
வான் உட்கும் வடிநீண் மதில்,
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்றுஅதன்
தகுதி கேள்இனி மிகுதி ஆள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!*
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே ! அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே;
நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம ! இவண் தட்டோரே!
தள்ளாதோர் இவண் தள்ளா தோரே! - (புறம் 18:11 – 30)
(பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது)
திணை: பொதுவியல் துறை: முதுமொழிக்காஞ்சி
- யாக்கை - உடம்பு,
- புணரியோர் - தந்தவர்,
- புன்புலம் - புல்லிய நிலம்,
- தாட்கு - முயற்சி, ஆளுமை;
- தள்ளாதோர் இவண் தள்ளாதோரே - குறைவில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்.
- மூதூர், நல்லிசை, புன்புலம் - பண்புத்தொகைகள்;
- நிறுத்தல் - தொழிற்பெயர் ;
- அமையா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
- நீரும் நிலமும், உடம்பும் உயிரும் - எண்ணும்மைகள்;
- அடு போர் - வினைத்தொகை.
- கொடுத்தோர் - வினையாலணையும் பெயர்.
நிறுத்தல் - நிறு + த் + தல்
நிறு - பகுதி
த் - சந்தி
தல் - தொழிற்பெயர் விகுதி
கொடு - பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி
புறநானூறு பொன்மொழிகள்
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!
உண்பது நாழி உடுப்பவை இரண்டே ! (புறம் – 189)
யாதும் ஊரே யாவரும் கேளிர் ! ( புறம் – 192 )
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே ! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ! ( புறம் – 312)
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே ! ( புறம் – 183 )
- “நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
- “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
- “உண்டி முதற்றே உணவின் பிண்டம்” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
- “உணவெனப் படுவது நிலத்தொடு நீரே” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
- “நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
1.
‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே’ என்னும் பாடலடி இடம்பெற்ற இலக்கியம்.
அ) புறநானூறு
ஆ) மணிமேகலை
இ) திருமந்திரம்
ஈ) திருக்குறள்
2.
‘நீரும் நிலமும் புணரியோர் ஈண்டு, உடம்பும் உயிரும் படைத்திசி னோரே’ எனும் அடிகளின்
பாடலாசிரியர்.
அ) மாங்குடி மருதனார்
ஆ) குடபுலவியனார்
இ) காரியாசான்
ஈ) காக்கைபாடினியார்
3.
‘உணவெனப் படுவது நிலத்தொடு நீரே’ எனக் கூறியவர்
அ) மாங்குடி மருதனார்
ஆ) குடபுலவியனார்
இ) காரியாசான்
ஈ) கபிலர்
4.
‘உண்பது நாழி உடுப்பது இரண்டே’ எனக் கூறும் நூல்
அ) புறநானூறு
ஆ) கொன்றைவேந்தன்
இ) திருமந்திரம்
ஈ) திருக்குறள்
5.
‘கொடுத்தோர்’ – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அ) பகுதி+விகுதி
ஆ)
பகுதி+இடைநிலை+விகுதி
இ) பகுதி+சந்தி+இடைநிலை+விகுதி
ஈ) பகுதி+சந்தி+இடைநிலை+சாரியை+விகுதி
6.
‘குளம்தொட்டுக் கோடு பதித்து’ எனக் கூறும் நூல்.
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) சிறுபஞ்சமூலம்
7.
‘மல்லல் மூதூர் வயவேந்தே’ இவ்வடியில் ‘மல்லல்’ என்பதன் பொருள்.
அ) மறுமை
ஆ) பூவரசு
இ) வளம்
ஈ) பெரிய
8.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க.
அ) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்.
ஆ) சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே.
இ) பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்.
ஈ) யாதும் ஊரே யாவரும் கேளிர்.
9.
‘அடுபோர்’ - இலக்கணக் குறிப்பு தருக.
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) பெயரெச்சம்
ஈ) எண்ணும்மை
10.
பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்வது.
அ) பதிற்றுப் பத்து
ஆ) புறநானூறு
இ) பரிபாடல்
ஈ) கலித்தொகை




No comments:
Post a Comment