Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, March 21, 2026

8:49:00 AM

6TH TAMIL - கல்விக் கண் திறந்தவர்

  • கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகின்றன.
  • தொடக்கத்தில் ஆசிரியரின் வீட்டிலேயே தங்கி மாணவர்கள் கல்வி கற்றனர்.
  • பிறகு நாள்தோறும் ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கல்வி கற்றனர்.
  • அதன் பிறகு பொதுவான ஓர் இடத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தனர்.
  • இவையே இன்றைய பள்ளிக்கூடங்கள் ஆகும்.
  • முன்பு ஒரு சில ஊர்களில் மட்டும் பள்ளிகள் இருந்தன.
  • இன்று பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • இத்தகைய கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் = கர்மவீரர் காமராசர் ஆவார்.
  • கல்வித்துறை விதிகளை மாணவர்களின் நலனுக்காக மாற்றி, அவர்கள் வாழும் இடங்களிலேயே பள்ளிக்கூடங்களைத் திறக்கச் செய்த சிந்தனையாளர் = காமராசர்.
  • காமராசரை “கல்விக் கண் திறந்தவர்” என்று மனதார பாராட்டியவர் = தந்தை பெரியார்.
  • காமராசர் பதவி ஏற்ற உடனே, தமிழகத்தில் மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டார்.
  • மாநிலம் முழுவதும் அனைவர்க்கும் கட்டாய இலவசக் கல்வி திட்டத்தை நடைமுறைப் படுத்தினார்.
  • மாணவர்கள் பசியை போக்க “மதிய உணவுத் திட்டத்தை” துவக்கி வைத்தார்.
  • பள்ளிகளில் மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வுகளை போக்க “சீருடைத்” திட்டத்தை அறிமுகம் செய்தார்.
  • பள்ளிகளின் வசதியைப் பெருக்க “பள்ளிச்சீரமைப்பு” மாநாடுகளை நடத்தினார்.
  • மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடைமருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாகத் தொடங்கினார்.
  • தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களைத் தொடங்கினார்.
  • மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
  • நடுவண் அரசு 1976இல் பாரதரத்னா விருது வழங்கியது.
  • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம், விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
  • சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
  • சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
  • ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ஜூலை பதினைந்தாம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

காமராசரின் சிறப்பு பெயர்கள்

  • பெருந்தலைவர்
  • படிக்காத மேதை
  • கர்மவீரர்
  • கருப்புக் காந்தி
  • ஏழைப்பங்காளர்
  • தலைவர்களை உருவாக்குபவர்

காமராசருக்குச் செய்யப்பட்ட சிறப்புகள்

  • மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
  • நடுவண் அரசு 1976இல் பாரதரத்னா விருது வழங்கியது.
  • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
  • சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
  • ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ஜூலை பதினைந்தாம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்

அ) ஆடு மேய்க்க ஆள் இல்லை

ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

இ) வழி தெரியவில்லை

ஈ) பேருந்து வசதியில்லை

[விடை : ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை]



2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பசி + இன்றி

ஆ) பசி + யின்றி

இ) பசு + இன்றி

ஈ) பசு + யின்றி

[விடை : அ) பசி + இன்றி]



3. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) படி + அறிவு

ஆ) படிப்பு + அறிவு

இ) படி + வறிவு

ஈ) படிப்பு + வறிவு

[விடை : ஆ) படிப்பு + அறிவு]



4. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) காட்டாறு

ஆ) காடாறு

இ) காட்டு ஆறு

ஈ) காடுஆறு

[விடை : அ) காட்டாறு]



கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க ---------- அறிமுகப்படுத்தினார்.

விடை : சீருடை

2. காமராசரைக் 'கல்விக் கண் திறந்தவர்' என மனதாரப் பாராட்டியவர் --------

விடை : தந்தை பெரியார்



குறு வினா

1. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?

விடை

காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் :

(i) பொறியியல் கல்லூரிகள்

(ii) மருத்துவக் கல்லூரிகள்

(iii) கால்நடை மருத்துவக் கல்லூரிகள்

(iv) ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள்
8:37:00 AM

6TH TAMIL - துன்பம் வெல்லும் கல்வி

நூல் வெளி

எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர். மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.


ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே - நம்
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே

மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது

துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் - நீ
சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - அறிவு
வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்

வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

சொல்லும் பொருளும்

தூற்றும் படி – இகழும் படி
மூத்தோர் – பெரியோர்
மேதைகள் – அறிஞர்கள்
மாற்றார் – மற்றவர்
நெறி – வழி
வற்றாமல் – அழியாமல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர் பிறர் --------- நடக்கக் கூடாது.

அ) போற்றும்படி
ஆ) தூற்றும்படி
இ) பார்க்கும்படி
ஈ) வியக்கும்படி

2. நாம் --------- சொல்படி நடக்க வேண்டும்.

அ) இளையோர்
ஆ) ஊரார்
இ) மூத்தோர்
ஈ) வழிப்போக்கர்

3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கையில் + பொருள்
ஆ) கைப் + பொருள்
இ) கை + பொருள்
ஈ) கைப்பு + பொருள்

4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) மானம் இல்லா
ஆ) மானமில்லா
இ) மானமல்லா
ஈ) மானம்மில்லா

5. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர்

அ) மருதகாசி
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) கண்ணதாசன்
ஈ) வாலி

6. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.

அ) மருதகாசி
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) கண்ணதாசன்
ஈ) வாலி

7. மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

அ) மருதகாசி
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) கண்ணதாசன்
ஈ) வாலி
8:09:00 AM

6TH TAMIL - கல்வியைப் போற்று

நூல் வெளி
  • கா.ப.செய்குதம்பிப் பாவலர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
  • சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்.
  • அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி, சதாவதானி என்னும் பட்டம் பெற்றவர்.
  • இவர் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, திருமதினத்து அந்தாதி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.


சொல்லும் பொருளும்
  • பெருக்கி – வளர்த்து
  • திருத்தி – சீராக்கி
  • மருளை – மயக்கத்தை
  • அருத்துவதும் – தருவதும்
  • திருத்தி – சீராக்கி
  • மதி – அறிவு
  • ஆவி – உயிர்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கல்வியானது நமது ______ துணையாய் அமைகிறது

அ) ஆவிக்குத்
ஆ) கண்ணுக்குத்
இ) உடலுக்குத்
ஈ) செவிக்குத்

2. அருந்துணை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அருந்து + துணை
ஆ) அருமை + துணை
இ) அரு + துணை
ஈ) அருந் + துணை

3. கல்வி + என்றே என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கல்விஎன்றே
ஆ) கல்வியன்றே
இ) கல்வின்றே
ஈ) கல்வியென்றே

4. கா.ப.செய்குதம்பிப் பாவலர் பிறந்த ஊர்
  • செவல்குடி
  • இடையன்குளம்
  • இடலாக்குடி
  • பனையன்குளம்
5. சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்.
  • பாரதிதாசன்
  • கா.ப.செய்குதம்பிப் பாவலர்
  • பாரதியார்
  • திருத்தக்கதேவர்
6. நீதி வெண்பா என்ற நூலின் ஆசிரியர்
  • கா.ப.செய்குதம்பிப் பாவலர்
  • பாரதிதாசன்
  • பாரதியார்
  • கண்ணதாசன்
7. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி என்று இவ்வடிகளில் வரும் தொடை நயம் 
  • எதுகை
  • மோனை
  • இயைபு
  • முரண்
8. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் என வரும் பாடலைப் பாடியவர்
  • ஔவையார்
  • கபிலர்
  • பூதஞ்சேந்தனார்
  • காரியாசான்
9. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் என வரும் பாடல் இடம்பெற்ற நூல். 

அ) கொன்றைவேந்தன்
ஆ) மூதுரை
இ) ஆத்திச்சூடி
ஈ) ஆசாரக்கோவை

10. செய்குதம்பிப் பாவலர் இவ்வாறு அழைக்கப்படுகிறார்
  • சதாவதானி
  • தசதாவதானி
  • மொழிஞாயிறு
  • கவிமணி
11. செய்குதம்பிப் பாவலர் சிறந்து விளங்கிய கலை
  • ஆடல்
  • பாடல்
  • ஓவியம்
  • சதாவனம்
12. சதாவதானி என்பது _______
  • நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது
  • ஆயிரம் யானைகளைப் போரில் கொல்வது
  • நூறு மலர்களை ஒரே இடத்தில் குவிப்பது
  • ஆயிரம் பேருக்கு உணவிடுவது
13. போற்றிக் கற்க வேண்டியது
  • கல்வி
  • நூல்
  • ஒழுக்கம்
  • பண்பு

இலக்கணக் குறிப்பு
  • போற்று, பெருக்கி, 
  • திருத்தி, அகற்றி – வினையெச்சங்கள்
  • அருந்துணை – பண்புத்தொகை
பகுபத உறுப்பிலக்கணம்

1. பெருக்கி = பெருக்கு + இ

பெருக்கு – பகுதி
இ – வினையெச்ச விகுதி

2. திருத்தி = திருத்து + இ

திருத்து – பகுதி
இ – வினையெச்ச விகுதி
7:23:00 AM

6TH TAMIL - முதல் எழுத்தும் சார்பு எழுத்தும்

முதல் எழுத்துகள்
  • தமிழில் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும். அவை,முதல் எழுத்துகள்
  • சார்பு எழுத்துகள்
  • உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.
  • முதல் எழுத்துகள் மொத்தம் = 30
  • பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.
சார்பு எழுத்துகள்

முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள்.
சார்பு எழுத்துகள் பத்து வகைப்படும். அவை,
  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலிகரம்
  6. குற்றியலுகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஔகாரக்குறுக்கம்
  9. மகரக் குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்
உயிர்மெய் எழுத்து
  • மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
  • உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.
  • வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.
  • முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.
  • ஆய்த எழுத்துமூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
  • முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அஃகேனம் என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
  • நுட்பமான ஒலிப்புமுறையை உடையது.
  • தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
  • தனித்து இயங்காது.
  • முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தமிழ் எழுத்து எத்தனை வகைப்படும்.

அ) மூன்று
ஆ) இரண்டு
இ) ஐந்து
ஈ) ஏழு

2. முதல் எழுத்துகள் எத்தனை வகைப்படும்

அ) ஐந்து
ஆ) பன்னிரண்டு
இ) பதினெட்டு
ஈ) முப்பது

3. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்

அ) ஐந்து
ஆ) பன்னிரண்டு
இ) பதினெட்டு
ஈ) பத்து

4. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக

அ) முப்புள்ளி
ஆ) தனிநிலை
இ) ஒற்று
ஈ) முப்பாற்புள்ளி

5. நுட்பமான ஒலிப்பு முறையை உடைய எழுத்து

அ) உயிர் எழுத்து
ஆ) மெய் எழுத்து
இ) ஆய்த எழுத்து
ஈ) உயிர்மெய்

6. சொல்லின் இடையில் மட்டும் வரும் எழுத்து

அ) உயிர் எழுத்து
ஆ) மெய் எழுத்து
இ) ஆய்த எழுத்து
ஈ) உயிர்மெய்
6:53:00 AM

6TH TAMIL - கிழவனும் கடலும்

1. கீழ்க்கண்டவற்றுள் கிழவனும் கடலும் என்பது

அ) நாவல்
ஆ) சிறுகதை
இ) புதினம்
ஈ) கவிதை

2. கிழவனும் கடலும் என்பது எம்மொழிப் புதினம்.

அ) தமிழ்
ஆ) மலையாளம்
இ) ஆங்கிலம்
ஈ) இலத்தின்

3.  கிழவனும் கடலும் புதினத்தின் ஆசிரியர்

அ) எர்னெஸ்ட் ஹெமிங்வே
ஆ) லிலியன் வாட்சன்
இ) மார்டின் லூதர்
ஈ) சாக்ரடீஸ்

4. கிழவனும் கடலும் என்னும் புதினம் நோபல் பரிசு பெற்ற ஆண்டு

அ) 1951
ஆ) 1952
இ) 1953
ஈ) 1954

5. கிழவனும் கடலும் என்னும் புதினத்தின் கதாநாயகன் 

அ) சால்மன்
ஆ) சாண்டியாகோ
இ) மனோலின்
ஈ) 

6. சாண்டியாகோவிற்கு எத்தனை நாட்கள் கழித்து மீன் மாட்டியது.

அ) 50 நாட்கள்
ஆ) 75 நாட்கள்
இ) 84  நாட்கள்
ஈ) 85 நாட்கள்

7. சாண்டியாகோ தன் தூண்டிலில் மாட்டி வைத்திருந்த மீன்

அ) கெலுத்தி மீன்
ஆ) சூரை மீன்
இ) சுறா மீன்
ஈ) கெண்டை மீன்

8. சாண்டியாகோ பிடித்த மீனை தின்ற மீன்

அ) கெலுத்தி மீன்
ஆ) சூரை மீன்
இ) சுறா மீன்
ஈ) கெண்டை மீன்
6:05:00 AM

TET TNPSC TRB POLICE (6 - 10TH TAMIL ) TEXT BOOK 2025 STUDY MATERIALS



10TH TAMIL Chapter 1

10TH TAMIL - அன்னை மொழியே

10TH TAMIL - தமிழ்ச்சொல் வளம்

10TH TAMIL - காலக்கணிதம்

10TH TAMIL - புயலிலே ஒரு தோணி

10TH TAMIL - சொல்

10TH TAMIL Chapter 2

10TH TAMIL - கேட்கிறதா என் குரல்!

10TH TAMIL - பரிபாடல்

10TH TAMIL - மேகம்

10TH TAMIL - பிரும்மம்

10TH TAMIL - தொகாநிலைத் தொடர்

10TH TAMIL Chapter 3

10TH TAMIL - விருந்து போற்றுதும்

10TH TAMIL - காசிக்காண்டம்

10TH TAMIL - முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

10TH TAMIL - கோபல்லபுரத்து மக்கள்

10TH TAMIL - தொகைநிலைத் தொடர்

10TH TAMIL Chapter 4

10TH TAMIL - மொழிப்பெயர்ப்புக் கல்வி

10TH TAMIL - திருவிளையாடற்புராணம்

10TH TAMIL - புதிய நம்பிக்கை

10TH TAMIL - பொது இலக்கணம்

10TH TAMIL Chapter 5

10TH TAMIL - பன்முகக் கலைஞர்

10TH TAMIL - கம்பராமாயணம்

10TH TAMIL - பாய்ச்சல்

10TH TAMIL - அகப்பொருள் இலக்கணம்

10TH TAMIL Chapter 6

10TH TAMIL - சிற்றகல்‌ ஒளி

10TH TAMIL - சிலப்பதிகாரம்‌

10TH TAMIL - முத்தொள்ளாயிரம்‌

10TH TAMIL - மங்கையராய்ப்‌ பிறப்பதற்கே

10TH TAMIL - புறப்பொருள் இலக்கணம்

10TH TAMIL Chapter 7

10TH TAMIL - சங்க இலக்கியத்தில்‌ அறம்‌

10TH TAMIL - தேம்பாவணி

10TH TAMIL - அக்கறை

10TH TAMIL - இராமானுசர்‌

10TH TAMIL - பா வகை, அலகிடுதல்‌


6TH TAMIL Chapter 1

6TH TAMIL - இன்பத் தமிழ்

6TH TAMIL - வளர் தமிழ்

6TH TAMIL - ஒளி பிறந்தது

6TH TAMIL - தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்

Friday, March 20, 2026

6:56:00 PM

10TH TAMIL - பா வகை, அலகிடுதல்‌





யாப்பு உறுப்புகள் (6)
  1. எழுத்து
  2. அசை
  3. சீர்
  4. தளை
  5. அடி
  6. தொடை
பாக்களுக்கு உரிய ஓசை
  • வெண்பா - செப்பல் ஓசை
  • ஆசிரியப்பா - அகவல் ஓசை
  • கலிப்பா - துள்ளல் ஓசை
  • வஞ்சிப்பா - தூங்கல் ஓசை
யாப்போசை தரும் பாவோசை
  1. செப்பலோசை - இருவர் உரையாடுவது போன்ற ஓசை
  2. அகவலோசை - ஒருவர் பேசுதல் போன்ற - சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
  3. துள்ளலோசை - கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது.
  4. தூங்கலோசை - சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை. தாழ்ந்தே வருவது.
வெண்பா பா வகைகள் (5)
  1. குறள் வெண்பா
  2. சிந்தியல் வெண்பா
  3. நேரிசை வெண்பா
  4. இன்னிசை வெண்பா
  5. பஃறொடை வெண்பா
ஆசிரியப்பா பா வகைகள் (4)
நேரிசை ஆசிரியப்பா
இணைக்குறள் ஆசிரியப்பா
நிலைமண்டில ஆசிரியப்பா
அடிமறி மண்டில ஆசிரியப்பா

பா வகை அலகிடுதல்

  • யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும் = ஆறு வகைகள்
  • யாப்பின் உறுப்புகள் யாவை = எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை.
  • பாக்கள் எத்தனை வகைப்படும் = நான்கு வகை.
  • நால்வகைப் பாக்கள் யாவை = வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா.
  • வெண்பாவின் ஓசை = செப்பல் ஓசை.
  • திருக்குறளும், நாலடியாரும் வெண்பாவால் அமைந்த அறம் கூறும் நூல்களாகும்.
  • அகவல் ஓசை பெற்று வரும் பா = ஆசிரியப்பா.
  • ஆசிரியப்பாவின் ஓசை = அகவல் ஓசை.
  • ஆசிரியப்பாவின் மற்றொரு பெயர் = அகவற்பா.
  • இலக்கணக் கட்டுக்கோப்பு குறைவாகவும், கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா.
  • இலக்கணக் கட்டுக்கோபு குறைவாக உள்ள பா வகை = அகவற்பா.
  • கவிதை வெளியீட்டிற்கு எளிதாக இருக்கும் பா வகை = அகவற்பா.
  • அகவர்பாவின் அமைந்த சங்க இலக்கியங்கள் = சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை.
  • கலிப்பாவிற்கு உரிய ஓசை = துள்ளல் ஓசை.
  • துள்ளல் ஓசை பெற்று வரும் பா = கலிப்பா.
  • செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை வகை = துள்ளல் ஓசை.
  • வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை = தூண்கள் ஓசை.
  • தூங்கல் ஓசை பெற்று வரும் பா வகை = வஞ்சிப்பா.
6:50:00 PM

10TH TAMIL - இராமானுசர்‌



  • ஒரு நாளுக்கு ஒருமுறை மலரும் பூ = சண்பகம்.
  • ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ = பிரம்ம கமலம்.
  • 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ = குறிஞ்சிப்பூ.
  • தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது = மூங்கில்.
  • தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே பிறப்பவர்கள் = ஞானிகள்.
  • “பூரணர்” இல்லம் அமைந்துள்ள இடம் = திருக்கோட்டியூர்.
  • எங்கிருந்து ராமானுசர் பூரணர் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார் = திருவரங்கம்.
  • பூரணர் இல்லத்திற்கு இராமானுசருடன் வந்த மற்ற இருவர் = கூரேசர் மற்றும் முதலியாண்டான்.
  • இராமானுசர், பூரணர் இல்லத்திற்கு வந்த நோக்கம் = திருமந்திர திருவருள் பெற.
  • பூரணர், திருமந்திர திருவருளை பெற இராமானுசரிடம் வரும் பொழுது எதை கொண்டு வரச் சொன்னார் = தண்டு, கொடி.
  • தண்டு, கொடிக்கு இணையானவர்கள் என்று இராமானுசர் யாரை குறிப்பிடுகிறார் = கூரேசர் மற்றும் முதலியாண்டான்.
  • பூரணர் அவர்களுக்கு “திருமந்திர திருவருளை” கொடுத்தவர் = ஆச்சாரியார் ஆளவந்தார்.
  • “இளையாழ்வாரே” என்று பூரணர் யாரை அழைக்கிறார் = இராமானுசர்.
  • “இளையாழ்வார்” என்று அழைக்கப்படுபவர் = இராமானுசர்.
  • சௌமிய நாராயணன் திருக்கோவில் அமைந்துள்ள இடம் = திருக்கோட்டியூர்.
  • பூரணர் கூறியதையும் மீறி, திருமந்திர திருவருளை இராமானுசர் பொது மக்களுக்கு தெரிவிக்கிறார்.
  • பூரனரின் மகன் = சௌமிய நாராயணன்.
6:39:00 PM

10TH TAMIL - அக்கறை



சைக்கிளில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்க்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை


இலக்கணக் குறிப்பு

உருண்டது, போனது - ஒன்றன் பால் வினைமுற்றுகள்
சரிந்து - வினையெச்சம்
அனைவரும் - முற்றும்மை.

பகுபத உறுப்பிலக்கணம்

சரிந்து = சரி + த்(ந்) + த் + உ;

சரி - பகுதி; த் --சந்தி (ந் ஆனது விகாரம்);
த் - இறந்தகால இடை நிலை;
உ - வினையெச்ச விகுதி.
6:31:00 PM

10TH TAMIL - தேம்பாவணி

இஸ்மத் சன்னியாசி எனப்படும் வீரமாமுனிவர்

  • வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார்.
  • இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார்.
  • வீரமாமுனிவருக்கு “இஸ்மத் சன்னியாசி” என்ற பட்டதை வழங்கியவர் = திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னர்.
  • “இஸ்மத் சன்னியாசி” என்பது பாரசீக சொல்.
  • இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் “தூய துறவி” என்று பொருள்.

தேம்பாவணி நூல் குறிப்பு

  • தேம்பா + அணி எனப் பிரித்து வாடாதமாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்து தேன்போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது.
  • கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது.
  • தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவன் = யோசேபு (வளவன்)
  • இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.

வீரமாமுனிவர் ஆசிரியர் குறிப்பு

  • 17ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது தேம்பாவணி.
  • இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர்.
  • இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி.
  • தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை இவர் படைத்துள்ளார்.

பூக்கையைக்‌ குவித்துப்‌ பூவே
புரிவொடு காக்கென்று அம்பூஞ்‌
சேக்கையைப்‌ பரப்பி இங்கண்‌
திருந்திய அறத்தை யாவும்‌
யாக்கையைப்‌ பிணித்தென்று ஆக
இனிதிலுள்‌ அடக்கி வாய்ந்த
ஆக்கையை அடக்கிப்‌ பூவோடு
அழுங்கணீர்‌ பொழிந்தான்‌ மீதே. (2388)


சொல்லும்‌ பொருளும்‌

சேக்கை - படுக்கை
யாக்கை - உடல்‌
பிணித்து - கட்டி
வாய்ந்த - பயனுள்ள

வாய்மணி யாகக்‌ கூறும்‌
வாய்மையே மழைநீ ராகித்
தாய்மணி யாக மார்பில்‌
தயங்கியுள்‌ குளிர வாழ்ந்தேன்‌
தூய்மணி யாகத்‌ தூவும்‌
துளியிலது இளங்கூழ்‌ வாடிக்‌
காய்மணி யாகு முன்னர்க்‌
காய்ந்தெனக்‌ காய்ந்தேன்‌ அந்தோ. (2400)

சொல்லும்‌ பொருளும்‌

தயங்கி - அசைந்து
இளங்கூழ்‌ - இளம்பயிர்‌
காய்ந்தேன்‌ - வருந்தினேன்‌

விரிந்தன கொம்பில்‌ கொய்த
வீயென உள்ளம்‌ வாட
எரிந்தன நுதிநச்சு அம்புண்டு
இரும்புழைப்‌ புண்போல்‌ நோகப்‌
பிரிந்தன புள்ளின்‌ கானில்‌
பெரிதழுது இரங்கித்‌ தேம்பச்‌
சரிந்தன அசும்பில்‌ செல்லும்‌
தடவிலா தனித்தேன்‌ அந்தோ! (2401)

சொல்லும்‌ பொருளும்‌

கொம்பு- கிளை
புழை - துளை
கான்‌ - காடு
தேம்ப - வாட
அசும்பு - நிலம்‌

உய்முறை அறியேன்‌; ஓர்ந்த
உணர்வினொத்து உறுப்பும்‌ இல்லா
மெய்முறை அறியேன்‌; மெய்தான்‌
விரும்பிய உணவு தேடச்‌
செய்முறை அறியேன்‌; கானில்‌
செல்வழி அறியேன்‌; தாய்தன்‌
கைமுறை அறிந்தேன்‌ தாயும்‌
கடிந்தெனைத்‌ தனித்துப்‌ போனாள்‌. (2403)

சொல்லும்‌ பொருளும்‌

உய்முறை - வாழும்‌ வழி
ஓர்ந்த - நினைத்த
கடிந்து - விலக்கி

நவமணி வடக்க யில்போல்‌
நல்லறப்‌ படலைப்‌ பூட்டும்‌
தவமணி மார்பன்‌ சொன்ன
தன்னிசைக்கு இசைகள்‌ பாடத்‌
துவமணி மரங்கள்‌ தோறும்‌
துணர்‌அணிச்‌ சுனைகள்‌ தோறும்‌
உவமணி கானம்கொல்‌ என்று
ஒலித்து அழுவ போன்றே. (2410)

சொல்லும்‌ பொருளும்‌

படலை - மாலை
துணர்‌ - மலர்கள்‌
உவமணி - மணமலர்‌

இலக்கணக்‌ குறிப்பு

காக்கென்று - காக்கவென்று என்பதன்‌ தொகுத்தல்‌ விகாரம்‌
கணீர்‌ - கண்ணீர்‌ என்பதன்‌ இடைக்குறை
காய்மணி, உய்முறை, செய்முறை - வினைத்தொகைகள்‌
மெய்முறை - வேற்றுமைத்தொகை
கைமுறை - மூன்றாம்‌ வேற்றுமை உருபும்‌ பயனும்‌ உடன்தொக்கதொகை

பகுபத உறுப்பிலக்கணம்‌

அறியேன்‌ = அறி + ய் + (ஆ) + ஏன்‌

அறி - பகுதி
ய்‌ - சந்தி
ஆ - எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
ஏன்‌ - தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

ஒலித்து = ஒலி + த் + த்‌ + உ

ஒலி - பகுதி
த்‌- சந்தி
த்‌- இறந்தகால இடைநிலை
உ- வினையெச்ச விகுதி

6:13:00 PM

10TH TAMIL - சங்க இலக்கியத்தில்‌ அறம்‌

சங்க இலக்கியத்தில் அறம்

  • தமிழர் பொருள் ஈட்டி அறம்செய்து இன்புற்றனர்.
  • இல்வாழ்க்கையை அறவாழ்க்கையாகக் கொண்டனர்.
  • உலகே பரிசாகக் கிடைத்தாலும் பழிதரும் செயல்களைச் செய்ய மறுத்தனர்.
  • சங்க காலத்தில் அறத்தை மனித உறவின் மையமாகக் கொண்டிருந்தனர்.
  • சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம், சங்ககாலம்.

சங்க கால அறங்கள்

  • மனிதர்கள் அனைவரும் பொதுவிதியான “அறத்தை” ஏற்க வேண்டும்.
  • சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக்காலம் என்பர்.
  • அறநெறிக்கால அறங்கள் சமயம் சார்ந்தவை.
  • ஆனால், சங்க கால அறங்கள் இயல்பானவை, சமய சார்பற்றவை.

திறனாய்வாளர் ஆர்னால்டு

  • “கவிதை வாழ்க்கையின் திறனாய்வு” என்று கூறியவர் = திறனாய்வாளர் ஆர்னால்டு.

சங்க அறங்கள்

  • சங்ககால வாழ்க்கையில் இருந்து உருவான அறங்களே சங்க இலக்கியத்தில் பதிவு பெற்றுள்ளன.
  • சங்க அறங்கள் சமயங்களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை அல்ல.

அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை

  • அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது என சங்ககால மக்கள் நினைத்தனர்.
  • இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது எனக் கூறப்பட்டது.
  • இதனை, “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும், அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” – புறநானூறு
  • இப்புறநானூற்று பாடலின் மூலம் சங்ககால வள்ளல்களில் ஒருவரான ஆய் பற்றி ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அறம்

  • சங்ககாலத்தில் அரசனின் அறங்களாக குறிக்கப்பட்டவை = செங்கோல், வெண்கொற்றக்குடை.
  • “குற்றங்கள், அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று கூறிய புலவர் = ஊன் பொதிப் பசுங்குடையார்.
  • மதுரைக்காஞ்சி நூலில் அமைச்சர்களை பற்றி “நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும்” அமைச்சர் கடமை எனக் கூறுகிறது.
  • “செம்மை சான்ற காவிதி மாக்கள்” என்று அமைச்சர்களை “மாங்குடி மருதனார்” போற்றுகிறார்.
  • “காவிதி மாக்கள்” என்று மாங்குடி மருதனார் குறிப்பிடுவது = அமைச்சர்கள்.

அறம் கூறும் அவையம்

  • அறம் கூறும் அவையம் பற்றி “அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்” என்று புறநானூறு கூறுகிறது.
  • “அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.
  • இலக்கியங்கள் குறிப்பிடும் சிறப்பு பெற்ற அவையம் = உறையூரில் இருந்தது.
  • மதுரையில் இருந்த அவையம் பற்றி குறிப்பிடும் நூல் = மதுரைக்காஞ்சி.

போர் அறம்

  • போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.
  • போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு புறப்பாடல் கூறுகிறது.
  • போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் எனக் கூறும் நூல் = புறநானூறு.
  • தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.
  • எறியார் எறிதல் யாவணது எறிந்தோர், எதிர்சென்று எறிதலும் செல்லான் – புறம் 301
  • தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது எனக் கூறிய புலவர் = ஆவூர் மூலங்கிழார்.
  • தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது எனக் கூறியுள்ள நூல் = புறநானூறு
  • “எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.

கொடை

  • ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி.
  • அதாவது தன் மகிழ்ச்சியை மறப்பதுதான் மகிழ்ச்சி.
  • “செல்வத்துப் பயனே ஈதல்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = புறநானூறு.
  • “செல்வத்துப் பயனே ஈதல்” என்ற அடிகளை கூறிய புலவர் = மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
  • ஏழு கொடை வள்ளல்கள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள சங்க இலக்கியம் = சிறுபாணாற்றுப்படை.
  • எழுவரின் கொடைப் பெருமை சிறுபாணாற்றுப்படையிலும் புறநானூற்றின் பெருஞ்சித்திரனார் பாடலிலும் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
  • ஆற்றுப்படை இலக்கியங்கள், கொடை இலக்கியங்களாகவே உள்ளன.
  • பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகவே உள்ளது.
  • வள்ளல்கள் “இல்லோர் ஒக்கல் தலைவன்”, “பசிப்பிணி மருத்துவன்” என்றெல்லாம் போற்றப்பட்டனர்.

பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தன்

  • வழங்குவதற்குப் பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் கொடுக்கும் பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தனை நக்கீரர் பாராட்டுகிறார்.
  • பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தனை பாராட்டியவர் = நக்கீரர்.

புலவர் பெரும்பதுமனார்

  • வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்று பெரும்பதுமனார் குறிப்பிடுகிறார்.

வள்ளல் அதியன்

  • உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார் ஔவையார்.
  • “உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன்” என்று யாரை ஔவையார் குறிபிடுகிறார் = வள்ளல் அதியன்,

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

  • இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார் நச்செள்ளையார்.
  • இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்து கொடுப்பவன் என்று நச்செள்ளையார் குறிப்பிடுவது = ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

வள்ளல் பேகன்

  • பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார் பரணர்.
  • “மறுமை நோக்கிக் கொடுக்காதவன்” என்று பரணர் குறிப்பிடுவது = வள்ளல் பேகனை.
  • “பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன்” எனக் குறிப்பிடும் புலவர் = பரணர்.

வள்ளல் குமணன்

  • தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக் குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார்.

மலையமான் திருமுடிக்காரி

  • எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாராட்டுகிறார்.
  • எல்லாவற்றையும் கொடுப்பவன் என கபிலர் பாராட்டுவது = மலையமான் திருமுடிக்காரியை.
  • எல்லாவற்றையும் கொடுப்பவன் மலையமான் திருமுடிக்காரி எனக் கூறிய புலவர் = கபிலர்.

அக இலக்கியங்களில் ஈதல்

  • ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்றெல்லாம் கலித்தொகையில் கூறப்பட்டுள்ளது.
  • ஈதல் பற்றி குறிப்பிட்டுள்ள அக இலக்கிய நூல் = கலித்தொகை.
  • ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது எனக் கூறப்பட்டுள்ள அக இலக்கியம் = கலித்தொகை.

பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம்

  • வள்ளல்கள் மட்டுமன்றிப் புலவர்களும் ஈந்து மகிழ்ந்ததை இலக்கியம் பதிவு செய்துள்ளது.
  • தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் புறநானூற்றில் புலப்படுத்தப்பட்டிருக்கிறது.

உதவி

  • உதவி செய்தலை ஈழத்துப் பூதன் தேவனார் ‘உதவியாண்மை’ என்று குறிப்பிடுகிறார்.
  • உதவி செய்தலை “உதவியாண்மை” எனக் குறிப்பிட்ட புலவர் = ஈழத்துப் பூதன் தேவனார்.
  • பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல், சான்றவர்க்கு எல்லாம் கடன் – கலி.139
  • “பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = கலித்தொகை.
  • “பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்” என்று குறிப்பிடும் புலவர் = நல்லந்துவனார் கலித்தொகையில் குறிப்பிட்டுள்ளார்.
  • பிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி, உதவுதல் பற்றி நல்லந்துவனார் கலித்தொகையில் குறிப்பிட்டுள்ளார்.

நல்வேட்டனார்

  • ‘உண்மையான செல்வம் பிறர்துன்பம் தீர்ப்பது தான்’ என்கிறார் நல்வேட்டனார்.
  • “’உண்மையான செல்வம் பிறர்துன்பம் தீர்ப்பது தான்” எனக் கூறியவர் = நல்வேட்டனார்.
  • சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்நற்றிணை.

பெருங்கடுங்கோ

  • உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவு அழியும் என்று பெருங்கடுங்கோ குறிப்பிடுகிறார்.
  • இதனால்தான் ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவு’ என்கிறது தமிழ் இலக்கியம்.

சீன நாட்டுத் தாவோயியம்

  • ‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்று கூறுகிறது சீன நாட்டுத் தாவோயியம்.

வாய்மை

  • வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை, “பொய்யாச் செந்நா”,”பொய்படுபறியா வயங்கு செந்நா” என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
  • நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள்.
  • உண்மையின் கதவையும், துன்பத்தின் கதவையும் திறப்பது = நாக்கு.

பிழையா நன்மொழி

  • ‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையை நற்றிணை குறிப்பிடுகின்றது
  • “பிழையா நன்மொழி” என்று நற்றிணை குறிப்பிடுவது = வாய்மையை
  • “பிழையா நன்மொழி” எனக் குறிப்பிடும் நூல் = நற்றிணை.

முதல் தரமான அறங்கள்

  • மூன்றாம் தரமான அறங்கள் = தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் .அறம்
  • இரண்டாம் தரமான அறங்கள் = சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம்.
  • முதல் தரமான அறங்கள் = இயல்பாக அறியும் அறம்.
  • சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள், முதல் தரமானவை.

போதிதர்மர்

  • கி.பி.(பொ.ஆ.) ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப்பெயர்பூண்டு சீனாவுக்குச் சென்றார்.
  • பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவைப் போதித்தார்.
  • அதிலிருந்து உருவானதே “ஜென்” தத்துவம்.
  • இது, பின்னர் ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது.
  • போதி தருமருக்குச் சீனர்கள் கோவில் கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.