SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Friday, September 20, 2024
Saturday, December 9, 2023
12th தமிழ் வினா- விடை தொகுப்பு டால்பின் அமுத சுரபி புதிய பதிப்பு
PTA , அரசுத் தேர்வு வினாக்களுக்கு உரிய விடைகள் இணைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு அம்சங்கள்
பாட நூலின் வினா- விடை தொகுப்பு
பெற்றோர் ஆசிரியர் கழக (PTA) வினா- விடை
தொகுப்பு
அரசுத் தேர்வு வினா- விடை தொகுப்பு
மெல்ல கற்போருக்கான முழுமையான கையேடு

12th- புதிய பதிப்பு டால்பின் அமுதசுரபி -தமிழ்
👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD
Wednesday, November 16, 2022
12th Tamil 2nd Mid Term Test Original Question Paper 2022 Madurai District
Sunday, September 18, 2022
12th Tamil One Mark Question And Answer - Mr Boobathi
Friday, August 5, 2022
6 - 12 தமிழ் மதுரை மாவட்ட முதல் பருவத்தேர்வு - ஆகஸ்ட் 2022 வினாத்தாள்கள்
7th Std தமிழ் : Click here
8th Std தமிழ் : Click here
9th Std தமிழ் : Click here
10th Std தமிழ்: Click here
11th Std தமிழ்: Click here
12th Std தமிழ்: Click here
Sunday, July 31, 2022
12TH TAMIL FIRST MID TERM QUESTION PAPER
Friday, June 24, 2022
Thursday, May 5, 2022
12th Tamil public tentative Answer key 2022
Monday, April 18, 2022
12TH TAMIL Third Revision Test Question Paper - 2021-2022
Friday, February 11, 2022
12TH தமிழ் திருப்புதல் பொதுத்தேர்வு விழுப்புரம் மாவட்ட விடைக்குறிப்புகள்
Wednesday, September 29, 2021
Wednesday, August 18, 2021
12th STD TAMIL UNIT 1 TEST QUESTION PAPER - VILLUPURAM DIST
Tuesday, August 10, 2021
12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒப்படைப்பு வினாத்தாளுக்கான விடைகள் முழுமையும்
இயல் 1
பகுதி - அ
1. பலவுள் தெரிக.
1. 'இளந்தமிழே' என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்?
அ) வைரமுத்து
ஆ) சிற்பி பாலசுப்ரமணியம்
இ) கண்ணதாசன்
ஈ) பாரதியார்
விடை : ஆ.சிற்பி பாலசுப்ரமணியம்
2. 'இளந்தமிழே' என்னும் நூல் எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
அ) ஒரு கிராமத்து நதி
ஆ) நிலவுப்பூ
இ) ஒளிப்பறவை
ஈ) சர்ப்பயாகம்
விடை : ஆ . நிலவுப்பூ
3. சிற்பியின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் எது?
அ) நிலவுப்பூ
ஆ) சூரியநிழல்
இ) ஒரு கிராமத்து நதி
ஈ) ஒளிப்பறவை
விடை : இ ) ஒரு கிராமத்து நதி
4. 'அலையும் சுவடும்' என்னும் உரைநடை நூலின் ஆசிரியர் யார்?
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) தி.சு. நடராசன்
விடை : இ ) சிற்பி பாலசுப்ரமணியம்
5. "மீண்டு மந்தப் பழமைநலம் புதுக்குதற்கு"- கவிஞர் குறிப்பிடும் பழைமை நலம்,
1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
2) பொதிகையில் தோன்றியது
3) வள்ளல்களைத் தந்தது
அ) 1 மட்டும் சரி
ஆ)1, 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி
ஈ) 1,3 மட்டும் சரி
விடை : ஈ ) 1 , 3 மட்டும் சரி
6. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்
அ) யாப்பருங்கலக்காரிகை
ஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம்
ஈ) நன்னூல்
விடை : இ ) தொல்காப்பியம்
7. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழி"-
இவ்வடிகள் பயின்று வந்துள்ள தொடை நயம்
அ) அடிமோனை, அடி எதுகை
ஆ) சீர் மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை, சீர் மோனை
ஈ) சீர் எதுகை, அடி மோனை
விடை : இ ) அடிஎதுகை , சீர் மோனை
1 ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க:
பாரதியின் கடிதம் - மொழிப்பற்று, சமூகப்பற்று
முன்னுரை
உறவுக்கு, அறிவுறுத்தலுக்கு, வேண்டுதலுக்கு, வணிகத்திற்கு என்று கடிதங்கள் எழுதுகையில் அவற்றின் மொழியாட்சி மாறுபடுகிறது. கடிதவடிவில் சொல்லவேண்டியவற்றை வெளியிடும் முறை உண்டு. கடிதங்களை இலக்கியமாக்கும் எழுத்தாளர்கள், மொழிக்கு அதன் வழியாகத் தனி அழகை உருவாக்கித் தருகிறார்கள். தனிப்பட எழுதும் கடிதங்களிலும் ஈர்க்கும் மொழியில் அழுத்தமான எண்ணங்களைத் தந்து அவற்றைப் பொது வெளிக்கு உரியதாக்குபவர்களும் இருக்கிறார்கள், காலத்தின் குரல்களான அக்கடிதங்களில் மொழி, வீறுபெறுகிறது.
தமிழில் புதுமை பூக்க வேண்டும்
நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை.
2 ) . தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்தெழுது.
தமிழின் சீரிளமைத் திறம் - சிற்பி பாலசுப்பிரமணியம்
முன்னுரை
கவி பாரதி தமிழின் தொன்மையை, “என்று பிறந்தவள் என்று அறியாத இயல்பினள் எங்கள் தமிழ்த்தாய்” என்றார். இத்தகைய தொன்மைச் சிறப்பும், பன்மைச் சிறப்பும் மிகுந்த தமிழ் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனப் பல்வேறு இலக்கணச் சிறப்புக்களைப் பெற்றுள்ளது. எனவே ஒரு வரையறைக்குள் வரம்பு கடவாது படைப்பிலக்கியங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. காலத்திற்கேற்ப சில புதிய வரவுகளும் உண்டு. எனவே சீரிளமைத்திறம் பெற்றுச் சிறப்புடன் விளங்குகிறது.
பொருளுரை: ஏற்ற துணை இல்லை
செம்பரிதி மலைமுகட்டில் தவழ்ந்து கீழிறங்கி மேலைக் கடலில் தலைசாய்க்கத் தொடங்குகிறான். அந்திவானம் செந்நிறக் காட்சியால் பூக்காடாகத் திகழ்கிறது. அந்தச் செவ்வானம் போல் சிவந்த கையுடன் உழைப்பாளர் மனம் நோக உழைத்துவிட்டு இல்லம் திரும்புகின்றனர்.
அவர்கள் உழைப்பால் சிந்திய வியர்வைத் துளிகள் தோள் மீது விம்மி முத்துக்களாய்க் காட்சி தருகின்றன. அவர்தம் உழைப்பின் பரிசாகக்கவிஞரால் தமிழ்த் துணையோடு வியந்துபாடத்தான் முடிந்தது. இதனை நீயே சொல்வாய் எனத் தமிழை விளிக்கிறார்.
முத்தமிழின் சுவை
கவிஞர் உள்ளத்தில் எழும் உணர்ச்சி எனும் வேருக்கு உணவாய் தமிழ் உள்ளதாகக் கூறுகிறார்.
முன்பு ஒருநாள் பாண்டிய மன்னர்தம் மனத்தில் இத்தகைய வெறி உணர்வு தோன்றியதால் உருவானதுதான் முத்தமிழ் வளர்க்கும் மூன்று சங்கம். தமிழ் தவழும் தமிழ்நாடே! நீ பாரி முதல் கடையெழு வள்ளல்களையும், புரவலர்களையும் இவ்வுலகிற்குக் கொடுத்தாய்.
மீண்டும் அந்தப் பழமைக்காலம் தமிழ்ப்படைப்பில், தமிழ்ப் பண்பாட்டில் நிலைக்க வேண்டும். அதைத் தமிழ்க்குயில் இன்னிசையோடு கூவவேண்டும்.
கூண்டினை உடைத்து எழும் சிங்கம் போலக் குளிர் பொதிகையில் தவழும் தென்தமிழே தமிழன் புதுமெருகுடன், தமிழ் புது வேகத்துடன் துள்ளித்திரிகிறது எனப் பாடத்தமிழே வா! வா! எனக் கவிஞர் அழைக்கிறார்.
முடிவுரை
“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்” என்றார் தமிழ்விடு தூது ஆசிரியர். இத்தகைய அமிழ்தினும் இனிய தமிழ் அறிவியல் தகவல் தொழில் நுட்பத்திற்கேற்ப புதிய வரவுகளைத் தமிழ் உலகுக்குத் தரவேண்டும், என்பதே கவிஞரின் அவா! அவர்தம் அவாவினை இளந்தமிழே! என்ற இனிய தலைப்பில் கவிதை வரிகளாய்க் கனிச் சாறாய்க் கொடுத்துள்ளார்.
