Breaking

Sunday, April 19, 2026

8TH TAMIL - நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்




  • உலகில் மிகவும் பழமையான கைவினைக் கலைகளுள் ஒன்று மண்பாண்டக்கலை.
  • சிந்துசமவெளி” அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
  • தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
  • நாகை மாவட்டம் “செம்பியன் கண்டியூரில்” கலையழகு மிகுந்த மண்கலங்கள் கிடைத்துள்ளன.
  • மதுரை அருகே கீழடியில் ஏராளமான “சுடுமண் பொருட்கள்” கிடைத்துள்ளன.
  • மண்பாண்டம் செய்ய பயன்படும் சக்கரத்தை “திருவை” என்பர்.
  • களிமண்ணுடன் மெல்லிய மணல் மற்றும் சாம்பல் ஆகியவற்றை சேர்த்து பக்குவப்படுத்தி, மண்பாண்டங்களை செய்வர்.
  • பானை செய்தலைப் “பானை வனைதல்” எனவும் கூறுவர்.
  • முடிவு பெற்ற பானையை மெருகேற்ற “உருட்டுக்கல்” கொண்டு தேய்ப்பர்.
  • மண்பாண்டக் கலையில் அடுத்த வளர்ச்சி நிலை = சுடுமண் சிற்பங்கள்.
  • சுடுமண் சிற்பங்களை ஆங்கிலத்தில் டெரகோட்டா என்பர்.
  • களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள் ஆகும்.
  • மூங்கிலால் பல வகை பொருட்கள் செய்யப்படுகின்றன.
  • பிறந்த குழந்தைக்கு விளையாட்டு பொருட்கள் முதல் இறந்தவரை எடுத்துச் செல்லும் பாடை வரை மூங்கிலால் செய்யப்படுகின்றன.
  • மூங்கில்கள் மூன்று வகைப்படும். அவை, கல்மூங்கில், மலைமூங்கில், கூட்டுமூங்கில்
  • கைவினைப் பொருட்கள் செய்வதற்கு ஏற்ற மூங்கில்கள் = கூட்டுமூங்கில்கள்.
  • முற்காலத்தில் பாய்மரப்படகுகளில் பைகளை பயன்படுத்தினர் என்பதனை “கூம்பொடு மீப்பாய் களையாது” என்ற புறநானூற்று பாடல் அடி விளக்குகிறது.
  • “கூம்பொடு மீப்பாய் களையாது” என்ற அடி இடம் பெற்ற நூல் = புறநானூறு.
  • பழந்தமிழ் இலக்கியங்கள் பாதுகாத்து வைத்தவை = பனையோலை.
  • பனை மரம் = தமிழ்நாட்டின் மாநில மரம்.
  • பிரம்பு என்பது கொடி வகையை சார்ந்த தாவரம் ஆகும்.
  • பிரம்பின் தாவரவியல் பெயர் = கலாமஸ் ரொடாங் (Calamus Rotang)
  • இது நீர்நிறைந்த வாய்க்கால் வரப்புகளிலும், மண்குகைகளிலும் வளருபவை.
  • இது தமிழகத்தில் தற்போது குறைந்துவிட்டது.

1.             பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.

அ)          புல்மூங்கில்                                                     

ஆ)         கல்மூங்கில்

இ)          மலைமூங்கில்                                 

ஈ)           கூட்டுமூங்கில்

                (விடையாகக் குறிப்பிடப்படுவது மூங்கில் வகை அல்ல)

2.             கைவினைப் பொருட்கள் செய்வதற்கு ஏற்ற மூங்கில் எது?

அ)          புல்மூங்கில்                                                       

ஆ)         கல்மூங்கில்

இ)          மலைமூங்கில்                                 

ஈ)           கூட்டுமூங்கில்

3.             தமிழ்நாட்டின் மாநில மரம்.

அ)          ஆலமரம்            

ஆ)         தென்னை          

இ)          பனை  

ஈ)           மூங்கில்

4.             கொடி வகையைச் சார்ந்த தாவரம்.

அ)          மூங்கில்              

ஆ)         பிரம்பு 

இ)          கோரை               

ஈ)           நாணல்

5.             பொருத்துக

அ)          தடுக்குப்பாய்   -              குழந்தைகளைப் படுக்கவைக்க

ஆ)         பந்திப்பாய்                       -              உட்கார்ந்து உண்ண

இ)          திண்ணைப்பாய்            -              படுத்துறங்க

ஈ)           பட்டுப்பாய்                      -              திருமணத்துக்கு

6.             ‘கூம்பொடு மீப்பாய் களையாது’ எனப் பாய்மரக்கப்பல்களில் பயன்படுத்தப்படும் பாய் பற்றி கூறும் நூல். 

அ)          அகநானூறு                                       

ஆ)         புறநானூறு

இ)          கலித்தொகை                                  

ஈ)           பரிபாடல்

7.             பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.

அ)          சிந்துசமவெளி                                              

ஆ)         ஆதிச்சநல்லூர்

இ)          செம்பியன் கண்டியூர்                 

ஈ)           கீழடி

(விடையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது தவிர, ஏனையவை தமிழ்நாட்டில் அமைந்துள்ள இடங்கள்)

8.             பானை செய்ய உதவும் சக்கரத்தை எவ்வாறு அழைப்பர்.

அ)          மிதவை               

ஆ)          திருவை      

இ)

9.             ‘ஊயடயஅரள சுடிவயபே’ என்பது எதனைக் குறிக்கும் தாவரவியல் பெயர்.

அ)          மூங்கில்              

ஆ)         பிரம்பு 

இ)          கோரை               

ஈ)           நாணல்

10.          கீழ்க்கண்டவற்றுள் ‘முதுமக்கள் தாழி’ கிடைக்கப்பெற்ற இடம்.         

அ)          சிந்து சமவெளி                                               

ஆ)         ஆதிச்சநல்லூர்

இ)          செம்பியன் கண்டியூர்                 

ஈ)           கீழடி



No comments:

Post a Comment