Breaking

Saturday, April 25, 2026

6TH SOCIAL SCIENCE Question And Answer - 10


கண்டங்கள் பற்றிய தகவல்கள் - ஆசியா

1. ஆசியா கண்டம் உலகின் பரப்பளவில் மற்றும் மக்கள் தொகையில் எவ்வளவு சதவீதத்தை உள்ளடக்கியது?

விடை:  பரப்பளவில் 30 சதவீதம், மக்கள் தொகையில் 60 சதவீதம்.

2. ஆசியா கண்டத்தில் மொத்தம் எத்தனை நாடுகள் உள்ளன?

விடை:  48 நாடுகள்.

3.ஆசியாவிலேயே மிகவும் பரந்து காணப்படும் தாழ்நிலமான சைபீரியச் சமவெளி எந்த இரு மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது?

விடை:  யூரல் மலைகளுக்கும் வெர்கோயான்ஸ்க் மலைத்தொடருக்கும் இடையே.

4.ஆசியாவில் அமைந்துள்ள உலகின் மிகவும் தாழ்வான பகுதி எது?

விடை:  சாக்கடல்.

5.திபெத் பீடபூமி 'உலகின் கூரை' என்பதைத் தவிர வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

விடை:  மூன்றாம் துருவம்.

6.கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் எந்த மலைத்தொடர்களில் அமைந்துள்ளன?

விடை:  கைபர் - சுலைமான் மலைத்தொடர், போலன் - டோபா காகர் மலைத்தொடர்.

ஆசியாவில் காணப்படும் தெற்கு பீடபூமிகளில் மிகப்பெரிய பீடபூமி எது?

விடை:  அரேபிய பீடபூமி.

7.சீனாவின் மின்சார தேவையில் 10 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் முப்பள்ளத்தாக்கு நீர்த் தேக்கம் எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

விடை:  யாங்சி ஆறு.

8.ஆசியாவில் அமைந்துள்ள மிகவும் குளிர்ந்த பாலைவனங்கள் எவை?

விடை:  கோபி மற்றும் தக்லாமக்கன் பாலைவனங்கள்.

9.உலகின் மிகத் தொடர்ச்சியான மணற்பாங்கான பாலைவனமான 'ரூப-அல்-காலி' எங்கு காணப்படுகிறது?

விடை:  சௌதி அரேபியாவின் தென்கிழக்குப் பகுதியில்.

10.உலகிலேயே அதிக நிலக்கரி இருப்பைக் கொண்ட கண்டம் எது?

விடை:  ஆசியா கண்டம்.

11.உலகிலேயே அதிக அளவில் மைக்காவினை உற்பத்தி செய்யும் நாடு எது?

விடை:  இந்தியா.

12.ஆசியாவின் மொத்தப் பரப்பளவில் சுமார் எத்தனை சதவிகிதம் மட்டுமே வேளாண்மைக்கு ஏற்ற நிலமாகக் காணப்படுகிறது?

விடை:  18 சதவிகிதம்.

13.பனாப் படிக்கட்டு முறை நெல் விவசாயம் 2000 ஆண்டுகளுக்கு முன் எந்த நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டது?

விடை:  பிலிப்பைன்ஸ் (இப்கௌஸ் மக்கள்).

14.கம்போடியாவில் உள்ள உலகின் மிகச் சிறந்த நன்னீர் மீன்பிடி ஏரியின் பெயர் என்ன?

விடை:  டோன்லே சாப்.

15.ஆசிய நெடுஞ்சாலை வலையமைப்பிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை (AH1) எவற்றை இணைக்கிறது?

விடை:  டோக்கியோவைத் துருக்கியுடன் இணைக்கிறது.

16.ஜப்பானிலுள்ள ஒசாகா மற்றும் டோக்கியோ இடையில் பயணிக்கும் உலகப்புகழ் வாய்ந்த அதிவிரைவு புல்லட் இரயில் எது?

விடை:  சின்கான்வென்.

17.கெமர் மொழியில் 'அங்கோர்வாட்' என்பதன் பொருள் என்ன?

விடை:  கோயில்களின் நகரம்.

18.கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயிலை கி.பி 1100 ஆம் ஆண்டில் கட்டிய மன்னர் யார்?

விடை:  இரண்டாம் சூரியவர்மன்.

19.பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய நடனம் எது?

விடை:  டினிக்லிங்.

கண்டங்கள் பற்றிய தகவல்கள் - ஐரோப்பா

1.நெதர்லாந்தில் கடல்நீரைத் தடுக்க எழுப்பப்பட்ட பெருஞ்சுவர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை:  டைக்.

2.நெதர்லாந்தில் கடல்நீரைத் தடுத்து உருவாக்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

விடை:  போல்டர்கள்.

3.உலகிலேயே அதிக மக்கள் அடர்த்தி காணப்படும் நாடு எது?

விடை:  மொனாக்கோ (26,105 நபர்கள் /ச.கி.மீ).

4.ஆசியாவின் மிகப்பெரிய தீபகற்பமாக விளங்கும் கண்டம் எது?

விடை:  ஐரோப்பா.

வரலாறு மற்றும் சமூகவியல்

1.உலகின் முதன்முதலாக புவி மாதிரியை கி.பி. 150 ல் உருவாக்கியவர்கள் யார்?

விடை:  கிரேக்கர்கள்.

2.விண்மீன்கள் வானில் மேற்குப்புறமாக நகர்வது போன்ற தோற்றம், புவி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் விளைகிறது எனத் தமது நூலில் கூறியவர் யார்?

விடை:  ஆர்யப்பட்டர்.

3.தாலமி எழுதிய எந்த நூலில் புவியின் அளவும், அதன் மேற்பரப்பைக் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன?

விடை:  GEOGRAPHIA.

4.வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள் மற்றும் காடுசார்ந்த தொழிற்சாலைகள் ஆகியவை எவ்வகை தொழில்களுக்கு எடுத்துக்காட்டு?

விடை:  இரண்டாம் நிலை தொழில்கள்.

5.போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் வங்கி சேவைகள் ஆகியவை எவ்வகைத் தொழில்கள்?

விடை:  மூன்றாம் நிலைத் தொழில்கள்.

6.2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் எத்தனை முக்கிய மொழிகளும், பிற மொழிகளும் உள்ளன?

விடை:  122 முக்கிய மொழிகளும், 1599 பிற மொழிகளும்.

7.இந்தியாவின் முக்கிய மொழிக் குடும்பங்கள் நான்கினை கூறுக?

விடை:  இந்தோ-ஆரியன், திராவிடன், ஆஸ்ட்ரோஆஸ்டிக், சீன திபெத்தியன்.

8.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையின்படி எத்தனை மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன?

விடை:  22 மொழிகள்.

9.மலையாளம் மற்றும் ஒடியா மொழிகள் எந்தெந்த ஆண்டுகளில் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன?

விடை:  மலையாளம் - 2013, ஒடியா - 2016.

10.இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் எத்தனை சதவிதம் தமிழ்நாட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவை?

விடை:  60 சதவிதம்.

11.சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" நாடாகத் திகழ்கிறது என எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்?

விடை:  டிஸ்கவரி ஆஃப் இந்தியா.

12.2011 கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட முதல் இரண்டு மாவட்டங்கள் எவை?

விடை:  கன்னியாகுமரி (91.75%) மற்றும் சென்னை (90.18%).

13.2011 கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் அதிக மற்றும் குறைந்த பாலின விகிதம் கொண்ட மாவட்டங்கள் எவை?

விடை:  அதிகபட்சம் - நீலகிரி (1041), குறைந்தபட்சம் - தருமபுரி (946).

14.'பாபா சாஹேப்' என அழைக்கப்படும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்கு இந்திய அரசால் எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?

விடை:  1990 ஆம் ஆண்டு.

15.திரு. அப்துல் கலாம் அவர்கள் எந்த ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினைப் பெற்றார்?

விடை:  1997 ஆம் ஆண்டு.

16.2008 ஆம் ஆண்டில் பிரான்ஸின் கேனஸ் நகரில் பாலைஸ் தேஸ் விழாப் போட்டிகளில் முதல் கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?

விடை:  செல்வி. செ. இளவழகி.

17.ஆற்று ஓங்கில் மற்றும் யானை ஆகியவை எந்த ஆண்டில் இந்தியாவின் தேசிய இயற்கை சின்னங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன?

விடை:  2010.

18.புலி எந்த ஆண்டில் இந்தியாவின் தேசிய விலங்காக அங்கீகரிக்கப்பட்டது?

விடை:  1973.

19.தமிழ்நாட்டின் மாநில விலங்கு மற்றும் மாநில பறவை எவை?

விடை:  விலங்கு - நீலகிரி வரையாடு, பறவை - மரகதப் புறா.

20.தமிழ்நாட்டின் மாநில மலர் மற்றும் மாநில மரம் எவை?

விடை:  மலர் - செங்காந்தள் மலர், மரம் - பனை மரம்.

21.விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி தமிழ்நாட்டில் எந்த இடத்தில் நெய்யப்பட்டது?

விடை:  குடியாத்தம் (வேலூர் மாவட்டம்).

22.அசோகர் காலத்தில் சாரநாத் தூணின் உச்சியில் அமைந்திருந்த நான்முகச் சிங்கம் தற்போது எங்கு பாதுகாக்கப்படுகிறது?

விடை:  சாரநாத் அருங்காட்சியகம்.

23.இந்திய தேசிய கீதத்தை பாடுவதற்கு தோராயமாக எத்தனை வினாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்?

விடை:  52 வினாடிகள்.

24."இந்தியா எனது தாய்நாடு" என்னும் தேசிய உறுதிமொழியை தெலுங்கில் எழுதியவர் யார்?

விடை:  வெங்கட சுப்பாராவ்.

25.16ம் நூற்றாண்டில் மன்னர் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்தின் பெயர் என்ன?

விடை:  ருபியா.

26.பேரரசர் கனிஷ்கர் காலத்தில் சக ஆண்டு முறை எந்த ஆண்டில் தொடங்கியது?

விடை:  கி.பி. 78.

27.'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என்ற பாரதியாரின் பாடலை நாடு விடுதலை பெற்ற நாளன்று அகில இந்திய வானொலியில் பாடியவர் யார்?

விடை:  டி.கே. பட்டம்மாள்.

28.இந்திய குடியரசு நாளின் மூன்றாவது நாளான ஜனவரி 29 அன்று நடைபெறும் சிறப்பு விழாவின் பெயர் என்ன?

விடை:  பாசறைக்கு திரும்புதல்.

29.காந்தியின் பிறந்த நாளை 'சர்வதேச அகிம்சை நாள்' ஆக ஐ.நா. சபை எந்த ஆண்டு முதல் அங்கீகரித்துக் கொண்டாடி வருகிறது?

விடை:  2007.

30.அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கில் 1946-ல் உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இருந்தனர்?

விடை:  389 உறுப்பினர்கள்.

31.இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தில் இடம்பெற்றிருந்த பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை:  15 பெண் உறுப்பினர்கள்.

32.இந்திய அரசியல் சட்டம் உருவானபோது அதில் எத்தனை உறுப்புகள், பகுதிகள் மற்றும் அட்டவணைகள் இருந்தன?

விடை:  395 உறுப்புகள், 22 பகுதிகள் மற்றும் 8 அட்டவணைகள்.

33.இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் (இந்தி, ஆங்கிலம்) நாடாளுமன்ற நூலகத்தில் எந்த வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்துக் பாதுகாக்கப்படுகிறது?

விடை:  ஹீலியம் வாயு.

34.தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிகப்படியாக 22 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன?

விடை:  விழுப்புரம் மாவட்டம்.

35.பாதசாரிகளுக்கு என்று சாலையில் கடக்கும் பகுதி முதன்முதலில் 1934 ஆம் ஆண்டு எந்த நாட்டில் அமைக்கப்பட்டது?

விடை:  பிரிட்டன்.

No comments:

Post a Comment