Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 28, 2020

பொதுஅறிவு 25 + 25 வினாக்களும், விடைகளும்!

1. மிதவாதிகளின் முக்கிய தலைவர்?
- கோபால கிருஷ்ண கோகலே

2. தென்னாட்டு திலகர் என்று போற்றப்பட்டவர் யார்?
- வ.உ.சி

3. வங்க பிரிவினை நடைபெற்ற போது இந்திய அரசு பிரதிநிதியாக இருந்தவர் யார்?
- கர்சன் பிரபு

4. இந்தியாவின் நிரோ மன்னர் என்று வர்ணிக்கப்பட்டவர் யார்?
- லிட்டன் பிரபு

5. பூசாவில் விவசாய கல்லூரி யார் காலத்தில் கட்டப்பட்டது?
- கர்சன் பிரபு

6. ஆகஸ்ட் நன்கொடை அளித்த ஆங்கில அரசு பிரதிநிதி யார்?
- லின்லித்கொ

7. முற்போக்கு கட்சியை தொடங்கியவர் யார்?
- சுபாஷ் சந்திரபோஸ் (1939)

8. இரு நாடுகள் கொள்கையை வெளியிட்டவர் யார்?
- முகம்மது அலி ஜின்னா

9. ஆசாத் ஹிந்த் ஃபாஜ் என்றுஅழைக்கப்பட்டது எது?
- இந்திய தேசிய ராணுவம்

10. கிரிப்ஸ் தூதுக்குழு யோசனைகளை "பின் தேதியிட்ட காசோலை" என்று வர்ணித்தவர் யார்?
மோ.க.காந்தி


11. தனி நபர் சத்தியாக்கிரகம் தொடங்கியவர் யார்?
- ஆச்சார்யா வினோபா பாவே

12. "வகுப்பு கொடை" அறிவத்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?
- ராம்சே மெக்டொனால்ட்

13. வகுப்பு கொடை யை எதிர்த்து மோ.க.காந்தி எந்த சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்?
- எரவாடா சிறை

14.சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி பட்டு படுகாயம் அடைந்தவர் யார்?
- லாலா லஜபத் ராய்

15. தன்னாட்சி இயக்கம் திலகர் பூனாவில் எந்த மாதம் தொடங்கினார்?
- ஏப்ரல்

16. "அபினவ பாரத் சங்கம்" யாருடைய சகோதரர்களால் தோற்றுவிக்கப் பட்டது?
- சாவர்க்கர் சகோதரர்கள்

17. "பஞ்சாப் சிங்கம்" என்று போற்றப் பட்டவர் யார்?
- லாலா லஜபத் ராய்

18. 'வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் தன்மகயற்ற ஆட்சியும்' என்ற நூலை எழுதியவர் யார்?
- தாதாபாய் நௌரோஜி

19. முதல் தொழிற்சாலை சட்டம் கொண்டுவந்த பிரபு யார்?
- ரிப்பன் பிரபு

20. இரண்டாம் ஆப்கானிய போர் எந்த பிரபு காலத்தில் நடைபெற்றது?
- லிட்டன் பிரபு

21. இரண்டாவது தனிநபர் சத்தியாக்கிரகம் நடத்தியவர் யார்?
- ஜவஹர்லால் நேரு

22. தண்டி யாத்திரை போது மோ.க.காந்தியுடன் சென்ற சீடர்கள் எத்தனை நபர்கள்?
- 79

23. பூரண சுயராஜ்யம் (அல்லது) முழுச் சுதந்திரம் எந்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது?
- லாகூர் (1929)

24. சுயராஜ்ய கட்சி யாருடைய மறைவிற்கு பின்னால் பலவீனமடைந்தது?
- சி.ஆர்.தாஸ்

25. இந்தியப் பிரிவினைக்கான திட்டத்தை அறிவித்தவர் யார்?
- மவுண்ட்பேட்டன் பிரபு

1. சென்னை சுதேசி சங்கம் நிறுவியவர்கள்?
- லட்சுமிநரசு செட்டி (ம) சீனுவாச பிள்ளை (1852)

2. சென்னை மகாஜன சங்கம் நிறுவியவர்கள்?
- பி. ஆனந்தாச்சார்லு (ம) பி. ரங்கைய நாயுடு (1884)

3. சென்னை ஜன சங்கம் தோற்றுவித்தவர்?
- வ.உ.சிதம்பரனார் (1907)

4. பாரத மாதா சங்கம் முக்கிய பங்கு வகித்தவர்?
- நீலகண்ட பிரம்மச்சாரி

5. வைக்கம் சத்தியாக்கிரகம் போராட்டம் நடத்தியவர் யார்?
- ஈ. வே. ராமசாமி

6. சேரன் மாதேவி குருகுலம் நடத்தியவர் யார்?
- வி.வி.எஸ். ஐயர்

7. சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாட்டில் தலைமை தாங்கியவர் யார்?
- சத்தியமூர்த்தி

8. உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தில் தமிழ்நாட்டில் தலைமை ஏற்று நடத்தியவர் யார்?
- சி. ராஜகோபாலாச்சாரி

9. இ.தே.காங்கிரஸ் முதல் மாநாட்டில் முதல் தீர்மானத்தை கொண்டுவந்தவர் யார்?
- ஜீ. சுப்பிரமணிய ஐயர்

10. பிராமண அல்லாத ஜாதி இந்துக்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தோற்றுவிக்கப்பட்ட சங்கம்?
- தென்னிந்திய நல உரிமை சங்கம்

11. நீதிக்கட்சியின் முன்னோடி என்று அழைக்கப்படுவது?
- சென்னை ஐக்கிய கழகம்

12. நீதிக்கட்சி தமிழ்நாட்டில் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தன?
- 13

13. பணியாளர் தேர்வாணையம் எந்த ஆண்டு மாற்றப்பட்டது?
- 1929

14. நீதிக்கட்சி திராவிட கழகமாக எந்த நடந்த மாநாட்டில் மாற்றப்பட்டது?
- சேலம்

15. நீதிக்கட்சியின் முதலில் யார் தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது?
- ஏ. சுப்புராயலு ரெட்டியார்

16. அரசியலமைப்பு குழு தனது பணியை தொடங்கிய நாள் ஆண்டு?
- 9 டிசம்பர் 1946

17. அரசியலமைப்பு குழு நிரந்தர தலைவர்?
- டாக்டர். ராஜேந்திர பிரசாத்

18. அரசியலமைப்பு வரைவு குழு தலைவர்?
- டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்

19. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் ஆண்டு?
- 26 ஜனவரி 1950

20. மொழிவாரி மாநிலத்தின் முதலில் பிரிக்கப்பட்ட மாநிலம்?
- ஆந்திரப் பிரதேசம்

21. திருத்தணியை மதராஸ் மாநிலத்தில் இணைத்தவர் யார்?
- மயிலை பொன்னுசாமி சிவஞானம்

22. கன்னியாகுமரி மதராஸ் மாநிலத்தின் இணைத்தவர் யார்?
- நேசமணி

23. நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்டவர் யார்?
- ஜவஹர்லால் நேரு

24. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் பிரதமர் யார்?
- லால் பகதூர் சாஸ்திரி

25. மதராஸ் மாநிலம் பிரிக்கும் போது இருந்த மாவட்டங்கள் எத்தனை?
- 13

No comments:

Post a Comment