Breaking

Thursday, March 26, 2026

6:53:00 PM

6TH TAMIL - கடலோடு விளையாடு



விடிவெள்ளி நம்விளக்கு - ஐலசா
விரிகடலே பள்ளிக்கூடம் - ஐலசா
அடிக்கும்அலை நம்தோழன் - ஐலசா
அருமைமேகம் நமதுகுடை - ஐலசா
வெண்மணலே பஞ்சுமெத்தை - ஐலசா
விண்ணின்இடி காணும்கூத்து - ஐலசா
*பாயும்புயல் நம் ஊஞ்சல் - ஐலசா
பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா
காயும்கதிர்ச் சுடர்கூரை - ஐலசா
கட்டுமரம் வாழும்வீடு - ஐலசா
மின்னல்வரி அரிச்சுவடி – ஐலசா
பிடிக்கும்மீன்கள் தம்பொருள்கள் - ஐசோ
முழுநிலவே கண்ணாடி - ஐலசா
மூச்சடக்கும்நீச்சல் யோகம் - ஐலசா
தொழும்தலைவன் பெருவானம் - ஐலசா
துணிவோடு தொழில்செய்வோம் - ஐலசா"

சொல்லும் பொருளும்

கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி
மின்னல்வரி - மின்னல் கோடு
அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துகள்

தெரிந்து தெளிவோம்

நெய்தல் திணை
நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்
மக்கள் : பரதவர், பரத்தியர்
தொழில்: மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
பூ : தாழம்பூ


சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கதிர்ச்+சுடர்
இ) கதிரவன்+சுடர்
ஆ) சதிரின்+கடர்
ஈ) கதிர்+சுடர்

2. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) மூச்சு+அடக்கி
இ) மூச்+சடச்சி
ஆ) முச்+அடக்கி
ஈ) மூச்சை+அடக்கி

3. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பெருமைவனம்
ஆ) பெருவானம்
இ) பெருமானம்
ஈ) பேர்வானம்

4. அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) அடிக்குமலை
ஆ) அடிக்கும் அலை
இ) அடிக்கிலை
ஈ) அடியலை

5. பொருத்துக

அ) விடிவெள்ளி – 1. பஞ்சுமெத்தை
ஆ) மணல் – 2. ஊஞ்சல்
இ) புயல் – 3. போர்வை
ஈ) பனிமூட்டம் – 4. விளக்கு

அ)  4 1 2 3
ஆ) 4 1 3 2
இ) 2 1 4 3
ஈ)  2 1 4 3
6:36:00 PM

6TH TAMIL - நானிலம் படைத்தவன்


நூல் வெளி
முடியரசனின் இயற்பெயர் துரைராசு. இவர் பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.

இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை
மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி
ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற
பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான்,
மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்
நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவன்,
ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான்
சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்
முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள்
எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற்,
பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால்
கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான்,
அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள்
அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான் - முடியரசன்

சொல்லும் பொருளும்
  • மல்வெடுத்த - வலிமைபெற்ற
  • சமர் – போர்
  • நல்கும் - தரும்
  • கழனி - வயல்
  • மறம் - வீரம்
  • எக்களிப்பு - பெருமகிழ்ச்சி
  • கலம் - கப்பல்
  • ஆழி – கடல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. முடியரசனின் இயற்பெயர் 

அ) துரை மாணிக்கம்
ஆ) தென்னரசு
இ) துரைராசு
ஈ) 

2. கீழ்க்கண்டவற்றுள் முடியரசன் நூல்கள் அல்லாத ஒன்று


3. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.

அ) துரை மாணிக்கம்
ஆ) தென்னரசு
இ) துரைராசு
ஈ) 

4. கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை எனத் தொடங்கும் பாடல் அமைந்த நூல். 

அ) பூங்கொடி
ஆ) வீரகாவியம்
இ) புதியதொரு விதி செய்வோம்
ஈ) காவியப்பாவை 

5 பொருத்துக

அ) சமர் - 1. வயல்
ஆ) கழனி - 2. போர்
இ) மறம் - 3. கப்பல்
ஈ) கலம் - 4. வீரம்

அ) 3 4 2 1 
ஆ) 2 1 4 3
இ) 2 3 4 1
ஈ) 3 1 4 2

6.  போர்க்களத்தில் வெளிப்படும் குணம். 

அ) மகிழ்ச்சி
ஆ) துன்பம்
இ) வீரம்
ஈ) அழுகை

7. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கல் + அடுத்து
ஆ) கல் + எடுத்து
இ) கல் + லடுத்து
ஈ) கல் + லெடுத்து

8. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) நா + னிலம்
ஆ) நான்கு + நிலம்
இ) நா + நிலம்
ஈ) நான் + நிலம்

9. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) நாடென்ற
ஆ) நாடன்ற
இ) நாடு என்ற
ஈ) தாடுஅன்ற

10. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்..

அ) கலம்ஏ றி
ஆ) கலமறி
இ) கலன் ஏறி
ஈ) கலமேறி
6:06:00 PM

6TH TAMIL - மொழி இறுதி எழுத்துகள்



மொழி இறுதியில் வரும் எழுத்துகள்

சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.

• உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.

• ஞ், ண், ந், ம், ய்,ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும். (உரிஞ், வெரிந், அவ்)

மொழி இறுதியில் வாரா எழுத்துகள்

• சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.

• உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்.

• அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்.

• ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது.

• க், ங், ச், ட்,த்,ப்,ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வரும். வருவதில்லை.

• உயிர்மெய் எழுத்துகளுள் ங எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.
* எகர வரிசையில் கெ முதல் னெ முடிய எந்த உயிர்மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை.

• ஒகர வரிசையில் நொ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை.நொ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில் வரும்

• நொ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் = துன்பம்.

சொல்லின் இடையில் வரும் எழுத்துகள்

  • மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்.
  • உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
  • ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
  • அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கூற்றுகளை ஆராய்க

கூற்று 1 சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை
கூற்று 2 உயிர்மெய் எழுத்துகளுள் ங எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.

அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்றுகள் இரண்டும் சரி
ஈ) கூற்றுகள் இரண்டும தவறு

2. மொழி இறுதியில் வரும் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை

அ) ஏழு
ஆ) பதினொன்று
இ) பதினாறு
ஈ) பதிமூன்று

3. மொழி இறுதியில் வாரா மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை

அ) ஏழு
ஆ) பதினொன்று
இ) பதினாறு
ஈ) பதிமூன்று

4. மொழி இறுதியில் வாரா எழுத்து,

அ) உயிர் எழுத்து
ஆ) உயிர்மெய் எழுத்து
இ) மெய் எழுத்து
ஈ) ஆய்த எழுத்து

5. உயிர்மெய் எழுத்துகளுள் எந்த வரிசை எழுத்துகள் சொல்லின் இறுதியில் வாரது.

அ)
ஆ) ட
இ) ழ
ஈ) ற

6. நொ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

அ) இல்லை
ஆ) துன்பம்
இ) நொண்டு
ஈ) நண்டு

7. உயிர் எழுத்தின் எந்த வரிசை எழுத்துகள் மொழி இறுதியில் வருதல் இல்லை.

அ) உ வரிசை எழுத்துகள்
ஆ)  எ வரிசை எழுத்துகள்
இ)  ஒ வரிசை எழுத்துகள்
ஈ) இ வரிசை எழுத்துகள்

8. சொல்லின் நடுவில் மட்டுமே வரும் எழுத்து

அ) உயிர் எழுத்து
ஆ) உயிர்மெய் எழுத்து
இ) மெய் எழுத்து
ஈ) ஆய்த எழுத்து

9. அளபெடையில் மட்டும் சொல்லின் இடையில் வரும் எழுத்து

அ) உயிர் எழுத்து
ஆ) உயிர்மெய் எழுத்து
இ) மெய் எழுத்து
ஈ) ஆய்த எழுத்து

10. மொழி இடையில் வரும் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை

அ) ஏழு
ஆ) பதினொன்று
இ) பதினாறு
ஈ) பதினெட்டு
5:47:00 PM

6TH TAMIL - அறிவுசால் ஔவையார்


தெரிந்து தெளிவோம்

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந் தனையே. - ஒளவையார்

தெரிந்து தெளிவோம்

இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன் நகரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே - ஔவையார்


1. அதியமான் ஔவையாருக்குக் கொடுத்த நெல்லிக் கனியின் பெயர்

அ) அருநெல்லி
ஆ) கருநெல்லி
இ) சிறுநெல்லி
ஈ) பெருநெல்லி

2. ஔவையார் யாரக்காகத் தூது சென்றார்.

அ) தொண்டைமான்
ஆ) அதியமான்
இ) இளங்கிள்ளி
ஈ) முதுகிள்ளி

3. ஔவையார் யாரிடம் தூது சென்றார்.

அ) தொண்டைமான்
ஆ) அதியமான்
இ) இளங்கிள்ளி
ஈ) முதுகிள்ளி

4. இவ்வே பீலியணிந்து மாலை சூட்டி எனப் பாடியவர்

அ) பெருங்குன்றூர் கிழார்
ஆ) ஔவையார்
இ) காக்கைபாடினியார்
ஈ) நப்பச்சொள்ளையார்

5. இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன் - இவ்வடிகளில் பயின்று வந்திருப்பது

அ) எதுகை, மோனை
ஆ) எதுகை, இயைபு
இ) மோனை, இயைபு
ஈ) அனைத்தும்
8:27:00 AM

6TH TAMIL - தமிழர் பெருவிழா


தெரிந்து தெளிவோம்

தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது. தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது.


தெரிந்து தெளிவோம்

வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

தெரிந்து தெளிவோம்

திருவள்ளுவர் கி.மு (பொ.ஆ.மு) 31இல் பிறந்தவர். எனவே, திருவள்ளுவராண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 31ஐக் கூட்டிக்கொள்ள வேண்டும். (எ.கா.) 2018 + 31 - 2049

தெரிந்து தெளிவோம்

அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் லோரி என்று கொண்டாடப்படுகிறது. குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் உத்தராயன் என்று கொண்டாடப்படுகிறது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

சரியான விடையைத் தேர்ந்தெடு


1. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு

அ) பொங்கல் விழா
ஆ) தமிழர் திருநாள்
இ) விதைத்தல் திருவிழா
ஈ) அறுவடைத் திருவிழா

2. பழையன கழிதலும் புதியன புகுதலும் எனக் கூறும் நூல்

அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) தண்டியலங்காரம்
ஈ) தொன்னூல் விளக்கம்

3. வீட்டைத் துய்மை செய்யும் நாள்.

அ) போகித் திருநாள்
ஆ) பொங்கல் திருநாள்
இ) மாட்டுப் பொங்கல்
ஈ) காணும் பொங்கல்

4. பொங்கல் என்பதன் பொருள்

அ) பச்சரிசி சாதம்
ஆ) பொங்கிப் பெருகி வருதல்
இ) இது ஒரு பண்டிகை
ஈ) பூரித்தல்

5. மாடு என்ற சொல்லின் பொருள்

அ) விலங்கு
ஆ) செல்வம்
இ) மாண்புடையது
ஈ) ஏசல் மொழி

6. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு

அ) ஜல்லிக்கட்டு
ஆ) மாடு விரட்டல்
இ) ஏறு தழுவுதல்
ஈ) மாடு பிடித்தல்

7. அந்தக் காலத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்ட பண்டிகை

அ) போகித் திருநாள்
ஆ) பொங்கல் திருநாள்
இ) மாட்டுப் பொங்கல்
ஈ) காணும் பொங்கல்

8. கதிர் முற்றியதும் -------- செய்வர்.

அ) அறுவடை
ஆ) உரமிடுதல்
இ) நடவு
ஈ) களையெடுத்தல்

9. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் --------- கட்டுவர்.

அ) செடி
ஆ) கொடி
இ) தோரணம்
ஈ) அலங்கார வளைவு

10. பொங்கல் +அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பொங்கலன்று
இ) பொங்கலென்று
ஆ)பொங்கல் அன்று
ஈ) பொங்கஅன்று

11. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) போகி + பண்டிகை
ஆ) போ + பண்டிகை
இ) போகு + பண்டிகை
ஈ) போகிப் + பண்டிகை

12. பழையன கழிதலும் --------- புகுதலும்.

அ) புதியன
ஆ) புதுமை
இ) புதிய
ஈ) புதுமையான

13. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண ------------ தரும்.

அ) அயர்வு
ஆ) கனவு
இ) துன்பம்
ஈ) சோர்வு

14. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக - மகா சங்கராந்தி

அ) தெலுங்கானா
ஆ) கர்நாடகம்
இ) பஞ்சாப்
ஈ) மராட்டியம்

7:19:00 AM

6TH TAMIL - கண்மணியே கண்ணுறங்கு


நூல் வெளி

தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று தால் என்பதற்கு நாக்கு என்று பொருள் நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு) என்று பெயர்பெற்றது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.

பாடலின் பொருள்

தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயோ! தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேரநாட்டின் முத்தேனோ! இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியோ! குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழோ! கண்ணே கண்மணியே கண்மூடி உறங்குவாயாக!

சொல்லும் பொருளும்
  • நந்தவனம் – பூஞ்சோலை
  • பார்  – உலகம்
  • பண் – இசை
  • இழைத்து – பதித்து
தொகைச்சொற்களின் விளக்கம்

1. முத்தேன் – கொம்புத்தேன், பொந்துத்தேன், கொசுத்தேன்
2. முக்கனி – மா, பலா, வாழை
3. முத்தமிழ் – இயல், இசை, நாடகம்
4. ஐம்பால் : ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
5. நாற்கவி : ஆசுகவி, மதுரகவி, சித்தாரக்கவி, வித்தாரக்கவி
6. நான்மறை : ரிக், யஜூர், சாமம், அதர்வணம்
7. முக்கொடி : விற்கொடி, புலிக்கொடி, மீன்கொடி
8. முக்குணம் : சமத்துவம், இராசசம், தாமசம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 
  • பாட்டி + சைத்து
  • பாட்டி + இசைத்து
  • பாட்டு + இசைத்து
  • பாட்டு+சைத்து
2. கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 
  • கண் + உறங்கு
  • கண்ணு + உறங்கு
  • கண் + உறங்கு
  • கண்ணு + றங்கு
3. வாழை + இலை என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
  • வாழையிலை
  • வாழைஇலை
  • வாழலை
  • வாழிலை
4. கை + அமர்த்தி என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
  • கைமர்த்தி
  • கைஅமர்த்தி
  • கையமர்த்தி
  • கையைமர்த்தி
5. உதித்த என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்
  • மறைந்த
  • நிறைந்த
  • குறைந்த
  • தோன்றிய
6. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
  • மா
  • பலா
  • தென்னை
  • வாழை
7.  கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
  • கொம்புத்தேன்
  • மலைத்தேன்
  • பொந்துத்தேன்
  • கொசுத்தேன்
8.  கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
  • இயல்
  • இசை
  • கூத்து
  • நாடகம்
9. நாவை அசைத்துப் பாடுவது

அ) தாலாட்டு
ஆ) ஏசல் பாட்டு
இ) தொழில் பாட்டு
ஈ) ஒப்பாரி

10. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு

அ) சேரநாடு - முத்தமிழ்
ஆ) சோழநாடு - முக்கனி
இ) பாண்டியநாடு - முத்தேன்
6:54:00 AM

6TH TAMIL - ஆசாரக்கோவை

நூல் வெளி

ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். இவர் பிறந்த ஊர் வண்கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.

நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் - இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து - 
 பெருவாயின் முள்ளியார்

சொல்லும் பொருளும்

நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை
ஒப்புரவு - எல்லோரையும் சமமாக பேணுதல்
நட்டல் - நட்புக் கொள்ளுதல்

பாடலின் பொருள்

நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் = எட்டு. அவை,

  • பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்
  • பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்
  • இனிய சொற்களைப் பேசுதல்
  • எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்
  • கல்வி அறிவு பெறுதல்
  • எல்லோரையும் சமமாகப் பேணுதல்
  • அறிவுடையவராய் இருத்தல்
  • நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஆசாரக் கோவையின் ஆசிரியர்

அ) பெருவாயின் முள்ளியார்
ஆ) ஔவையார்
இ) கபிலர்
ஈ) விளம்பி நாகனார்

2. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர்

அ) கயத்தாறு
ஆ) வண்கயத்தூர்
இ) காரையூர்
ஈ) உறையூர்

3. ஆசாரக்கோவையில் அமைந்த பாடல்கள் எப்பாவகையைச் சார்ந்தது.

அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா

4. ஆசாரக்கோவையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை

அ) 100
ஆ) 101
இ) 400
ஈ) 150

6. பிறரிடம் நான் --------- பேசுவேன்.

அ) கடுஞ்சொல்
ஆ) இன்சொல்
இ) வன்சொல்
ஈ) கொடுஞ்சொல்

7. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது

அ) வம்பு
ஆ) அமைதி
இ) அடக்கம்
ஈ) பொறை

8. அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) அறிவுடைமை
இ) அறியுடைமை
ஆ) அறிவு உடைமை
ஈ) அறிஉடைமை

9. இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்

அ) இவை எட்டும்
ஆ) இவையெட்டும்
இ) இவ்வெட்டும்
ஈ) இவ்எட்டும்

10. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நன்றி+யறிதல்
ஆ) நன்றி+அறிதல்
இ) நன்று+அறிதல்
ஈ) நன்று+யறிதல்

11. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பொறுமை+உடைமை
இ) பொறு+யுடைமை
ஆ) பொறை +யுடைமை
ஈ) பொறை +உடைமை
6:37:00 AM

6TH TAMIL - மொழி முதல் எழுத்துகள்

மொழி முதல் எழுத்துக்கள்

  • உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
  • க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
  • ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.
  • ங – வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது. எ.கா- நுனம்(இக்காலத்தில் ஙனம் என்னும் சொல் தனித்து இயங்காமல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.)
  • ஞ – வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
  • ய – வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
  • வ – வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ ஆகிய எட்டு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்

  • மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வாரா.
  • ட,ண,ர,ல,ழ,ள,ற,ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.டமாரம், ரம்பம், லண்டன். ஃப்ரான்ஸ், டென்மார்க், போன்றவை பிறமொழிச் சொற்கள். இவற்றைத் தமிழில் ஒலி பெயர்த்து எழுதுகிறோம்.
  • ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
  • ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா.

Wednesday, March 25, 2026

5:57:00 PM

6TH TAMIL - நூலகம் நோக்கி

  • ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் = சீனாவில் உள்ளது.
  • ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் = சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்.
  • எட்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம்.
  • எட்டு தளங்களில் அமைந்துள்ள மிகப்பெரிய நூலகம் இது.
  • இந்திய நூலகவியலின் தந்தை = இரா. அரங்கநாதன்.
  • Father of Indian Library Science = R. Ranganathan.
  • சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
  • அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்கள்
  • தரைத்தளம் = சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்
  • முதல் தளம் = குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
  • இரண்டாம் தளம் = தமிழ் நூல்கள்
  • மூன்றாம் தளம் = கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
  • நான்காம் தளம் = பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
  • ஐந்தாம் தளம் = கணிதம், அறிவியல், மருத்துவம்
  • ஆறாம் தளம் = பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
  • ஏழாம் தளம் = வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
  • எட்டாம் தளம் = கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு.
சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்று கூறியவர்/

அ) திருவள்ளுவர்
ஆ) ஔவையார்
இ) முடத்தாமைக் கண்ணியார்
ஈ) கீரனார்

2. நூலக விதிகளை உருவாக்கியவர்

அ) அரங்க. சீனிவாசன்
ஆ) இரா. சீனிவாசன்
இ) இரா. அரங்கநாதன்
ஈ) எஸ். இராதாகிருஷ்ணன்

3. இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்.

அ) அரங்க. சீனிவாசன்
ஆ) இரா. சீனிவாசன்
இ) இரா. அரங்கநாதன்
ஈ) எஸ். இராதாகிருஷ்ணன்

4. சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது

அ) அண்ணா விருது
ஆ) அரங்கநாதன் விருது
இ) பெரியார் விருது
ஈ) அம்பேத்கர் விருது

5. பார்வை திறன் குறைபாடு உடையோருக்கு படிப்பதற்காக பயன்படும் நூல்கள்

அ) முப்பரிமாண நூல்கள்
ஆ) பிரெய்லி நூல்கள்
இ) இருபரிமாண நூல்கள்
ஈ) அச்சு நூல்கள்

6. ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் உள்ள இடம்

அ) சீனா
ஆ) இந்தியா
இ) ரஷ்யா
ஈ) பாகிஸ்தான்

7. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம் உள்ள இடம்

அ) ஆந்திரா
ஆ) கேரளா
இ) கர்நாடகா
ஈ) தமிழ்நாடு

8. அரசு கீழ்த்திசைச் சுவடிகள் எந்தத் தளத்தில் உள்ளன.

அ) மூன்றாம் தளம்
ஆ) ஐந்தாம் தளம்
இ) ஏழாம் தளம்
ஈ) தரைத் தளம்

9. கல்வித் தொலைக்காட்சி இயங்கும் தளம்

அ) மூன்றாம் தளம்
ஆ) ஐந்தாம் தளம்
இ) ஏழாம் தளம்
ஈ) எட்டாம் தளம்

10. குழந்தைகள் பிரிவு  எத்தளத்தில் அமைந்துள்ளது.

அ) முதல் தளம்
ஆ) மூன்றாம் தளம்
இ) ஐந்தாம் தளம்
ஈ) ஏழாம் தளம்

11. அண்ணா நூற்றாண்டு நூலகம் தரைத் தளம் உட்பட எத்தனை அடுக்குகளைக் கொண்டது?
  • மூன்று அடுக்குகள்
  • எட்டு அடுக்குகள்
  • ஒன்பது அடுக்குகள்
  • நான்கு அடுக்குகள்
12. சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் எத்தனை ஏக்கர் பரப்பளவு கொண்டது?
  • 4 ஏக்கர்
  • 5 ஏக்கர்
  • 7 ஏக்கர்
  • 8 ஏக்கர்
13. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைத் தளத்தில் யாருக்கான நூல்கள் வைக்கப்பட்டுள்ளது?
  • உடல் ஊனமுற்றோர்
  • பார்வைத் திறன் குறைபாடு உடையோர்
  • மாற்றுத்திறனாளிகள்
  • சிறப்புக் குழந்தைகள்
14. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைத் தளத்தி வைக்கப்பட்டுள்ள பார்வைத்திறன் குறைபாடுடையோர் காண நூலின் பெயர் என்ன?
  • சிறப்பு நூல்கள்
  • அண்ணா நூல்கள்
  • பிரெய்லி நூல்கள்
  • இவற்றில் எதுவுமில்லை
15. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் ----------- மரம் அமைக்கப்பட்டுள்ளது?
  • இயற்கை மரம்
  • செயற்கை மரம்
  • போப் மரம்
  • ஆலமரம்
16. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காக செயற்கை மரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
  • முதல் தளத்தில்
  • இரண்டாவது தளத்தில்
  • மூன்றாவது தளத்தில்
  • நான்காவது தளத்தில்
17. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் -------------- க்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது?
  • 15,000
  • 18,000
  • 20,000
  • 22,000
18. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் பிற நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட ----------- க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது?
  • 40,000
  • 20,000
  • 25,000
  • 50,000
19. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளவற்றில் பொருந்தாததைத் தேர்க?
  • ஓலைச்சுவடிகள்
  • பிரெய்லி
  • வரலாறு மற்றும் புவியியல்
  • சுற்றுலா நூல்கள்
20. அனைத்துத் துறை சார்ந்த தரமான மின்நூல்களும் மின் இதழ்களும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் வைக்கப்பட்டுள்ளது?
  • ஏழாவது தளம்
  • ஐந்தாவது தளம்
  • மூன்றாவது தளம்
  • நான்காவது தளம்
21. நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம்?
  • கேரளா
  • ஆந்திரா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
22. நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் பொருந்தாதவர்?
  • ராஜாஜி
  • ஜவர்கலால் நேரு
  • அண்ணல் அம்பேத்கர்
  • காரல் மார்க்ஸ்
23. பொருத்துக.
  • கல்வி - Education
  • தொடக்கப்பள்ளி - Primary School
  • மேல்நிலைப்பள்ளி - Higher Secondary School
  • நூலகம் - Library
A) 2 3 1 4
B) 1 2 3 4
C) 4 3 2 1
D) 1 4 2 3

24. பொருத்துக.
  • Escalator - மின்தூக்கி
  • Lift - மின் படிக்கட்டு
  • E - Mail - மின்னஞ்சல்
  • Compact Disk (CD) - குறுந்தகடு
A) 2 1 3 4
B) 2 1 4 3
C) 4 3 2 1
D) 3 4 2 1

25. பொருத்துக.
  • மின்நூலகம் -     E - Magazine
  • மின்நூல்       -     E - Book
  • மின்இதழ்     -     E - Library
A) 1 2 3
B) 3 1 2
C) 3 2 1


26. பொருத்துக. - (அண்ணா நூற்றாண்டு நூலகம்)
  • முதல் தளம் - பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
  • இரண்டாவது தளம் - கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
  • மூன்றாவது தளம் - தமிழ் நூல்கள்
  • நான்காவது தளம் - சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்
A) 4 3 1 2
B) 4 3 2 1
C) 1 2 4 3
D) 1 3 2 4

27. பொருத்துக. - (அண்ணா நூற்றாண்டு நூலகம்)
  • ஐந்தாவது தளம் - கணிதம், அறிவியல், மருத்துவம்
  • ஆறாவது தளம் - பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
  • ஏழாவது தளம் - வரலாறு, சுற்றுலா
  • எட்டாவது தளம் - நூலகத்தின் நிர்வாகப் பிரிவு
A) 1 2 3 4
B) 4 3 2 1
C) 4 3 1 2
D) 1 2 4 3

Sunday, March 22, 2026