Breaking

Tuesday, May 5, 2026

7TH SOCIAL SCIENCE Question And Answer - 04


கோவில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள்

1. மத்தியப்பிரதேசத்தில் உள்ள சிறந்த நினைவுச் சின்னமான கோவில்: கஜுராகோ கோவில்.

2. ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவில்: தில்வரா கோவில்.

3. பந்தேல்கண்டிலுள்ள கஜுராகோ வளாகத்தில் உள்ள கோவில்கள்: 30 கோவில்கள்.

4. ஓசியான் என்னுமிடத்தில் உள்ள இந்து மற்றும் சமணக் கோவில்கள்: பதினாறு.

பக்தி இயக்கங்கள் மற்றும் இலக்கியங்கள்

1. தேவாரம் தொகுக்கப்பட்டது: நம்பியாண்டார் நம்பியால்.

2. விஜய நகர பேரரசுடன் தொடர்புடைய கங்கா தேவியால் இயற்றப்பட்ட இலக்கியம்: மதுரா விஜயம்.

3. கிருஷ்ணதேவராயர் இயற்றிய இலக்கியம்: அமுக்த மால்யதா.

4. சோழர்களின் காலம்: பக்தி இலக்கியங்கள் காலம்.

5. நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் தொகுக்கப்பட்டது: நாதமுனி.

6. திருமுறை: 12 நூல்களைக் கொண்டுள்ளது.

7. வட இந்தியாவில் பக்திச் சிந்தனையை மக்கள் இயக்கமாக மாற்றியவர்: இராமாநந்தர்.

8. மீராபாய் யாருடைய சீடர்: ரவிதாஸ்.

9. துளசிதாசர் இந்தி மொழியில் எழுதிய இராமனின் கதை: இராமசரிதமானஸ்.

வரலாற்று நூல்கள் மற்றும் அறிஞர்கள்

1. குத்புதின் ஐபக் பற்றிய பல செய்திகளைக் குறிப்பிடும் 'தாஜ்-உல்-மா-அசிர்' நூலின் ஆசிரியர்: ஹசன் நிஜாமி.

2. டெல்லி சுல்தான்களின் வரலாற்றைக் கூறும் முதல் நூல்: தாஜ்-உல்-மா-அசிர்.

3. 16 ஆம் நூற்றாண்டில் 'அயினி அக்பரி' மற்றும் 'அக்பர் நாமா' ஆகிய நூல்களை எழுதியவர்: அபுல் பாசல்.

4. ஜாஹாங்கீரி எழுதிய நூல்: தசுக் - இ-ஜாஹங்கீரி.

5. தபகத்-இ-அக்பரி எனும் நூல் எழுதியவர்: நிஜாமுதீன் அகமத்.

6. கஜினி மாமூதின் படையெடுப்பின் போது அவருடன் இந்தியா வந்து பத்து ஆண்டுகள் தங்கியிருந்த அறிஞர்: அல்-பரூனி.

7. இபன் பதூதா எந்த நாட்டைச் சேர்ந்த அறிஞர்: மொராக்கோ.

8. 1443 இல் மத்திய ஆசியாவின் ஹீரட் நகரிலிருந்து விஜயநகருக்கு வந்த பயணி: அப்துர் ரஸாக்.

9. 1522 ஆம் ஆண்டில் விஜயநகர் வந்த போர்த்துகீசியப் பயணி: டோமிங்கோ பயஸ்.

10. தாரிக்-இ-பிரோஷாகி என்ற நூலை எழுதியவர்: ஜியா-உத்- பரணி.



பொதுத் தகவல்கள்

1. தாரிக் அல்லது தாகுயூக் என்ற அராபியச் சொல்லின் பொருள்: வரலாறு.

2. தபகத் என்ற அராபியச் சொல்லின் பொருள்: தலைமுறைகள் அல்லது நூற்றாண்டு.

3. கலீஃபா என்பதன் பொருள்: இறைதூதர் முகமது நபிகளின் பிரதிநிதி.

4. முகமது பின் காசிமால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட சிந்துவின் அரசர்: தாகீர்.

5. சதுரங்க விளையாட்டை மேலைநாட்டவர்களும் அராபியர்களும் யாரிடமிருந்து கற்றுக்கொண்டனர்: இந்தியர்களிடமிருந்து.

6. 1001ஆம் ஆண்டு மாமூதால் தோற்கடிக்கப்பட்டு தன்னைத்தானே மாய்த்துக்கொண்ட ஷாகி அரசர்: ஜெயபாலர்.

7. சோமநாதபுரம் கோவிலைக் கொள்ளையடித்த அரசர்: கஜினி மாமூது.

8. இந்தியாவில் முதல் இஸ்லாமிய அரசை ஆஜ்மீரில் நிறுவியவர்: முகமது கோரி.

9. திபெத்தில் பௌத்தம் நிறுவப்பட காரணமாக இருந்தவர்கள்: பாலர்களின் சமயப் பரப்பாளர்கள்.

10. அதிசா என்பவர்: பௌத்தத் துறவி மற்றும் விக்கிரமசீலா மடாலயத்தின் தலைவர்.



No comments:

Post a Comment