எழுத்துகள் தனித்து நின்றும் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தருவது சொல்.
எழுத்துகள் தனித்து நின்று பொருள் தருவது ஈ, வா, போ, பூ, பை, மை
எழுத்துகள் இணைந்து பொருள் தருவது கல், கடல், தங்கம்.
இலக்கண அடிப்படையில் சொற்களை நான்கு வகையாகப் பிரிப்பர். அவை, பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பனவாகும்.
பெயர்ச்சொல்
ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
(எ.கா.) பாரதி,பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.
வினைச்சொல்
ஒன்றின் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
(எ.கா.) வா,போ, எழுது, விளையாடு
இடைச்சொல்
பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது.
( எ.கா ) உம் - தந்தையும் தாயும்
மற்று - மற்றொருவர்
ஐ - திருக்குறளை
உரிச்சொல்
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்.
(எ.கா.) மா - மாநகரம்
சால - சாலச்சிறந்தது




No comments:
Post a Comment