Breaking

Tuesday, March 31, 2026

8:21:00 AM

6TH TAMIL - நிலம் பொது





1. தமிழகப் பழங்குடிகள் என்ற நூலை இயற்றியவர்

அ) தாராபாரதி
ஆ) பக்தவத்சலபாரதி
இ) 

1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் ------------ மதிக்கின்றனர்.

அ) தாயாக

ஆ) தந்தையாக

இ) தெய்வமாக

ஈ) தூய்மையாக

[விடை : அ) தாயாக]



2. "இன்னோசை'' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) இன் + ஓசை

அ) இனி + ஓசை

இ) இனிமை + ஓசை

ஈ) இன் + னோசை

[விடை : இ) இனிமை + ஓசை]



3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) பால்ஊறும்

ஆ) பாலூறும்

இ) பால்லூறும்

ஈ) பாஊறும்

[விடை : ஆ) பாலூறும்]
8:06:00 AM

6TH TAMIL - பராபரக் கண்ணி


நூல் வெளி

இப்பாடலை எழுதியவர் தாயுமானவர். திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர். இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது. இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர். இப்பாடல்கள் 'பராபரக் கண்ணி' என்னும் தலைப்பில் உள்ளன. 'கண்ணி' என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.

தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்
செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!*

அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே!

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே*

சொல்லும் பொருளும்
  • தண்டருள் - குளிர்ந்த கருணை
  • கூர் – மிகுதி
  • செம்மையருக்கு - சான்றோருக்கு
  • ஏவல் - தொண்டு
  • பணி - தொண்டு
  • எய்தும் – கிடைக்கும்
  • எல்லாரும் - எல்லா மக்களும்
  • அல்லாமல் - அதைத்தவிர

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பராபரக் கண்ணியின்  நூலாசிரியர்

அ) தாயுமானவர்
ஆ) மாணிக்கவாசகர்
இ) மதுரகவி ஆழிவார்
ஈ) நம்மாழ்வார்

2. திருச்சியை ஆய்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்காயராகப் பணி புரிந்தவர்.

அ) தாயுமானவர்
ஆ) மாணிக்கவாசகர்
இ) மதுரகவி ஆழிவார்
ஈ) நம்மாழ்வார்

3. தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படுவது

அ) கண்ணிநுண் சிறுத்தாம்பு
ஆ) தாயுமானவர் பாடல்கள்
இ) நாலாயிர திவ்விய பிரபந்தம்
ஈ) திருவாசகம்

4. கண்ணி என்பது 

அ) இரண்டடிகளால் பாடப்படும் பாடல்வகை
ஆ) மூன்றடிகளால் பாடப்படும் பாடல்வகை
இ) சம அடிகளால் பாடப்படும் பாடல்வகை
ஈ) இவை அனைத்தும்

5. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) தம்முயிர்
ஆ) தமதுயிர்
இ) தம் உயிர்
ஈ) தம்முஉயிர்

6. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) இன்புற்றிருக்க
ஆ)இன்புறுறிருக்க
இ) இன்புற்று இருக்க
ஈ) இன்புறு இருக்க

7. 'தானென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) தானெ + என்று
ஆ) தான் + என்று
இ) தா + னென்று
ஈ) தான் + னென்று

8. 'சோம்பல்' என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்

அ) அழிவு
ஆ) துன்பம்
இ) சுறுசுறுப்பு
ஈ) சோகம்
7:37:00 AM

6TH TAMIL - சுட்டெழுத்து, வினா எழுத்துகள்


பாடக் குறிப்புகள்
  • ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
  • சுட்டு எழுத்துகள் மொத்தம் மூன்று. அவை அ, இ, உ என்பனவாகும்.
  • சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப் பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.
  • இவன், அவன், இது, அது – இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை.
  • சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப் பொருளைத் தருவது புறச்சுட்டு எனப்படும்.
  • அவ்வானம், இம்மலை, இந்நூல் இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
  • நம் அருகில் உள்ள பொருட்களைச் சுட்ட பயன்படும் எழுத்து அண்மைச் சுட்டு எனப்படும்.
  • என்பது அண்மைச் சுட்டாகும். அதாவது அருகில் உள்ள பொருளைச் சுட்ட இவ்வெழுத்து பயன்படும். உதாரணமாக, இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு ஆகிய சொற்களைக் காணலாம். இச்சொற்கள் அருகில் உள்ளவற்றைச் சுட்டுகின்றன.
  • தூரத்தில் உள்ள பொருட்களைக் குறிக்கப் பயன்படும் சுட்டு சேய்மைச் சுட்டு எனப்படும்.
  • சேய்மைச் சுட்டெழுத்தாகும். உதாரணமாக, அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம் ஆகிய சொற்களைக் கொள்ளலாம். இச்சொற்கள் தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன.
  • அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ‘உ’ என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.(எ.கா.) உது, உவன்
  • இன்று ‘உ’ என்ற சுட்டெழுத்து பயன்பாட்டில் இல்லை.
  • அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுத்திரிபு எனப்படும்.
  • வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர்.
  • வினா எழுத்துகள் மொத்தம் ஐந்து. அவை, எ, யா, ஆ, ஓ, ஏ என்பனவாகும்
  • மொழியின் முதலில் வரும் வினா எழுத்துகள் = எ, யா (எங்கு, யாருக்கு)
  • மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்துகள் = ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ)
  • மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து = (ஏன், நீதானே)
  • வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.
  • வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.

Monday, March 30, 2026

6:56:00 PM

6TH TAMIL - வேலுநாச்சியார்


  • இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார். 
  • தாய்மொழியாகிய தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார். 
  • சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார். 
  • சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.
  • காளையார்கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்.
  • வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார். 
  • திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்.
  • "நம் அரசியாரின் பன்மொழி அறிவு நமக்குப் பெரிய நன்மையைத் தந்திருக்கிறது" என்றார் சின்ன மருது. 
  • 'என் கணவர் கொல்லப்பட்ட ஊர் காளையார்கோவில், எனவே, தாம் முதலில் காளையார்கோவிலைக் கைப்பற்றுவோம்
  • பிறகு சிவகங்கையை மீட்போம்" என்றார் வேலு நாச்சியார்.
  • மறுநாள் காளையார்கோவில் நோக்கி வேலுநாச்சியார் படை புறப்பட்டது. 
  • ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும் 
  • பெண்கள் படைப்பிரிவுக்குக் குயிலியும் தலைமை ஏற்றனர்.
  • 'விசயதசமி தாளில் கோட்டைக்குள் செல்வதற்குப் பெண்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. 
  • நமது பெண்கள் படைப்பிரிவினர் கூடைகளில் பூக்கள், பழங்கள் ஆகியவற்றுடன் ஆயுதங்களையும் மறைத்துக் கொண்டு கோட்டைக்குள் செல்லட்டும். 
  • உள்ளே அவர்கள் தாக்குதலைத் தொடங்கியதும் நமது ஆண்கள் படைப்பிரிவினரும் கோட்டைக்குள் நுழைந்து தாக்கட்டும். ஆங்கிலேயரை விரட்டியடித்து விடவாம்" என்றார் வேலுநாச்சியார்.
சரியான விடையைத் தேர்வு செய்க

1. வேலுநாச்சியாரின் தந்தை பெயர்

அ) முத்துவடுகர்
ஆ) செல்லமுத்து
இ) தாண்டவராயர்
ஈ) காங்கேயன்

2. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த மன்னர்

அ) முத்துவடுகர்
ஆ) செல்லமுத்து
இ) தாண்டவராயர்
ஈ) காங்கேயன்

3. வேலுநாச்சியாரின் கணவர் பெயர்

அ) முத்துவடுகர்
ஆ) செல்லமுத்து
இ) தாண்டவராயர்
ஈ) காங்கேயன்

4. சிவகங்கையை ஆட்சி செய்த மன்னர்

அ) முத்துவடுகர்
ஆ) செல்லமுத்து
இ) தாண்டவராயர்
ஈ) காங்கேயன்

5. முத்துவடுகரை ஆங்கிலேயர்கள் கொன்ற இடம்

அ) சிவகங்கை
ஆ) காளையார்கோவில்
இ) இராமநாதபுரம்
ஈ) நாட்டரசன்கோட்டை

6. ஐதர் அலி வேலுநாச்சியாருக்கு அனுப்பிய படை.

அ) காலாட்படை
ஆ) குதிரைப்படை
இ) யானைப்படை
ஈ) தூசுப்படை

6. ஐதர் அலி வேலுநாச்சியாருக்கு எவ்வளவு குதிரைப் படை. அனுப்பினார்

அ) இரண்டாயிரம்
ஆ) ஐயாயிரம்
இ) பத்தாயிரம்
ஈ) ஐம்பராயிரம்

7. வேலுநாச்சியார் ஆங்கிலேயரைத் தோற்கடித்து முதன் முதலில் கைப்பற்றியது.

அ) சிவகங்கை
ஆ) காளையார்கோவில்
இ) இராமநாதபுரம்
ஈ) நாட்டரசன்கோட்டை

8. ஆங்கிலேயரால் கொள்ளப்பட்ட பெண்

அ) குயிலி
ஆ) உடையாள்
இ) விஜயலட்சுமி
ஈ) மணிமேகலை

9. ஆங்கிலேயரின் ஆய்தக் கிடங்கில் குதித்து தன் இன்னுயிரை மாய்த்துத் கொண்டவர்.

அ) குயிலி
ஆ) உடையாள்
இ) விஜயலட்சுமி
ஈ)  மணிமேகலை

10. வேலுநாச்சியார் யாருக்காக நடுகல் வைத்தார்

அ) குயிலி
ஆ) உடையாள்
இ) விஜயலட்சுமி
ஈ)  மணிமேகலை

11. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு

அ) 1780
ஆ) 1870
இ) 1880
ஈ) 1796
6:48:00 PM

6TH TAMIL - தமிழ்நாட்டில் காந்தி

  • காந்தியடிகள் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர் என்பதை நாடு நன்கு அறியும். பெண்கள் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் அவர் பாடுபட்டார்.
  • எளிமையை ஓர் அறமாகப் போற்றினார்.
  • இந்தியாவில் அவர் காலடி படாத இடமே இல்லை.
  • காந்தியடிகள் சென்னை வந்த ஆண்டு = 1919.
  • காந்தியடிகள் 1919 இல் சென்னை வந்ததன் காரணம் = ரௌலட் சட்டத்தை எதிர்த்து போராட
  • ரௌலட் சட்ட எதிர்ப்பு கருத்தாய்வு கூட்டம் யாருடைய வீட்டில் நடைபெற்றது = இராஜாஜி வீட்டில்.
  • இராஜாஜி வீட்டில் காந்தியடிகளை சந்திக்க வந்தவர் = பாரதியார்.
  • தான் ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க காந்தியடிகளை கேட்டுக் கொண்டார் பாரதியார்.
  • வேறு பனி இருப்பதால் தன்னால் கலந்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தார் காந்தி.
  • இராஜாஜி, காந்தியடிகளிடம் பாரதியாரை பற்றி “இவர் தான் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று கூறினார்.
  • “பாரதியாரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்” என்று ராஜாஜியிடம் கூறினார் காந்தியடிகள்.
  • 1921 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் காந்தியடிகள் மதுரைக்கு வந்த பொழுது மக்களின் ஆடைகளைக் கண்டு, அன்று முதல் தானும் ஒரு வேட்டியும் துண்டும் மட்டும் அணியப் போவதாக முடிவு செய்து அதன் படி நடந்தார்.
  • காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் = மதுரை
  • காந்தியடிகள் காரைக்குடிக்கு வந்த பொழுது கானாடுகாத்தான் என்னும் ஊரில் உள்ள அன்பர் ஒருவரில் இல்லத்தில் தங்கினார்.
  • ஆடம்பரமாக இருந்த அவ்வீட்டின் உரிமையாளரிடம் “வீட்டை அழகு செய்ய செலவிட்ட தொகையில் ஒரு பகுதியை என்னிடம் கொடுத்து இருந்தால் இதை விட அழகாக செய்து இருப்பேன்” என்று கூறினார்.
  • காந்தியடிகள் மீண்டும் அவ்வீட்டிற்கு வந்த பொழுது, வீட்டில் இருந்து வெளிநாட்டு அலங்காரப் பொருட்கள் எதுவும் அங்கு இல்லை.
  • காந்தியடிகள் மதுரைக்கு வந்த பொழுது, சிலர் அவரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருமாறு அழைத்தனர்.
  • மீனாட்சியம்மன் கோவிலில் அனைவர்க்கும் அனுமதி உண்டா எனக் கேட்டார் காந்தியடிகள். இல்லை எனத் தெரிவித்தனர் அவர்கள்.
  • கோவிலில் அனைவர்க்கும் அனுமதி அளித்தால் மட்டுமே வருவேன் எனக்கூறி மறுத்து விட்டார்.
  • சில காலங்களுக்கு பிறகு கோவிலில் அனைவர்க்கும் அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்ட பொழுது தான் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்தார் காந்தியடிகள்.
  • காந்தியடிகள் எங்கிருந்த பொழுது தமிழை கற்கத் துவங்கினார் = தென் ஆப்ரிக்காவில் இருந்த பொழுது.
  • ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
  • காந்தியடிகளை பெரிதும் கவர்ந்த நூல் = திருக்குறள்.
  • காந்தியடிகள் தலைமை தாங்கிய இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு = 1937.
  • காந்தியடிகள் தலைமை தாங்கிய இலக்கிய மாநாடு நடைபெற்ற இடம் = சென்னை.
  • காந்தியடிகள் தலைமை தாங்கிய இலக்கிய மாநாட்டிற்கு வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தவர் = உ.வே.சாமிநாதர்.
  • உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார் காந்தியடிகள்.
  • காந்தியடிகள் உ.வே.சா அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.
சரியான விடையைத் தேர்ந்தெடு

1. தமிழ்நாட்டில் காந்தியடிகளுக்கு அருங்காட்சியம் அமைந்துள்ள இடம்.

அ) சென்னை
ஆ) மதுரை
இ) செங்கோட்டை
ஈ) கரூர்

2. பாரதியாரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்" என்று கூறியவர்.

அ) இராஜாஜி
ஆ) காந்தியடிகள்
இ) அண்ணா
ஈ) காமராஜர்

3. ரௌலட் சட்டம்  இயற்றப்பட்ட ஆண்டு

அ) 1910
ஆ) 1911
இ) 1919
ஈ) 1920

4. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

அ) கோவை
ஆ) மதுரை
இ) தஞ்சாவூர்
ஈ) சிதம்பரம்

5. காந்தியடிகளைக் கவர்ந்த நூல்

அ) நாலடியார்
ஆ) திருக்குறள்
இ) திருமுருகாற்றுப்படை
ஈ) ஆசாரக்கோவை

6. 1937 ஆம் ஆண்டு இலக்கிய மாநாடு நடைபெற்ற இடம்

அ) சென்னை
ஆ) மதுரை
இ) திருச்சி
ஈ) இராமநாதபுரம்

7. காந்தியடிகள் ----------- அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.

அ) நாமக்கல் கவிஞர்
ஆ) பாரதிதாசன்
இ) உ.வே.சாமிநாதர்
ஈ) பாரதியார்
6:03:00 PM

6TH TAMIL - பாஞ்சை வளம்

நூல் வெளி 

கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன. அவை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நம் பாடப்பகுதி நா. வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.


சுத்தவீர சூரன் கட்ட பொம்முதுரை
துலங்கும் பாஞ்சை வளங்கள் சொல்வேன்

நாட்டு வளங்களைச் சொல்லுகிறேன் - பாஞ்சைக்
கோட்டை வளங்களைக் கேளுமையா
கோட்டைகளாம் சுத்துக் கோட்டைகளாம் - மதில்
கோட்டைகள்தான் கெட்டி வேலைகளாம்

வீட்டிலுயர் மணிமேடைகளாம் - மெத்தை
வீடுகளா மதிலோடை களாம்
பூட்டுங்கதவுகள் நேர்த்திகளாம் - பணப்
பொக்கிஷ வீடும்பார் சாஸ்திகளாம்

ஆசார வாசல் அலங்காரம் - துரை
ராசன் கட்டபொம்மு சிங்காரம்
ராசாதி ராசன் அரண்மனையில் - பாஞ்சை
நாட்டரசன் கொலுவீற்றிருந்தான்.

விந்தையாகத் தெருவீதிகளும் - வெகு
விஸ்தாரமாய்க் கடை வாசல்களும்
நந்தவனங்களும் சந்தனச் சோலையும் - அங்கே
நதியும் செந்நெல் கமுகுகளும்,

வாரணச் சாலை ஒருபுறமாம் - பரி
வளரும் சாலை ஒருபுறமாம்
தோரண மேடை ஒருபுறமாம் - தெருச்
சொக்கட்டான் சாரியல்ஓர் புறமாம்

சோலையில் மாங்குயில் கூப்பிடுமாம் - வளம்
சொல்லி மயில் விளையாடிடுமாம்
அன்பு வளர்ந்தேறும் பாஞ்சாலநாட்டில் - சில
அதிசயம் சொல்கிறேன் கேளுமையா

முயலும் நாயை விரட்டிடுமாம் - நல்ல
முனையுள்ள பாஞ்சால நாட்டினிலே
பசுவும் புலியும் ஒரு துறையில் - வந்து
பால்குடிக்குந் தண்ணீர் தான் குடிக்கும்.

கறந்த பாலையுங் காகங் குடியாது - எங்கள்
கட்டபொம்மு துரை பேரு சொன்னால்
வரந்தருவாளே சக்க தேவி - திரு
வாக்கருள் செய்வாளே சக்க தேவி


சொல்லும் பொருளும்

  • சூரன் – வீரன்
  • வாரணம் – யானை
  • பொக்கிஷம் – செல்வம்
  • பரி – குதிரை
  • சாஸ்தி – மிகுதி
  • சிங்காரம் – அழகு
  • விஸ்தாரம் – பெரும்பரப்பு
  • கமுகு – பாக்கு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலில் ஆசிரியர்

அ) நா. வானமாமலை
ஆ) அ. கா. பெருமாள்
இ) ஆ. சிவசுப்பிரமணியன்
ஈ) ஆறு. இராமநாதன்

2. சுத்த வீர சூரன் என்று நா. வானமாமலை யாரைக் குறிபிடுகிறார்

அ) மருது சகோதரர்கள்
ஆ) கட்ட பொம்மன்
இ) ஊமைத்துரை
ஈ) பூலித்தேவன்

3. ஊர்வலத்தின் முன்னால் ------ அசைந்து வந்தது.

அ) தோரணம்
ஆ) வானரம்
இ) வாரணம்
ஈ) சந்தனம்

4. பாஞ்சாலங்குறிச்சியில் -------- நாயை விரட்டிடும்.

அ) முயல்
ஆ) நரி
இ) பரி
ஈ) புலி

5. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ________

அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு
ஆ) படுக்கையறை உள்ள வீடு
இ) மேட்டுப்பகுதியில் உள்ள வீடு
ஈ) மாடிவீடு

6. ‘பூட்டுங்கதவுகள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

அ) பூட்டு + கதவுகள்
ஆ) பூட்டும் + கதவுகள்
இ) பூட்டின் + கதவுகள்
ஈ) பூட்டிய + கதவுகள்

7. “தோரணமேடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

அ) தோரணம் + மேடை
ஆ) தோரண + மேடை
இ) தோரணம் + ஒடை
ஈ) தோரணம் + ஓடை

8. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________

அ) வாசல்அவங்காரம்
ஆ) வாசலங்காரம்
இ) வாசலலங்காரம்
ஈ) வாசலிங்காரம்

9. பாஞ்சாலங் குறிச்சிக்கு திரு வாக்கு அருள்பவள்

அ) இராணி மங்கம்மாள்
ஆ) சக்கமாதேவி
இ) வேலு நாச்சியார்
ஈ) ஜான்சிராணி

10. பொருத்தி விடை காண்க

பொக்கிஷம் - அழகு
சாஸ்தி - செல்வம்
விஸ்தாரம் - மிகுதி
சிங்காரம் - பெரும்பரப்பு

அ) 2 3 4 1
ஆ) 2 4 3 1
இ) 4 2 1 3
ஈ) 2 1 4 3
5:49:00 PM

6TH TAMIL - பாரதம் அன்றைய நாற்றங்கால்



நூல் வெளி
தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர். புதிய விடியல்கள் , இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும். இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.


துமைகள் செய்த தேசமிது
பூமியின் கிழக்கு வாசலிது!

தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான்
தேசம் உடுத்திய நூலாடை!
மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு
மெய்யுணர்வு என்கிற மேலாடை! (புதுமைகள்)

காளி தாசனின் தேனிசைப் பாடல்கள்
காவிரிக் கரையில் எதிரொலிக்க
கம்பனின் அமுதக் கவிதை களுக்குக்
கங்கை அலைகள் இசையமைக்க (புதுமைகள்)

கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக்
காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்!
மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக்
கிழக்குக் கரையின் நலம்கேட்கும்! (புதுமைகள்)

*புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்
புன்னகை செய்த பொற்காலம்!
கல்லைக் கூட காவிய மாக்கிக்
கட்டி நிறுத்திய கலைக்கூடம்! (புதுமைகள்)

அன்னை நாட்டின் அமுத சுரபியில்
அன்னிய நாடுகள்பசிதீர
அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி
அறத்தின் ஊன்று கோலாக

புதுமைகள் செய்த தேசமிது
பூமியின் கிழக்கு வாசலிது!* - தாராபாரதி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தாராபாரதியின் இயற்பெயர்

அ) இராமகிருஷ்ணன்
ஆ) இராதாகிருஷ்ணன்
இ) அரிகிருஷ்ணன்
ஈ) முத்துக்கிருஷ்ணன்

2. கவிஞாயிறு என்னும் அடைமொழியால் குறிக்கப்படுபவர்

அ) தாரா பாரதி
ஆ) தேவநேயபாவாணர்
இ) வாணிதாசனார்
ஈ) பெருஞ்சித்திரனார்

3. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு -  தாராபாரதி

அ) புதிய விடியல்கள்
ஆ) கால்முளைத்த கதை
இ) இது எங்கள் கிழக்கு
ஈ) விரல் நுனி வெளிக்கங்கள்

4. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

அ) திருவாசகம்
ஆ) திருக்குறள்
இ) திரிகடுகம்
ஈ) திருப்பாவை

5. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்

அ) காவிரிக்கரை
ஆ) வைகைக்கரை
இ) கங்கைச்கரை
ஈ) யமுனைக்கரை

6. கலைக்கூடமாகக் காட்சி தருவது

அ) சிற்பக்கூடம்
ஆ) ஓவியக்கூடம்
இ) பள்ளிக்கூடம்
ஈ) சிறைக்கூடம்

7. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நூல்+ஆடை
ஆ) நூலா+டை
இ) நூல் + லாடை
ஈ) நூலா + ஆட

8. எதிர்+ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) எதிரலிக்க
ஆ) எதிர்ஒலிக்க
இ) எதிரொலிக்க
ஈ) எதிர்ரொலிக்க

Sunday, March 29, 2026

3:35:00 AM

6TH TAMIL - இன எழுத்துகள்


இன எழுத்துகள்
  • சில எழுத்துகளுக்கு இடையே “ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம்” ஆகியவற்றில் ஒற்றுமையுண்டு.
  • இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துக்களை “இன எழுத்துகள்” என்பர்.
  • ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும்.
  • சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.
  • இடையின எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே இனமாகும்.
  • மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.
  • உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
  • குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும்.
  • ஒள என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும்.
  • சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை.
  • அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.
  • தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

Saturday, March 28, 2026

11:40:00 PM

6TH TAMIL - வளரும் வணிகம்


பாடக்குறிப்புகள்
  • பொருளை விற்பவர் = வணிகர்.
  • பொருளை வாங்குபவர் = நுகர்வோர்.
  • நம்மிடம் இருக்கும் பொருளைக் கொடுத்துவிட்டு, பிறரிடம் இருக்கும் பொருட்களைப் பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும்.
  • நெல்லைக்குப் பதிலாக உப்பைப் பெற்றச் செய்தியும் (நற்றிணை 183) ஆட்டுப் பாலுக்குப் பதிலாக தானியங்கள் பெற்ற செய்தியும் (குறுந்தொகை 221) பொன்னுக்குப் பதிலாக மிளகு (கறி) வாங்கிச் சென்ற செய்தியும் (அகநானூறு - 149) செய்தியும்  சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
  • வணிகத்தைத் தரைவழி வணிகம், நீர் வழி வணிகம் எனப் பிரிக்கலாம்.
  • தரைவழியாகப் பொருட்களைக் கொண்டு செல்ல எருது, கழுதை, குதிரைகளைப் பயன்படுத்தினர்.
  • வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும் போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை வணிகச்சாத்து என்பர்.
  • கப்பல்கள் வந்து நின்றுபோகும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும்.
  • கடல் வழியாக கப்பல்கள் மூலம் பொருட்களை அனுப்புவரும் வரவழைப்பதும் நீர்வழி வணிகமாகும்.
  • கல்பல்கள் வந்து நிற்கும் இடத்திற்கு துறைமுகங்கள் என்று பெயர்
  • துறைமுக நகரங்களைப் பட்டினம் என்றும் பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன.
  • தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் பூம்புகார் விளங்கியது.
  • வணிகத்தைத் தனிநபர் வணிகம் நிறுவன வணிகம் எனப் பிரிக்கலாம்.
  • தனி நபரால் உருகாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் தனிநபர் வணிகம்.
  • ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து நடத்துவது நிறுவன வணிகம்.
  • பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன
  • சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு போன்றவையும் அரேபியாவில் இருந்து குதிரைகளும் வாங்கப்பட்டன.
வணிகத்தில் நேர்மை

வணிகர்கள் பொருளை வாங்கும்போதும் உரிய அளவைவிட வாங்க மாட்டார்கள். பிறருக்குக் கொடுக்கும் போதும் அளவைக் குறைத்து கொடுக்கமாட்டார்கள். இச்செய்தியினை கீழ்க்கண்ட இலக்கியச் சான்றுகள் பறைசாற்றுகின்றன.

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்  
பிறவும் தமபோல் செயின்”  (குறள் 120) 

என வணிகரின் நேர்மையைத் திருக்குறளும், பொருளை வாங்கும்போதும் உரிய அளவைவிட வாங்க மாட்டார்கள். பிறருக்குக் கொடுக்கும் போதும் அளவைக் குறைத்து கொடுக்கமாட்டார்கள் என்ற செய்தியை, 

“நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” - பட்டினப்பாலை

கொள்வதும் மிகை கொளாது 
கொடுப்பதும் குறைபடாது - பட்டினப்பாலை

எனப் பட்டினப்பாலையும் கூறுகின்றன.

வணிகரை என்று பாராட்டி கூறும் நூல் = பட்டினப்பாலை.
“கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = பட்டினப்பாலை.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.  வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்

அ) நுகர்வோர்
ஆ) தொழிலாளி
இ) முதலீட்டாளர்
ஈ) நெசவாளி

2. வணிகம்+சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) வணிகசாத்து
ஆ)வணிகம்சாத்து
இ) வணிகச்சாத்து
ஈ) வணிகத்துசாத்து

3. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பண்டமாற்று
ஆ) பண்டம்மாற்று
இ) பண்மாற்று
ஈ) பண்டுமாற்று

4. மின்னணு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) மின் + னணு
ஆ) மின்ன + அணு
இ) மின்னல் + அணு
ஈ) மின் + அணு

5. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) விரி+வடைந்த
ஆ) விரி+அடைந்த
இ) விரிவு + அடைந்த
ஈ) விரிவ்+அடைந்த

6. அந்தக் காலத்தில் இருந்த வணிக முறை

அ) வியாபாரம்
ஆ) பண்ட மாற்றுமுறை
இ) பணம் கொடுத்து வாங்குவது
ஈ) மின்னணுப் பரிமாற்றம்

7. வணிகச் சாத்து என்பது

அ) பொருள்களை வெளியூருக்குக் குழுவாக எடுத்துச் செல்லல்
ஆ) கடல் வழியாகப் பொருட்களை எடுத்துச் செல்லல்
இ) தரைவழியாகப் பொருட்களை எடுத்துச் செல்லல்
ஈ) இவை அனைத்தும்

8. தமிழ்நாட்டில் தலைசிறந்த துறைமுகமாக விளங்கியது

அ) தொண்டி
ஆ) முசிறி
இ) பூம்புகார்
ஈ) தூத்துக்குடி

9. அரேபியாவில் இருந்து வாங்கப்பட்டவை

அ) கழுதைகள்
ஆ) குதிரைகள்
இ) எருதுகள்
ஈ) எருமைகள்

10. வணிகத்தில் நடுவு நிலைப் பற்றிக் கூறும் நூல்

அ) குறுந்தொகை
ஆ) புறநானூறு
இ) பட்டினப்பாலை
ஈ) பரிபாடல்

Thursday, March 26, 2026

6:53:00 PM

6TH TAMIL - கடலோடு விளையாடு



விடிவெள்ளி நம்விளக்கு - ஐலசா
விரிகடலே பள்ளிக்கூடம் - ஐலசா
அடிக்கும்அலை நம்தோழன் - ஐலசா
அருமைமேகம் நமதுகுடை - ஐலசா
வெண்மணலே பஞ்சுமெத்தை - ஐலசா
விண்ணின்இடி காணும்கூத்து - ஐலசா
*பாயும்புயல் நம் ஊஞ்சல் - ஐலசா
பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா
காயும்கதிர்ச் சுடர்கூரை - ஐலசா
கட்டுமரம் வாழும்வீடு - ஐலசா
மின்னல்வரி அரிச்சுவடி – ஐலசா
பிடிக்கும்மீன்கள் தம்பொருள்கள் - ஐசோ
முழுநிலவே கண்ணாடி - ஐலசா
மூச்சடக்கும்நீச்சல் யோகம் - ஐலசா
தொழும்தலைவன் பெருவானம் - ஐலசா
துணிவோடு தொழில்செய்வோம் - ஐலசா"

சொல்லும் பொருளும்

கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி
மின்னல்வரி - மின்னல் கோடு
அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துகள்

தெரிந்து தெளிவோம்

நெய்தல் திணை
நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்
மக்கள் : பரதவர், பரத்தியர்
தொழில்: மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
பூ : தாழம்பூ


சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கதிர்ச்+சுடர்
இ) கதிரவன்+சுடர்
ஆ) சதிரின்+கடர்
ஈ) கதிர்+சுடர்

2. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) மூச்சு+அடக்கி
இ) மூச்+சடச்சி
ஆ) முச்+அடக்கி
ஈ) மூச்சை+அடக்கி

3. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பெருமைவனம்
ஆ) பெருவானம்
இ) பெருமானம்
ஈ) பேர்வானம்

4. அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) அடிக்குமலை
ஆ) அடிக்கும் அலை
இ) அடிக்கிலை
ஈ) அடியலை

5. பொருத்துக

அ) விடிவெள்ளி – 1. பஞ்சுமெத்தை
ஆ) மணல் – 2. ஊஞ்சல்
இ) புயல் – 3. போர்வை
ஈ) பனிமூட்டம் – 4. விளக்கு

அ)  4 1 2 3
ஆ) 4 1 3 2
இ) 2 1 4 3
ஈ)  2 1 4 3
6:36:00 PM

6TH TAMIL - நானிலம் படைத்தவன்


நூல் வெளி
முடியரசனின் இயற்பெயர் துரைராசு. இவர் பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.

இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை
மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி
ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற
பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான்,
மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்
நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவன்,
ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான்
சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்
முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள்
எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற்,
பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால்
கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான்,
அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள்
அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான் - முடியரசன்

சொல்லும் பொருளும்
  • மல்வெடுத்த - வலிமைபெற்ற
  • சமர் – போர்
  • நல்கும் - தரும்
  • கழனி - வயல்
  • மறம் - வீரம்
  • எக்களிப்பு - பெருமகிழ்ச்சி
  • கலம் - கப்பல்
  • ஆழி – கடல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. முடியரசனின் இயற்பெயர் 

அ) துரை மாணிக்கம்
ஆ) தென்னரசு
இ) துரைராசு
ஈ) 

2. கீழ்க்கண்டவற்றுள் முடியரசன் நூல்கள் அல்லாத ஒன்று


3. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.

அ) துரை மாணிக்கம்
ஆ) தென்னரசு
இ) துரைராசு
ஈ) 

4. கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை எனத் தொடங்கும் பாடல் அமைந்த நூல். 

அ) பூங்கொடி
ஆ) வீரகாவியம்
இ) புதியதொரு விதி செய்வோம்
ஈ) காவியப்பாவை 

5 பொருத்துக

அ) சமர் - 1. வயல்
ஆ) கழனி - 2. போர்
இ) மறம் - 3. கப்பல்
ஈ) கலம் - 4. வீரம்

அ) 3 4 2 1 
ஆ) 2 1 4 3
இ) 2 3 4 1
ஈ) 3 1 4 2

6.  போர்க்களத்தில் வெளிப்படும் குணம். 

அ) மகிழ்ச்சி
ஆ) துன்பம்
இ) வீரம்
ஈ) அழுகை

7. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கல் + அடுத்து
ஆ) கல் + எடுத்து
இ) கல் + லடுத்து
ஈ) கல் + லெடுத்து

8. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) நா + னிலம்
ஆ) நான்கு + நிலம்
இ) நா + நிலம்
ஈ) நான் + நிலம்

9. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) நாடென்ற
ஆ) நாடன்ற
இ) நாடு என்ற
ஈ) தாடுஅன்ற

10. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்..

அ) கலம்ஏ றி
ஆ) கலமறி
இ) கலன் ஏறி
ஈ) கலமேறி
6:06:00 PM

6TH TAMIL - மொழி இறுதி எழுத்துகள்



மொழி இறுதியில் வரும் எழுத்துகள்

சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.

• உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.

• ஞ், ண், ந், ம், ய்,ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும். (உரிஞ், வெரிந், அவ்)

மொழி இறுதியில் வாரா எழுத்துகள்

• சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.

• உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்.

• அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்.

• ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது.

• க், ங், ச், ட்,த்,ப்,ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வரும். வருவதில்லை.

• உயிர்மெய் எழுத்துகளுள் ங எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.
* எகர வரிசையில் கெ முதல் னெ முடிய எந்த உயிர்மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை.

• ஒகர வரிசையில் நொ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை.நொ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில் வரும்

• நொ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் = துன்பம்.

சொல்லின் இடையில் வரும் எழுத்துகள்

  • மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்.
  • உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
  • ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
  • அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கூற்றுகளை ஆராய்க

கூற்று 1 சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை
கூற்று 2 உயிர்மெய் எழுத்துகளுள் ங எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.

அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்றுகள் இரண்டும் சரி
ஈ) கூற்றுகள் இரண்டும தவறு

2. மொழி இறுதியில் வரும் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை

அ) ஏழு
ஆ) பதினொன்று
இ) பதினாறு
ஈ) பதிமூன்று

3. மொழி இறுதியில் வாரா மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை

அ) ஏழு
ஆ) பதினொன்று
இ) பதினாறு
ஈ) பதிமூன்று

4. மொழி இறுதியில் வாரா எழுத்து,

அ) உயிர் எழுத்து
ஆ) உயிர்மெய் எழுத்து
இ) மெய் எழுத்து
ஈ) ஆய்த எழுத்து

5. உயிர்மெய் எழுத்துகளுள் எந்த வரிசை எழுத்துகள் சொல்லின் இறுதியில் வாரது.

அ)
ஆ) ட
இ) ழ
ஈ) ற

6. நொ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

அ) இல்லை
ஆ) துன்பம்
இ) நொண்டு
ஈ) நண்டு

7. உயிர் எழுத்தின் எந்த வரிசை எழுத்துகள் மொழி இறுதியில் வருதல் இல்லை.

அ) உ வரிசை எழுத்துகள்
ஆ)  எ வரிசை எழுத்துகள்
இ)  ஒ வரிசை எழுத்துகள்
ஈ) இ வரிசை எழுத்துகள்

8. சொல்லின் நடுவில் மட்டுமே வரும் எழுத்து

அ) உயிர் எழுத்து
ஆ) உயிர்மெய் எழுத்து
இ) மெய் எழுத்து
ஈ) ஆய்த எழுத்து

9. அளபெடையில் மட்டும் சொல்லின் இடையில் வரும் எழுத்து

அ) உயிர் எழுத்து
ஆ) உயிர்மெய் எழுத்து
இ) மெய் எழுத்து
ஈ) ஆய்த எழுத்து

10. மொழி இடையில் வரும் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை

அ) ஏழு
ஆ) பதினொன்று
இ) பதினாறு
ஈ) பதினெட்டு