Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 19, 2026

12:30:00 AM

10TH TAMIL - முத்தொள்ளாயிரம்‌




1. சேரநாடு

அள்ளல்‌ பழனத்‌(து) அரக்காம்பல்‌ வாயவிழ
வெள்ளம்தீப்‌ பட்ட(து) எனவெரீஇப்‌ புள்ளினம்தம்‌
கைச்சிறகால்‌ பார்ப்பொடுக்கும்‌ கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல்‌ கோக்கோதை நாடு.

வயல்களில் செவ்வாம்பல் மெல்ல விரிந்தன. அதனைக் கண்ட நீர்ப்பறைவகள் தண்ணீர் தீப்பிடித்து விட்டது என்று நினைத்து தம் குட்டிகளை சிறகில் மறைத்து வைத்தன. பகைவர் அஞ்சும் சேர நாட்டில் இந்த அச்சமும் இருக்கின்றது.

சொல்லும்‌ பொருளும்‌

அள்ளல்‌ - சேறு;
பழனம்‌ - நீர்‌ மிக்க வயல்‌;
வெரீஇ - அஞ்சி;
பார்ப்பு - குஞ்சு;

அணி - தற்குறிப்பேற்ற அணி

2. சோழநாடு

காவல்‌ உழவர்‌ களத்துஅகத்துப்‌ போர்‌ஏறி
நாவலோஓ என்றைசக்கும்‌ நாளோதை - காவலன்தன்‌
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால்‌ போலுமே
நல்யானைக்‌ கோக்கிள்ளி நாடு.

உழவர்கள் நெய்போர் மீது ஏறி “நாவலோ” என்று கூறி மற்ற உழவர்களை அழைப்பர். இது போரில் யானை மீது நின்று “நாவலோ” என்று கூவி மற்ற வீரர்களை அழைப்பது போல் இருந்தது. இத்தகு வளம் சோழ நாட்டில் காணப்பட்டது

சொல்லும்‌ பொருளும்‌

நாவலோ - நாள்‌ வாழ்க என்பது போன்ற வாழ்த்து;
இசைத்தால்‌ - ஆரவாரத்தோடு கூவுதல்‌.

அணி - உவமை அணி

3. பாண்டியநாடு

நந்தின்‌ இளஞ்சினையும்‌ புன்னைக்‌ குவிமொட்டும்‌
பந்தர்‌ இளங்கமுகின்‌ பாளையும்‌-சிந்தித்‌
திகழ்முத்தம்‌ போல்தோன்றும்‌ செம்மற்றே தென்னன்‌
நகைமுத்த வெண்குடையான்‌ நாடு.

கொற்கை நகரில் முத்துகளைப் போல் சங்குவின் முட்டைகள், புன்னை மொட்டுகள், பாக்கு பாளையில் இருந்து சிந்தும் மணிகள் ஆகியவை. இத்தகைய வளம் பாண்டியர் நாட்டில் காணப்பட்டது.

சொல்லும்‌ பொருளும்‌

நந்து - சங்கு;
கமுகு - பாக்கு.
முத்தம்‌ - முத்து

அணி - உவமை அணி

இலக்கணக்‌ குறிப்பு

வெரீஇ - சொல்லிசையளபெடை
கொல்யானை, குவிமொட்டு - வினைத்தொகைகள்
இளங்கமுகு, வெண்குடை - பண்புத் தொகைகள்

பகுபத உறுப்பிலக்கணம்‌

கொண்ட = கொள்(ண்‌) + ட்‌ + ௮
கொள்‌ - பகுதி (ண்‌ ஆனது விகாரம்‌)
ட் ‌- இறந்தகால இடைநிலை
௮ - பெயரெச்ச விகுதி


பலவுள் தெரிக

1. முத்தொள்ளாயிரம் _______ பாவால் ஆனது


வெண்பா
கலிப்பா
ஆசிரியப்பா
வஞ்சிப்பா


விடை : வெண்பா

2. முத்தொள்ளாயிரத்தில் பாடப்பெற்ற மன்னர் சேரர்
சோழர்
பாண்டியர்
மூவரும்

விடை : மூவரும்




3. அச்சமில்லா நாடுசேர நாடு
சோழ நாடு
பாண்டிய நாடு
பல்லவ நாடு

விடை : சோழ நாடு

4. ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடுசேர நாடு
பாண்டிய நாடு
சோழ நாடு
பல்லவ நாடு

விடை : சோழ நாடு




5. முத்துடை நாடு சேர நாடு
சோழ நாடு
பல்லவ நாடு
பாண்டிய நாடு

விடை : பாண்டிய நாடு

6. பகைவர் அஞ்சும் வேலைக் கொண்ட நாடுசேர நாடு
சோழ நாடு
பல்லவ நாடு
பாண்டிய நாடு

விடை : சேர நாடு




7. யானைப்படைகளை உடைய நாடுசேர நாடு
சோழ நாடு
பல்லவ நாடு
பாண்டிய நாடு

விடை : சோழ நாடு

8. முத்துகளான வெண் கொற்றக் குடை உள்ள நாடுசேர நாடு
சோழ நாடு
பல்லவ நாடு
பாண்டிய நாடு

விடை : பாண்டிய நாடு




9. நவலோ என்று அழைத்தவர் வீரர்கள்
உழவர்
சோழன்
சேரன்

விடை : உழவர்

10. பந்தர் இளங்கமுகின் என்பதில் பந்தர் என்பது குறிக்கும் சொல்அரேபியர் வணகம் செய்த இடம்
பாக்கு
பந்தல்
முத்து

விடை : பந்தல்
கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஒரு நாட்டின் ______ பாடுவதை புலவர்கள் கவிமரபாகக் கொண்டிருந்தனர்.

விடை : வளத்தை

2. பிற்காலக் காப்பியங்களில் ______ தவறாது இடம் பெற்றது.

விடை : நாட்டுவளம்

3. முத்தெள்ளாயிரத்தின் ஆசிரியர் ______

விடை : அறிய இயலவில்லை

4. வெண்பாவால் எழுதப்பட்ட நூல் ______




விடை : முத்தெள்ளாயிரம்

5. முத்தெள்ளாயிரம் ______ பாடல்களை கொண்ட நூல்

விடை : 900

6. வயல்களில் விரிந்திருந்தவை ______

விடை : அரக்காம்பல்

7. முத்தெள்ளாயிரத்தில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை ______

விடை : 108

Wednesday, March 18, 2026

11:51:00 PM

10TH TAMIL - சிலப்பதிகாரம்‌







சொல்லும்‌ பொருளும்‌

சுண்ணம்‌ - நறுமணப்பொடி
காருகர்‌ - நெய்பவர்‌ (சாலியர்‌)
தூசு - பட்டு,
துகிர்‌ - பவளம்‌
வெறுக்கை - செல்வம்‌
காழியர்‌ - பிட்டு விற்போர்‌
கூவியர்‌ - அப்பம்‌ விற்போர்‌
பாசவர்‌ - வெற்றிலை விற்போர்‌
வாசவர்‌ - நறுமணப்‌ பொருள்‌ விற்போர்‌
பல்நிண விலைஞர்‌ - பலவகையான புலால்‌ கறிகளை விற்போர்‌
ஓசுநர்‌ - எண்ணெய்‌ விற்போர்‌
கண்ணுள்‌ வினைஞர்‌ - ஓவியர்‌
மண்ணீட்டாளர்‌ - சிற்பி, கிழி துணி

இலக்கணக்‌ குறிப்பு

வண்ணமும்‌ சுண்ணமும்‌ - எண்ணும்மை

பகுபத உறுப்பிலக்கணம்‌

1. மயங்கிய மயங்கு கூட்டல் இ(ன்‌) கூட்டல் ய்‌ கூட்டல் அ
மயங்கு - பகுதி
இ(ன்‌) - இறந்த கால இடை நிலை; 'ன்‌' புணர்ந்து கெட்டது.
ய்‌ - உடம்படுமெய்‌
௮ - பெயரெச்ச விகுதி

2. அளந்து = அள + த்(ந்) + த் + உ

அள – பகுதி
த் – சந்தி
ந் – ஆனது விகாரம்
த் – இறந்த கால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

3. குவித்த = குவி + த் + த் + உ

குவி – பகுதி
த் – சந்தி
த் – இறந்த கால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

4. காட்டும் = காட்டு + உம்

காட்டு– பகுதி
உம் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டு பெயரெச்ச விகுதி

மருவூர்ப்‌ பாக்கம்‌

வண்ணமும்‌ சுண்ணமும்‌ தண்நறுஞ்‌ சாந்தமும்‌
பூவும்‌ புகையும்‌ மேவிய விரையும்‌
பகர்வனர்‌ திரிதரு நகர வீதியும்‌;
பட்டினும்‌ மயிரினும்‌ பருத்தி நூலினும்‌
கட்டு நுண்வினைக்‌ காருகர்‌ இருக்கையும்‌;

தூசும்‌ துகிரும்‌ ஆரமும்‌ அகிலும்‌
மாசுஅறு முத்தும்‌ மணியும்‌ பொன்னும்‌
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்‌;

பால்வகை தெரிந்த பகுதிப்‌ பண்டமொடு
கூலம்‌ குவித்த கூல வீதியும்‌;

காழியர்‌, கூவியர்‌, கள்நொடை ஆட்டியர்‌,
மீன்விலைப்‌ பரதவர்‌, வெள்உப்புப்‌ பகருநர்‌,
பாசவர்‌, வாசவர்‌, பல்நிண விலைஞரோடு
ஓசுநர்‌ செறிந்த ஊன்மலி இருக்கையும்‌;

கஞ்ச காரரும்‌ செம்புசெய்‌ குநரும்‌
மரம்கொல்‌ தச்சரும்‌ கருங்கைக்‌ கொல்லரும்‌

கண்ணுள்‌ வினைஞரும்‌ மண்ணீட்டு ஆளரும்‌
பொன்செய்‌ கொல்லரும்‌ நன்கலம்‌ தருநரும்‌
துன்ன காரரும்‌ தோலின்‌ துன்னரும்‌
கிழியினும்‌ கிடையினும்‌ தொழில்பல பெருக்கிப்‌

பழுதுஇல்‌ செய்வினைப்‌ பால்கெழு மாக்களும்‌;
குழலினும்‌ யாழினும்‌ குரல்முதல்‌ ஏழும்‌
வழுவின்றி இசைத்து வழித்திறம்‌ காட்டும்‌
அரும்பெறல்‌ மரபின்‌ பெரும்பாண்‌ இருக்கையும்‌;

சிறுகுறுங்‌ கைவினைப்‌ பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும்‌ மருவூர்ப்‌ பாக்கமும்‌

புகார்க்காண்டம்‌, இந்திரவிழா ஊரெடுத்த காதை (அடி 13-39)


ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு

"சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்
கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா
வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான்
திளையாத குண்டலகே சிக்கும்" -  திருத்தணிகையுலா.

1. மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல்
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • குண்டலகேசி
  • வளையாபதி
2. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் 
  • இரண்டு
  • நான்கு
  • ஐந்து
  • மூன்று
3. சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள்
  • 10
  • 20
  • 30
  • 40
4. அடிகள் நீரே அருளக என்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டார்
  • கம்பர்
  • கபிலர்
  • திருத்தக்கத்தேவர்
  • சீத்தலைச்சாத்தனார்
5. சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம் 
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • குண்டலகேசி
  • வளையாபதி
6. மணிமேகலையின் ஆசிரியர் 
  • சீத்தலைச்சாத்தனார்
  • கம்பர்
  • கபிலர்
  • திருத்தக்கத்தேவர்
7. மண்ணீட்டாளர் எனக் குறிக்கப் பெற்றவர்
  • ஓவியர்
  • வணிகர்
  • சிற்பி
  • சாலியர்
8. இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம் 
  • வஞ்சிக்காண்டம்
  • புகார்க்காண்டம்
  • மதுரைக்காண்டம்
  • பால காண்டம்
9. சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை
  • உரைநடை
  • வசன நடை
  • செய்யுள்நடை
  • உரைப்பாட்டு மடை
10. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ______ ஆகும்
  • இணைக்காப்பியம்
  • முதற்காப்பியம்
  • பிணைக்காப்பியம்
  • இரட்டைக் காப்பியம்
11. கண்ணகியும், கோவலனும் சென்று அடைந்த ஊர்
  • காவிரிப்பூம்பட்டினம்
  • கொடும்பாளூர்
  • திருவரங்கம்
  • உறையூர்
12. இளங்கோவடிகள் ______ நாட்டைச் சேர்ந்தவர்
  • சேர
  • சோழ
  • பல்லவ
  • பாண்டிய
13. அழகர்மலை என்பது ______
  • மால்குன்றம்
  • வேலவன்குன்றம்
  • திருமால்குன்றம்
  • திருவரங்கம்
14. பெருங்குணத்துக் காதலாள் ______
  • மணிமேகலை
  • கண்ணகி
  • மாதவி
  • மாதிரி
15. மருவூர்பாக்கம் அமைந்த நகர் ______
  • புகார்
  • வஞ்சி
  • மதுரை
  • காஞ்சி
16. பொருந்தா சொல்லை எழுதுக
  • சுண்ணம் – நறுமணப்பொடி
  • காருகர் – நெய்பவர்
  • தூசு – பட்டு
  • துகிர் – முத்து
17. பொருந்திய சொல்லை கண்டுபிடி
  • சுண்ணம் – நெய்பவர்
  • காருகர் – பவளம்
  • தூசு – பட்டு
  • துகிர் – நறுமணப்பொடி
18. பொருந்திய சொல்லை கண்டுபிடி
  • வெறுக்கை – செல்வம்
  • நொடை – எண்ணெய் விற்போர்
  • ஓசநர் – வெற்றிலை விற்போர்
  • பாசவர் – விலை
19. பொருத்துக
1. தூசு          அ. செல்வம்
2. துகிர்           ஆ. பட்டு
3. வெறுக்கை           இ. விலை
4. நொடை           ஈ. பவளம்
விடை ; 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

20. பொருத்துக
1. கண்ணுள் வினைஞர் அ. சிற்பி
2. மண்ணீட்டாளர் ஆ. ஓவியர்
3. கிழி இ. தொழில்
4. வினை ஈ. துணி
விடை ; 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ
9:14:00 PM

10TH TAMIL - உரைநடை உலகம் சிற்றகல்‌ ஒளி











இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு எது? 1906
காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையை எங்கு தொடங்கினார்? தென் ஆப்பிரிக்கா
காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையைச் எப்போது தொடங்கினார்? 1906
சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1906
ம பொ சி பிறந்த ஆண்டு எது? 1906
ம பொ சி என்பதன் விரிவாக்கம் என்ன? மயிலாப்பூர் பொன்னுசாமி மகன் சிவஞானம்
ம பொ சி பிறந்த நாள் எப்போது? ஜூன் 26
ம பொ சி எங்கு பிறந்தார்? சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் – சால்வன் குப்பம்
ம பொ சி யின் தந்தை யார்? பொன்னுச்சாமி
ம பொ சி அவர்களின்தாயார் யார்? சிவகாமி
ம பொ சி யின் இயற்பெயர் என்ன? ஞானப்பிரகாசம்
ம பொ சி அவர்களை சிவஞானி என அழைத்தவர் யார்? சரபையர் என்ற முதியவர்
ம பொ சி எந்த வகுப்போடு கல்வியை நிறுத்தினார்? மூன்றாம் வகுப்பு
ம பொ சி யின் கல்வி எப்போது தடைபட்டது? மூன்றாம் வகுப்பில் நுழைந்த 7 ஆம் நாளோடு
ம பொ சி யின் கல்வி ஏன் தடைபட்டது? ம பொ சி அவர்களின் குடும்ப வறுமை காரணமாக
ம பொ சி காலத்தில் மூன்றாம் வகுப்பிற்கு தேவைப்பட்ட பாடப் புத்தகங்கள் எவை? தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடப் புத்தகங்கள்
பள்ளியிலிருந்து ம பொ சி ஏன் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தார்? பாடப்புத்தகம் இன்றி பள்ளிக்கு வந்ததால் ஆசிரியர் துரத்திவிட்டார். அதை அவமானமாகக் கருதியதால் அழுது கொண்டே வீட்டிற்கு வந்தார்.
ம பொ சி எதை அவமானமாகக் கருதினர்? பாடப்புத்தகம் இன்றி பள்ளிக்கு வந்த மா பொ சி யை துரத்தி விட்டதால், அதை அவமானமாகக் கருதினர்.
ம பொ சி யை வீட்டிற்கு விரட்டி விட்டதற்காக அவரின் தந்தை என்ன செய்தார்? ஆசிரியரை வாயார வைதார்
ம பொ சி சிறுவயதில் அன்னையிடம் கற்ற பாடல்கள் எவை?அரசாணி மாலை
பவளக்கொடி மாலை
ம பொ சி தானாகவே விரும்பி படித்த பாடல்கள் எவை? சித்தர் பாடல்கள்
ம பொ சி யின் கேள்வி ஞானத்தை பெருகியதில் பெரும் பங்கு வகித்தவர் யார்? திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள்
ம பொ சி எதனுடன் கடும் போர் புரிந்ததாக குறிப்பிடுகிறார்? தனது அறியாமையுடன்
ம பொ சி எப்போது பேரானந்தம் அடைந்ததாக குறிப்பிடுகிறார்? குறைந்த விலைக்கு நல்ல நூல் ஒன்று கிடைத்து விடும் போது
ம பொ சி எவற்றைத் தம் சொத்துக்களாகக் கருதினார்? தம்மிடம் உள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களை
பேராயக் கட்சி எனப்படுவது எது? காங்கிரஸ் கட்சி
காந்தி-இர்வின் ஒப்பந்தம் எப்போது ஏற்பட்டது? 1931
அந்நியத் துணி கடை மறியல் எதன்படி அனுமதிக்கப்படவில்லை? காந்தி-இர்வின் ஒப்பந்தம்
காந்தி-இர்வின் ஒப்பந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி செய்தது என்ன?தீண்டாமை விலக்கு
கதர் விற்பனை
தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை எப்போது வழங்கப்பட்டது? செப்டம்பர் 30 ,1932
ம பொ சி முதன்முதலில் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டு எது?1932
மபொசி முதல் முதலில் எதற்காக சிறையிலிடப்பட்டார்?தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை வழங்கியதற்காக
தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை வழங்கியதற்காக விதிக்கப்பட்ட தண்டனை என்ன?மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை
300 ரூபாய் அபராதம். கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை.
தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கையின் தன்மை யாது? நூற்றுக் கணக்கான பிரதிகள் கையால் எழுதப்பட்டிருந்தது
தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கையின் சிறப்பம்சம் யாது? பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தது
ம.பொ.சி அவர்களுக்குச் சிறையில் வழங்கப்பட்ட சோறு எந்த வகுப்பைச் சார்ந்தது?’சி’ வகுப்பு
இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாள் எது?1942 ஆகஸ்ட் 8
இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?1942
இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது? பம்பாய் காங்கிரஸ் மாநாடு
இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்திற்காக கைது செய்யப்பட்ட தலைவர்கள் யார்? காமராஜர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்
இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக மபொசி சிறையில் அடைக்கப்பட்ட நாள் எது? 1942 ஆகஸ்ட் 13
இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக மபொசி முதலில் எந்த சிறையில் அடைக்கப்பட்டார்?வேலூர்
இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக வேலூர் சிறையிலிருந்து எந்தச் சிறைக்கு மாற்றப்பட்டார்?அமராவதி
அமராவதி சிறைச்சாலையின் அவல நிலை யாது? கூரை துத்தநாக தகடுகளால் வேயப்பட்டு இருந்தது
வடக்கெல்லை மீட்சிக்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டது எப்போது? இந்திய விடுதலைக்கு மறுநாள்
வடக்கெல்லை மீட்சிக்கு அழைப்பு விடுத்தது யார்? தமிழாசிரியர் மங்கலங்கிழார்
வடக்கெல்லைத் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழ் உணர்வு கொள்ளச்செய்தவர் யார்? தமிழாசிரியர் மங்கலங்கிழார்
ஆந்திரத் தலைவர்கள் எந்த மாவட்டத்தை ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினர்?சித்தூர்
தமிழர் மாநாடு எங்கு நடைபெற்றது? திருத்தணி, சென்னை
தமிழர் மாநாட்டை நடத்தியது யார்? தமிழரசுக் கழகம்
தமிழரசுக் கழகம் யாருடன் இணைந்து தமிழர் மாநாட்டை நடத்தியது? தமிழ் ஆசான் மங்கலங்கிழார்
வடக்கெல்லை போராட்டம் நடைபெற்ற இடங்கள் யாவை? சித்தூர் புத்தூர் திருத்தணி
வடக்கெல்லை போராட்டத்தில் சிறைப்பட்டு உயிர் நீத்தவர் யாவர்?இராஜமுந்திரி சிறையில் இருந்த திருவாலங்காடு கோவிந்தராசன்
பழனி சிறையிலிருந்த மாணிக்கம்
மொழிவாரி ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது? சர்தார் கே எம் பணிக்கர்
மொழிவாரி ஆணையத்தின் தாக்கம் என்ன? சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிடம் அளித்துவிட்டது
திருத்தணி வரை உள்ள தமிழ்நிலங்கள் எந்த ஆணையத்தால் மீட்கப்பட்டன?படாஸ்கர் ஆணையம்
இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்கு கேடு இல்லாத வகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் எத?சிலப்பதிகாரம்
தமிழினத்தின் பொதுச்சொத்து என்று மபொசி எதனைக் குறிப்பிடுகிறார்? சிலப்பதிகாரம்
சிலம்புச் செல்வர் யார்?ம பொ சி
தலைநகர் காக்கத் தன் முதலமைச்சர் பதவியைத் துறக்க முன் வந்தவர் யார்?இராஜாஜி
ஆந்திரா மாநிலம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த ஆணையம் எது?நீதிபதி வாஞ்சு ஆணையம்
தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது? சென்னை மாநகராட்சி
தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற தீர்மானம் யார் தலைமையில் நிறைவேற்றப்பட்டது? மாநகர தந்தை செங்கல்வராயன்
ஆந்திர அரசின் தலைநகரம் அந்த நாட்டின் எல்லைக்கு உள்ளேயே அமையும் என்ற அறிவிப்பை வெளியிட்டவர் யார்? பிரதமர் நேரு
ஆந்திர அரசின் தலைநகரம் அந்த நாட்டின் எல்லைக்கு உள்ளேயே அமையும் என்ற அறிவிப்பை எப்போது வெளியிடப்பட்டது? 25-3-1953
மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எங்கு பேசினார்? வடிவீஸ்வரம்
மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எப்போது பேசினார்?25-10-1946
மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எந்த விழாவில் பேசினார்?வடிவை வாலிபர் சங்க ஆண்டு விழா
தெற்கெல்லை போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் யாவர்? தேவசகாயம், செல்லையா
இயற்கையாகவே போர்க்குணம் கொண்டவர் யார்? மார்ஷல் நேசமணி
தெற்கெல்லை போராட்டம் யாருடைய வருகைக்குப் பிறகு வலுப்பெற்றது? மார்சல் நேசமணி
கன்னியாகுமரி மாவட்டம் எப்போது தமிழ்நாட்டுடன் இணைந்தது?1956 நவம்பர் 1
மார்ஷல் நேசமணி அவர்களுக்கு தமிழக அரசு செய்த சிறப்பு யாது? நாகர்கோயிலில் சிலையோடு மணிமண்டபம் நிறுவியது.
பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை எப்போது வெளியானது?10-10-1955
பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை யாது? மொழிவாரி மாநிலம் அமைப்பது.
பசல் அலி ஆணையத்தால் நம் கையை விட்டு சென்ற பகுதிகள் எவை? தேவிகுளம், பீர்மேடு
ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக எவை அமைய வேண்டும்? மலையும் கடலும்
தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும் தெற்கு எல்லையாக குமரி முனையையும் குறிப்பிடும் இலக்கியங்கள் எவை? புறநானூறு, சிலப்பதிகாரம்
ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் எது? வியன்னா
அலெக்ஸாண்ட்ரியா துறைமுகம் எங்கு உள்ளது? எகிப்து
கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எந்த காலத்தைச் சார்ந்தது? கிபி இரண்டாம் நூற்றாண்டு
கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? ஆஸ்திரியா நாட்டின் வியன்னா அருங்காட்சியகத்தில்
கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எந்தத் தாளில் எழுதப்பட்டுள்ளது? பாபிரஸ்
மபொசி அவர்களின் தன் வரலாற்று நூல் எது? எனது போராட்டம்
மபொசி எப்போது சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்?1952-1954
மபொசி எப்போது சட்டமேலவை தலைவராக இருந்தார்?1972-1978
தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்?ம பொ சிவஞானம்
மபொசி அவர்களின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது?வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
மபொசி அவர்களுக்கு தமிழக அரசு செய்த சிறப்பு என்ன? திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் சிலை நிறுவியது
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது? 1966

Monday, March 16, 2026

6:35:00 AM

இரு பொருள் தரும் சொற்கள்

கான் - காடு, மணம்

கழல் - பாதம், காலணி

கமலம் - தாமரை, நீர்

கிரி - மலை, பன்றி

கிளை - சுற்றம், மரக்கிளை

கவிகை - குடை, ஈகை

கரம் - கை, வரி

புயல் -மேகம், நீர்

புனல் - நீர், ஆறு

புத்தி -அறிவு, மனம்

புள் - பறவை, வண்டு

பணை - மூங்கில், பெருமை

படி - நூலைப்படி, வாயிற்படி

பிணி - நோய், துன்பம்

தலை - சிறப்பு, உச்சி

துடி - பறை, உதடு

திரை - அலை, சுருள்

திங்கள் - நிலவு, மாதம்

மாதிரம் - மலை, ஆகாயம்

மனை - வீடு, மனைவி

மரை - மான், தவளை

மாலை - காலம், பூமாலை

மதலை - தூண், குழந்தை

கோடு - தந்தம், கொம்பு

கேழல் - பன்றி, நிறம்

கேசரி - சிங்கம், இனிப்பு

மேனி - உடல், நிறம்

மேதி - எருமை, நெற்களம்

சேய் - குழந்தை, மூங்கில்

சந்தம் -அழகு, நிறம், ஓசை நயம்

சிரம் -தலை, உச்சி

சுவடி -நூல், ஓலைப்புத்தகம்

வனம் -காடு, சோலை

ஞாலம் -உலகம், விந்தை

விரை -மணம், தேன்

நூல் - ஆடைநூல், பாடநூல்

ஈனும் - தரும், உண்டாக்கும்

தெறு - பகை, தண்டித்தல்

மெய் - உடல், உண்மை

நாமம் - பெயர், அச்சம்

நுதல் - நெற்றி, புருவம்

நமன் - எமன், நம்மவன்

நடலை - துன்பம், அசைவு

நகை - நகைத்தல், அணிகலன்

குஞ்சி - தலைமுடி, விருது

குன்று - மலை, மேடு

அம்பி - படகு, தோணி

அடவி - காடு, மிகுதி

அல் - இருள், வறுமை

ஆ - பசு, இரக்கம்

ஆக்கம் - செல்வம், காற்று

ஆறு - எண் (6), நதி

ஆழி - மோதிரம், கடல்

இன்னல் - துன்பம், கவலை

இந்து - சமயம், மதம்

இகல் - பகை, வலிமை

இடர் - துன்பம், நோய்

இருள் - பகை, துன்பம்

உழுவை - புலி, மீன்வகை

ஏர் - அழகு, கலப்பை

Sunday, March 8, 2026

6:38:00 PM

TET - இதுவரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாத்தாள்களின் தொகுப்பு விடைகளுடன் (2012-2025) தாள் -1 மற்றும் தாள் -2


இதுவரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாத்தாள்களின் தொகுப்பு விடைகளுடன் (2012-2025) தாள் -1 மற்றும் தாள் -2

* TNTET Tamil Question Paper 1 With Answer Key ( 2012-2025 )

👇👇👇


* TNTET Tamil Question Paper 2 With Answer Key ( 2012-2025 )

👇👇👇👇

Saturday, March 7, 2026

5:05:00 AM

6TH அறிவியல் வினா விடைகள் - 08

  1. தொட்டால் சிணுங்கி தாவரம், ரப்பர் வளையம் நீளுதல் ஆகியவை எவ்வகை மாற்றங்கள்? மீள் மாற்றம்.
  2. பால் தயிராதல், உணவு செரித்தல் ஆகியவை எவ்வகை மாற்றங்கள்? மீளா மாற்றம்.
  3. வளிமண்டலம் எத்தனை வெவ்வெறு அடுக்குகளால் ஆனது? ஐந்து.
  4. பூமியின் அருகிலுள்ள, நாம் வாழும் வளிமண்டல அடுக்கு எது? அடிவளி மண்டலம் (Troposphere).
  5. மேகங்கள் உருவாகக் காரணமாகும் அடுக்கு எது? அடிவளி மண்டலம்.
  6. செயற்கை மழை பொழிய வைத்தலில் பயன்படுவது எது? உலர்பனிக்கட்டிகள்.
  7. நன்னீரில் துருவ பனிப்படிவுகள் மற்றும் பனியாறுகளின் சதவீதம் எவ்வளவு? 68.7%.
  8. நன்னீரில் நிலத்தடி நீரின் சதவீதம் எவ்வளவு? 30.1%.
  9. நன்னீரில் குறைந்தபட்சம் தொடங்கி அதிகபட்சமாக எவ்வளவு உப்புகள் கரைந்திருக்கும்? 0.05 முதல் 1% அளவுள்ள உப்புகள்.
  10. கடல் நீரில் சதவீதம் எந்த அளவிற்கு மேல் உப்பு கரைந்திருக்கும்? 3% சதவீதத்திற்கும் மேல்.
  11. கடல் நீரில் கலந்துள்ள முக்கிய உப்புகள் யாவை? சோடியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு மற்றும் கால்சியம் குளோரைடு.
  12. நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது? TMC/Feet.
  13. பிச்சாவரம், முத்துப்பேட்டை, பள்ளிக்கரணை, செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் காணப்படுவது யாவை? சதுப்பு நிலங்கள் (சதுப்பு நிலக்காடுகள்).
  14. நெய்வேலி மற்றும் எண்ணூர் ஆகிய இடங்களில் எவ்வகை மின் நிலையங்கள் அமைந்துள்ளன? அனல்மின் நிலையங்கள்.
  15. மேட்டூர் மற்றும் பாபநாசம் ஆகிய இடங்களில் எவ்வகை மின் நிலையங்கள் அமைந்துள்ளன? நீர்மின் நிலையங்கள்.
  16. ஆரல்வாய்மொழி மற்றும் கயத்தாறு ஆகிய இடங்களில் எவ்வகை மின் நிலையங்கள் அமைந்துள்ளன? காற்றாலைகள்.
  17. இயற்கையான நிறங்காட்டிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. மஞ்சள்.
  18. எலும்பு முறிவுச் சிகிச்சையிலும் சிலைகள் தயாரிப்பிலும் பயன்படுவது எது? பாரிஸ் சாந்து.
  19. நுண்ணுயிரிகளால் தொகுக்கப்பட்ட தாவர மற்றும் விலங்கு கழிவுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? கரிம உரங்கள்.
  20. தொழிற்சாலைகளில் வேதிமாற்றத்திற்குட்படுத்தி தயாரிக்கப்படும் உரங்கள் எவை? கனிம உரங்கள்.
  21. சிமெண்ட் தயாரிக்கப் பயன்படும் தாது உப்புக்கள் எவை? சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம்.
  22. ரோபாட்டுகளைப் பற்றி அறியும் அறிவியல் பிரிவின் பெயர் என்ன? ரோபாட்டிக்ஸ்.
  23. உலகின் மிக நீளமான நதி எது? நைல் நதி (6,650 கி.மீ.).
  24. இந்தியாவின் மிக நீளமான நதி எது? கங்கை (2,525 கி.மீ.).
  25. உலக வாழிட நாளாக கொண்டாடப்படும் நாள் எது? அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை.
5:01:00 AM

6TH அறிவியல் வினா விடைகள் - 07

  1. இதயத்தை மூடியுள்ள இரு சுவர்களைக் கொண்ட உறைக்கு பெயர் என்ன? பெரிகார்டியம்.
  2. இரத்தம் எவற்றைக் கொண்டுள்ளது? பிளாஸ்மா மற்றும் இரத்த அணுக்கள்.
  3. இரத்த அணுக்கள் எத்தனை வகைப்படும்? மூன்று.
  4. ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு இருக்கும்? 72 முதல் 80 வரை.
  5. வெளிர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இரத்தக் குழாய்கள் எவை? தமனிகள்.
  6. கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இரத்தக் குழாய்கள் எவை? சிரைகள்.
  7. அசுத்த இரத்தத்தினைக் கடத்தும் சிரைகளில் விதிவிலக்கானது எது? நுரையீரல் சிரைகள்.
  8. மூளை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? மூன்று (முன் மூளை, நடு மூளை மற்றும் பின் மூளை).
  9. உடலின் மத்தியக் கட்டுப்பாட்டு மையம் எது? மூளை.
  10. ஹார்மோன்கள் என்னும் வேதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் சுரப்பிகள் எவை? நாளமில்லா சுரப்பிகள்.
  11. ஆண்களில் காணப்படும் இனப்பெருக்க உறுப்பு எது? ஓரிணை விந்தகம்.
  12. பெண்களில் காணப்படும் இனப்பெருக்க உறுப்பு எது? ஓரிணை அண்டகம்.
  13. அவரை விதை வடிவத்தில் அடிவயிற்றுக் குழியில் அமைந்துள்ள உறுப்பு எது? சிறுநீரகங்கள்.
  14. நமது உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது? 70 சதவிகிதம்.
  15. நமது உடலில் நீளமான எலும்பு எது? தொடை எலும்பு.
  16. குழந்தைகள் பிறக்கும் பொழுது தோராயமாக எத்தனை எலும்புகளுடன் பிறக்கின்றன? 300க்கும் அதிகமான.
  17. கண்ணின் மூன்று முக்கிய பகுதிகள் யாவை? கார்னியா, ஐரிஸ் மற்றும் கண்மணி (பியூப்பில்).
  18. மனிதனின் புறச் செவியில் உள்ள மடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? புறச்செவி மடல் (Pinna).
  19. வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றும் கருவி எது? மின்கலன்.
  20. கைப்பேசிகள், மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் பலமுறை மின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலன்கள் யாவை? துணை மின்கலன்கள்.
  21. அம்மீட்டர் ஒரு மின்சுற்றில் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்? தொடரிணைப்பில்.
  22. காந்தத்தன்மை உள்ள பொருள்களுக்கு எடுத்துக்காட்டு தருக. இரும்பு, நிக்கல், கோபால்ட்.
  23. மின்காந்த தொடர்வண்டிகள் தற்போது நடைமுறையில் உள்ள நாடுகள் எவை? சீனா, ஜப்பான், தென்கொரியா.
  24. விதை முளைத்தல், பருவகால மாற்றங்கள் ஆகியவை எவ்வகை மாற்றங்கள்? மெதுவான மாற்றங்கள்.
  25. கண்ணாடி உடைதல், பட்டாசு வெடித்தல் ஆகியவை எவ்வகை மாற்றங்கள்? வேகமான மாற்றங்கள்.