Breaking

Saturday, April 4, 2026

9TH TAMIL - மார்கழிப் பெருவிழா



நூல் வெளி

திருப்பாவை

  • திருப்பாவை திருமாலை முழுமுதற் கடவுளாகக்கொண்ட வைணவ சமயத்தில் ஆழங்கால்பட்ட பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள்.
  • திருப்பாவையை இயற்றிய இவர் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவர்.
  • சுடர்க்கொடி என சூடிக்கொடுத்த அழைக்கப்படுகிறார்.
  • முப்பது பாடல்கள் கொண்ட இந்நூலில் ஏழாவது பாடல் நம் பாடப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

திருவெம்பாவை

  • சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவ சமயத்தில், சமயக்குரவர் எனம் போற்றப்படும் நால்வருள் மாணிக்கவாசகரும் ஒருவர்.
  • இவர் திருவாதவூரில் பிறந்ததால் திருவாதவூரடிகள் என அழைக்கப்படுகிறார்.
  • இவர் அருளிச்செய்த திருவாசகத்தில் உள்ள பதிகம் திருவெம்பாவை.
  • இருபது பாடல்கள் கொண்ட திருவெம்பாவையில் நான்காவது பாடல் நமது பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளது,

சொல்லும் பொருளும்

  1. ஆனைச்சாத்தன் – கரிக்குருவி
  2. அரவம் – ஓசை
  3. கைபேர்த்து – கைஅசைத்து
  4. குழல் – கூந்தல்
  5. நகை – சிரிப்பு
  6. புலர்ந்தின்றோ – விடியவில்லையோ?
1. திருப்பாவையை இயற்றியவர்
  • மாணிக்கவாசகர்
  • ஆண்டாள்
  • சுந்தரர்
  • பெரியாழ்வார்
2. திருப்பாவையிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை
  • முப்பது
  • இருபது
  • நாற்பது
  • எழுபது
3. திருவெம்பாவையிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை
  • பத்து
  • முப்பது
  • நாற்பது
  • இருபது
4. திருவாதவூரடிகள் என அழைக்கப்படுகிறவர்?
  • மாணிக்கவாசகர்
  • ஆண்டாள்
  • சுந்தரர்
  • பெரியாழ்வார்
5. பொருந்தாத தொடரைக் கண்டறிக
  • பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாளும் ஒருவர்
  • சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆண்டாள் அழைக்கப்படுகிறார்.
  • திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள்
  • நம்மாழ்வாரின் மகளாவார் ஆண்டாள்

No comments:

Post a Comment