Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 17, 2026

7:54:00 AM

PSYCHOLOGY Question And Answer - 05

41. மாணர்களிடம் கவலை ஏற்படுத்தும் காரணி

A பெற்றோர்/ஆசிரியர்களின் அளவு கடந்த எதிர்பார்ப்புகள்

B குற்ற உணர்வுகள்

C கற்றல் குறைபாடுகள்

D இவை அனைத்தும்

42. மூன்று AAA யார் அறிந்து கடைப்பிடிக்க வேண்டும்?

A ஆசிரியர்

B மாணவர்

C பெற்றோர்

D நண்பன்

43. மனநலத்தின் வெளிப்படையான அறிகுறி?

A உற்சாகமான மனநிலை

B நல்ல உறக்கம்

C உணவில் திருப்தி

D இவை அனைத்தும்

44. மாணவர்களிடம் உணர்வுச் சமநிலைத் தோற்றுவிக்கும் காரணி

A அன்பும் பரிவும் கொண்ட ஆசிரியர்

B மகிழ்ச்சியான கற்றல் சூழல்

C ஆரோக்கியமான வகுப்பறை உறவுகள்

D இவை அனைத்தும்

45. தவறாமல் பள்ளிக்கு வருதல் என்பது?

A தன்னிணக்கம்

B சமூக இணக்கம்

C பள்ளி இணக்கம்

D இவை அனைத்தும்

46. ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிகாட்டாமல் மனதினுள் அடக்கி வைக்கப்படுவதால் ஏற்படுவது?

A சுவாச மண்ட நோய்

B தோல் நோய்

C ஜீரண மண்ட நோய்

D நாளமில்லாத சுரப்பி நோய்

47. குழந்தை பிறப்பதற்கு பின்னர் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மிக விரைவாகவும், பின்னர் மெதுவாகவும் நடைபெறுவது?

A நரம்பு மண்டல வளர்ச்சி

B மூளை வளர்ச்சி

C எலும்பு வளர்ச்சி

D முடி வளர்ச்சி

48. பிறக்கும் பொழுது குழந்தை மூளையின் நிறை

A 450 கிராம்

B 350 கிராம்

C 250 கிராம்

D 520 கிராம்

49. பருவமடைந்த பின்னர் மூளையின் அளவு 1,260 கிராம் முதல் --------- கிராம் வரையுள்ளது

A 1400 கிராம்

B 1500 கிராம்

C 1600 கிராம்

D 1300 கிராம்

50. மூளையின் வளர்ச்சி 90 சதவீதம் அடையும் வயது எது?

A 3

B 4

C 5

D 6

7:53:00 AM

PSYCHOLOGY Question And Answer - 04

31. குழந்தையின் தற்கருத்து வளர்ச்சியினை தீர்மானிக்கும் சமூக காரணி

A மரபுநிலை

B பெற்றோர்களின் மனப்பான்மை

C பிறப்பு வரிசை

D இவை அனைத்தும்

32. இதில் எரிக்சன் கோட்பாட்டின் மையக் கருத்து எது?

A உளவியல் - சமூக வளர்ச்சியில் 8 நிலைகள்

B குறிப்பிட்ட வளர்ச்சி சார்ந்த சிக்கல்கள் ஏற்படும்

C A மற்றும் B சரி

D அனைத்தும் தவறு

33. எரிக்சன் கோட்பாட்டின்படி இவற்றில் நிறையாளுமை பெற்றவரின் பண்பு?

A குற்ற உணர்வு

B தனிமை

C தன்னாட்சி

D தேக்கநிலை

34. எரிக்சன் கோட்பாட்டின்படி இவற்றில் குறையாளுமை பெற்றவரின் பண்பு எது?

A நெருக்கம்

B படைப்பூக்கம்

C தான் தொடங்காற்றல்

D தனிமை

35. மனவெழுச்சி என்பது

A மன உணர்ச்சிகளை மேலோங்கி நிற்கும் நனவு நிலை

B உள்ளத்தையும் உடலையும் கிளர்ச்சியடையச் செய்யும்

C நெருக்கடி நிலைகளில் சூழலை ஆதரித்தோ, எதிர்த்தோ அல்ல ஓடி ஒளியவோ ஒருவரைத் தூண்டும்

D இவை அனைத்தும்

36. இது வெறுப்புணர்ச்சியின் அடிப்படையில் அமைந்த மனவெழுச்சி இல்லை?

A சினம்

B அச்சம்

C பாசம்

D கவலை

37. ஓரளவு அச்சமும், சினமும் கலந்த சிக்கலான வீணான மனவெழுச்சி எது?

A சினம்

B பொறாமை

C. கவலை

D இவை அனைத்தும்

38. மாணவர்களிடம் அச்ச உணர்வு ஏற்படுத்தும் காரணி?

A எதையும் சரியாக புரிந்து கொள்ளாமை

B கூச்சம், அவமானம் தரும் நிலைமைகள்

C தன் மதிப்பை தாக்கும் சூழல்கள்

D இவை அனைத்தும்

39. நினைப்பதற்கும் நடப்பதற்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் எதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது?

A பொறாமை

B கவலை

C சினம்

D பயம்

40. அதிக அளவில் கவலைப்படுவதின் விளைவு

A தெளிவற்ற மனநிலை

B மாய ஒளி

C மாயத்தோற்றம்

D இவை அனைத்தும்

7:52:00 AM

PSYCHOLOGY Question And Answer - 03

21. எதிர்மறை தற்கருத்து இந்த எண்ணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது?

A அவநம்பிக்கை, வெறுப்பு

B தோல்வி, உணர்ச்சி, சந்தேகம்

C பாதுகாப்பற்ற உணர்வு

D இவை அனைத்தும்

22. குழந்தைகள் நாம் என்ற சமூக உணர்வினை இங்கு வளர்த்துக் கொள்கிறது

A குடும்பம்

B பள்ளி

C ஒப்பார்குழு மற்றும் உறவினர்கள்

D இவை அனைத்தும்

23. ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு குழுவை பற்றியோ உண்மை நிலை அறியாமல் அவசரப்பட்டு தவறான முடிவுக்கு வருவது

A நேர்மறை எண்ணங்கள்

B எதிர்மறை எண்ணங்கள்

C சார்பெண்ணங்கள்

D இவற்றில் எதுவுமில்லை

24. சகோதர உறவு என்பது

A ஒரு தாய் வயிற்றுப் பிறப்பாளர்கள்

B ஒரு மூல மரபினை உடையவர்கள்

C ஒரே தாய்தந்தை உடையவர்கள்

D இவை அனைத்தும்

25. தனித்துவ நிலை பறிக்கப்படுவதாக உணரும் குழந்தை

A முதலில் பிறந்த குழந்தை

B இரண்டாவது பிறந்த குழந்தை

C இரண்டு குழந்தையும்

D இவற்றில் எதுவுமில்லை

26. விளையாட்டுகள் மூலம் இந்த வளர்ச்சி ஏற்பட உதவுகிறது?

A அறிவு, உடல்

B மொழி, சமூகம்

C மனவெழுச்சி

D இவை அனைத்தும்

27. குழந்தைகள் இந்த வயது வரை புலன் - இயக்க விளையாட்டுகளை விரும்புகின்றனர்

A 1 வயது வரை

B 2 வயது வரை

C 3 வயது வரை

D 4 வயது வரை

28. இந்த விளையாட்டு முறையில் மாணவரோ, ஆசிரியரோ அல்லது சமுதாயமோ சந்திக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்?

A பாவனை நடிப்பு

B பங்கேற்பு நாடகம்

C வார்த்தை விளையாட்டு

D சொற்கோபுரம்

29. SWOT என்பது இதனை குறிக்கிறது?

A பயங்கள்

B சந்தர்ப்பங்கள்

C பலங்கள், பலவீனங்கள்

D இவை அனைத்தும்

30. ஒரு குழந்தையின் தற்கருத்து வளர்ச்சி எங்கு உருவாகின்றது?

A பள்ளி

B மைதானம்

C ஒப்பார்குழு

D குடும்பம்


7:32:00 AM

PSYCHOLOGY Question And Answer - 02

11. குழந்தைகளின் வளர்ச்சி என்பது எதன் பின்னணியை பொறுத்து வேறுபடுகின்றது?

A சமூக பின்னணி

B பொருளாதார பின்னணி

C அரசியல் பின்னணி

D A மற்றும் B

12.  இவற்றில் குறியீட்டுச் சிந்தனையில் தொடர்புடையது?

A வார்த்தைகள்

B எண்கள்

C உருவங்கள்

D இவை அனைத்தும்

13. குழந்தைகள் பள்ளிக்கு வரும் முன்னர் இந்த செயலில் ஈடுபடுகின்றனர்?

A பின்பற்றிச் செய்தல்

B பாவனை விளையாட்டு

C மொழியால் கருத்துப் பரிமாற்றம்

D இவை அனைத்தும்

14. குழந்தைகளின் குறியீட்டுச் சிந்தனைக்கு அவசியமானது?

A எண்ணுருக்கள்

B எழுத்துகள்

C உருவம்

D A மற்றும் B

15. ஒரு குழந்தை 7, 8 ஆண்டுகளில் வரிசைத் தொடர்பு கிராமப்படி சிந்திக்கத் தொடங்குகிறது என்று குறிப்பிட்டவர்?

A பியாஜே

B சர்ச்சில்

C எடிசன்

D யாருமில்லை

16. அறிதல் திறன் வளர்ச்சி எத்தனை படிநிலைகளில் நடைபெறுவதாக உளவியல் அறிஞர் பியாஜே கூறினார்? 

A 2

B 3

C 4

D 5

17. பியாஜே கூறும் புலன் இயக்கப் பருவம் என்பது?

A 0-2 ஆண்டுகள்

B 2-7 ஆண்டுகள்

C 7-12 ஆண்டுகள்

D 12 ஆண்டுகளுக்கு மேல்

18. மனிதன் வளர்ச்சி நிலையை எரிக்சன் எத்தனை படிநிலைகளாக கூறினார்?

A 4

B 5

C 7

D 8

19. எரிக்சனின் கூற்றுபடி குழந்தைகள் எந்த படிநிலையின் போது தொடக்கப் பள்ளிக்கு வருகின்றனர்?

A 5

B 6

C 4

D 3

20. உடன்பாட்டு தற்கருத்து இந்த உணர்வுகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றது?

A வெற்றி உணர்வு, அன்பு

B பாதுகாப்புணர்வு

C மரியாதை, நம்பிக்கை

D இவை அனைத்தும்

4:53:00 AM

10th TAMIL அரசுப் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான வினா - விடை கற்றல் கையேடு 2025-2026 - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வெளியீடு

Monday, February 16, 2026

7:30:00 AM

PSYCHOLOGY Question And Answer - 01



1.     உடல் வளர்ச்சி என்பது மனித உடலில் உள்ள எதனால் ஏற்படும் உயரம் மற்றும் எடை பெருக்கத்தை குறிக்கின்றது?

A. எலும்பும் தோலும்            

B. ரத்தமும் சதையும்

C. செல்களும் திசுக்களும்           

D. மூளையும் முடியும்

2.     எதன் அடிப்படையில் மனிதனின் வளர்ச்சியை பிரித்துள்ளனர்?

A. திசு வளர்ச்சி                 

B. மனித உடலின் வளர்ச்சி

C. முதிர்ச்சி                    

D. B மற்றும் C

3.     மனித வளர்ச்சி எத்தனை பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

A. 5            

B. 9            

C. 12            

D. 8

4.     ஆசிரியர்கள் கற்கும் குழந்தையை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் இந்த வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்?

            A. உடல், உள்ளம்
            B. மனவெழுச்சி
            C. சமூக மனப்பான்மை        

            D. இவையனைத்தும்

5.     பள்ளி முன் பருவம் என்பது எந்த பருவம்?

A. 0-1 ஆண்டுகள்                

B. 3-6 ஆண்டுகள்

C. 0-1 ஆண்டுகள்                

D. 6-10 ஆண்டுகள்

6.     பள்ளிப்பருவம் என்பது எந்த பருவம்?

A. 1-3 ஆண்டுகள்               

B. 3-6 ஆண்டுகள்

C. 0-1 ஆண்டுகள்               

D. 6-10 ஆண்டுகள்

7.     குமரப் பருவம் என்பது?

A. 20-40 ஆண்டுகள்              

B. 6-10 ஆண்டுகள்

C. 10-20 ஆண்டுகள்            

D. 3-6 ஆண்டுகள்

8.     மத்திய அரசும் மாநில அரசும் எத்தனை ஆண்டுகள் வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்க வழிவகை செய்துள்ளது?

A. 12 ஆண்டுகள்                

B. 13 ஆண்டுகள்

C. 14 ஆண்டுகள்               

D. 15 ஆண்டுகள்

9.     குழந்தையின் உடல் வளர்ச்சி முதலில் தலையிலிருந்து தொடங்கி .............. நோக்கி வருகின்றது?

A. பாதங்கள்    

B. வயிறு       

C. முகம்        

D. கரங்கள்

10.    தொடக்க கல்வி பயில பள்ளிக்கு வரும் போது குழந்தையின் எது 90 சதவீதம் வளர்ச்சி அடைந்துவிடுகிறது?

A. மூளை       

B. எலும்பு மண்டலம் 

C. நாக்கு 

D. நரம்பு மண்டலம்

6:25:00 AM

10TH TAMIL - அகப்பொருள் இலக்கணம்


ஐவகை நிலங்கள்

குறிஞ்சி மலையும் மலைசார்ந்த இடமும்

முல்லை காடும் காடு சார்ந்த இடமும்

மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல் கடலும் கடல்சார்ந்த இடமும்

பாலை சுரமும் சுரம் சார்ந்த இடமும்.


பெரும்பொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்)


1. கார்காலம் - ஆவணிபுரட்டாசி

2. குளிர்காலம் - ஐப்பசிகார்த்திகை

3. முன்பனிக் காலம் - மார்கழிதை

4. பின்பனிக் காலம் - மாசிபங்குனி

5. இளவேனிற் காலம் - சித்திரைவைகாசி

6. முதுவேனிற் காலம் - ஆனிஆடி


சிறுபொழுது (ஒரு நாளின் ஆறு கூறுகள்)


1. காலை - காலை 6 மணி முதல் 10 மணி வரை

2. நண்பகல் - காலை 10 மணி முதல் 2 மணி வரை

3. எற்பாடு - பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை

4. மாலை - மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

5. யாமம் - இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை

6. வைகறை - இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை.






1. ஐந்திணைகளின் தெய்வங்கள் 
  1. குறிஞ்சி – முருகன்
  2. முல்லை – திருமால்
  3. மருதம் – இந்திரன்
  4. நெய்தல் – வருணன்
  5. பாலை – கொற்றவை
2. ஐந்திணைகளின் மக்கள் 
  1. குறிஞ்சி – வெற்பன், குறவர், குறத்தியர்
  2. முல்லை – தோன்றல், ஆயர். ஆய்ச்சியர்
  3. மருதம் – ஊரன், உழவர், உழத்தியர்
  4. நெய்தல் – சேர்ப்பன், பரதன், பரத்தியர்
  5. பாலை – எயினர், எயிற்றியர்
3. ஐந்திணைகளின் உணவு 
  1. குறிஞ்சி – மலைநெல், தினை
  2. முல்லை – வரகு, சாமை
  3. மருதம் – செந்நெல், வெண்ணெல்
  4. நெய்தல் – மீன், உப்புக்குப் பெற்ற பொருள்
  5. பாலை – சூறையாடலால் வரும் பொருள்
4. ஐந்திணைகளின் விலங்கு 
  1. குறிஞ்சி – புலி, கரடி, சிங்கம்
  2. முல்லை – முயல், மான், புலி
  3. மருதம் – எருமை, நீர்நாய்
  4. நெய்தல் – முதலை, சுறா
  5. பாலை – வலியிழந்த யானை
5. ஐந்திணைகளின் பூக்கள் 
  1. குறிஞ்சி – குறிஞ்சி, காந்தள்
  2. முல்லை – முல்லை, தோன்றி
  3. மருதம் – செங்கழுநீர், தாமரை
  4. நெய்தல் – தாழை, நெய்தல்
  5. பாலை – குரவம், பாதிரி
6. ஐந்திணைகளின் மரங்கள்
  1. குறிஞ்சி – அகில், வேங்கை
  2. முல்லை – கொன்றை, காயா
  3. மருதம் – காஞ்சி, மருதம்
  4. நெய்தல் – புன்னை, ஞாழல்
  5. பாலை – இலுப்பை, பாலை
7. ஐந்திணைகளின் பறவைகள் 
  1. குறிஞ்சி – கிளி, மயில்
  2. முல்லை – காட்டுக்கோழி, மயில்
  3. மருதம் – நாரை, நீர்க்கோழி, அன்னம்
  4. நெய்தல் – கடற்காகம்
  5. பாலை – புறா, பருந்து
8. ஐந்திணைகளின் ஊர் 
  1. குறிஞ்சி – சிறுகுடி
  2. முல்லை – பாடி, சேரி
  3. மருதம் – பேரூர், மூதூர்
  4. நெய்தல் – பட்டினம், பாக்கம்
  5. பாலை – குறும்பு
9. ஐந்திணைகளின் நீர் 
  1. குறிஞ்சி – அருவி நீர், சுனைநீர்
  2. முல்லை – காட்டாறு
  3. மருதம் – மனைக்கிணறு, பொய்கை
  4. நெய்தல் – மணற்கிணறு, உவர்க்கழி
  5. பாலை – வற்றிய சுனை, கிணறு
10. ஐந்திணைகளின் பறை 
  1. குறிஞ்சி – தொண்டகம்
  2. முல்லை – ஏறு கோட்பறை
  3. மருதம் – மணமுழா, நெல்லரிகிணை
  4. நெய்தல் – மீன் கோட்பறை
  5. பாலை – துடி
11. ஐந்திணைகளின் யாழ்
  1. குறிஞ்சி – குறிஞ்சி யாழ்
  2. முல்லை – முல்லை யாழ்
  3. மருதம் – மருத யாழ்
  4. நெய்தல் – விளரி யாழ்
  5. பாலை – பாலை யாழ்
12. ஐந்திணைகளின் பண்
  1. குறிஞ்சி – குறிஞ்சிப்பண்
  2. முல்லை – முல்லைப்பண்
  3. மருதம் – மருதப்பண்
  4. நெய்தல் – செவ்வழிப்பண்
  5. பாலை – பஞ்சுரபண்
13. ஐந்திணைகளின் தொழில்கள்
  1. குறிஞ்சி – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்
  2. முல்லை – ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்
  3. மருதம் – நெல்லரிதல், களை பறித்தல்
  4. நெய்தல் – மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்
  5. பாலை – வழிப்பறி, நிரை கவர்தல்
பலவுள் தெரிக

1. கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.

i) குறிஞ்சி – 1. பேரூர், மூதூர்
ii) முல்லை – 2. பட்டினம், பாக்கம்
iii) மருதம் – 3. சிறுகுடி
iv) நெய்தல் – 4. குறும்பு
v) பாலை – 5. பாடி, சேரி

அ) 3, 4, 1, 2, 5
ஆ) 4, 3, 1, 5, 2
இ) 3, 2, 5, 1, 4
ஈ) 3, 5, 1, 2, 4

2. பொருத்தமான விடையைக் கண்டறிக.

i) குறிஞ்சி – 1. வற்றிய சுனை, கிணறு
ii) முல்லை – 2. மனைக்கிணறு, பொய்கை
iii) மருதம் – 3. காட்டாறு
iv) நெய்தல் – 4. அருவிநீர், சுனைநீர்
v) பாலை – 5. மணற்கிணறு, உவர்க்கழி

அ) 4, 3, 2, 5, 1
ஆ) 5, 4, 1, 2, 3
இ) 4, 3, 5, 1, 2
ஈ) 3, 4, 5, 2, 1

3. பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) முல்லை – வரகு, சாமை
ஆ) மருதம் – செந்நெல், வெண்ணெல்
இ) நெய்தல் – தினை
ஈ) பாலை – சூறையாடலால் வரும் பொருள்

4. முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுதினைத் தேர்ந்தெடு.

அ) கார்காலம்
ஆ) குளிர்காலம்
இ) முன்பனி
ஈ) பின்பனி

5. ஐந்திணைகளுக்கு உரியன 

i) முதற்பொருள்
ii) கருப்பொருள்
iii) உரிப்பொருள்

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) iii – மட்டும் சரி
ஈ) மூன்றும் சரி

6. பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கடலும் கடல் சார்ந்த இடமும்
ii) முல்லை – 2. வயலும் வயல் சார்ந்த இடமும்
iii) மருதம் – 3. காடும் காடு சார்ந்த இடமும்
iv) நெய்தல் – 4. மலையும் மலை சார்ந்த இடமும்

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 3, 1
ஈ) 3, 4, 2, 1

7. மணலும் மணல் சார்ந்த இடமும் – எத்திணைக்குரியது?

அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) நெய்தல்
ஈ) பாலை

8. பொழுது எத்தனை வகைப்படும்?

அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு

9. பொருத்திக் காட்டுக.

i) கார்காலம் – 1. மாசி, பங்குனி
ii) குளிர்காலம் – 2. மார்கழி, தை
iii) முன்பனிக்காலம் – 3. ஐப்பசி, கார்த்திகை
iv) பின்பனிக்காலம் – 4. ஆவணி, புரட்டாசி

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 3,1
ஈ) 3, 4, 2, 1

10. இளவேனிற் காலத்துக்குரிய மாதங்கள்

அ) ஆவணி, புரட்டாசி
ஆ) சித்திரை, வைகாசி
இ) ஆனி, ஆடி
ஈ) மார்கழி, தை


Question 11.
ஆனி, ஆடி முதலான மாதங்கள் ……………
அ) கார்காலம்
ஆ) குளிர்காலம்
இ) இளவேனிற்காலம்
ஈ) முதுவேனிற்காலம்
Answer:
ஈ) முதுவேனிற்காலம்

Question 12.
பொருத்திக் காட்டுக.
i) காலை – 1. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
ii) நண்ப கல் – 2. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
iii) எற்பாடு – 3. காலை 10 மணி முதல் 2 மணி வரை
iv) மாலை – 4. காலை 6 மணி முதல் 10 மணி வரை
அ) 4, 3, 2, 1|
ஆ) 2, 1, 3, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 13.
இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை உள்ள சிறுபொழுது ……………
அ) எற்பாடு
ஆ) மாலை
இ) யாமம்
ஈ) வைகறை
Answer:
இ) யாமம்

Question 14.
வைகறைக்குரிய கால நேரம்……………
அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
ஆ) காலை 6 மணி முதல் 10 மணி வரை
இ) காலை 10 மணி முதல் 2 மணி வரை
ஈ) இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
Answer:
அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

Question 15.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கார்காலம்
ii) முல்லை – 2. குளிர்காலம், முன்பனிக்காலம்
iii) மருதம், நெய்தல் – 3. இளவேனில், முதுவேனில், பின்பனி
iv) பாலை – 4. ஆறு பெரும்பொழுதுகள்
அ) 2, 1, 4, 3
ஆ) 4, 1, 3, 2
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 2, 1, 4, 3

Question 16.
நண்பகல் எத்திணைக்குரிய சிறுபொழுது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
ஈ) பாலை

Question 17.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. வைகறை
ii) முல்லை – 2. எற்பாடு
iii) மருதம் – 3. யாமம்
iv) நெய்தல் – 4. மாலை
அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 3, 4, 1, 2

Question 18.
திணைகளுக்குரிய தெய்வத்தைப் பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கொற்றவை
ii) முல்லை – 2. வருணன்
iii) மருதம் – 3. இந்திரன்
iv) நெய்தல் – 4. திருமால்
v) பாலை – 5. முருகன்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3,1
இ) 3, 2, 4, 5, 1
ஈ) 1, 2, 3, 4, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 19.
திணைகளுக்குரிய மக்களைப் பொருத்திக் காட்டுக.
i) வெற்பன் – 1. குறிஞ்சி
ii) தோன்றல் – 2. முல்லை
iii) ஊரன் – மருதம்
iv) சேர்ப்ப ன் – 4. நெய்தல்
v) எயினர் – 5. பாலை
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 3, 5, 4, 1, 2
ஈ) 1, 2, 3, 4, 5
Answer:
ஈ) 1, 2, 3, 4, 5

Question 20.
பொருத்திக் காட்டுக.
i) புலி – 1. பாலை
ii) மான் – 2. நெய்தல்
iii) எருமை – 3. மருதம்
iv) முதலை – 4. முல்லை
v) வலியிழந்த யானை – 5. குறிஞ்சி
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 2, 1, 4, 5, 3
ஈ) 4, 2, 3, 1, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 21.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. குரவம், பாதிரி
ii) முல்லை – 2. தாழை
iii) மருதம் – 3. தாமரை, செங்கழுநீர்
iv) நெய்தல் – 4. தோன்றி
v) பாலை – 5. காந்தள்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 1, 3
இ) 2, 3, 4, 1, 5
ஈ) 3, 1, 4, 2, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 22.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. அகில், வேங்கை
ii) முல்லை – 2. கொன்றை, காயா
iii) மருதம் – 3. காஞ்சி
iv) நெய்தல் – 4. புன்னை , ஞாழல்
v) பாலை – 5. இலுப்பை
அ) 1, 2, 3, 4, 5
ஆ) 2, 3, 1, 5, 4
இ) 3, 4, 2, 1, 5
ஈ) 5, 4, 3, 2, 1
Answer:
அ) 1, 2, 3, 4, 5

Question 23.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கடற்காகம்
ii) முல்லை – 2. காட்டுக் கோழி, மயில்
iii) மருதம் – 3. நாரை, நீர்க்கோழி, அன்னம்
iv) நெய்தல் – 4. கிளி, மயில்
v) பாலை – 5. புறா, பருந்து
அ) 4, 2, 3, 1, 5
ஆ) 5, 4, 3, 2, 1
இ) 4, 3, 1, 5, 2
ஈ) 3, 4, 2, 5, 1
Answer:
அ) 4, 2, 3, 1, 5

Question 24.
விளரி யாழ் எத்திணைக்கு உரியது?
அ) குறிஞ்சி
ஆ) மருதம்
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
இ) நெய்தல்

Question 25.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. துடி
ii) முல்லை – 2. மீன் கோட்பறை
iii) மருதம் – 3. மணமுழா
iv) நெய்தல் – 4. ஏறுகோட்பறை
v) பாலை
5. தொண்டகம்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 1, 3
இ) 3, 4, 5, 2, 1
ஈ) 3, 5, 1, 2, 4
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 26.
செவ்வழிப்பண், பஞ்சுரப்பண் முதலியனவற்றுக்குரிய திணைகள் முறையே
அ) நெய்தல், பாலை
ஆ) குறிஞ்சி, முல்லை
இ) மருதம், நெய்தல்
ஈ) மருதம், பாலை
Answer:
அ) நெய்தல், பாலை

Question 27.
முல்லை நிலமக்களின் உணவுப் பொருள்கள்
அ) வெண்நெல், வரகு
ஆ) மலைநெல், திணை
இ) வரகு, சாமை
ஈ) மீன், செந்நெல்
Answer:
இ) வரகு, சாமை