Breaking

Saturday, April 18, 2026

6:10:00 AM

9TH TAMIL - யாப்பிலக்கணம்

யாப்பின் ஆறு உறுப்புகள்
  1. எழுத்து
  2. அசை
  3. சீர்
  4. தளை
  5. அடி
  6. தொடை 
அசை - இரண்டு
  1. நேரசை
  2. நிரையசை
நேரசை
  • தனிக்குறில் - ப
  • தனிக்குறில், ஒற்று - பல்
  • தனிநெடில் - பா
  • தனிநெடில், ஒற்று - பால்
நிரையசை
  • இருகுறில் - அணி
  • இருகுறில், ஒற்று - அணில்
  • குறில், நெடில் - விழா
  • குறில், நெடில், ஒற்று - விழார்
சீர் - நான்கு
  1. ஓரசைச்சீர்
  2. ஈரசைச்சீர்
  3. மூவசைச்சீர்
  4. நாலசைச்சீர்
ஓரசைச் சீர்

அசை வாய்பாடு
  • நேர் - நாள்
  • நிரை - மலர்
  • நேர்பு - காசு
  • நிரைபு – பிறப்பு

தளை

பாடலில், நின்ற சீரின் ஈற்றசையும், அதனையடுத்து வரும் சீரின் முதல் அசையும் பொருந்துதல் தளை எனப்படும். இது ஒன்றியும் ஒன்றாமலும் வரும். அது ஏழு வகைப்படும்.

1. நேரொன்றாசிரியத்தளை - மா முன் நேர்
2. நிரையொன்றாசிரியத்தளை - விளம் முன் நிரை
3. இயற்சீர் வெண்டளை - மா முன் நிரை, விளம் முன் நேர்
4. வெண்சீர் வெண்டளை - காய் முன் நேர்
5. கலித்தளை - காய் முன் நிரை
6. ஒன்றிய வஞ்சித்தளை - கனி முன் நிரை
7. ஒன்றா வஞ்சித்தளை - கனி முன் நேர்

அடி

இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது' அடி' எனப்படும். அவை ஐந்து வகைப்படும்.

இரண்டு சீர்களைக் கொண்டது குறளடி; 
மூன்று சீர்களைக் கொண்டது சிந்தடி; 
நான்கு சீர்களைக் கொண்டது அளவடி; 
ஐந்து சீர்களைக் கொண்டது நெடிலடி; 
ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது கழிநெடிலடி.

தொடை

தொடை - தொடுத்தல். பாடலின் அடிகளிலோ, சீர்களிலோ எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது 'தொடை' ஆகும். தொடை என்னும் செய்யுள் உறுப்பு, பாடலில் உள்ள அடிகள் தோறும் அல்லது சீர்கள் தோறும் ஒரு குறிப்பிட்ட வகையிலான ஓசை பொருந்தி வருமாறு பாடலை இயற்றுதல் பற்றி அமைகிறது.

மோனை, எதுகை, இயைபு, அளபெடை, முரண், இரட்டை, அந்தாதி, செந்தொடை என்று எட்டு வகைகளாகத் தொடை அமைகிறது.

மோனைத் தொடை: ஒரு பாடலில் அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து ஒன்றி அமைவது. (எ.கா.)

ற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ற்றினால் ஒற்றிக் கொளல்.

எது கைத் தொடை: அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றியமைவது. (எ.கா.)

தினல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
னல்ல செய்யாமை நன்று.

இயைபுத் தொடை: அடிகள் தோறும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ ஒன்றியமைவது. (எ.கா.)

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

1. யாப்புறுப்புகள் ............. வகைப்படும்.

அ) இரண்டு 

ஆ) நான்கு  

இ) ஆறு  

ஈ) ஏழு

2. அசை ............. வகைப்படும்.

அ) இரண்டு 

ஆ) மூன்று 

இ) ஆறு  

ஈ) ஏழு

3. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

அ) இயற்சீர் 

ஆ) வெண்சீர் 

இ) மாச்சீர் 

ஈ) விளச்சீர்

4. நாலசைச்சீர் ..............

அ) நான்கு 

ஆ) ஏழு  

இ) எட்டு  

ஈ) பதினாறு

5. ‘வெண்சீர்’ ....... என அழைக்கப்படுவது.

அ) மாச்சீர் 

ஆ) விளச்சீர் 

இ) காய்ச்சீர் 

ஈ) கனிச்சீர்

6. தளை ............. வகைப்படும்.

அ) இரண்டு 

ஆ) மூன்று 

இ) ஆறு  

ஈ) ஏழு

7. ‘கனிமுன் நிரை’ வருவது ................

அ) இயற்சீர் வெண்டளை  

ஆ) வெண்சீர் வெண்டளை

இ) ஒன்றிய வஞ்சித்தளை  

ஈ) ஒன்றாத வஞ்சித்தளை

8. அடி ............. வகைப்படும்.

அ) இரண்டு 

ஆ) ஐந்து  

இ) ஆறு  

ஈ) ஏழு

9. தொடை ............. வகைப்படும்.

அ) இரண்டு 

ஆ) மூன்று 

இ) ஆறு  

ஈ) எட்டு

10. ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது.

அ) சிந்தடி    

ஆ) அளவடி

இ) நெடிலடி    

ஈ) கழிநெடிலடி

4:36:00 AM

9TH TAMIL - மகனுக்கு எழுதிய கடிதம்





  • கவிஞர் நா.முத்துகுமார், தன் மகனுக்கு எழுதியதாக இக்கடிதம் அமைந்துள்ளது.
  • “தம் மக்கள் மெய் தீண்டல் உயிர்க்கு இன்பம்” என்று கூறியவர் = திருவள்ளுவர்.
  • கைபேசியின் வரவால் இன்று கடிதம் எழுதும் பழக்கம் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்.
  • கடிதங்களைக் கொண்டு பல வரலாறுகளையும் இலக்கியங்களையும் பரிமாறியிருக்கிறார்கள்.
  • கடித வடிவில் புதினங்களும் எழுதப்பட்டுள்ளன.
  • தாகூர், நேரு, டி.கே.சி., வல்லிக்கண்ணன், பேரறிஞர் அண்ணா, மு. வரதராசனார், கு. அழகிரிசாமி, கி. இராஜநாராயணன் முதலானோர் கடித வடிவில் இலக்கியங்கள் படைத்துள்ளனர்.
4:03:00 AM

9TH TAMIL - யசோதர காவியம்




ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக
நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக
காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே

பாடல் பொருள்

  • நம்மிடம் உள்ள தீய பழக்கங்களை நீக்க வேண்டுமானால் முதலில் நீக்க வேண்டியது = சினம்.
  • முதலில் ஆராய வேண்டியது = மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.
  • முதலில் போற்றிக் காக்க வேண்டியது = நன்னெறியினை காக்க வேண்டும்.
  • “ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = யசோதர காவியம்.
  • “போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = யசோதர காவியம்.
  • “நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = யசோதர காவியம்.
  • “காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = யசோதர காவியம்.

இலக்கணக்குறிப்பு

  • ஆக்குக = வியங்கோள் வினைமுற்று
  • போக்குக = வியங்கோள் வினைமுற்று
  • நோக்குக = வியங்கோள் வினைமுற்று

யசோதர காவியம் நூல் குறிப்பு

  • ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம்.
  • இந்நூல் வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும்.
  • இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை.
  • இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்.
  • யசோதர காவியம், ‘யசோதரன்’ என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.
  • இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது;
  • பாடல்கள் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கூறுவர்.

1. யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

அ) உதயகுமாரன்   

ஆ) யசோதரன்

இ) சீவகன்    

ஈ) சனகன்

2. யசோதரன் எந்நாட்டு மன்னன்?

அ) மாளவம் 

ஆ) மகதம் 

இ) கலிங்கம் 

ஈ) அவந்தி

3. யசோதர காவியத்தின் உட்பிரிவுகள் .......... என அழைக்கப்படுகிறது.

அ) காதை 

ஆ) படலம் 

இ) இலம்பகம் 

ஈ) சருக்கம்

4. யசோதர காவியத்தில் அமைந்துள்ள சருக்கங்களின் எண்ணிக்கை.

அ) மூன்று 

ஆ) நான்கு 

இ) ஐந்து  

ஈ) ஆறு

5. யசோதர காவியத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை.

அ) 300  

ஆ) 320  

இ) 350 

ஈ) 355

3:55:00 AM

9TH TAMIL - ஓ என் சமகாலத் தோழர்களே!



  • “அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்” என்று பாடியவர் = கவிஞர் வைரமுத்து
  • “கரிகா லன்தன் பெருமை எல்லாம் கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்” என்று பாடியவர் = கவிஞர் வைரமுத்து
  • “ஏவும் திசையில் அம்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்” என்று பாடியவர் = கவிஞர் வைரமுத்து
  • “ஏவு கணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்” என்று பாடியவர் = கவிஞர் வைரமுத்து
  • கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்.
  • இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருதினைப் பெற்றவர்.
  • கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
  • கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது வென்றவர் = வைரமுத்து.
  • இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும் மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர்.
  • இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
  • இப்பாடப் பகுதி வைரமுத்து கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
  • “வலவன் ஏவா வான ஊர்தி” என்ற அடி இடம் பெற்ற நூல் = புறநானூறு
  • “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி” என்ற அடி இடம் பெற்ற நூல் = புறநானூறு
  • “ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின்” என்ற பாடல் அடி இடம் பெற்ற நூல் = சீவக சிந்தாமணி.
  • அந்தரத் தார்மய னேஎன ஐயுறும் தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன் வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, “ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின்” என்ற பாடல் அடி இடம் பெற்ற நூல் = சீவக சிந்தாமணியின் நாமகள் இலம்பகம்.

1. வைரமுத்து பிறந்த ஊர்

அ) மேட்டூர் 

ஆ) மெட்டூர் 

இ) கோட்டூர் 

ஈ) படூர்

2. 2003ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற வைரமுத்துவின் நூல்.

அ) கல்லிக்காட்டு இதிகாசம் 

ஆ) வைகறை மேகங்கள்

இ) இன்னொரு தேசியகீதம் 

ஈ) தண்ணீர் தேசம்

3. இந்திய அரசு வைரமுத்துவிற்கு வழங்கிய விருது.

அ) பத்மஸ்ரீ 

ஆ) பத்மபூஷன் 

இ) பாரதரத்னா 

ஈ) பத்மவிபூஷன்

4. ‘வலவன் ஏவா வான ஊர்தி’ என்னும் தொடர் இடம்பெற்ற நூல்.

அ) பதிற்றுப்பத்து   

ஆ) புறநானூறு

இ) சிலப்பதிகாரம்   

ஈ) சீவக சிந்தாமணி

5. ‘ஏவு கணையிலும் தமிழை எழுதி, எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்’ என்று கூறியவர்?

அ) பாரதிதாசன்   

ஆ) வாணிதாசன்

இ) சுரதா     

ஈ) வைரமுத்து

6. ‘எந்திர வூர்தி இயற்றுமின்’

அ) பதிற்றுப்பத்து   

ஆ) புறநானூறு

இ) சிலப்பதிகாரம்   

ஈ) சீவக சிந்தாமணி

7. ‘காய்ந்து கிடக்கும் கழனிகள் எங்கும்’ இவ்வடியில் பயின்றுவரும் மோனை.

அ) இணை மோனை   

ஆ) பொழிப்பு மோனை

இ) ஒரூஉ மோனை   

ஈ) கூழை மோனை

8. ‘எரியும் தீயும் இழந்த திரிதான்’ இவ்வடியில் பயின்று வரும் எதுகை.

அ) இணை எதுகை   

ஆ) பொழிப்பு எதுகை

இ) ஒரூஉ எதுகை   

ஈ) கூழை எதுகை

9. ‘பொருத்துங்கள்’ – இச்சொல்லுக்கான பகுபத உறுப்பிலக்கணம்.

அ) பகுதி+விகுதி  

ஆ) பகுதி+இடைநிலை+விகுதி

இ) பகுதி+ இடைநிலை+சாரியை+விகுதி

ஈ) பகுதி+சந்தி+இடைநிலை+சாரியை+விகுதி

(பொருத்து – பகுதி, உம் – விகுதி, கள் – விகுதி மேல் விகுதி)

10. ‘சொன்னோர்’ – இலக்கணக் குறிப்பு

அ) தொழிற்பெயர்   

ஆ) வினையாலனையும் பெயர்

இ) வினைத்தொகை  

ஈ) ஏவல் வினைமுற்று

3:48:00 AM

9TH TAMIL - பெரியாரின் சிந்தனைகள்


தந்தை பெரியாரின் சிறப்பு பெயர்கள்

  • வெண்தாடி வேந்தர்
  • பகுத்தறிவுப் பகலவன்
  • வைக்கம் வீரர்
  • ஈரோட்டுச் சிங்கம்
  • சுய மரியாதை சுடர்
  • பெண்ணினப் போர் முரசு
  • புத்துலகத் தொலை நோக்காளர்
  • தெற்காசியாவின் சாக்ரடீஸ்

தந்தை பெரியார்

  • மூடப்பழக்கத்தில் மூழ்கிக் கிடந்த தமிழ் மக்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் = தந்தை பெரியார்.
  • தானே முயன்று கற்று, தானாகவே சிந்தித்து அறிவார்ந்த கருத்துகளை வெளியிட்டவர் = தந்தை பெரியார்.
  • “சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்” என்று கூறியவர் = தந்தை பெரியார்.
  • சாதியினால் மனித வாழ்விற்கு எவ்விதச் சிறு பயனும் விளையப் போவதில்லை. அதனால் வீண் சண்டைகளும் குழப்பங்களுந்தான் மேலோங்குகின்றன. அத்தகு சாதி, மனிதனுக்குத் தேவையில்லை என்று கூறியவர் = தந்தை பெரியார்.
  • சாதி, மனிதனுக்கு தேவையில்லை என்று கூறியவர் = தந்தை பெரியார்.
  • மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? என்றவர் = தந்தை பெரியார்.
  • மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா? என்று கேட்டவர் = தந்தைப் பெரியார்.
  • பெரியார் பின்பற்றிய கொள்கை = கடவுள் மறுப்புக் கொள்கை.
  • சமூக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த கருவி = கல்வி.
  • “கற்பிக்கப்படும் கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும், சுயமரியாதை உணர்ச்சியையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்; மேன்மை வாழ்வு வாழ்வதற்கேற்ற தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்” என்றார் பெரியார்.
  • “சமூகத்தின் அனைத்து நிலையினருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும்” என்றார் பெரியார்.
  • அனைவருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும். குறிப்பாகப் பெண்களுக்குக் கல்வியறிவு புகட்ட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் பெரியார்.
  • மனப்பாடத்திற்கு முதன்மை அளிக்கும் தேர்வு முறையையும், மதிப்பெண்களுக்கு முதன்மை அளிக்கும் முறையையும் பெரியார் கடுமையாக எதிர்த்தார்.
  • திருக்குறளில் அறிவியல் கருத்துகளும் தத்துவக்கருத்துகளும், அனைவருக்கும் பொதுவான வகையில் இடம் பெற்றிருப்பதால் அதை மதிப்புமிக்க நூலாகப் பெரியார் கருதினார்.
  • பெரியார் மதிப்புமிக்க நூலாக கருதியது = திருக்குறள்.
  • இந்நூலில் அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியுள்ளன;
  • திருக்குறளை ஊன்றிப் படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள் என்றார் பெரியார்.
  • “மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்” என்றார் பெரியார்.
  • உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஔ’ என்பதனை ‘அவ்’ எனவும் சீரமைத்தார் (ஐயா – அய்யா, ஒளவை – அவ்வை).
  • மெய்யெழுத்துகளில் சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார்.
  • பெரியாரின் இக்கருத்தின் சில கூறுகளை 1978ஆம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.
  • நாட்டு விடுதலையைவிட, பெண் விடுதலைதான் முதன்மையானது என்று கூறினார் பெரியார்.
  • கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஆண்களுக்கு நிகரான உரிமை, பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றார் பெரியார்.
  • வேலைவாய்ப்பில் ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்பட வேண்டும் என்றார் பெரியார்.
  • 1938 நவம்பர் 13 இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
  • 27.06.1970 இல் யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பு தந்தை பெரியாரைத் ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
  • பெரியார் துவக்கிய இயக்கம் = சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு = 1925.

பெரியார் எதிர்த்தவை

  • இந்தித் திணிப்பு
  • குலக்கல்வித் திட்டம்
  • தேவதாசி முறை
  • கள் உண்ணுதல்
  • குழந்தை திருமணம்
  • மணக்கொடை

பெரியார் விதைத்த விதைகள்

  • கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கான சொத்துரிமை
  • குடும்ப நலத்திட்டம்
  • கலப்புத் திருமணம்
  • சீர்திருத்தத் திருமணம் ஏற்பு

பெரியார் நடத்திய இதழ்கள்

  • குடியரசு
  • விடுதலை
  • உண்மை
  • ரிவோல்ட் (ஆங்கில இதழ்)

1. பெரியார் என்றவுடன் நினைவுக்கு வருவது, அவரின் .............

அ) பகுத்தறிவுக் கொள்கை  

ஆ) மணக்கொடை

இ) கலப்புத் திருமண வரவேற்பு 

ஈ) சுயமரியாதை இயக்கம்

2. 1938 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ஈவெ.ராவுக்கு வழங்கிய பட்டம்.

அ) வைக்கம் வீரர்   

ஆ) பெரியார்

இ) பெண்ணினப் போராளி  

ஈ) பகுத்தறிவுப் பகலவன்

3. 1970 ஆம் ஆண்டு ..................., தந்தைப் பெரியாரைத் ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

அ) காமன்வெல்த் அமைப்பு 

ஆ) தெற்காசிய கூட்டமைப்பு

இ) யுனெஸ்கோ நிறுவனம்  

ஈ) யுனிசீப் நிறுவனம்

4. பெரியார் தோற்றுவித்த இயக்கம் எது?

அ) கலப்புத் திருமண இயக்கம் 

ஆ) சுயமதியாதை இயக்கம்

இ) கள்ளுண்ணாமை இயக்கம் 

ஈ) மணக்கொடை மறுப்பு

5. சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு.

அ) 1925  

ஆ) 1938  

இ) 1949  

ஈ) 1970

6. பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.

அ) குடியரசு 

ஆ) விடுதலை 

இ) உண்மை 

ஈ) முரசு

(விடையாக உள்ளதைத் தவிர ஏனையவை பெரியார் நடத்திய இதழ்கள்)

 7. பெரியார் நடத்திய ஆங்கில இதழின் பெயர்.

அ) தி வேல்ட் 

ஆ) ரிவோல்ட் 

இ) திராவிடா 

ஈ) இந்தியா

8. பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.

அ) தேவதாசி முறை   

ஆ) மணக்கொடை

இ) இந்தித் திணிப்பு   

ஈ) கலப்புத் திருமணம்

(விடையாக உள்ளதைத் தவிர ஏனையவை பெரியார் எதிர்த்தவை)

9. பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.

அ) சீர்திருத்தத் திருமணம்  

ஆ) குடும்ப நலத்திட்டம்

இ) குழந்தைத் திருமணம்  

ஈ) சொத்துரிமை

(விடையாக உள்ளதைத் தவிர ஏனையவை பெரியார் ஆதரித்தவை)

10. ‘தொண்டு செய்து பழுத்தபழம் தூயதாடி மார்பில் விழும், மண்டைச் சுரப்பை உலகு தொழும் மணக்குகையில் சிறுத்தை எழும்’ என்று பெரியாரை அடையாளப்படுத்தியவர்.

அ) திரு.வி.க.    

ஆ) அண்ணா

இ) இராஜாஜி    

ஈ) பாரதிதாசன்