Breaking

Sunday, April 19, 2026

8TH TAMIL - திருக்கேதாரம்




பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்
கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய
மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்
கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே. – சுந்தரர்

அருஞ்சொற்பொருள்

  • பண் = இசை
  • கனகச்சுனை = பொன் வண்ண நீர்நிலை
  • மதவேழங்கள் = மதயானைகள்
  • முரலும் = முழங்கும்
  • பழவெய் = முதிர்ந்த மூங்கில்

சுந்தரர் ஆசிரியர் குறிப்பு

  • சுந்தரர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
  • இவர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
  • இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
  • இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார்.
  • இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாரப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

  • “கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே” என்று பாடியவர் = சுந்தரர்.
  • கிண் என்ற ஓசை முழங்கும் நகரம் = திருக்கேதாரம்
  • பண் = இசை
  • கனகச்சுனை = பொன் வண்ண நீர்நிலை
  • மதவேழங்கள் = மதயானைகள்
  • முரலும் = முழங்கும்
  • பழவெய் = முதிர்ந்த மூங்கில்
  • சுந்தரர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
  • இவர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
  • இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
  • இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார்.
  • இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாரப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
  • இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
  • தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும், தே + வாரம் – இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும்.
  • பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

1. ‘சுந்தரர்’ இயற்றிய தேவாரம் எத்தனையாவது திருமுறையாக அமைந்துள்ளது.

அ)    மூன்றாம்     

ஆ)    ஐந்தாம்       

இ)    ஏழாம் 

ஈ)     எட்டாம்

2. சுந்தரர் இயற்றிய மற்றொரு நூல்.

அ)    திருத்தொண்டர் தொகை   

ஆ)    திருத்தொண்டர் அந்தாதி

இ)    திருத்தொண்டர் புராணம்     

ஈ)     திருவிருத்தம்

3.      பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.

அ)    திருஞானசம்பந்தர்           

ஆ)    திருநாவுக்கரசர்

இ)    சுந்தரர்                     

ஈ)     மாணிக்கவாசகர்

( விடையாக வருபவர் தவிர ஏனையோர், தேவாரம் பாடியோர்)

4.      ‘நம்பியாரூரர், தம்பிரான் தோழர்’ என்பது யாருடைய சிறப்புப் பெயர்.

அ)    திருஞானசம்பந்தர்           

ஆ)    திருநாவுக்கரசர்

இ)    சுந்தரர்                             

ஈ)     மாணிக்கவாசகர்

5.      தேவாரத்தைத் தொகுத்தவர்.

அ)    நம்பியாண்டார் நம்பி              

ஆ)    நாதமுனி

இ)    சேக்கிழார்                         

ஈ)     வரகுண பாண்டியன்

No comments:

Post a Comment