6TH SOCIAL SCIENCE Question And Answer - 08
குஷாணர்கள் மற்றும் குப்தர்கள்:
1. குஷாணப் பேரரசின் மாபெரும் அரசரான கனிஷ்கர் பௌத்தத்தைத் தழுவக் காரணமாக இருந்தவர்: அஸ்வகோஷர்.
2. முதல் சமஸ்கிருத நாடகமான 'புத்த சரிதம்' எனும் நூலின் ஆசிரியர்: அஸ்வகோஷர்.
3. அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ள பிரயாகை மெய்க்கீர்த்தியை இயற்றியவர்: ஹரிசேனர்.
4. சமுத்திரகுப்தரின் சமகாலத்தவரான இலங்கையைச் சேர்ந்த பௌத்த அரசன்: ஸ்ரீ மேகவர்மன்.
5. இரண்டாம் சந்திரகுப்தர் அவையில் இருந்த வானியல் அறிஞர்: வராகமிகிரர்.
6. இரண்டாம் சந்திரகுப்தர் அவையில் இருந்த மருத்துவர்: தன்வந்திரி.
7. குப்தர்களின் காலத்தில் வேளாண்மைக்கு உகந்த நிலங்கள்: க்ஷேத்ரா.
8. குப்தர்கள் காலத்தில் வனம் அல்லது காட்டு நிலங்கள்: அப்ரகதா.
9. நாளந்தாவிலுள்ள 18 அடி உயரமுள்ள புத்தரின் செப்புச் சிலை சான்றாகும் கலை: குப்தர்கள் உலோகச் சிற்பங்கள்.
10. இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியர்கள் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டவர்கள்: குபேரநாகா, துருபசுவாமினி.
11. காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள்: சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியம்.
12. பூமி தனது அச்சில் சுழலுகிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர்: ஆரியப்பட்டர்.
வர்த்தனர்கள் மற்றும் சாளுக்கியர்கள்:
1. வர்த்தன அரச வம்சத்தின் தலைநகரம்: தானேஸ்வரம்.
2. யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகள் அடங்கிய நூல்: சி-யூ-கி.
3. ஹர்ஷரின் அவையை அலங்கரித்த கவிஞர்கள்: பானபட்டர், மயூரா, ஹர்தத்தா.
4. இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டை சமஸ்கிருத மொழியில் எழுதியவர்: ரவிகீர்த்தி.
5. சாளுக்கியர்களின் வெசாரா பாணி: தென் இந்திய (திராவிட) மற்றும் வட இந்திய (நாகாரா) கட்டடப் பாணிகளின் கலப்பு.
ராஷ்டிரகூடர்கள்:
1. அமோகவர்ஷர் என்ற ராஷ்டிரகூட அரசரை சமண மதத்திற்கு மாற்றிய துறவி: ஜினசேனா.
2. கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள்: ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா, ரன்னா.
3. எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை உருவாக்கியவர்: முதலாம் கிருஷ்ணர்.
புவியியல்:
1. நமது சூரியக் குடும்பம் காணப்படும் விண்மீன் திரள் மண்டலம்: பால்வெளி விண்மீன் திரள் மண்டலம்.
2. வியாழன் மற்றும் சனியின் மிகப்பெரிய துணைக்கோள்கள்: வியாழன் - கனிமீடு, சனி - டைட்டன்.
3. நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொள்ளவும், புவியைச் சுற்றிவரவும் எடுத்துக்கொள்ளும் நேரம்: 27 நாள்கள் 8 மணி நேரம்.
4. புவி சூரியனைச் சுற்றிவரும் வேகம்: வினாடிக்கு 30 கிலோமீட்டர்.
5. உலகின் நீளமான மலைத்தொடர் மற்றும் அதன் அமைவிடம்: ஆண்டிஸ் மலைத்தொடர், தென் அமெரிக்கா.
6. பன்னாட்டு தேதிக்கோடாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 180° தீர்க்கக்கோடு செல்லும் நீர்ச்சந்தி: பேரிங் நீர்ச்சந்தி.
7. உலகிலேயே அதிக நிலக்கரி இருப்பு உள்ள கண்டம்: ஆசியா கண்டம்.
8. ஆசியாவின் மிக நீளமான ஆறு: யாங்சி.
9. ஐரோப்பாவின் ஒன்பது நாடுகள் வழியாகப் பாயும் ஆறு: டேன்யூப் ஆறு.
அரசியலமைப்பு மற்றும் சட்டம்:
1. செம்மொழிகளாக அறிவிக்கப்பட்ட ஆண்டுகள்: சமஸ்கிருதம் - 2005, தெலுங்கு மற்றும் கன்னடம் - 2008.
2. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவர்: முனைவர் ராஜேந்திரபிரசாத்.
3. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை இந்தியாவை வரையறை செய்வது: இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மை, மக்களாட்சிக் குடியரசு.
4. இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க செலவிடப்பட்ட தொகை: சுமார் 64 லட்சம் ரூபாய்.
