Breaking

Sunday, April 5, 2026

3:39:00 AM

9TH TAMIL - செய்தி


9TH TAMIL செய்தி
  • நாதஸ்வர வித்துவானின் மகன் = தங்கவேல்.
  • சங்கீத கோஷ்டியின் தலைவர் = பிலிப் போல்ஸ்கா
  • வக்கீல் = மணி.
  • தி. ஜானகிராமன் அவர்கள், தனது ஜப்பான் பயண அனுபவங்களை “உதயசூரியன்” என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார்.
  • இது 1967 இல் நூலாக வெளியிடப்பெற்றது.
  • ரோம், செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களைக் கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974இல் நூலாக வெளியிட்டார்.
  • தமது காவிரிக்கரை வழியான பயணத்தை நடந்தாய் வாழி காவேரி என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.
  • இவரது மற்றுமொரு பயணக்கட்டுரை, அடுத்த வீடு ஐம்பது மைல் என்பதாகும்.
  • தி. ஜானகிராமன் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்.
  • உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.
  • வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன.
  • நாவல்களையும் நாடகங்களையும் இவர் படைத்துள்ளார்.
  • “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் தி. ஜானகிராமன்.
  • தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
  • செய்தி என்னும் சிறுகதை சிவப்பு ரிக்ஷா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
  • மிகவும் உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும்போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பொருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.
  • தி. ஜானகிராமன் அவர்கள், தனது ஜப்பான் பயண அனுபவங்களை “உதயசூரியன்” என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். இது 1967 இல் நூலாக வெளியிடப்பெற்றது.
  • ரோம், செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களைக் கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974இல் நூலாக வெளியிட்டார்.
  • தமது காவிரிக்கரை வழியான பயணத்தை நடந்தாய் வாழி காவேரி என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.
  • இவரது மற்றுமொரு பயணக்கட்டுரை, அடுத்த வீடு ஐம்பது மைல் என்பதாகும்.
  • தி. ஜானகிராமன் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்.
  • உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.
  • வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன.
  • நாவல்களையும் நாடகங்களையும் இவர் படைத்துள்ளார்.
  • “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் தி. ஜானகிராமன்.
  • தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
  • செய்தி என்னும் சிறுகதை சிவப்பு ரிக்ஷா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
  • மிகவும் உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும்போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பொருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.
  • தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை உ.வே. சாமிநாதர், மௌனி, தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், தஞ்சை இராமையா தாஸ், தஞ்சாவூர்க் கவிராயர் ஆகியோர்.
  • இந்திய இசையின் அழகான நுட்பங்களைத் தெளிவாக வாசித்துக் காட்டக்கூடிய இசைக் கருவிகளில் நாகசுரமும் ஒன்று.
  • மங்கலமான பல நிகழ்வுகளில் இக்கருவி இசைக்கப்படுகிறது.
  • இந்தச் சிறப்பான கருவி 600 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது.
  • 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னாகரம் என்னும்  நூலில் இந்தக் கருவி கூறப்படவில்லை.
  • 13ஆம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்தப் பதிவுகளிலும் இந்தக் கருவி பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
  • தமிழகப் பழைமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் இந்தக் கருவி காணப்படவில்லை.
  • ஆகவே இந்தக் கருவி 13ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டிருக்கலாம் என்று அறியமுடிகிறது.
  • நாகசுரம் என்ற பெயரே சரியானது.
  • நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது.
  • வெட்டப்பட்ட ஆச்சா மரத்துண்டுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்த பிறகே இக்கருவி உருவாக்கப்படுகிறது.
  • எனவே பழைய வீடுகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஆச்சா மரக்கட்டைகளைக் கொண்டே நாகசுரம் செய்யப்படுகிறது.
  • நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது.
  • சீவாளி, நாணல் என்ற புல் வகையைக்கொண்டு செய்யப்படுகிறது.
  • 1970 – அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு. அழகிரிசாமி
  • 1979 – சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி. ஜானகிராமன்
  • 1987 – முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன்
  • 1996 – அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன்
  • 2008 – மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி
  • 2010 – சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன்
  • 2016 – ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன்.

1. தி. ஜானகிராமன், தன் ஜப்பான் பயண அனுபவங்களை உதய சூரியன் என்னும் தலைப்பில் ........ வார இதழில் எழுதினார்.

 அ) கணையாழி   

ஆ) கிராம ஊழியன்

 இ) சுதேசமித்திரன்   

ஈ) மணிக்கொடி

2. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

அ) கருங்கடலும் கலைக்கடலும் 

ஆ) நடந்தாய் வாழி காவேரி

இ) சக்தி வைத்தியம்   

ஈ) அடுத்த வீடு ஐம்பது மைல்

(விடையாக உள்ளதைத் தவிர ஏனையவை தி.ஜானகிராமனின் பயண இலக்கியங்கள்)

3. நாகசுரக் கருவி ................ மரத்தில் செய்யப்படுகிறது.

அ) யா  

ஆ) ஆச்சா 

இ) பலா  

ஈ) மூங்கில்

4. ‘கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்’ என்றவர்.

அ) தி. ஜானகிராமன்   

ஆ) புதுமைபித்தன்

இ) மேலாண்மை பொன்னுசாமி 

ஈ) கு. அழகிரிசாமி

5. தி. ஜானகிராமன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு.

அ) 1970  

ஆ) 1979  

இ) 1987  

ஈ) 1996

6. ‘உதய சூரியன்’ என்னும் நூல் வெளியிடப்பட்ட ஆண்டு.

அ) 1967  

ஆ) 1974  

இ) 1987  

ஈ) 1996

7. ‘கருங்கடலும் கலைக்கடலும்’ என்னும் நூல் வெளியிடப்பட்ட ஆண்டு.

அ) 1967  

ஆ) 1974  

இ) 1987  

ஈ) 1996

8. தமிழில் எந்த நூற்றாண்டு வரை நாதசுரம் பற்றிய குறிப்பு கிடைக்கப்பெறவில்லை?

அ) ஆறாம்    

ஆ) பத்தாம்

இ) பதிமூன்றாம்   

ஈ) பதினைந்தாம்

9. ‘சங்கீத இதத்னாகரம்’ எந்த நூற்றாண்டு இயற்றப்பட்டது?

அ) ஆறாம்    

ஆ) பத்தாம்

இ) பதிமூன்றாம்   

ஈ) பதினைந்தாம்

10. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

அ) உ.வே.சாமிநாதர்   

ஆ) மௌனி

இ) புதுமைப்பித்தன்   

ஈ) தி. ஜானகிராமன்

(விடையாக உள்ளதைத் தவிர ஏனையவர், தஞ்சைப் பகுதியைச் சார்ந்தவர்கள்)


12:51:00 AM

9TH TAMIL - இராவண காவியம்

நூல் வெளி 

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம். இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது. இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது. தமிழகக் காண்டத்திலுள்ள பாடல்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்டது இராவண காவியம்.

பகுபத உறுப்பிலக்கணம்


பருகிய = பருகு+இன்+ய்+அ;

பருகு - பகுதி;
இன்- இறந்தகால இடைநிலை (ன் கெட்டது விகாரம்);
ய் -உடம்படுமெய்; 
அ --பெயரெச்ச விகுதி

பூக்கும் = பூ + க் + க் + உம்;

பூ - பகுதி; 
க் - சந்தி
க் - எதிர்கால இடைநிலை; 
உம் - வினைமுற்று விகுதி


அருஞ்சொற்பொருள்

  • மைவனம் = மலைநெல்
  • முருகியம் = குறிஞ்சிப்பறை
  • பூஞ்சினை = பூக்களை உடைய கிளை
  • சிறை = இறகு
  • சாந்தம் = சந்தனம்
  • பூவை = நாகணவாய்ப் பறவை
  • பொலம் = அழகு
  • கடறு = காடு
  • முக்குழல் = கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்
  • பொலி = தானியக்குவியல்
  • உழை = ஒரு வகை மான்.
  • வாய்வெரீஇ = சோர்வால் வாய் குழறுதல்
  • குருளை = குட்டி
  • இனைந்து = துன்புறுதல்
  • உயங்குதல் = வருந்துதல்
  • படிக்குஉற = நிலத்தில் விழ
  • கோடு = கொம்பு
  • கல் = மலை
  • முருகு = தேன், மணம், அழகு
  • மல்லல் = வளம்
  • செறு = வயல்
  • கரிக்குருத்து = யானைத்தந்தம்
  • போர் = வைக்கோற்போர்
  • புரைதப = குற்றமின்றி.
  • தும்பி = ஒருவகை வண்டு
  • துவரை = பவளம்
  • மரை = தாமரை மலர்
  • விசும்பு = வானம்
  • மதியம் = நிலவு

இலக்கணக்குறிப்பு

  • பைங்கிளி = பண்புத்தொகை
  • பூவையும் குயில்களும், முதிரையும், சாமையும், வரகும் = எண்ணும்மைகள்.
  • இன்னிளங்குருளை = பண்புத்தொகை
  • அதிர்குரல் = வினைத்தொகை
  • மன்னிய = பெயரெச்சம்
  • வெரீஇ = சொல்லிசை அளபெடை
  • கடிகமழ் = உரிச்சொற்றொடர்
  • மலர்க்கண்ணி = மூன்றாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன் தொக்க தொகை;
  • எருத்துக்கோடு = ஆறாம் வேற்றுமைத்தொகை
  • கரைபொரு = இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • மரைமுகம் = உவமைத்தொகை
  • கருமுகில் = பண்புத்தொகை
  • வருமலை = வினைத்தொகை

இராவண காவியம் நூல் குறிப்பு

9TH TAMIL இராவண காவியம்
  • இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம்.
  • “தனித்தமிழ்ப் பெருங்காப்பியம்” எனப்படும் நூல் = இராவண காவியம்.
  • இராவண காவியம் நூலில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை = 5.
  • இராவண காவியம் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை = 3100.
  • இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது.
  • இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது.
  • தமிழகக் காண்டத்திலுள்ள பாடல்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.
  • இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்டது இராவண காவியம்.

இராவண காவியம் நூல் பற்றி அறிஞர் அண்ணா

9TH TAMIL இராவண காவியம்
  • “இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” – பேரறிஞர் அண்ணா.

புலவர் குழந்தை ஆசிரியர் குறிப்பு

  • இராவண காவியம் நூலின் ஆசிரியர் = புலவர் குழந்தை.
  • தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.
  • யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

கோர்வை/கோவை

  • கோ என்பது வேர்ச்சொல்.
  • கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி.
  • எ.கா; ஆசாரக்கோவை, ஊசியில் நூலைக் கோத்தான்.