
வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!*
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே! - பாரதியார்
நிரந்தரம் - காலம் முழுமையும்
வைப்பு - நிலப்பகுதி
சூழ்கலி - சூழ்ந்துள்ள அறியாமை இருள்
வண்மொழி - வளமிக்கமொழி
இசை - புகழ்
தொல்லை - பழமை, துன்பம்
1. ‘சிந்துக்குத்
தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம்பாட வந்த அறிஞன், மறம்பாடவந்த மறவன்’ என்றெல்லாம்
பாரதியாரைப் புகழ்ந்தவர்.
அ) பாரதிதாசன்
ஆ) சுரதா
இ) வாணிதாசன்
ஈ) து.
அரங்கன்
2. பாரதியாரின்
உரைநடை நூல் எது?
அ) பூலோகரம்பை
ஆ) சந்திரிகையின் கதை
இ) சின்ன சங்கரன் கதை
ஈ) ஆறில் ஒரு பங்கு
3. ‘மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே’ –
என்ற பாடலடியைப் பாடியவர்.
அ) பாரதிதாசன்
ஆ) சுரதா
இ) வாணிதாசன்
ஈ) து. அரங்கன்
4. ‘வைப்பு’
- என்பதன் பொருள்
அ) நிலப் பகுதி
ஆ) கடல் பகுதி
இ) காட்டுப் பகுதி
ஈ) மலைப் பகுதி
5. பாரதியார்
நடத்திய இதழின் பெயர் எது?
அ) குயில்
ஆ) விஜயா
இ) அகரம்
ஈ) அக்கினி




No comments:
Post a Comment