Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 16, 2026

7:30:00 AM

TET - PSYCHOLOGY

1. உடல் வளர்ச்சி என்பது மனித உடலில் உள்ள எதனால் ஏற்படும் உயரம் மற்றும் எடை பெருக்கத்தை குறிக்கின்றது?

A எலும்பும் தோலும் 
B ரத்தமும் சதையும்
C செல்களும் திசுக்களும் 
D மூளையும் முடியும்

2. எதன் அடிப்படையில் மனிதனின் வளர்ச்சியை பிரித்துள்ளனர்?

A திசு வளர்ச்சி 
B மனித உடலின் வளர்ச்சி
C முதிர்ச்சி
D B மற்றும் C

3. மனித வளர்ச்சி எத்தனை பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

A 5 
B 9 
C 12 
D 8

4. ஆசிரியர்கள் கற்கும் குழந்தையை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் இந்த வளர்ச்சியைப்

பற்றி அறிந்து கொள்ள வேண்டும்?

A உடல், உள்ளம் B மனவெழுச்சி C சமூக மனப்பான்மை D இவையனைத்தும்

5. பள்ளி முன் பருவம் என்பது எந்த பருவம்?

A 0-1 ஆண்டுகள் B 3-6 ஆண்டுகள் C 0-1 ஆண்டுகள் D 6-10 ஆண்டுகள்

6. பள்ளிப்பருவம் என்பது எந்த பருவம்?

A 1-3 ஆண்டுகள் B 3-6 ஆண்டுகள் C 0-1 ஆண்டுகள் D 6-10 ஆண்டுகள்

7. குமரப் பருவம் என்பது?

A 20-40 ஆண்டுகள் B 6-10 ஆண்டுகள் C 10-20 ஆண்டுகள் D 3-6 ஆண்டுகள்

8. மத்திய அரசும் மாநில அரசும் எத்தனை ஆண்டுகள் வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய

இலவசக் கல்வி அளிக்க வழிவகை செய்துள்ளது?

A 12 ஆண்டுகள் B 13 ஆண்டுகள் C 14 ஆண்டுகள் D 15 ஆண்டுகள்

9. குழந்தையின் உடல் வளர்ச்சி முதலில் தலையிலிருந்து தொடங்கி .............. நோக்கி வருகின்றது?

A பாதங்கள் B வயிறு C முகம் D கரங்கள்

10. தொடக்க கல்வி பயில பள்ளிக்கு வரும் போது குழந்தையின் எது 90 சதவீதம் வளர்ச்சி அடைந்துவிடுகிறது?

A மூளை B எலும்பு மண்டலம் C நாக்கு D நரம்பு மண்டலம்

11. குழந்தைகளின் வளர்ச்சி என்பது எதன் பின்னணியை பொறுத்து வேறுபடுகின்றது?

A சமூக பின்னணி B பொருளாதார பின்னணி

C அரசியல் பின்னணி D பு மற்றும் ய

12. இவற்றில் குறியீட்டுச் சிந்தனையில் தொடர்புடையது?

A வார்த்தைகள் B எண்கள் C உருவங்கள் D இவை அனைத்தும்

13. குழந்தைகள் பள்ளிக்கு வரும் முன்னர் இந்த செயலில் ஈடுபடுகின்றனர்?

A பின்பற்றிச் செய்தல் B பாவனை விளையாட்டு

C மொழியால் கருத்துப் பரிமாற்றம் D இவை அனைத்தும்

14. குழந்தைகளின் குறியீட்டுச் சிந்தனைக்கு அவசியமானது?

A எண்ணுருக்கள் B எழுத்துகள் C உருவம் D பு மற்றும் ய

15. ஒரு குழந்தை 7, 8 ஆண்டுகளில் வரிசைத் தொடர்பு கிராமப்படி சிந்திக்கத் தொடங்குகிறது என்று

குறிப்பிட்டவர்?

A பியாஜே B சர்ச்சில் C எடிசன் D யாருமில்லை

16. அறிதல் திறன் வளர்ச்சி எத்தனை படிநிலைகளில் நடைபெறுவதாக உளவியல் அறிஞர் பியாஜே கூறினார்?

A 2 B 3 C 4 D 5

17. பியாஜே கூறும் புலன் இயக்கப் பருவம் என்பது?

A 0-2 ஆண்டுகள் B 2-7 ஆண்டுகள் C 7-12 ஆண்டுகள் D 12 ஆண்டுகளுக்கு மேல்

18. மனிதன் வளர்ச்சி நிலையை எரிக்சன் எத்தனை படிநிலைகளாக கூறினார்?

A 4 B 5 C 7 D 8

19. எரிக்சனின் கூற்றுபடி குழந்தைகள் எந்த படிநிலையின் போது தொடக்கப் பள்ளிக்கு வருகின்றனர்?

A 5 B 6 C 4 D 3

20. உடன்பாட்டு தற்கருத்து இந்த உணர்வுகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றது?

A வெற்றி உணர்வு, அன்பு B பாதுகாப்புணர்வு

C மரியாதை, நம்பிக்கை D இவை அனைத்தும்

21. எதிர்மறை தற்கருத்து இந்த எண்ணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது?

A அவநம்பிக்கை, வெறுப்பு B தோல்வி, உணர்ச்சி, சந்தேகம்

C பாதுகாப்பற்ற உணர்வு D இவை அனைத்தும்

22. குழந்தைகள் நாம் என்ற சமூக உணர்வினை இங்கு வளர்த்துக் கொள்கிறது

A குடும்பம் B பள்ளி

C ஒப்பார்குழு மற்றும் உறவினர்கள் D இவை அனைத்தும்

23. ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு குழுவை பற்றியோ உண்மை நிலை அறியாமல் அவசரப்பட்டு தவறான

முடிவுக்கு வருவது

A நேர்மறை எண்ணங்கள் B எதிர்மறை எண்ணங்கள்

C சார்பெண்ணங்கள் D இவற்றில் எதுவுமில்லை

24. சகோதர உறவு என்பது

A ஒரு தாய் வயிற்றுப் பிறப்பாளர்கள் B ஒரு மூல மரபினை உடையவர்கள்

C ஒரே தாய்தந்தை உடையவர்கள் D இவை அனைத்தும்

25. தனித்துவ நிலை பறிக்கப்படுவதாக உணரும் குழந்தை

A முதலில் பிறந்த குழந்தை B இரண்டாவது பிறந்த குழந்தை

C இரண்டு குழந்தையும் D இவற்றில் எதுவுமில்லை

26. விளையாட்டுகள் மூலம் இந்த வளர்ச்சி ஏற்பட உதவுகிறது?

A அறிவு, உடல் B மொழி, சமூகம் C மனவெழுச்சி D இவை அனைத்தும்

27. குழந்தைகள் இந்த வயது வரை புலன் - இயக்க விளையாட்டுகளை விரும்புகின்றனர்

A 1 வயது வரை B 2 வயது வரை C 3 வயது வரை D 4 வயது வரை

28. இந்த விளையாட்டு முறையில் மாணவரோ, ஆசிரியரோ அல்லது சமுதாயமோ சந்திக்கின்ற

பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்?

A பாவனை நடிப்பு B பங்கேற்பு நாடகம்

C வார்த்தை விளையாட்டு D சொற்கோபுரம்

29. றீநிநுவீ என்பது இதனை குறிக்கிறது?

A பயங்கள் B சந்தர்ப்பங்கள் C பலங்கள், பலவீனங்கள்D இவை அனைத்தும்

30. ஒரு குழந்தையின் தற்கருத்து வளர்ச்சி எங்கு உருவாகின்றது?

A பள்ளி B மைதானம் C ஒப்பார்குழு D குடும்பம்

31. குழந்தையின் தற்கருத்து வளர்ச்சியினை தீர்மானிக்கும் சமூக காரணி

A மரபுநிலை B பெற்றோர்களின் மனப்பான்மை

C பிறப்பு வரிசை D இவை அனைத்தும்

32. இதில் எரிக்சன் கோட்பாட்டின் மையக் கருத்து எது?

A உளவியல் - சமூக வளர்ச்சியில் 8 நிலைகள் B குறிப்பிட்ட வளர்ச்சி சார்ந்த சிக்கல்கள் ஏற்படும்

C பு மற்றும் ய சரி D அனைத்தும் தவறு

33. எரிக்சன் கோட்பாட்டின் படி இவற்றில் நிறையாளுமை பெற்றவரின் பண்பு?

A குற்ற உணர்வு B தனிமை C தன்னாட்சி D தேக்கநிலை

34. எரிக்சன் கோட்பாட்டின் படி இவற்றில் குறையாளுமை பெற்றவரின் பண்பு எது?

A நெருக்கம் B படைப்பூக்கம் C தான் தொடங்காற்றல் D தனிமை

35. மனவெழுச்சி என்பது

A மன உணர்ச்சிகளை மேலோங்கி நிற்கும் நனவு நிலை

B உள்ளத்தையும் உடலையும் கிளர்ச்சியடையச் செய்யும்

C நெருக்கடி நிலைகளில் சூழலை ஆதரித்தோ, எதிர்த்தோ அல்ல ஓடி ஒளியவோ ஒருவரைத் தூண்டும்

D இவை அனைத்தும்

36. இது வெறுப்புணர்ச்சியின் அடிப்படையில் அமைந்த மனவெழுச்சி இல்லை?

A சினம் B அச்சம் C பாசம் D கவலை

37. ஓரளவு அச்சமும், சினமும் கலந்த சிக்கலான வீணான மனவெழுச்சி எது?

A சினம் B பொறாமை C கவலை D இவை அனைத்தும்

38. மாணவர்களிடம் அச்ச உணர்வு ஏற்படுத்தும் காரணி?

A எதையும் சரியாக புரிந்து கொள்ளாமை B கூச்சம், அவமானம் தரும் நிலைமைகள்

C தன் மதிப்பை தாக்கும் சூழல்கள் D இவை அனைத்தும்

39. நினைப்பதற்கும் நடப்பதற்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் எதற்கு அடிப்படை காரணமாக

அமைகின்றது?

A பொறாமை B கவலை C சினம் D பயம்

40. அதிக அளவில் கவலைப்படுவதின் விளைவு

A தெளிவற்ற மனநிலை B மாய ஒளி

C மாயத்தோற்றம் D இவை அனைத்தும்

41. மாணர்களிடம் கவலை ஏற்படுத்தும் காரணி

A பெற்றோர்/ஆசிரியர்களின் அளவு கடந்த எதிர்பார்ப்புகள்

B குற்ற உணர்வுகள்

C கற்றல் குறைபாடுகள்

D இவை அனைத்தும்

42. மூன்று புபுபு யார் அறிந்து கடைப்பிடிக்க வேண்டும்?

A ஆசிரியர் B மாணவர் C பெற்றோர் D நண்பன்

43. மனநலத்தின் வெளிப்படையான அறிகுறி?

A உற்சாகமான மனநிலை B நல்ல உறக்கம்

C உணவில் திருப்தி D இவை அனைத்தும்

44. மாணவர்களிடம் உணர்வுச் சமநிலைத் தோற்றுவிக்கும் காரணி

A அன்பும் பரிவும் கொண்ட ஆசிரியர் B மகிழ்ச்சியான கற்றல் சூழல்

C ஆரோக்கியமான வகுப்பறை உறவுகள் D இவை அனைத்தும்

45. தவறாமல் பள்ளிக்கு வருதல் என்பது?

A தன்னிணக்கம் B சமூக இணக்கம்

C பள்ளி இணக்கம் D இவை அனைத்தும்

46. ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிகாட்டாமல் மனதினுள் அடக்கி வைக்கப்படுவதால் ஏற்படுவது?

A சுவாச மண்ட நோய் B தோல் நோய்

C ஜீரண மண்ட நோய் D நாளமில்லாத சுரப்பி நோய்

47. குழந்தை பிறப்பதற்கு பின்னர் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மிக விரைவாகவும், பின்னர் மெதுவா

கவும் நடைபெறுவது?

A நரம்பு மண்டல வளர்ச்சி B மூளை வளர்ச்சி

C எலும்பு வளர்ச்சி D முடி வளர்ச்சி

48. பிறக்கும் பொழுது குழந்தை மூளையின் நிறை

A 450 கிராம் B 350 கிராம் C 250 கிராம் D 520 கிராம்

49. பருவமடைந்த பின்னர் மூளையின் அளவு 1,260 கிராம் முதல் --------- கிராம் வரையுள்ளது

A 1400 கிராம் B 1500 கிராம் C 1600 கிராம் D 1300 கிராம்

50. மூளையின் வளர்ச்சி 90 சதவீதம் அடையும் வயது எது?

A 3 B 4 C 5 D 6

51. மூளையின் வளர்ச்சி உடலின் எடையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, பிறக்கும் போது அது எவ்வளவு

இருக்கும்?

A 1/8 B 1/18 C 1/30 D 1/40
6:25:00 AM

10TH TAMIL - அகப்பொருள் இலக்கணம்


ஐவகை நிலங்கள்

குறிஞ்சி மலையும் மலைசார்ந்த இடமும்

முல்லை காடும் காடு சார்ந்த இடமும்

மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல் கடலும் கடல்சார்ந்த இடமும்

பாலை சுரமும் சுரம் சார்ந்த இடமும்.


பெரும்பொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்)


1. கார்காலம் - ஆவணிபுரட்டாசி

2. குளிர்காலம் - ஐப்பசிகார்த்திகை

3. முன்பனிக் காலம் - மார்கழிதை

4. பின்பனிக் காலம் - மாசிபங்குனி

5. இளவேனிற் காலம் - சித்திரைவைகாசி

6. முதுவேனிற் காலம் - ஆனிஆடி


சிறுபொழுது (ஒரு நாளின் ஆறு கூறுகள்)


1. காலை - காலை 6 மணி முதல் 10 மணி வரை

2. நண்பகல் - காலை 10 மணி முதல் 2 மணி வரை

3. எற்பாடு - பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை

4. மாலை - மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

5. யாமம் - இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை

6. வைகறை - இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை.






1. ஐந்திணைகளின் தெய்வங்கள் 
  1. குறிஞ்சி – முருகன்
  2. முல்லை – திருமால்
  3. மருதம் – இந்திரன்
  4. நெய்தல் – வருணன்
  5. பாலை – கொற்றவை
2. ஐந்திணைகளின் மக்கள் 
  1. குறிஞ்சி – வெற்பன், குறவர், குறத்தியர்
  2. முல்லை – தோன்றல், ஆயர். ஆய்ச்சியர்
  3. மருதம் – ஊரன், உழவர், உழத்தியர்
  4. நெய்தல் – சேர்ப்பன், பரதன், பரத்தியர்
  5. பாலை – எயினர், எயிற்றியர்
3. ஐந்திணைகளின் உணவு 
  1. குறிஞ்சி – மலைநெல், தினை
  2. முல்லை – வரகு, சாமை
  3. மருதம் – செந்நெல், வெண்ணெல்
  4. நெய்தல் – மீன், உப்புக்குப் பெற்ற பொருள்
  5. பாலை – சூறையாடலால் வரும் பொருள்
4. ஐந்திணைகளின் விலங்கு 
  1. குறிஞ்சி – புலி, கரடி, சிங்கம்
  2. முல்லை – முயல், மான், புலி
  3. மருதம் – எருமை, நீர்நாய்
  4. நெய்தல் – முதலை, சுறா
  5. பாலை – வலியிழந்த யானை
5. ஐந்திணைகளின் பூக்கள் 
  1. குறிஞ்சி – குறிஞ்சி, காந்தள்
  2. முல்லை – முல்லை, தோன்றி
  3. மருதம் – செங்கழுநீர், தாமரை
  4. நெய்தல் – தாழை, நெய்தல்
  5. பாலை – குரவம், பாதிரி
6. ஐந்திணைகளின் மரங்கள்
  1. குறிஞ்சி – அகில், வேங்கை
  2. முல்லை – கொன்றை, காயா
  3. மருதம் – காஞ்சி, மருதம்
  4. நெய்தல் – புன்னை, ஞாழல்
  5. பாலை – இலுப்பை, பாலை
7. ஐந்திணைகளின் பறவைகள் 
  1. குறிஞ்சி – கிளி, மயில்
  2. முல்லை – காட்டுக்கோழி, மயில்
  3. மருதம் – நாரை, நீர்க்கோழி, அன்னம்
  4. நெய்தல் – கடற்காகம்
  5. பாலை – புறா, பருந்து
8. ஐந்திணைகளின் ஊர் 
  1. குறிஞ்சி – சிறுகுடி
  2. முல்லை – பாடி, சேரி
  3. மருதம் – பேரூர், மூதூர்
  4. நெய்தல் – பட்டினம், பாக்கம்
  5. பாலை – குறும்பு
9. ஐந்திணைகளின் நீர் 
  1. குறிஞ்சி – அருவி நீர், சுனைநீர்
  2. முல்லை – காட்டாறு
  3. மருதம் – மனைக்கிணறு, பொய்கை
  4. நெய்தல் – மணற்கிணறு, உவர்க்கழி
  5. பாலை – வற்றிய சுனை, கிணறு
10. ஐந்திணைகளின் பறை 
  1. குறிஞ்சி – தொண்டகம்
  2. முல்லை – ஏறு கோட்பறை
  3. மருதம் – மணமுழா, நெல்லரிகிணை
  4. நெய்தல் – மீன் கோட்பறை
  5. பாலை – துடி
11. ஐந்திணைகளின் யாழ்
  1. குறிஞ்சி – குறிஞ்சி யாழ்
  2. முல்லை – முல்லை யாழ்
  3. மருதம் – மருத யாழ்
  4. நெய்தல் – விளரி யாழ்
  5. பாலை – பாலை யாழ்
12. ஐந்திணைகளின் பண்
  1. குறிஞ்சி – குறிஞ்சிப்பண்
  2. முல்லை – முல்லைப்பண்
  3. மருதம் – மருதப்பண்
  4. நெய்தல் – செவ்வழிப்பண்
  5. பாலை – பஞ்சுரபண்
13. ஐந்திணைகளின் தொழில்கள்
  1. குறிஞ்சி – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்
  2. முல்லை – ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்
  3. மருதம் – நெல்லரிதல், களை பறித்தல்
  4. நெய்தல் – மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்
  5. பாலை – வழிப்பறி, நிரை கவர்தல்
பலவுள் தெரிக

1. கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.

i) குறிஞ்சி – 1. பேரூர், மூதூர்
ii) முல்லை – 2. பட்டினம், பாக்கம்
iii) மருதம் – 3. சிறுகுடி
iv) நெய்தல் – 4. குறும்பு
v) பாலை – 5. பாடி, சேரி

அ) 3, 4, 1, 2, 5
ஆ) 4, 3, 1, 5, 2
இ) 3, 2, 5, 1, 4
ஈ) 3, 5, 1, 2, 4

2. பொருத்தமான விடையைக் கண்டறிக.

i) குறிஞ்சி – 1. வற்றிய சுனை, கிணறு
ii) முல்லை – 2. மனைக்கிணறு, பொய்கை
iii) மருதம் – 3. காட்டாறு
iv) நெய்தல் – 4. அருவிநீர், சுனைநீர்
v) பாலை – 5. மணற்கிணறு, உவர்க்கழி

அ) 4, 3, 2, 5, 1
ஆ) 5, 4, 1, 2, 3
இ) 4, 3, 5, 1, 2
ஈ) 3, 4, 5, 2, 1

3. பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) முல்லை – வரகு, சாமை
ஆ) மருதம் – செந்நெல், வெண்ணெல்
இ) நெய்தல் – தினை
ஈ) பாலை – சூறையாடலால் வரும் பொருள்

4. முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுதினைத் தேர்ந்தெடு.

அ) கார்காலம்
ஆ) குளிர்காலம்
இ) முன்பனி
ஈ) பின்பனி

5. ஐந்திணைகளுக்கு உரியன 

i) முதற்பொருள்
ii) கருப்பொருள்
iii) உரிப்பொருள்

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) iii – மட்டும் சரி
ஈ) மூன்றும் சரி

6. பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கடலும் கடல் சார்ந்த இடமும்
ii) முல்லை – 2. வயலும் வயல் சார்ந்த இடமும்
iii) மருதம் – 3. காடும் காடு சார்ந்த இடமும்
iv) நெய்தல் – 4. மலையும் மலை சார்ந்த இடமும்

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 3, 1
ஈ) 3, 4, 2, 1

7. மணலும் மணல் சார்ந்த இடமும் – எத்திணைக்குரியது?

அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) நெய்தல்
ஈ) பாலை

8. பொழுது எத்தனை வகைப்படும்?

அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு

9. பொருத்திக் காட்டுக.

i) கார்காலம் – 1. மாசி, பங்குனி
ii) குளிர்காலம் – 2. மார்கழி, தை
iii) முன்பனிக்காலம் – 3. ஐப்பசி, கார்த்திகை
iv) பின்பனிக்காலம் – 4. ஆவணி, புரட்டாசி

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 3,1
ஈ) 3, 4, 2, 1

10. இளவேனிற் காலத்துக்குரிய மாதங்கள்

அ) ஆவணி, புரட்டாசி
ஆ) சித்திரை, வைகாசி
இ) ஆனி, ஆடி
ஈ) மார்கழி, தை


Question 11.
ஆனி, ஆடி முதலான மாதங்கள் ……………
அ) கார்காலம்
ஆ) குளிர்காலம்
இ) இளவேனிற்காலம்
ஈ) முதுவேனிற்காலம்
Answer:
ஈ) முதுவேனிற்காலம்

Question 12.
பொருத்திக் காட்டுக.
i) காலை – 1. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
ii) நண்ப கல் – 2. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
iii) எற்பாடு – 3. காலை 10 மணி முதல் 2 மணி வரை
iv) மாலை – 4. காலை 6 மணி முதல் 10 மணி வரை
அ) 4, 3, 2, 1|
ஆ) 2, 1, 3, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 13.
இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை உள்ள சிறுபொழுது ……………
அ) எற்பாடு
ஆ) மாலை
இ) யாமம்
ஈ) வைகறை
Answer:
இ) யாமம்

Question 14.
வைகறைக்குரிய கால நேரம்……………
அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
ஆ) காலை 6 மணி முதல் 10 மணி வரை
இ) காலை 10 மணி முதல் 2 மணி வரை
ஈ) இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
Answer:
அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

Question 15.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கார்காலம்
ii) முல்லை – 2. குளிர்காலம், முன்பனிக்காலம்
iii) மருதம், நெய்தல் – 3. இளவேனில், முதுவேனில், பின்பனி
iv) பாலை – 4. ஆறு பெரும்பொழுதுகள்
அ) 2, 1, 4, 3
ஆ) 4, 1, 3, 2
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 2, 1, 4, 3

Question 16.
நண்பகல் எத்திணைக்குரிய சிறுபொழுது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
ஈ) பாலை

Question 17.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. வைகறை
ii) முல்லை – 2. எற்பாடு
iii) மருதம் – 3. யாமம்
iv) நெய்தல் – 4. மாலை
அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 3, 4, 1, 2

Question 18.
திணைகளுக்குரிய தெய்வத்தைப் பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கொற்றவை
ii) முல்லை – 2. வருணன்
iii) மருதம் – 3. இந்திரன்
iv) நெய்தல் – 4. திருமால்
v) பாலை – 5. முருகன்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3,1
இ) 3, 2, 4, 5, 1
ஈ) 1, 2, 3, 4, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 19.
திணைகளுக்குரிய மக்களைப் பொருத்திக் காட்டுக.
i) வெற்பன் – 1. குறிஞ்சி
ii) தோன்றல் – 2. முல்லை
iii) ஊரன் – மருதம்
iv) சேர்ப்ப ன் – 4. நெய்தல்
v) எயினர் – 5. பாலை
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 3, 5, 4, 1, 2
ஈ) 1, 2, 3, 4, 5
Answer:
ஈ) 1, 2, 3, 4, 5

Question 20.
பொருத்திக் காட்டுக.
i) புலி – 1. பாலை
ii) மான் – 2. நெய்தல்
iii) எருமை – 3. மருதம்
iv) முதலை – 4. முல்லை
v) வலியிழந்த யானை – 5. குறிஞ்சி
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 2, 1, 4, 5, 3
ஈ) 4, 2, 3, 1, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 21.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. குரவம், பாதிரி
ii) முல்லை – 2. தாழை
iii) மருதம் – 3. தாமரை, செங்கழுநீர்
iv) நெய்தல் – 4. தோன்றி
v) பாலை – 5. காந்தள்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 1, 3
இ) 2, 3, 4, 1, 5
ஈ) 3, 1, 4, 2, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 22.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. அகில், வேங்கை
ii) முல்லை – 2. கொன்றை, காயா
iii) மருதம் – 3. காஞ்சி
iv) நெய்தல் – 4. புன்னை , ஞாழல்
v) பாலை – 5. இலுப்பை
அ) 1, 2, 3, 4, 5
ஆ) 2, 3, 1, 5, 4
இ) 3, 4, 2, 1, 5
ஈ) 5, 4, 3, 2, 1
Answer:
அ) 1, 2, 3, 4, 5

Question 23.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கடற்காகம்
ii) முல்லை – 2. காட்டுக் கோழி, மயில்
iii) மருதம் – 3. நாரை, நீர்க்கோழி, அன்னம்
iv) நெய்தல் – 4. கிளி, மயில்
v) பாலை – 5. புறா, பருந்து
அ) 4, 2, 3, 1, 5
ஆ) 5, 4, 3, 2, 1
இ) 4, 3, 1, 5, 2
ஈ) 3, 4, 2, 5, 1
Answer:
அ) 4, 2, 3, 1, 5

Question 24.
விளரி யாழ் எத்திணைக்கு உரியது?
அ) குறிஞ்சி
ஆ) மருதம்
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
இ) நெய்தல்

Question 25.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. துடி
ii) முல்லை – 2. மீன் கோட்பறை
iii) மருதம் – 3. மணமுழா
iv) நெய்தல் – 4. ஏறுகோட்பறை
v) பாலை
5. தொண்டகம்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 1, 3
இ) 3, 4, 5, 2, 1
ஈ) 3, 5, 1, 2, 4
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 26.
செவ்வழிப்பண், பஞ்சுரப்பண் முதலியனவற்றுக்குரிய திணைகள் முறையே
அ) நெய்தல், பாலை
ஆ) குறிஞ்சி, முல்லை
இ) மருதம், நெய்தல்
ஈ) மருதம், பாலை
Answer:
அ) நெய்தல், பாலை

Question 27.
முல்லை நிலமக்களின் உணவுப் பொருள்கள்
அ) வெண்நெல், வரகு
ஆ) மலைநெல், திணை
இ) வரகு, சாமை
ஈ) மீன், செந்நெல்
Answer:
இ) வரகு, சாமை

6:06:00 AM

10TH TAMIL - பாய்ச்சல்


நூல் வெளி

  • ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ என்ற சிறுகதை தாெகுப்பில் பாய்ச்சல் என்னும் கதை இடம் பெற்றுள்ளது.
  • இதன் ஆசிரியர் சா.கந்தசாமி.
  • இவர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
  • இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில்
    புகழ்பெற்றார்.
  • விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாெதமி விருதைப் பெற்றுள்ளார்.
  • சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார்.
  • நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினாென்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.
  • தொலைந்து பாேனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை
    இவர் எழுதிய புதினங்களுள் சில.

பலவுள் தெரிக

1. பாய்ச்சல் என்னும் சிறுகதை எந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?

அ) சா. கந்தசாமியின் கதைகள்
ஆ) தக்கையின் மீது நான்கு கண்கள்
இ) சுடுமண் சிலைகள்
ஈ) தொலைந்து போனவர்கள்

2. பாய்ச்சல் என்னும் சிறுகதையின் ஆசிரியர்.

அ) ஜெயகாந்தன்
ஆ) சா. கந்தசாமி
இ) ஜெயமோகன்
ஈ) அகிலன்

3. சா. கந்தசாமியின் மாவட்டம் 

அ) நாகப்பட்டினம்
ஆ) தஞ்சாவூர்
இ) திருச்சி
ஈ) திருவாரூர்

4. சா. கந்தசாமியின் ஊர்

அ) மயிலாடுதுறை
ஆ) படைத்தலைவன்குடி
இ) உறையூர்
ஈ) வலங்கைமான்

5. சா. கந்தசாமி எந்தக் குறும்படத்திற்கு அனைத்துலக விருதைப் பெற்றுள்ளார்?

அ) தொலைந்து போனவர்கள்
ஆ) சூர்ய வம்சம்
இ) சாந்தகுமாரி
ஈ) சுடுமண் சிலைகள்

6. சா. கந்தசாமிக்கு எழுத்துலகில் புகழைப் பெற்றுத் தந்த புதினம்.

அ) சாயாவனம்
ஆ) சூர்ய வம்சம்
இ) சாந்தகுமாரி
ஈ) தொலைந்து போனவர்கள்

7. பொருத்திக் காட்டுக. (சா. கந்தசாமியின் படைப்புகள்)

i) தக்கையின் மீது நான்கு கண்கள் – 1. சாகித்திய அகாதெமி விருது
ii) விசாரணைக் கமிஷன் – 2. புதினம்
iii) சுடுமண் சிலைகள் – 3. அனைத்துலக விருது
iv) சூர்ய வம்சம் – 4. சிறுகதைத் தொகுப்பு

அ) 4, 1, 3, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 4, 2, 1
ஈ) 2, 1, 3, 4

8. பாய்ச்சல் கதையில் இடம் பெறுபவர் 

அ) அனுமார்
ஆ) இராமன்
இ) வாலி
ஈ) இராவணன்

9. சா. கந்தசாமியின் சாகித்ய விருது பெற்ற நூல்

அ) சூர்யவம்சம்
ஆ) சாந்தகுமாரி
இ) சாயாவனம்
ஈ) விசாரணைக் கமிஷன்

10. 

Sunday, February 15, 2026

Friday, February 13, 2026

10:18:00 PM

6 அலகு 1 - வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

1. யாருடைய வருகையால் வேதகாலம் தொடங்கியது - ஆரியர் வருகையால்
2. வேத காலம் என்பது - கி.மு. 1500 முதல் கி. பி 600 வரை
3. வேதகாலம் என்பதன் எதன் அடிப்படையில் பெயர் பெற்றது - வேதங்கள்
4. இந்தோ - ஆரிய மொழிப் பேசுபவர்கள் - ஆரியர்கள்
5. இடம் விட்டு இடம் குடிபெயர்ந்து, கால்நடை மேய்ப்பவர்கள் - ஆரியர்கள்
6. ஆரியர்கள் எங்கிருந்து குடி பெயர்ந்து இந்தியாவிற்கு வந்தார்கள்- மத்திய ஆசியா
7. ஆரியர்கள் எவ்வழியாக இந்தியாவிற்கு வந்தார்கள் - இந்துகுஷ் மலைகளிலுள்ள கைபல் கால்வாய் வழியாக வந்தவர்கள்
8. ஆரியர்களின் முதன்மையானத் தொழில் - கால்நடை மேய்ப்பது
9. ஆரியர்களின் முதன்மையானச் சொத்து - கால்நடைகள்
10. அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறையைக் பின்பற்றியவர்கள்- ஆரியர்கள்.
11. ரிக் வேதகால ஆரியர்கள் - நாடோடிகள்
12. ரிக் வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் - பஞ்சாப்
13. ரிக் வேத காலத்தில் பஞ்சாப் எவ்வாறு அழைக்கப்பட்டது- சப்த சிந்து (ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி)
14. ஆரியர்கள் கிழக்கு நோக்கி நடர்ந்து சிந்து கங்கைச் சமவெளிப் பகுதியில் குடியேறிய காலம் - கி.மு. 1000
15. ஆரியர்கள் பயன்படுத்திய இரும்புக் கருவிகள்- இரும்புக் கோடரி, கொழுமுனை கொண்ட கலப்பை.
16. நான்கு வேதங்கள் என்பன - ரிக், யஜீர், சாமஇ அதர்வ
17.வேத கால இலக்கியங்களின் பிரிவுகள் - இரண்டு (சுருதி, ஸ்மிருதி)
18. 



Wednesday, February 11, 2026

Monday, December 1, 2025

Sunday, November 30, 2025

6:13:00 AM

தமிழ் இலக்கிய வினா விடைகள் 150

1. எட்டுத்தொகை நூல்களுள் பாண்டியர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல்கள் யாவை?

விடை: கலித்தொகை, பரிபாடல் 

2. பரிபாடலுக்கு உரை எழுதியவர் யார்?

விடை: பரிமேலழகர் 

3. உலகின் தோற்றம் குறித்து கூறும் நூல் எது?

விடை: பரிபாடல் 

4. கலித்தொகையின் கடவுள் வாழ்த்தில் இடம்பெற்ற கடவுள் யார்?

விடை: சிவன் 

5. கலித்தொகையை முதலில் பதிப்பித்தவர் யார்?

விடை: சி.வை தாமோதரம் பிள்ளை 

6. கலித்தொகையுள் குறைந்த பாடல்களை கொண்ட திணை எது?

விடை: முல்லை திணை 17 பாடல்கள் 

7. பாண்டியரைத் தவிர மற்ற மன்னர்கள் பற்றிய குறிப்பில்லாத சங்க நூல் எது?

விடை: கலித்தொகை 

8. ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல் எது?

விடை: கலித்தொகை 

9. பெருந்திணைப் பாடல்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல் எது?

விடை: கலித்தொகை 

10. காமக்கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் யாது?

விடை: கலித்தொகை  

11. அசோகர் காலத்தில் தமிழ் நாட்டில் பரவிய மதம் எது?

விடை: பௌத்தம் 

12. தமிழில் எழுதப்பட்ட முதல் ஐந்திலக்கண நூல் எது?

விடை: வீரசோழியம் 

13. சந்திரகுப்தன் காலத்தில் பத்திரபாகு முனிவர் மூலம் தமிழகம் வந்த மதம் எது?

விடை: சமணம் 

14. மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட முதல் உரைநடை நூல் எது?

விடை: ஸ்ரீ புராணம் 

15. நிகண்டு என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?

விடை: மண்டலபுருடர் 

16. சித்திரக்கவி பாடுவதில் வல்லவர் யார்?

விடை: சேகனாப்புலவர்

17. யாருடைய படையெடுப்பால் தமிழகத்தில் இஸ்லாம் மதம் பரவியது?

விடை: மாலிக்கபூர்

18. இஸ்லாம் இலக்கியத்தில் பெரியநூல் மற்றும் காப்பிய நூல் எது?

விடை: சீறாப்புராணம் 

19. இஸ்லாமிய மதுரகவி, மதுரகவி ராசன் என்று போற்றப்படுபவர் யார்?

விடை: காசிம் புலவர்

20. வசைபாடுவதில் களமேகத்தை ஒத்தவர் யார்?  

விடை: சவ்வாது புலவர் 

21. காமனின் தம்பி யார்?

விடை: சாமன் 

22. பாரதக்கதைகளை மிகுதியும் கூறும் நூல் எது?

விடை: கலித்தொகை

23. புராணக் கதைகளை மிகுதியும் கூறும் நூல் எது?

விடை: பரிபாடல்

24. நாடகம் போன்று காட்சி அமைப்புகளைக் கொண்ட நூல் எது?

விடை: கலித்தொகை

25. இசையோடு கூடிய உரையாடல் அமைந்த நூல் எது?

விடை: கலித்தொகை

26. அகநானூற்றில் கடவுள் வாழ்த்தில் இடம் பெற்ற கடவுள் யார்?

விடை: சிவன் 

27. ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப்பட்ட ஒரே தொகை நூல் எது?

விடை: அகநானூறு 

28. சங்க இலக்கியத்துள் வரலாற்றுச் செய்திகளை அதிகமாகக் கூறும் அகநூல் எது?

விடை: அகநானூறு 

29. வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகக் கூறும் மிக புலவர்கள் யார்?

விடை: பரணர், மாமூலர் 

30. புறநானூற்றின் கடவுள் வாழ்த்தில் இடம் பெற்ற கடவுள் யார்?

விடை: சிவன் 

31.அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை

விடை: 12

32.அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு

விடை:  வேள்விக்குடிச் செப்பேடு

33.அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள்
விடை: பாலைத்திணை

34.அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும் திணைப்பாடல்கள்

விடை: நெய்தல்திணை

35.அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8,என முடியும் திணைப்பாடல்கள்

விடை:  குறிஞ்சித்திணை

36.அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள்

விடை: முல்லைத்திணை

37.அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள்

விடை:  மருதத்திணை

38.அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்

விடை: நோய்பாடியார், ஊட்டியார்

39.அகநானூற்றின் அடிவரையறை

விடை: 13-31 அடிகள்

40.அகநானூற்றின் இரண்டாம் பகுதி

விடை: மணிமிடைப்பவளம்

41.அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள்

விடை: வேங்கடசாமி நாட்டார், இரா.வேங்கடாசலம்பிள்ளை

43.அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை

விடை: 90

44.அகநானூற்றின் பிரிவுகள்

விடை: 3 (களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை)

45. அகநானூற்றின் முதல் பகுதி

விடை:களிற்றுயானை நிரை

46. அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர்

விடை:வே.இராசகோபால் 16.

47.அகநானூற்றின் மூன்றாம் பகுதி

விடை: நித்திலக்கோவை

48. அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர்

விடை: நெடுந்தொகை

49. அகநானூற்றைத் தொகுத்தவர்

விடை: உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்

50. அகநானூற்றைத் தொகுப்பித்தவன்

விடை: பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

51. அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள்

விடை:  கலிப்பா,பரிபாடல் (தொல்காப்பியர்)

52. அகராதி நிகண்டு ஆசிரியர்

விடை: சிதம்பரம் வனசித்தர்

53. அகலிகை வெண்பா நூலாசிரியர்

விடை: சுப்பிரமணிய முதலியார்

54. அசோகன் காதலி நாவலாசிரியர்

விடை: அரு.ராமநாதன்

55. அசோமுகி நாடக ஆசிரியர்

விடை: அருணாசலக் கவி

56. அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல்

விடை: தழிஞ்சி

57. அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள்

விடை: ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து

58. அடிநூல் ஆசிரியர்

விடை: நத்தத்தனார்

59.  அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர்

விடை: பொன்னப்ப காங்கேயன்

60. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல்

விடை: திருக்குறள்

61. அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர்

விடை: ஔவையார்

62.அந்தகக் கவிராயர் எழுதிய உலா

விடை: திருவாரூர் உலா
63.அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல்

விடை: பதிற்றுப்பத்து -நான்காம் பத்து

67.அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்

விடை: ஆலாபனை – 1999

68. அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம்

விடை:  அரு.இராமநாதன்

69. அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர்

விடை: மறைமலையடிகள் 

70. அம்பிகாபதி கோவையைப் பாடியவர்

விடை: அம்பிகாபதி

71.இடைக்காலத்தில் தோன்றிய நாடகம்

விடை: குறவஞ்சி

72. இடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள்

விடை: 3700

73. இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்

விடை: 59

74. இடைச்சங்க இலக்கியங்கள்

விடை: அகத்தியம்,தொல்காப்பியம், மாபுராணம்,
பூதபுராணம், இசைநுணுக்கம்

75. இடைச்சங்கம் இருந்த இடம்

விடை: கபாடபுரம்

76. இடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள்

விடை: 3700

77. இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல்

விடை: கலித்தொகை

78. இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர்

விடை: வைரமுத்து

79. இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று

விடை: பழந்தமிழர் கண்டுபிடிப்பு

80.இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல்

விடை: துர்க்கேச நந்தினி (1865)

81. இந்தியா எனும் இதழ் நடத்தியவர்

விடை: பாரதியார்

82. இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர்

விடை: இந்திரகாளியர்

83. இந்திராயன் படைப்போர் எழுதியவர்

விடை: புலவர் அலியார்

84. இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல்
விடை: புறநானூறு

85. இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல்

விடை: பிங்கலம்

86.இயற்பா, இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல்

விடை: நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

87. இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை

விடை:470

88. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர்

விடை: படிக்காசுப் புலவர்

89. இரட்சணிய குறள் எழுதியவர்

விடை: எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

90.இரட்டைப் புலவர்கள் பாடிய உலா

விடை: ஏகாம்பரநாதர் உலா

91. இரட்டைப் புலவர்களின் பெயர்

விடை: இளஞ்சூரியன்,முதுசூரியன்

92.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர்

விடை:  மருதூர்

93.இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு

விடை: திருவருட்பா

94. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர்

விடை:  சுப்பிரமணிய முதலியார்

95. இராமானுச நூற்றந்தாதி பாடியவர்

விடை: அமுதனார்

96. இராவண காவியம் நூலாசிரியர்

விடை: புலவர் குழந்தை

97. இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு

விடை: கி.பி.10-ஆம் நூற்றாண்டு

98. இருபத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்

விடை: திருக்குறள்

99.இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல்

விடை: பதிற்றுப் பத்து

100.இருவகை நாடகம்

விடை: இன்பியல், துன்பியல்

101.இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி

விடை: பாணினி

102.இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர்

விடை: சிவஞான முனிவர்

103.இலக்கண விளக்கம் நூலாசிரியர்

விடை: திருவாரூர் வைத்தியநாத தேசிகர்

104. இலக்கணக் கொத்தின் ஆசிரியர்

விடை:  சுவாமிநாத தேசிகர்

105.இலக்கிய உதயம் நூலாசிரியர்

விடை: எஸ்.வையாபுரிப் பிள்ளை

106. இலக்கியம் இதழாசிரியர்

விடை: சுரதா

107.இலங்கேசுவரன் நாடக ஆசிரியர்

விடை: ஆர்.எஸ்.மனோகர்

107.இல்லாண்மை எனும் நூலாசிரியர்

விடை: கனக சுந்தரம் பிள்ளை

108. இளங்கோவடிகளுக்கு கண்ணகி கதையை கூறியவர்

விடை: சாத்தனார்

109. இறந்த மறவன் புகழை பாடுதல்

விடை: மன்னை காஞ்சி

110.வெட்சி

விடை: நிறைகவர்தல்

111.வெண்டேர்ச் செழியனின் காலம்

விடை: இடைச்சங்க காலம்

112.வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர்

விடை: வச்சநந்திமாலை

113.வெறியாட்டு

விடை:  வள்ளிக் கூத்தாடுவது

114.வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர்

விடை: அகிலன்

115.வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர்

விடை: இரேனியஸ்

116.வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர்

விடை: சரபோஜி மன்னர்

117.வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல்

விடை: நீதிநூல்

118.வேய்

விடை: உளவு- ஒற்றாராய்தல்

119.வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர்

விடை: ராஜம் கிருஷ்ணன்

120. வைகறைப் பொழுதுக்குரிய நிலம்

விடை: மருதம்

121. வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர்

விடை: ஆறுமுக நாவலர்

122. ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல்

விடை: புறநானூறு

123. ஜீவகாருண்யம் போதித்தவர்

விடை: வள்ளலார்

124. ஜீவபூமி நாவலாசிரியர்

விடை: சாண்டில்யன்

125. ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர்

விடை: பாரதியார்

126. கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர்

விடை:  நா.காமராசன்

127. அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன்

விடை: மாதவி

128. மணிமேகலைக்கு துறவு தந்தவர்

விடை: அறவண அடிகள்

129.பால் மர காட்டினிலே நாவலாசிரியர்

விடை:  அகிலன்

130.பாலும் பாவையும் நாவலாசிரியர்

விடை: விந்தன்

131. ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர்

விடை: ஒட்டக்கூத்தர்

132. ஈரசைச் சீரின் வேறுபெயர்

விடை: ஆசிரிய உரிச்சீர்

133. ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர்

விடை: பொன்முடியார்

134.உ.வே.சா வின் ஆசிரியர்

விடை: மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை

135. உட்கார்ந்து எதிரூன்றல்

விடை: காஞ்சி

136. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர்

விடை: திருமூலர்

137. உண்டாட்டு

விடை: கள்குடித்தல்

138. உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர்

விடை: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

139. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல்

விடை: புறநானூறு

140. உண்பவை நாழி, உடுப்பவை இரண்டே என்று பாடியவர்

விடை: நக்கீரர்

141. உமைபாகர் பதிகம் பாடியவர்

விடை: படிக்காசுப் புலவர்

142. உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர்

விடை: பாரதியார்

143. இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது

விடை:  தலையொடு முடிதல்

144. இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது

விடை: பாண்பாட்டு – தும்பை

145. இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர்

விடை: நக்கீரர்

146. இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம்

விடை: திருக்கோலக்கா

147. இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர்

விடை: திருப்பெருந்துறை

148. உரிச்சொல் நிகண்டு எழுதியவர்

விடை: காங்கேயர்

149. உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது

விடை: ஒழுக்கம்

150. உரை நூல்களுள் பழமையானது

விடை: இறையனார் அகப்பொருள் உரை – நக்கீரர்