Breaking

Saturday, April 4, 2026

8:07:00 AM

9TH TAMIL - தொடர் இலக்கணம், ஆகுபெயர்

ஆகுபெயர் என்றால் என்ன

  • ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

ஆகுபெயர் வகைகள்

  • ஆகுபெயர் எத்தனை வகைப்படும் = பதினாறு வகைகள்.
  • ஆகுபெயர்கள் பதினாறாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பொருளாகு பெயர் என்றால் என்ன

  • பொருளாகு பெயரை “முதலாகுபெயர்” என்றும் கூறுவர்.
  • எ.கா: முல்லையைத் தொடுத்தாள்
  • முதற்பொருளாகிய முல்லைக்கொடி, அதன் சினை(உறுப்பு)யாகிய பூவுக்கு ஆகி வந்தது.

இடவாகு பெயர் என்றால் என்ன

  • எ.கா: வகுப்பறை சிரித்தது
  • வகுப்பறை என்னும் இடப்பெயர் அங்குள்ள மாணவர்களுக்கு ஆகி வந்தது.

காலவாகு பெயர் என்றால் என்ன

  • எ.கா: கார் அறுத்தான்
  • கார் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்தது.

சினையாகு பெயர் என்றால் என்ன

  • எ.கா: மருக்கொழுந்து நட்டான்
  • மருக்கொழுந்து என்னும் சினைப் (உறுப்பு) பெயர், அதன் செடிக்கு ஆகிவந்தது.

பண்பாகு பெயர் என்றால் என்ன

  • எ.கா: மஞ்சள் பூசினாள்
  • மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகிவந்தது.

தொழிலாகுபெயர் என்றால் என்ன

  • எ.கா: வற்றல் தின்றான்
  • வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப்பொருளுக்கு ஆகி வந்தது.

கருவியாகு பெயர் என்றால் என்ன

  • எ.கா: வானொலி கேட்டு மகிழ்ந்தனர்
  • வானொலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது.

காரியவாகு பெயர்

  • எ.கா: பைங்கூழ் வளர்ந்தது
  • கூழ் என்னும் காரியம் அதன் கருவியாகிய பயிருக்கு ஆகி வந்தது.

கருத்தாவாகு பெயர்

  • எ.கா: அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன்
  • அறிஞர் அண்ணா என்னும் கருத்தாவின் பெயர், அவர் இயற்றிய நூல்களுக்கு ஆகி வருகிறது.

எண்ணலளவை ஆகுபெயர்

  • எ.கா:ஒன்று பெற்றால் ஒளிமயம்
  • ஒன்று என்னும் எண்ணுப் பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.

எடுத்தலளவை ஆகுபெயர்

  • எ.கா: இரண்டு கிலோ கொடு
  • நிறுத்தி அளக்கும் எடுத்தல் என்னும் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

முகத்தலளவை ஆகுபெயர்

  • எ.கா: அரை லிட்டர் வாங்கு
  • முகந்து அளக்கும் முகத்தல் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

நீட்டலளவை ஆகுபெயர்

  • எ.கா: ஐந்து மீட்டர் வெட்டினான்
  • நீட்டி அளக்கும் நீட்டலளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

1. ஒரு தொடரில் எழுவாயும் செயப்படுபொருளும் ......... சொல்லாக இருக்கும்.

அ) பெயர் 

ஆ) வினை 

இ) இடை 

ஈ) உரி

2. ஒரு தொடரில் ......... இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

அ) எழுவாய்    

ஆ) செயப்படுபொருள்

இ) பயனிலை    

ஈ) துணைவினை

3. எது இருக்கும் தொடர் விளக்கமாக இருக்கும்?

அ) எழுவாய்    

ஆ) செயப்படுபொருள்

இ) பயனிலை    

ஈ) துணைவினை

4. ‘படித்தேன்’  என்ற தொடரில் எழுவாய் எது?

அ) அவன் 

ஆ) அவள் 

இ) நான்  

ஈ) நீ

5. ‘சொன்னவள் கலா’ இத்தொடரில் அமைந்துள்ள பயனிலை.

அ) பெயர் 

ஆ) வினை 

இ) இடை 

ஈ) உரி

6. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

அ) கவிதா உரை வடித்தாள் - செய்வினை வாக்கியம்

ஆ) அப்துல் நேற்று வந்தான் - தன்வினை வாக்கியம்

இ) பூக்களைப் பறிக்காதீர்  - உணர்ச்சி வாக்கியம்

ஈ) அண்ணன் நாளை வருவான் - செய்தி வாக்கியம்

7. பகுபத உறுப்பிலக்கணம் எத்தனை வகைப்படும்.

அ) ஐந்து  

ஆ) ஆறு  

இ) ஏழு  

ஈ) எட்டு

8. வினைச்சொல்லில் ஏவலாகவும் பெயர்ச்சொல்லில் அறுவகைப் பெயராகவும் அமைவது.

அ) பகுதி     

ஆ) இடைநிலை

இ) சாரியை    

ஈ) விகுதி

9. சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் ......... எனப்படும்.

அ) எழுவாய்    

ஆ) செயப்படுபொருள்

இ) பயனிலை    

ஈ) துணைவினை

10. ‘நான் வந்தேன்’ இதில் வரும் பயனிலை.

அ) பெயர்ப் பயனிலை  

ஆ) வினைப் பயனிலை

இ) உரிப் பயனிலை   

ஈ) வினா பயனிலை

11. ஒன்றன் பெயர்ச்சொல் தன்னைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறோரு பொருளுக்கு ஆகி வருவது.

அ) தொழிற்பெயர்   

ஆ) ஆகுபெயர்

இ) வினையாலணையும் பெயர் 

ஈ) வழக்கு

12. பொருத்துக.

அ) வகுப்பறை சிரித்தது –   1.எண்ணலளவை ஆகுபெயர்

ஆ) மஞ்சள் பூசினாள் –   2. காரியவாகுபெயர்

இ) பைங்கூர் வளர்ந்தது –   3. பண்பாகுபெயர்

ஈ) ஒன்று பெற்றால் ஒளிமயம் –  4. இடவாகுபெயர்

அ) 4, 3, 2, 1  

ஆ) 3, 2, 4, 1 

இ) 4, 3, 1, 2 

ஈ) 2, 1, 4, 3

13. ‘கார் அறுத்தான்’ – எவ்வகை ஆகுபெயர்?

அ) பொருளாகு பெயர்  

ஆ) சினையாகு பெயர்

இ) காலவாகு பெயர்   

ஈ) கருவியாகு பெயர்

14. அளவைப் பெயர்கள் ............ வகைப்படும்.

அ) இரண்டு 

ஆ) மூன்று 

இ) நான்கு 

ஈ) ஐந்து

15. ஆகுபெயர்கள் ............. ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அ) 6  

ஆ) 12  

இ) 16  

ஈ) 20


7:52:00 AM

9TH TAMIL - தாய்மைக்கு வறட்சி இல்லை

நூல் வெளி 

சு. சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம், திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர். தமது பெயரைப் போலவே ஆழமும் விரிவும் வளமும் கொண்டவர்; முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்; வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு போன்றவை இவரின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகளாகும். 'வேரில் பழுத்த பலா புதினம் சாகித்திய அகாதெமி விருதையும் குற்றம் பார்க்கில் சிறுகதைத் தொகுதி தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளன.

1. சு. சமுத்திரத்தின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்.

அ) குற்றம் பார்க்கில்   

ஆ) வேரில் பழுத்த பலா

 இ) தலைப்பாகை   

ஈ) வாடாமல்லி

2. சு. சமுத்திரத்தின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்.

அ) குற்றம் பார்க்கில்   

ஆ) வேரில் பழுத்த பலா

இ) தலைப்பாகை   

ஈ) வாடாமல்லி

3. சு. சமுத்திரம் பிறந்த ........... மாவட்டத்தை சார்ந்தவர்.

அ) திருச்சி    

ஆ) திருநெல்வேலி

இ) சேலம்    

ஈ) இராமநாதபுரம்

4. சு. சமுத்திரம் பிறந்த ஊர்.

அ) திப்பணம்பட்டி   

ஆ) கோதவாடி

இ) ஏர்வாடி    

ஈ) சரக்கல்விளை

5. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

அ) பாலைப்புறா   

ஆ) மண்சுமை

இ) வேரில் பழுத்த பலா  

ஈ) காகித உறவு

(விடையாக உள்ளது தவிர, ஏனையவை சு. சமுத்திரத்தின் சிறுகதைத் தொகுப்புகள்)

7:35:00 AM

9TH TAMIL - மார்கழிப் பெருவிழா


நூல் வெளி

திருப்பாவை

  • திருப்பாவை திருமாலை முழுமுதற் கடவுளாகக்கொண்ட வைணவ சமயத்தில் ஆழங்கால்பட்ட பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள்.
  • திருப்பாவையை இயற்றிய இவர் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவர்.
  • சுடர்க்கொடி என சூடிக்கொடுத்த அழைக்கப்படுகிறார்.
  • முப்பது பாடல்கள் கொண்ட இந்நூலில் ஏழாவது பாடல் நம் பாடப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

திருவெம்பாவை

  • சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவ சமயத்தில், சமயக்குரவர் எனம் போற்றப்படும் நால்வருள் மாணிக்கவாசகரும் ஒருவர்.
  • இவர் திருவாதவூரில் பிறந்ததால் திருவாதவூரடிகள் என அழைக்கப்படுகிறார்.
  • இவர் அருளிச்செய்த திருவாசகத்தில் உள்ள பதிகம் திருவெம்பாவை.
  • இருபது பாடல்கள் கொண்ட திருவெம்பாவையில் நான்காவது பாடல் நமது பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளது,

சொல்லும் பொருளும்

  1. ஆனைச்சாத்தன் – கரிக்குருவி
  2. அரவம் – ஓசை
  3. கைபேர்த்து – கைஅசைத்து
  4. குழல் – கூந்தல்
  5. நகை – சிரிப்பு
  6. புலர்ந்தின்றோ – விடியவில்லையோ?
1. திருப்பாவையை இயற்றியவர்
  • மாணிக்கவாசகர்
  • ஆண்டாள்
  • சுந்தரர்
  • பெரியாழ்வார்
2. திருப்பாவையிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை
  • முப்பது
  • இருபது
  • நாற்பது
  • எழுபது
3. திருவெம்பாவையிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை
  • பத்து
  • முப்பது
  • நாற்பது
  • இருபது
4. திருவாதவூரடிகள் என அழைக்கப்படுகிறவர்?
  • மாணிக்கவாசகர்
  • ஆண்டாள்
  • சுந்தரர்
  • பெரியாழ்வார்
5. பொருந்தாத தொடரைக் கண்டறிக
  • பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாளும் ஒருவர்
  • சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆண்டாள் அழைக்கப்படுகிறார்.
  • திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள்
  • நம்மாழ்வாரின் மகளாவார் ஆண்டாள்
7:06:00 AM

9TH TAMIL - மணிமேகலை

நூல் வெளி 

தொடர்நிலைச் செய்யுள் வரிசையில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன. மணிமேகலை, ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால், இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு. இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்; பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க்காப்பியம். இக்காப்பியம் சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது; பௌத்த சமயச் சார்புடையது. கதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர். முப்பது காதைகளாக அமைந்துள்ள மணிமேகலையின் முதல் காதையே விழாவறை காதை.

மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். சாத்தன் என்பது இவரது இயற்பெயர். இவர், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்று கூறுவர். கூலவாணிகம் (கூலம் - தானியம்) செய்தவர். இக்காரணங்களால் இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பெற்றார். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவர் என்பர். தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்.

விழாவறை காதை


தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்
பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்;
காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்;
பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்;
விழவுமலி மூதூர் வீதியம் மன்றமும்
பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்;
கதலிகைக் கொடியும் காழ்ஊன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்தமின்;? (அடிகள் 43-53)|

தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்;
ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;
பாரா மாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்;
வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும்
தண்மணல் துருத்தியும் தாழ்பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்தடன் திரிதரும்
நாலேழ் நாளினும் நன்கறிந்தீர் என –
ஒளிறுவாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பி
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி
அணிவிழா அறைந்தனன் சுகத்தர் மருங்கென்- (அடிகள் 58-72)






1. ‘தண்டமிழாசான்’ எனச் சிறப்பிக்கப்படுபவர்.

அ) இளங்கோவடிகள்  

ஆ) சீத்தலைச் சாத்தனார்

இ) மாங்குடி மருதனார்  

ஈ) திருத்தக்கத் தேவர்

2. ‘நன்னூற்புலவன்’ எனச் சாத்தனாரைப் பாராட்டியவர்.

அ) இளங்கோவடிகள்  

ஆ) கம்பர்

இ) வாணிதாசன்   

ஈ) பாரதியார்

3. மணிமேகலை ....... சமய சார்புடைய காப்பியம்.

அ) சமண 

ஆ) பௌத்த 

இ) சைவ  

ஈ) வைணவ

4. மணிமேகலையில் அமைந்துள்ள காதைகளின் எண்ணிக்கை.

அ) 20  

ஆ) 30  

இ) 35  

ஈ) 38

5. ‘சீத்தலை’ என்னும் ஊர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அ) திருச்சி 

ஆ) சேலம் 

இ) கோவை 

ஈ) ஈரோடு

6. ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டை குறிக்கும் சொல்.

அ) தூணம் 

ஆ) தாமம் 

இ) துருத்தி 

ஈ) பொலம்

7. ‘பசியும் பிணியும் பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி’ இவ்வடிகள் இடம்பெற்ற இலக்கியம்.

அ) சிலப்பதிகாரம்   

ஆ) மணிமேகலை

இ) வளையாபதி   

ஈ) குண்டலகேசி

8. ‘ஐம்பெருங்குழு, எண்பேராயம்’ – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்.

அ) திசைச்சொற்கள்   

ஆ) வடசொற்கள்

இ) உரிச்சொற்கள்   

ஈ) தொகைச்சொற்கள்

9. பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) தோம் -  மக்கள்   

ஆ) கோட்டி – மன்றம்

இ) பொலம் – பொன்   

ஈ) வேதிகை – திண்ணை

10. பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) வசி – மழை    

ஆ) செற்றம் – சினம்

இ) துருத்தி - ஆற்றிடைக்குறை 

ஈ) கலாம் -  போர்வை

6:08:00 AM

9TH TAMIL - ஏறு தழுவுதல்


சங்க இலக்கியமான கலித்தொகையில், ஏறு தழுவுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லை நில ஆயர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வு, அவர்களின் வீரத்தினை மெய்ப்பிக்கக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது.

எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர் - (கலி - 102: அடி 21-24)

என்று முல்லைக்கலியில் ஏறு தழுவுதல் களம் குறித்த அடிகள், காட்சியை நம் கண்முன்னே நிறுத்துகின்றன.

நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை.
மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்
துளங்கு இமில் நல்ஏற்றினம் பல களம்புகும்
மள்ளர் வனப்பு ஒத்தன - (கலி- ice 24 7-10)

கலித்தொகை தவிர, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

ஏறு தழுவுதல் பற்றிப் பிற்காலச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பள்ளு இலக்கியத்திலும் குறிப்புகள் உள்ளன. எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்துள்ளது. 


தெரிந்து தெளிவோம்

எகிப்தில் உள்ள பெனி - ஹாசன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களிலும் காளைப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.

தொல்சான்றுகள்

ஏறு தழுவுதல் குறித்த  பல நடுகற்கள், புடைப்புச் சிற்பங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுன்னன. சேலம் மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் ஒன்று உள்ளது. கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடிப் பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு என்பது அந்நடுகல் பொறிப்பு

மேலைநாடுகளில் குறிப்பாக, தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில், காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். அவ்விளையாட்டில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.

  • ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிட்டுள்ள சங்க இலக்கிய நூல் = கலித்தொகை.
  • கலித்தொகையின் முல்லைக்கலியில் “ஏறு தழுவுதல்” பற்றிய குறிப்புகள் உள்ளன.
  • முல்லைநில ஆயர்கள் பங்கேற்கும் நிகழ்வு = ஏறு தழுவுதல்.
  • “காளைகளின் பாய்ச்சல்” பற்றி கூறும் சங்க இலக்கிய நூல் = கலித்தொகை.
  • கலித்தொகை தவிர, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
  • “ஏறுகோள்” பற்றி குறிப்பிட்டுள்ள சங்க இலக்கிய நூல் = கலித்தொகை
  • “ஏறுகோள்” பற்றிய குறிப்புகள் உள்ள ஐம்பெருங்காப்பிய நூல் = சிலப்பதிகாரம்.
  • “ஏறுகோள்” பற்றிய குறிப்புகள் கூறப்பட்டுள்ள இலக்கண நூல் = புறப்பொருள் வெண்பாமாலை.
  • “ஏறு தழுவுதல்” பற்றி குறிப்புகள் உள்ள சிற்றிலக்கிய வகை = பள்ளு.
  • “எருதுகட்டி” என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் “கண்ணுடையம்மன் பள்ளு” பதிவு செய்துள்ளது.
  • ஏறு தழுவுதலை “எருதுகட்டி” என்று குறிப்பிட்டுள்ள சிற்றிலக்கியம் = பள்ளு
  • ஏறு தழுவுதலை “எருதுகட்டி” என்று குறிப்பிட்டுள்ள பள்ளு இலக்கியம் = கண்ணுடையம்மன் பள்ளு.
  • “கண்ணுடையம்மன் பள்ளு” நூலின் ஆசிரியர் = முத்துகுட்டிப் புலவர் (முத்துநாயகப் புலவர்).
  • “எருது பொருதார் கல்” கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் = சேலம்.
  • சேலம் மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் ஒன்று உள்ளது.
  • கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடிப் பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு என்பது அந்நடுகல் பொறிப்பு.
  • கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடி இறந்துபட்டவனாகிய சங்கன் என்பவனுக்கு அவனுடைய மகன் பெரிய பயல் எடுத்த நடுகல் என்பது இதன் பொருள்.
  • கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவதுபோன்ற பண்டைய ஓவியம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கரிக்கையூரில் காணப்படுகிறது.
  • திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து மேட்டுப்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளது.
  • தேனி மாவட்டம் மயிலாடும் பாறை அருகே சித்திரக்கல் புடவு என்ற இடத்தில் திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது
  • சிந்துவெளி நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப் பங்கு வகிக்கின்றது.
  • இம்மக்கள் காளையைத் தெய்வமாக வழிபட்டதை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற சான்றுகள் வாயிலாக அறிகிறோம்.
  • சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார்.
  • ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும் மருத நிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.
  • இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.
  • ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் ஏர் மாடுகள், எருதுகள், ஏறுகள் என்று அழைக்கப்பட்டன.
  • மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருது கட்டி, காளை விரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
  • சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று, ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது.
  • சல்லி என்பதன் பொருள் = மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும்.
  • ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு = காளைச் சண்டை.
  • இதில் காளை மாட்டினை கொன்று அடக்க வேண்டும்.
  • எகிப்தில் உள்ள பெனி – ஹாசன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களிலும் காளைப்போர் குறித்த இடம்பெற்றுள்ளன.

காங்கேயம் காளை மாடுகள்

  • தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன.
  • தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று ‘காங்கேயம்’ கருதப்படுகிறது.
  • தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என கருதப்படும் காளை இனம் = காங்கேயம் காளைகள்.
  • பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன.
  • பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன.
  • மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன.
  • அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
  • கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன.
  • இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
  • கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

1. சங்க இலக்கியத்தில் ‘ஏறு தழுவுதல்’ பற்றிக் கூறும் நூல்.

அ) அகநானூறு   

ஆ) கலித்தொகை

இ) பரிபாடல்    

ஈ)  ஐங்குறுநூறு

2. ஏறுதழுவுதல் குறித்துக் கூறும் கலித்தொகைப் பகுதி.

அ) குறிஞ்சிக்கலி   

ஆ) முல்லைக் கலி

இ) மருதக்கலி    

ஈ) நெய்தற்கலி

3. ‘கண்ணுடையம்மன் பள்ளு’ ஏறுதழுவுதலை எவ்வாறு குறிப்பிடுகிறது?

அ) எருது பொருதல்   

ஆ) எருதுகட்டி

இ) ஏறுகோள்    

ஈ) காளைப்பாய்ச்சல்

4. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

அ) நீலகிரி மாவட்டம் – கரிக்கையூர்

ஆ) சேலம் மாவட்டம் – கருவத்துறை

இ) மதுரை மாவட்டம் – கல்லூத்து மேட்டுப்பட்டி

ஈ) தேனி மாவட்டம் – சித்திரக்கல் புடலில்

(விடையாக வருபவை நடுகல், ஏனையவை காளை ஓவியம் சம்பந்தம் உடையவை)

5. காளையைக் கொன்று அடக்குபவனே சிறந்த வீரனாகக் கருதப்படும் நாடு.

அ) இங்கிலாந்து   

ஆ) இலங்கை

இ) ஸ்பெயின்    

ஈ) கனடா

6. சிந்துவெளி அகழாய்வுகளில் காண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக உள்ளது என்று கூறியவர்.

அ) எம் பிரபாகரன்   

ஆ) ஐராவதம் மகாதேவன்

இ) ஆர் நாகசுவாமி   

ஈ) கே ராஜன்

7. பொருந்தாத இணை எது?

அ) முல்லை 

ஆ) மருதல் 

இ) நெய்தல் 

ஈ) பாலை

(விடையாகக் கொடுக்கப்பட்டுள்ளதைத் தவிர ஏனையவற்றில் மாடுகளின் பயன்பாடு உள்ளது)

8. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.

ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.

இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.

ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.

9. திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம்  ...............இல் உள்ளது.

அ) கோத்தகிரி    

ஆ) கரிக்கையூர்

இ) ஆதிச்சநல்லூர்   

ஈ) கல்லூத்து மேட்டுப்பட்டி

10. காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு.

அ) இங்கிலாந்து   

ஆ) இலங்கை

இ) ஸ்பெயின்    

ஈ) கனடா