Breaking

Thursday, April 23, 2026

8TH TAMIL - வினையால் அமையும் தொடர்கள்


தன்வினை என்றால் என்ன

  • “எழுவாய்” ஒரு வினையை (செயல்) செய்தால் அது தன்வினை எனப்படும்.
  • எ.கா;
    • பந்து உருண்டது.

பிறவினை என்றால் என்ன

  • “எழுவாய்” ஒரு வினையை செய்ய வைத்தால் அது பிறவினை எனப்படும்.
  • எ.கா:
    • உருட்ட வைத்தான்.
  • பிறவினைகள் “வி, பி” போன்ற “விகுதி”களைக் கொண்டும் “செய், வை, பண்ணு” போன்ற “துணை வினைகளை” இணைத்தும் உருவாக்கப்படுகின்றன.

செய்வினை என்றால் என்ன

  • செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை “செய்வினை” எனப்படும்.
  • எ.கா:
    • அப்பா சொன்னார்.
    • பாட்டு பாடுகிறாள்.

செயப்பாட்டுவினை என்றால் என்ன

  • செயப்படுபொருளை முதன்மைப் படுத்தும் வினை செயப்பாட்டு வினை எனப்படும்.
  • எ.கா:
    • தோசை வைக்கப்பட்டது.
    • பாட்டுப் (அவளால்) பாடப்பட்டது.

செய்வினை செயப்பாட்டுவினை

  • செயப்பாட்டுவினைத் தொடரில் சேரும் “துணைவினைகள்” = படு, உண், பெறு, ஆயிற்று, போயிற்று, போனது.
  • எ.கா:
    • கோவலன் கொலையுண்டான்.
    • ஓவியம் குமாரனால் வரையப்பட்டது.
    • வீடு கட்டியாயிற்று.
    • சட்டி உடைந்து போயிற்று.
    • பணம் காணாமல் போனது.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. இத்தொடரிலுள்ள வினைமுற்று --------

அ) மாடு

ஆ) வயல்

இ) புல்

ஈ) மேய்ந்தது

[விடை : ஈ) மேய்ந்தது]

 

2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று

அ) படித்தான்

ஆ) நடக்கிறான்

இ) உண்பான்

ஈ) ஓடாது

[விடை : அ) படித்தான்]

 

3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்

அ) செல்க

ஆ) ஓடு

இ) வாழ்க

ஈ) வாழிய

[விடை : ஆ) ஓடு]

No comments:

Post a Comment