Breaking

Saturday, April 4, 2026

9TH TAMIL - தண்ணீர்


நூல் வெளி 

கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றியவர். கவிதைகளையும் எழுதியிருக்கிறார். சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன் முதலியவை இவரது குறிப்பிடத் தகுந்த சிறுகதைத் தொகுப்புகள்.

  • தண்ணீர் சிறுகதையின் வரும் சிறுமி = இந்திரா.
  • நல்ல தண்ணீர் கிடைத்த கிணறு = உலகம்மாள் கோவில் கிணறு.
  • இந்திராவின் ஊருக்கு அருகே உள்ள ஊர் = பிலாப்பட்டி.
  • “தண்ணீர்” என்னும் சிறுகதையின் ஆசிரியர் = கந்தர்வன் என்னும் நாகலிங்கம்.
  • கந்தர்வனின் இயற்பெயர் = நாகலிங்கம்.
  • இவர் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
  • தமிழ்நாடு அரசின் கருவூல கணக்குத்துறையில் பணியாற்றியவர்.
  • கந்தர்வனின் சிறுகதைகள் = தண்ணீர், சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன்.
  • மறைநீர் (Virtual Water) அல்லது “புலப்படாத் தண்ணீர்”.
  • கண்ணுக்குத் தெரியாமல் நாம் இரண்டு வகையில் நீரைப் பயன்படுத்துகிறோம்.
  • முதல் வகை நாம் பயன்படுத்தும் பொருள்கள் வழியாக; இரண்டாவது வகை நாம் உண்ணும் உணவின் வழியாக.
  • “புலப்படாத் தண்ணீர்” என்பது உணவுப் பொருள்களின் உற்பத்தி குறித்தும் அதனை உற்பத்தி செய்யச் செலவிடப்பட்ட தண்ணீர்த் தேவை குறித்தும் பேசுவது ஆகும்.
  • ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய 822லிட்டர் தண்ணீர் தேவை.
  • ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய 1780லிட்டர் தண்ணீர் தேவை.
  • ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 2500 லிட்டர் தண்ணீர் தேவை.
  • ஒரு கிலோ காப்பிக் கொட்டையை உற்பத்தி செய்ய 18,900 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது.
  • நீர்வளத்தைப் பாதுகாக்க நாட்டின் மேல்புற நீர்வளம் மற்றும் நிலத்தடி நீர்வளம் குறித்து அக்கறை கொள்ளவேண்டும்.
  • நீர் அதிகம் தேவைப்படும் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதைத் தவிர்த்து, தேவைக்கேற்ப இறக்குமதி செய்துகொள்ள வேண்டும்.
  • இதனால் நாட்டின் நிலத்தடி நீரும் ஆற்று நீரும் சேமிக்கப்படும்.
  • “கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்” என்ற நூலின் ஆசிரியர் = மா.அமரேசன்.
  • “தண்ணீர் தண்ணீர்” நாவலின் ஆசிரியர் = கோமல் சுவாமிநாதன்
  • “தண்ணீர் தேசம்” கவிதை நூலின் ஆசிரியர் = கவிஞர் வைரமுத்து
  • “வாய்க்கால் மீன்கள்” நூலின் ஆசிரியர் = வெ.இறையன்பு.
  • “மழைக்காலமும் குயிலோசையும்” நூலின் ஆசிரியர் = மா.கிருஷ்ணன்.

1. கந்தர்வனின் இயற்பெயர்

அ) மாணிக்கம்    

ஆ) நாகலிங்கம்

இ) முகிலன்    

ஈ) காத்தவராயன்

2. கந்தர்வனின் சிறுகதைத் தொகுப்பு அல்லாத ஒன்று.

அ) சாசனம்    

ஆ) ஒரு சிறு இசை

இ) ஒவ்வொரு கல்லாய்  

ஈ) கொம்பன்

No comments:

Post a Comment