் நிலைத் தொழில்கள்.

அரசியலமைப்பு மற்றும் இந்தியத் தேசிய சின்னங்கள் (Constitution and Indian National Emblems)

1.    இந்தியாவை “இனங்களின் அருங்காட்சியகம்" என்று கூறிய வரலாற்றாசிரியர்: வி.ஏ.ஸ்மித்.

2.    இந்திய அரசால் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழி: தமிழ்மொழி (2004).

3.    'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' என்ற நூலை எழுதியவர்: ஜவஹர்லால் நேரு.

4.    சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு: பிரிவு 14.

5.    தீண்டாமையை ஒழிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு: பிரிவு 17.

6.    "இந்திய அரசியலமைப்பின் தந்தை" எனப் போற்றப்படுபவர்: டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார்.

7.    இந்தியாவின் 'ஏவுகணை மனிதர்' என்று சிறப்பிக்கப்படுபவர்: அப்துல் கலாம்.

8.    இந்தியாவின் தேசிய இலச்சினை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆதாரம்: சாரநாத் அசோகத் தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம்.

9.    இந்திய தேசிய கீதத்தை வங்காள மொழியில் எழுதியவர்: இரவீந்திரநாத் தாகூர்.

10.   தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை எழுதியவர்: பங்கிம் சந்திர சட்டர்ஜி.

11.   இந்திய ரூபாய் சின்னத்தை (₹) வடிவமைத்தவர்: டி.உதயகுமார்.

12.   இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையாகத் தயாராகி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்: 1949 நவம்பர் 26.

மக்களாட்சி மற்றும் உள்ளாட்சி (Democracy and Local Governance)

1.    மக்களாட்சியின் பிறப்பிடம்: கிரேக்கம்.

2.    உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு: நியூசிலாந்து (1893).

3.    இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி அமைப்பு: சென்னை மாநகராட்சி (1688).

4.    தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி: வாலாஜாபேட்டை நகராட்சி.

5.    தேசிய ஊராட்சி தினம்: ஏப்ரல் 24.

Tuesday, February 17, 2026

7:54:00 AM

PSYCHOLOGY Question And Answer - 05

41. மாணர்களிடம் கவலை ஏற்படுத்தும் காரணி

A பெற்றோர்/ஆசிரியர்களின் அளவு கடந்த எதிர்பார்ப்புகள்

B குற்ற உணர்வுகள்

C கற்றல் குறைபாடுகள்

D இவை அனைத்தும்

42. மூன்று AAA யார் அறிந்து கடைப்பிடிக்க வேண்டும்?

A ஆசிரியர்

B மாணவர்

C பெற்றோர்

D நண்பன்

43. மனநலத்தின் வெளிப்படையான அறிகுறி?

A உற்சாகமான மனநிலை

B நல்ல உறக்கம்

C உணவில் திருப்தி

D இவை அனைத்தும்

44. மாணவர்களிடம் உணர்வுச் சமநிலைத் தோற்றுவிக்கும் காரணி

A அன்பும் பரிவும் கொண்ட ஆசிரியர்

B மகிழ்ச்சியான கற்றல் சூழல்

C ஆரோக்கியமான வகுப்பறை உறவுகள்

D இவை அனைத்தும்

45. தவறாமல் பள்ளிக்கு வருதல் என்பது?

A தன்னிணக்கம்

B சமூக இணக்கம்

C பள்ளி இணக்கம்

D இவை அனைத்தும்

46. ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிகாட்டாமல் மனதினுள் அடக்கி வைக்கப்படுவதால் ஏற்படுவது?

A சுவாச மண்ட நோய்

B தோல் நோய்

C ஜீரண மண்ட நோய்

D நாளமில்லாத சுரப்பி நோய்

47. குழந்தை பிறப்பதற்கு பின்னர் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மிக விரைவாகவும், பின்னர் மெதுவாகவும் நடைபெறுவது?

A நரம்பு மண்டல வளர்ச்சி

B மூளை வளர்ச்சி

C எலும்பு வளர்ச்சி

D முடி வளர்ச்சி

48. பிறக்கும் பொழுது குழந்தை மூளையின் நிறை

A 450 கிராம்

B 350 கிராம்

C 250 கிராம்

D 520 கிராம்

49. பருவமடைந்த பின்னர் மூளையின் அளவு 1,260 கிராம் முதல் --------- கிராம் வரையுள்ளது

A 1400 கிராம்

B 1500 கிராம்

C 1600 கிராம்

D 1300 கிராம்

50. மூளையின் வளர்ச்சி 90 சதவீதம் அடையும் வயது எது?

A 3

B 4

C 5

D 6

7:53:00 AM

PSYCHOLOGY Question And Answer - 04

31. குழந்தையின் தற்கருத்து வளர்ச்சியினை தீர்மானிக்கும் சமூக காரணி

A மரபுநிலை

B பெற்றோர்களின் மனப்பான்மை

C பிறப்பு வரிசை

D இவை அனைத்தும்

32. இதில் எரிக்சன் கோட்பாட்டின் மையக் கருத்து எது?

A உளவியல் - சமூக வளர்ச்சியில் 8 நிலைகள்

B குறிப்பிட்ட வளர்ச்சி சார்ந்த சிக்கல்கள் ஏற்படும்

C A மற்றும் B சரி

D அனைத்தும் தவறு

33. எரிக்சன் கோட்பாட்டின்படி இவற்றில் நிறையாளுமை பெற்றவரின் பண்பு?

A குற்ற உணர்வு

B தனிமை

C தன்னாட்சி

D தேக்கநிலை

34. எரிக்சன் கோட்பாட்டின்படி இவற்றில் குறையாளுமை பெற்றவரின் பண்பு எது?

A நெருக்கம்

B படைப்பூக்கம்

C தான் தொடங்காற்றல்

D தனிமை

35. மனவெழுச்சி என்பது

A மன உணர்ச்சிகளை மேலோங்கி நிற்கும் நனவு நிலை

B உள்ளத்தையும் உடலையும் கிளர்ச்சியடையச் செய்யும்

C நெருக்கடி நிலைகளில் சூழலை ஆதரித்தோ, எதிர்த்தோ அல்ல ஓடி ஒளியவோ ஒருவரைத் தூண்டும்

D இவை அனைத்தும்

36. இது வெறுப்புணர்ச்சியின் அடிப்படையில் அமைந்த மனவெழுச்சி இல்லை?

A சினம்

B அச்சம்

C பாசம்

D கவலை

37. ஓரளவு அச்சமும், சினமும் கலந்த சிக்கலான வீணான மனவெழுச்சி எது?

A சினம்

B பொறாமை

C. கவலை

D இவை அனைத்தும்

38. மாணவர்களிடம் அச்ச உணர்வு ஏற்படுத்தும் காரணி?

A எதையும் சரியாக புரிந்து கொள்ளாமை

B கூச்சம், அவமானம் தரும் நிலைமைகள்

C தன் மதிப்பை தாக்கும் சூழல்கள்

D இவை அனைத்தும்

39. நினைப்பதற்கும் நடப்பதற்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் எதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது?

A பொறாமை

B கவலை

C சினம்

D பயம்

40. அதிக அளவில் கவலைப்படுவதின் விளைவு

A தெளிவற்ற மனநிலை

B மாய ஒளி

C மாயத்தோற்றம்

D இவை அனைத்தும்

7:52:00 AM

PSYCHOLOGY Question And Answer - 03

21. எதிர்மறை தற்கருத்து இந்த எண்ணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது?

A அவநம்பிக்கை, வெறுப்பு

B தோல்வி, உணர்ச்சி, சந்தேகம்

C பாதுகாப்பற்ற உணர்வு

D இவை அனைத்தும்

22. குழந்தைகள் நாம் என்ற சமூக உணர்வினை இங்கு வளர்த்துக் கொள்கிறது

A குடும்பம்

B பள்ளி

C ஒப்பார்குழு மற்றும் உறவினர்கள்

D இவை அனைத்தும்

23. ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு குழுவை பற்றியோ உண்மை நிலை அறியாமல் அவசரப்பட்டு தவறான முடிவுக்கு வருவது

A நேர்மறை எண்ணங்கள்

B எதிர்மறை எண்ணங்கள்

C சார்பெண்ணங்கள்

D இவற்றில் எதுவுமில்லை

24. சகோதர உறவு என்பது

A ஒரு தாய் வயிற்றுப் பிறப்பாளர்கள்

B ஒரு மூல மரபினை உடையவர்கள்

C ஒரே தாய்தந்தை உடையவர்கள்

D இவை அனைத்தும்

25. தனித்துவ நிலை பறிக்கப்படுவதாக உணரும் குழந்தை

A முதலில் பிறந்த குழந்தை

B இரண்டாவது பிறந்த குழந்தை

C இரண்டு குழந்தையும்

D இவற்றில் எதுவுமில்லை

26. விளையாட்டுகள் மூலம் இந்த வளர்ச்சி ஏற்பட உதவுகிறது?

A அறிவு, உடல்

B மொழி, சமூகம்

C மனவெழுச்சி

D இவை அனைத்தும்

27. குழந்தைகள் இந்த வயது வரை புலன் - இயக்க விளையாட்டுகளை விரும்புகின்றனர்

A 1 வயது வரை

B 2 வயது வரை

C 3 வயது வரை

D 4 வயது வரை

28. இந்த விளையாட்டு முறையில் மாணவரோ, ஆசிரியரோ அல்லது சமுதாயமோ சந்திக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்?

A பாவனை நடிப்பு

B பங்கேற்பு நாடகம்

C வார்த்தை விளையாட்டு

D சொற்கோபுரம்

29. SWOT என்பது இதனை குறிக்கிறது?

A பயங்கள்

B சந்தர்ப்பங்கள்

C பலங்கள், பலவீனங்கள்

D இவை அனைத்தும்

30. ஒரு குழந்தையின் தற்கருத்து வளர்ச்சி எங்கு உருவாகின்றது?

A பள்ளி

B மைதானம்

C ஒப்பார்குழு

D குடும்பம்


7:32:00 AM

PSYCHOLOGY Question And Answer - 02

11. குழந்தைகளின் வளர்ச்சி என்பது எதன் பின்னணியை பொறுத்து வேறுபடுகின்றது?

A சமூக பின்னணி

B பொருளாதார பின்னணி

C அரசியல் பின்னணி

D A மற்றும் B

12.  இவற்றில் குறியீட்டுச் சிந்தனையில் தொடர்புடையது?

A வார்த்தைகள்

B எண்கள்

C உருவங்கள்

D இவை அனைத்தும்

13. குழந்தைகள் பள்ளிக்கு வரும் முன்னர் இந்த செயலில் ஈடுபடுகின்றனர்?

A பின்பற்றிச் செய்தல்

B பாவனை விளையாட்டு

C மொழியால் கருத்துப் பரிமாற்றம்

D இவை அனைத்தும்

14. குழந்தைகளின் குறியீட்டுச் சிந்தனைக்கு அவசியமானது?

A எண்ணுருக்கள்

B எழுத்துகள்

C உருவம்

D A மற்றும் B

15. ஒரு குழந்தை 7, 8 ஆண்டுகளில் வரிசைத் தொடர்பு கிராமப்படி சிந்திக்கத் தொடங்குகிறது என்று குறிப்பிட்டவர்?

A பியாஜே

B சர்ச்சில்

C எடிசன்

D யாருமில்லை

16. அறிதல் திறன் வளர்ச்சி எத்தனை படிநிலைகளில் நடைபெறுவதாக உளவியல் அறிஞர் பியாஜே கூறினார்? 

A 2

B 3

C 4

D 5

17. பியாஜே கூறும் புலன் இயக்கப் பருவம் என்பது?

A 0-2 ஆண்டுகள்

B 2-7 ஆண்டுகள்

C 7-12 ஆண்டுகள்

D 12 ஆண்டுகளுக்கு மேல்

18. மனிதன் வளர்ச்சி நிலையை எரிக்சன் எத்தனை படிநிலைகளாக கூறினார்?

A 4

B 5

C 7

D 8

19. எரிக்சனின் கூற்றுபடி குழந்தைகள் எந்த படிநிலையின் போது தொடக்கப் பள்ளிக்கு வருகின்றனர்?

A 5

B 6

C 4

D 3

20. உடன்பாட்டு தற்கருத்து இந்த உணர்வுகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றது?

A வெற்றி உணர்வு, அன்பு

B பாதுகாப்புணர்வு

C மரியாதை, நம்பிக்கை

D இவை அனைத்தும்

4:53:00 AM

10th TAMIL அரசுப் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான வினா - விடை கற்றல் கையேடு 2025-2026 - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வெளியீடு