Breaking

Saturday, April 18, 2026

12:56:00 AM

9TH TAMIL - விண்ணையும் சாடுவோம்








  • இருபதாம் நூற்றாண்டில் இந்திய வானியல் அறிவியல் துறையில் தமிழர்களின் பங்கு மகத்தானது.
  • அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, வளர்மதி போன்றோர் வரிசையில் மற்றுமொரு வைரம் தமிழ்நாட்டை சேர்ந்த அறிவியலாளர் சிவன்
  • இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர் = சிவன்.
  • இஸ்ரோவின் எத்தனையாவது தலைவராக சிவன் பொறுப்பேற்றார் = ஒன்பதாவது.
  • இஸ்ரோவின் தலைவர் பதவியை ஏற்ற முதல் தமிழர் = சிவன்.
  • இஸ்ரோவின் தலைவராக சிவன் பொறுப்பேற்ற ஆண்டு = 2015.
  • இஸ்ரோவின் தலைமை பொறுப்பை ஏற்கும் முன்னர் சிவன் அவர்கள் வகித்த பதவி = விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் பதவி.
  • ISRO = இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்.
  • சிவன் அவர்களின் சொந்த ஊர் = நாகர்கோவில் அருகே சரக்கல்விளை என்ற கிராமம்.
  • இவர் தமிழக அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்.
  • இவரின் தந்தை = கைலாச வடிவு.
  • இவரின் தந்தையின் தொழில் = மாங்காய் வியாபாரம்.
  • இளங்கலைப் பிரிவில் “கணினி அறிவியல்” படிப்பை முடித்தார்.
  • எம்.ஐ.டியில் “வானூர்தி பொறியியல்” பிரிவில் எம்.இ பயின்றுள்ளார்.
  • பின்னர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.
  • விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பொறியாளராக பணியில் சேர்ந்த ஆண்டு = 1982.
  • முதன் முதலில் பி.எஸ்.எல்.வி (PSLV = POLAR SATELLITE LAUNCH VEHICLE) திட்டத்தை துவங்க மத்திய அரசு அனுமதி அளித்த ஆண்டு = 1983.
  • விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சிவன் அவர்கள் உருவாக்கிய செயலி = சித்தாரா
  • சித்தாரா செயலியை உருவாக்கியவர் = சிவன்.
  • சித்தாரா (SITARA = SOFTWARE FOR INTEGRATED TRAJECTORY ANALYSIS WITH REAL TIME APPLICATION)
  • சித்தாரா செயலியின் பணி = செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க (DIGITAL) முறையில் சேகரித்தல்.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையில் சிவன் அவர்களின் முக்கியமான பங்களிப்பு = சித்தாரா செயலியை உருவாக்கியது.
  • தன் அனுபவத்தில் தான் பார்த்த சிறந்த மனிதர் அப்துல் கலாம் தான் என்கிறார் சிவன்.
  • யாராவது சிறியதாக செய்தாலே, பெரியதாக பாராட்டக்கூடியவர் = அப்துல் கலாம்.
  • அப்துல்கலாம், சிவன் அவர்களை எவ்வாறு அழைப்பார் = “மென்பொறியாளர்
  • இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவராக பணியாற்றியவர் = அப்துல்கலாம்
  • இவர் ஒரு அறிவியலாளர்.
  • அப்துல்கலாம் தமில்நாட்டின் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்.
  • “இந்திய ஏவுகணையின் நாயகன்” என்று அழைக்கப்படுபவர் = அப்துல் கலாம்.
  • இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்றவர்.
  • தனது பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ”இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை” என அழைக்கப்படுபவர் = விக்ரம் சாராபாய் ஆவார்.
  • இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான “ஆரியபட்டா” ஏவுதலுக்கு காரணமாக இருந்தவர் = விக்ரம் சாராபாய் ஆவார்.
  • செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24000 இந்திய கிராமங்களில் உள்ள ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு கல்வியை எடுத்து செல்ல உதவினார்.
  • விக்ரம் சாராபாய் அவர்களின் முயற்சியால் தான் “இஸ்ரோ” துவங்கப்பட்டது.
  • விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம் = கேரளா மாநிலம் திருவனந்தபுரம்.
  • விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில், வானூர்த்தியியல் (Aeronautics), வான்பயண மின்னணுவியல் (Avionics), கூட்டமைப் பொருள்கள் (Composites), கணினி – தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஆராய்சிகளும் வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக்கோல்களை ஏவத் துவங்கிய ஆண்டு = 1957 முதல்.
  • இந்தியாவில் விண்வெளி செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை மக்களுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று சிந்தித்தவர் = விக்ரம் சாராபாய் ஆவார்.
  • மக்கள் பயன்படுத்தும் இணையச் செயல்கள் அனைத்திற்கும் செயற்கைக்கோள் அவசியம் தேவை.
  • இந்தியா இதுவரை 45 செயற்கைக்கோள்களை ஏவி உள்ளது.
  • இந்தியாவிற்கு தனது தேவையை பூர்த்தி செய்ய இன்னும் 45 செயற்கைக்கோள்கள் தேவை.
  • வளர்மதி அவர்கள், தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் பிறந்தவர்.
  • தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை வென்ற முதல் அறிவியல் அறிஞர் = வளர்மதி ஆவார்.
  • எந்த ஆண்டு வளர்மதி அவர்கள், தமிழக அரசின் அப்துல்கலாம் விருதை பெற்றார் = 2015.
  • வளர்மதி, இஸ்ரோவில் 1894 முதல் பணிபுரிந்து வருகிறார்.
  • 2012இல் உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (RISAT-1) திட்டத்தின் இயக்குனராக பணியாற்றினார்.
  • இந்தியாவில், உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (RISAT-1) திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர் = வளர்மதி.
  • இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் வளர்மதி ஆவார்.
  • சந்திராயன் – 1 நிலவின் புறவெளியை ஆராய்வதை நோக்கமாக கொண்டது.
  • சந்திராயன் – 1, நிலவில் செயற்கைக்கோளை இறக்கி ஆராய்ந்து படம் எடுத்துள்ளது.
  • சந்திராயன் – 2 இன் பணியில், “ஆய்வுப் பயண ஊர்தி இறங்குதலை” (exploration vehicle lander) நிலவின் மேற்பரப்பில் துல்லியமான கட்டுப்பாடுகளின் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • அதிலிருந்து “ரோவர்” (rover) எனப்படும் ஆராயும் ஊர்தி, ரோபோடிக் (robotic) தொழில்நுட்ப உதவியினால் தானாகவே வெளிவந்து, நிலவில் இறங்கிப் 14 நாட்கள் பயணிக்கும்.
  • பல்வேறு பரிசோதனைகள் அங்கு மேற்கொள்ளும்.
  • இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குனராக பணி புரிந்தவர் = அருணன் சுப்பையா ஆவார்.
  • அருணன் சுப்பையா அவர்களின் சொந்த ஊர் = திருநெல்வேலி மாவட்டத்தின் ஏர்வாடி அருகில் உள்ள கோதைசேரி என்னும் ஊர்.
  • அருணன் சுப்பையா திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம்சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்த ஆண்டு = 1984.
  • இவர் தற்போது பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
  • 2013 இல் மங்கல்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய “இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குநராக” இருக்கின்றார்.
  • “இளைய கலாம்” என்று அழைக்கப்படுபவர் = மயில்சாமி அண்ணாதுரை.
  • மயில்சாமி அண்ணாதுரையின் ஊர் = கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம், கோதவாடி என்னும் சிற்றூர்.
  • மேல்நிலை வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர் இவர்.
  • இதுவரை 5 முனைவர் பட்டங்களை பெற்றவர் மயில்சாமி அண்ணாதுரை ஆவார்.
  • 1982 இல் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்த இவர் தற்போது அம்மையத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.
  • இந்தியா சார்பில் நிலவுக்கு முதன் முதலில் அனுப்பப்பட்ட ஆய்வுக்கலம் “சந்திராயன்-1” திட்டத்தின் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் = மயில்சாமி அண்ணாதுரை.
  • தற்போது சந்திராயன்-2 திட்டத்திலும் பணிபுரிந்து வருகிறார்.
  • சர்.சி.வி.இராமன் நினைவு அறிவியல் விருதை வென்றுள்ளார்.
  • மயில்சாமி அண்ணாதுரை எழுதிய புத்தகம் = கையருகே நிலா.

1. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்.

அ) சிவன்    

ஆ) மயில்சாமி அண்ணாதுரை

இ) அருணன் சுப்பையா  

ஈ) விக்ரம் சாராபாய்

2. ‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’ எங்கு அமைந்துள்ளது.

அ) பெங்களூர்    

ஆ) ஸ்ரீஹரிகோட்டா

இ) திருவந்தனபுரம்   

ஈ) அகமதாபாத்

3. யாருடைய முயற்சியால் ‘இஸ்ரோ’ தொடங்கப்பட்டது.

அ) சிவன்    

ஆ) மயில்சாமி அண்ணாதுரை

இ) அருணன் சுப்பையா  

ஈ) விக்ரம் சாராபாய்

4. ஆரியபட்டா என்ற இந்திய முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்குக் காரணமானவர்.

அ) சிவன்    

ஆ) மயில்சாமி அண்ணாதுரை

இ) அருணன் சுப்பையா  

ஈ) விக்ரம் சாராபாய்

5. இந்திய அரசால் அப்துல் கலாமிற்கு வழங்கப்பட்ட விருது.

அ) பத்மஸ்ரீ    

ஆ) பத்மபூஷன்

இ) பத்மவிபூஷன்   

ஈ) பாரதரத்னா

6. இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர்.

அ) சிவன்    

ஆ) மயில்சாமி அண்ணாதுரை

இ) அருணன் சுப்பையா  

ஈ) அப்துல் கலாம்

7. ‘சித்தாரா’ என்ற செயலியை உருவாக்கியவர்.

அ) சிவன்    

ஆ) மயில்சாமி அண்ணாதுரை

இ) அருணன் சுப்பையா  

ஈ) அப்துல் கலாம்

8. பொருத்துக.

அ) அப்துல் கலாம்   -  1. கோதவாடி

ஆ) சிவன்   - 2. கோதைசேரி

இ) அண்ணாதுரை  - 3. சரக்கல்விளை

ஈ) அருணன் சுப்பையா - 4. இராமேசுவரம்

அ) 4, 3, 1, 2 

ஆ) 4, 3, 2, 1 

இ) 3, 4, 2, 1 

ஈ) 2, 1, 4, 3

9. 2015இல் தமிழ்நாடு அரசின் ‘அப்துல்கலாம்’ விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர்.

அ) வளர்மதி    

ஆ) மயில்சாமி அண்ணாதுரை

இ) அருணன் சுப்பையா  

ஈ) சிவன்

10. 2012இல் உள் நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர்.

அ) வளர்மதி    

ஆ) மயில்சாமி அண்ணாதுரை

இ) அருணன் சுப்பையா  

ஈ) சிவன்

11. ‘மங்கள்யான்’ திட்ட இயக்குநர்.

அ) வளர்மதி    

ஆ) மயில்சாமி அண்ணாதுரை

இ) அருணன் சுப்பையா  

ஈ) சிவன்

12. ‘இளைய கலாம்’ என்று அழைக்கப்படுபவர்.

அ) வளர்மதி    

ஆ) மயில்சாமி அண்ணாதுரை

இ) அருணன் சுப்பையா  

ஈ) சிவன்

13. கீழ்க்கண்ட அறிவியல் அறிஞர்களுள் 5 முனைவர் பட்டம் பெற்றவர்.

அ) வளர்மதி    

ஆ) மயில்சாமி அண்ணாதுரை

இ) அருணன் சுப்பையா  

ஈ) சிவன்

14. மயில்சாமி அண்ணாதுரை இயற்றிய நூல்.

அ) வானம் வசப்படும்  

ஆ) கையருகே நிலா

இ) ஒரு பறவையின் பயணம் ஈ) நிலவில் ஒரு பயணம்

15. ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படுபவர்.

அ) சிவன்    

ஆ) மயில்சாமி அண்ணாதுரை

இ) அருணன் சுப்பையா  

ஈ) அப்துல் கலாம்

12:33:00 AM

9TH TAMIL - சீவக சிந்தாமணி




  • நிகழ்வுகளின் கருத்தைக் கூறும் தன்னுணர்ச்சிப் பாடல்களாக அமைந்தவை = சங்க இலக்கியங்கள்.
  • அறக் கருத்துக்களை கூறும் இலக்கியங்கள் = பதினெண்கீழ்க்கணக்கு  நூல்கள்.
  • ஒப்பில்லாத தலைவன் ஒருவனது வாழ்க்கையைப் பாடுவதாக அமைந்தவை = காப்பியங்கள்.
  • சீவகனைத் தலைவனாக கொண்டு உருவான காப்பியம் = சீவக சிந்தாமணி.
  • சீவக சிந்தாமணி காப்பியத்தின் மையக்கருத்து = இன்பங்களைத் துறந்து துறவு பூனை வேண்டும்.
  • சீவகனின் நாடு = ஏமாங்கத நாடு.
  • புள்ளிகளும் வரிகளும் உடைய மீன் = வரால் மீன்கள்.
  • நெற்பயிர்களின் தோற்றமானது = பச்சைப் பாம்பு போல் இருந்தது.
  • நெற்பயிர்கள் கதிர்விட்டு நிமிர்ந்து நிற்பது = செல்வம் பெற்ற பக்குவம் இல்லாதவர் தலை நிமிர்ந்து நிற்பது போல் உள்ளது.
  • முற்றிய நெற்பயிர்கள் சாய்ந்து நிற்பது = தெளிந்த நூலைக் கற்ற நல்லவர்களின் பணிவைப் போல் உள்ளது.
  • “தேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்ந்தவே” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = சீவக சிந்தாமணி.
  • ஏமாங்கத நாட்டில் நாள்தோறும் கிடைக்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை = ஆயிரம்.
  • மகளிர் ஒப்பனை செய்து கொள்ளும் மணிமாடங்கள் = ஆயிரம்.
  • ஏமாங்கத நாடு யாருக்கு இனிய இடமாகும் = உண்மையான தவம் புரிவோர்க்கும், இல்லறம் நடத்துவோருக்கும்
  • சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
  • இது விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியமாகும்.
  • விருதப்பாவால் இயற்றப்பட்ட தமிழின் முதல் காப்பியம் = சீவக சிந்தாமணி.
  • ‘இலம்பகம்’ என்ற உட்பிரிவுகளைக் கொண்டது.
  • 13 இலம்பகங்களைக் கொண்டுள்ளது இந்நூல்.
  • சீவக சிந்தாமணியில் உள்ள இலம்பகங்களின் எண்ணிக்கை = 13.
  • ‘மணநூல்’ எனவும் அழைக்கப்படுகிறது இந்நூல்.
  • “மணநூல் என அழைக்கப்படும் நூல் = சீவக சிந்தாமணி.
  • நாமகள் இலம்பகத்தில் நாட்டுவளம் என்னும் பகுதி பாடமாக அமைந்துள்ளது.
  • இதன் ஆசிரியர் திருத்தக்கதேவர்.
  • சமண சமயத்தைச் சார்ந்த இவர், இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்றமுடியும் என்று நிறுவும் வகையில் இக்காப்பியத்தை இயற்றினார்.
  • இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டு.
  • சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக ‘நரிவிருத்தம்’ என்னும் நூலை இயற்றினார் என்பர்.
  • “நரிவிருத்தம்” என்னும் நூலை இயற்றியவர் = திருத்தக்கதேவர்.

அருஞ்சொற்பொருள்

  • தெங்கு = தேங்காய்
  • இசை = புகழ்
  • வருக்கை = பலாப்பழம்
  • நெற்றி = உச்சி
  • மால்வரை = பெரிய மலை
  • மடுத்து = பாய்ந்து
  • கொழுநிதி = திரண்ட நிதி
  • மருப்பு = கொம்பு
  • வெறி = மணம்
  • கழனி = வயல்
  • செறி = சிறந்த
  • இரிய = ஓட
  • சூல் = கரு
  • அடிசில் = சோறு
  • மடிவு = சோம்பல்
  • கொடியனார் = மகளிர்
  • நற்றவம் = பெருந்தவம்
  • வட்டம் = எல்லை
  • வெற்றம் = வெற்றி

இலக்கணக்குறிப்பு

  • நற்றவம் = பண்புத்தொகை
  • செய்கோலம் = வினைத்தொகை
  • தேமாங்கனி (தேன் போன்ற மாங்கனி) = உவமைத்தொகை
  • இறைஞ்சி = வினையெச்சம்
  • கொடியனார் = இடைக்குறை

1. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்.

அ) சிலப்பதிகாரம்   

ஆ) சீவகசிந்தாமணி

இ) குண்டலகேசி   

ஈ) கம்பராமாயணம்

2. சீவகசிந்தாமணியின் ஆசிரியர்.

அ) சீத்தலைசாத்தனார்  

ஆ) திருத்தக்கத்தேவர்

இ) வர்த்தமான தேவர்  

ஈ) கந்தியார்

3. சீவகசிந்தாமணி .......... சமயம் சார்ந்த நூல்.

அ) சைவ  

ஆ) வைணவ 

இ) சமண 

ஈ) பௌத்த

4. சீவகசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் இயற்றிய நூல்.

அ) சிந்தாமணிமாலை  

ஆ) நரிவிருத்தம்

இ) சுரமஞ்சரி    

ஈ) விருத்தமாலை

5. சீவக சிந்தாமணியின் மற்றோரு பெயர்.

அ) இன்பநூல் 

ஆ) துன்பநூல் 

இ) துறவுநூல் 

ஈ) மணநூல்

6. சீவகசிந்தாமணியின் காலம்........... நூற்றாண்டாகும்.

அ) இரண்டாம் 

ஆ) ஐந்தாம் 

இ) ஒன்பதாம் 

ஈ) பத்தாம்

7. சீவகசிந்தாமணியில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை.

அ) 1300  

ஆ) 2358  

இ) 3145  

ஈ) 4679

8. சீவகசிந்தாமணியில் அமைந்துள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை.

அ) 13  

ஆ) 23  

இ) 30  

ஈ) 49

9. சீவகசிந்தாமணியின் உட்பிரிவுகள் .......... என அழைக்கப்படுகிறது.

அ) காதை 

ஆ) படலம் 

இ) இலம்பகம் 

ஈ) சருக்கம்

10. ‘இன்பங்களைத் துறந்து துறவு பூணவேண்டும்’ என்ற மையக் கருத்தைக் கொண்ட காப்பியம்.

அ) சிலப்பதிகாரம்   

ஆ) மணிமேகலை

 இ) சீவகசிந்தாமணி   

ஈ) குண்டலகேசி