வேத காலம்
1. ஆரியர்கள் எந்தக்
கணவாய் வழியாக மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்குள் வந்தனர்?
விடை: இந்துகுஷ் மலைகளிலுள்ள கைபர் கணவாய்.
2. ரிக்வேதகால
ஆரியர்களின் வாழ்விடமான 'சப்தசிந்து' என்பதன் பொருள் என்ன?
விடை: ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி.
4. ரிக் வேத கால
அரசியலில் குடும்பத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
விடை: குலபதி.
4. பின் வேதகாலத்தில்
உருவான அரசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
விடை: ஜனபதங்கள்
அல்லது ராஷ்டிரங்கள்.
5. வேதகாலத்தில்
'பாலி' என்ற வரியின்படி விவசாய மகசூழில் அல்லது கால்நடைகளில் எவ்வளவு பங்கு அரசனுக்குச்
செலுத்த வேண்டும்?
விடை: 1/6 பங்கு.
6. வேதகால மக்களின்
முதன்மைப் பயிரான 'யவா' என்பது எதைக் குறிக்கிறது?
விடை: பார்லி.
7. வேதகாலப் பண்பாடு
எவ்வகை மட்பாண்டப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது?
விடை: வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாடு.
8. ரிக்வேத கால
மக்கள் பயன்படுத்திய நிஷ்கா, சத்மனா என்பவை எவ்வகை நாணயங்கள்?
விடை: தங்க நாணயங்கள்.
9. ரிக்வேத காலத்தில்
பயன்படுத்தப்பட்ட 'கிருஷ்ணாலா' என்பது எவ்வகை நாணயம்?
விடை: வெள்ளி நாணயம்.
10. நான்கு ஆஸ்ரமங்களில்
ஒன்றான 'வனப்பிரஸ்தம்' என்பதன் பொருள் என்ன?
விடை: காடுகளுக்குச் சென்று தவம் செய்தல்.
11.'மெகாலித்'
(Megalith) என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது?
விடை: கிரேக்கச் சொல்.
சமணம் மற்றும் பௌத்தம்
1. சமணத் தீர்த்தங்கரரான
மகாவீரர் பிறந்த இடம் எது?
விடை:
வைசாலிக்கு அருகேயுள்ள குந்தகிராமம், பீகார்.
2. மகாவீரரின்
பெற்றோர் பெயர்கள் யாவை?
விடை:
சித்தார்த்தர், திரிசலா.
3. பன்னிரண்டரை
ஆண்டுகால தவத்திற்குப் பின்னர் மகாவீரர் அடைந்த எல்லையற்ற அறிவின் பெயர் என்ன?
விடை:
கைவல்ய.
4. மகாவீரரின்
தலைமைச் சீடரான கௌதமசுவாமி தொகுத்த போதனைகளின் பெயர் என்ன?
விடை:
: ஆகம சித்தாந்தம்.
5. முற்போக்கானவர்களாகக்
கருதப்பட்டு வெள்ளை நிற ஆடைகளை அணியும் சமணப் பிரிவினர் யார்?
விடை:
சுவேதாம்பரர்.
6. சிலப்பதிகாரத்தில்
கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும்போது உடன் சென்ற சமணப் பெண் துறவி யார்?
விடை:
கவுந்தியடிகள்.
7. காஞ்சிபுரத்திலுள்ள
திருப்பருத்திக் குன்றம் கிராமம் முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது?
விடை:
ஜைனக் காஞ்சி.
8. புத்தரின் பெற்றோர்
பெயர்கள் யாவை?
விடை:
சுத்தோதனா, மாயாதேவி.
9. புத்தரின் முதல்
போதனைச் சொற்பொழிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
தர்ம சக்ர பரிவர்த்தனா.
10. பௌத்த சங்கத்தின்
துறவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
விடை:
பிட்சுக்கள்.
11. புத்தருடைய
உடல் உறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்ட பௌத்த நினைவுச்சின்னங்கள் எவை?
விடை:
ஸ்தூபி.
12. புத்தரின்
உருவங்களை வணங்கிய பௌத்தப் பிரிவு எது?
விடை:
மகாயானம்.
1.
முதல்
பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் மற்றும் அதனைத் தலைமையேற்றவர் யார்?
விடை:
இராஜகிருகம், அரசர் அஜாதசத்ரு.
2.
காஞ்சிபுரத்தைச்
சேர்ந்த புகழ்பெற்ற பௌத்த தர்க்கவியல் அறிஞர் யார்?
விடை:
தின்னகர்.
3.
பாரசீகத்தில்
ஜொராஸ்டிரியனிசத்தை தோற்றுவித்தவர் யார்?
விடை:
ஜொராஸ்டர்.
மௌரியப் பேரரசு
மற்றும் அதன் பின்
4.
ஆறாம்
நூற்றாண்டில் மொத்தம் எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன?
விடை:
பதினாறு.
17. சிசுநாக வம்சத்தைச்
சேர்ந்த எந்த அரசர் தலைநகரை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றினார்?
விடை:
காலசோகா.
18. சந்திரகுப்த
மௌரியரைத் தென்னிந்தியாவிற்கு அழைத்துச் சென்ற சமணத்துறவி யார்?
விடை: பத்ரபாகு.
19. உண்ணா நோன்பிருந்து
உயிர் துறக்கும் சமணச் சடங்கின் பெயர் என்ன?
விடை:
சல்லேகனா.
20. எதிரிகளை அழிப்பவன்
என்று பொருள்படும் 'அமிர்தகதா' என்று கிரேக்கர்களால் அழைக்கப்பட்டவர் யார்?
விடை:
பிந்துசாரர்.
21. 'தேவனாம்பிரியர்'
என்றழைக்கப்பட்ட அசோகரின் பட்டப்பெயருக்குப் பொருள் என்ன?
விடை:
கடவுளுக்கு பிரியமானவன்.
22. அசோகர் கல்வெட்டுகளில்
சாஞ்சியில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை எது?
விடை:
பிராமி.
1.
மௌரியர்களின்
காலத்தில் நகர நிர்வாகம் எந்த அதிகாரியின் கீழ் இருந்தது?
விடை:
நகரிகா.
2.
மௌரியர்கள்
காலத்தில் அரசினுடைய செப்பு நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
விடை:
மாஸகாஸ்.
3.
சுதர்சனா
ஏரி உருவாக்கப்பட்டதைப் பதிவு செய்துள்ள கல்வெட்டு எது?
விடை:
ருத்ரதாமனின் ஜுனாகத் மற்றும் கிர்னார் கல்வெட்டு.
4.
கலிங்கநாட்டு
அரசன் காரவேலனுடைய புகழ்பெற்ற கல்வெட்டு எது?
விடை:
ஹதிகும்பா கல்வெட்டு.
27. காளிதாசர்
இயற்றிய மாளவிகாக்னிமித்ரா நாடகத்தின் கதாநாயகன் என கருதப்படுபவர் யார்?
விடை:
அக்னிமித்ரா.
28. கௌதமிபாலஸ்ரீயால்
வெளியிடப்பட்ட மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) எது?
விடை:
நாசிக் மெய்க்கீர்த்தி.
29. அமராவதியில்
புகழ்பெற்ற பௌத்த ஸ்தூபிகளைக் கட்டியவர்கள் யார்?
விடை:
சாதவாகனர்கள்.
30. சாகர்களின்
ஆட்சியானது காந்தாரப்பகுதியில் யாரால் நிறுவப்பட்டது?
விடை:
மாவோஸ் அல்லது மோகா.
31. தூய சமஸ்கிருதத்தில்
எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பு எது?
விடை:
ருத்ரதாமனுடைய ஜுனாகத் மற்றும் கிர்னார் கல்வெட்டு.
32. புனித தாமஸிடம்
தொடர்புடைய, கிறித்துவத்திற்கு மதம் மாறிய இந்தோ-பார்த்திய அரசர் யார்?
விடை:
கோண்டோ பெர்னஸ்.
குப்தர் காலம்
33. முதலாம் சந்திரகுப்தரால்
வெளியிடப்பட்ட தங்க நாணயங்களில் யாருடைய உருவங்கள் இடம்பெற்றிருந்தன?
விடை:
சந்திரகுப்தர் மற்றும் குமாரதேவி.
34. சமுத்திரகுப்தரால்
தென்னிந்தியாவில் தோற்கடிக்கப்பட்ட பல்லவ நாட்டு அரசர் யார்?
விடை:
விஷ்ணுகோபன்.
35. 'பிரசஸ்தி'
என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் என்ன?
விடை:
ஒருவரைப் பாராட்டி புகழ்வது.
36. விக்கிரமாதித்யர்
(இரண்டாம் சந்திரகுப்தர்) அவையிலிருந்த அகராதியியல் ஆசிரியர் யார்?
விடை:
அமர சிம்ஹர்.
37. குப்தப் பேரரசின்
அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் யார்?
விடை:
விஸ்ணுகுப்தர்.
38. பல்வேறு இடங்களுக்குச்
சென்று வணிகம் செய்த குப்தர் கால வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
விடை:
சார்த்தவாகா.
39. பூமி தனது
அச்சில் சுழலுகிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் யார்?
விடை:
ஆரியப்பட்டர்.
40. குப்தர்களின்
பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
விடை:
தினாரா.
பல்லவர் மற்றும் சாளுக்கியர்
41. களப்பிரர்களை
அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கிய மன்னன் யார்?
விடை:
சிம்மவிஷ்ணு.
42. மத்தவிலாசப்பிரகசனம்
என்ற நாடகத்தைச் சமஸ்கிருத மொழியில் எழுதிய பல்லவ அரசன் யார்?
விடை:
முதலாம் மகேந்திரவர்மன்.
43. சிறுத்தொண்டர்
எனப் பிரபலமாக அறியப்பட்ட முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி யார்?
விடை:
பரஞ்சோதி.
44. காஞ்சிபுரத்திலுள்ள
வைகுண்டப்பெருமான் கோவிலைக் கட்டிய பல்லவ மன்னன் யார்?
விடை:
நந்திவர்மன்.
45. கிராதார்ஜுனியம்
எனும் வடமொழிக் காப்பியத்தை வடித்த சமஸ்கிருத அறிஞர் யார்?
விடை: பாரவி.
46. அய்கோல் கல்வெட்டை
சமஸ்கிருத மொழியில் எழுதிய இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவர் யார்?
விடை: ரவிகீர்த்தி.
47. வெசாரா பாணியிலான
கோவில் விமானங்களைக் கட்டும் முறையை வளர்ச்சி பெறச் செய்தவர்கள் யார்?
விடை: சாளுக்கியர்கள்.
48. கன்னட இலக்கியத்தின்
மூன்று ரத்தினங்கள் என கருதப்படுபவர்கள் யார்?
விடை: ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா, ரன்னா.
49. கீழடி அகழாய்வு
மாதிரிகளை 2017ல் இந்திய தொல்லியல் துறை எந்த நிறுவனத்திற்கு கணிக்க அனுப்பியது?
விடை: பீட்டா அனாலடிக் நிறுவனம், புளோரிடா.
புவியியல்
50. புவிக்கு அருகில்
காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள் எவை?
விடை: ஆண்ட்ரோமெடா மற்றும் மெகல்லனிக் க்ளவுடஸ்.
51. சூரியக் குடும்பத்தின்
மொத்த நிறையில் சூரியன் எத்தனை சதவிகிதம் உள்ளது?
விடை: 99.8 சதவிகிதம்.
52. புவி வினாடிக்கு
எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது?
விடை: 30 கிலோமீட்டர்.




No comments:
Post a Comment