Breaking

Thursday, March 26, 2026

6TH TAMIL - கண்மணியே கண்ணுறங்கு



நூல் வெளி

தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று தால் என்பதற்கு நாக்கு என்று பொருள் நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு) என்று பெயர்பெற்றது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.

பாடலின் பொருள்

தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயோ! தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேரநாட்டின் முத்தேனோ! இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியோ! குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழோ! கண்ணே கண்மணியே கண்மூடி உறங்குவாயாக!

சொல்லும் பொருளும்
  • நந்தவனம் – பூஞ்சோலை
  • பார்  – உலகம்
  • பண் – இசை
  • இழைத்து – பதித்து
தொகைச்சொற்களின் விளக்கம்

1. முத்தேன் – கொம்புத்தேன், பொந்துத்தேன், கொசுத்தேன்
2. முக்கனி – மா, பலா, வாழை
3. முத்தமிழ் – இயல், இசை, நாடகம்
4. ஐம்பால் : ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
5. நாற்கவி : ஆசுகவி, மதுரகவி, சித்தாரக்கவி, வித்தாரக்கவி
6. நான்மறை : ரிக், யஜூர், சாமம், அதர்வணம்
7. முக்கொடி : விற்கொடி, புலிக்கொடி, மீன்கொடி
8. முக்குணம் : சமத்துவம், இராசசம், தாமசம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 
  • பாட்டி + சைத்து
  • பாட்டி + இசைத்து
  • பாட்டு + இசைத்து
  • பாட்டு+சைத்து
2. கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 
  • கண் + உறங்கு
  • கண்ணு + உறங்கு
  • கண் + உறங்கு
  • கண்ணு + றங்கு
3. வாழை + இலை என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
  • வாழையிலை
  • வாழைஇலை
  • வாழலை
  • வாழிலை
4. கை + அமர்த்தி என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
  • கைமர்த்தி
  • கைஅமர்த்தி
  • கையமர்த்தி
  • கையைமர்த்தி
5. உதித்த என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்
  • மறைந்த
  • நிறைந்த
  • குறைந்த
  • தோன்றிய
6. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
  • மா
  • பலா
  • தென்னை
  • வாழை
7.  கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
  • கொம்புத்தேன்
  • மலைத்தேன்
  • பொந்துத்தேன்
  • கொசுத்தேன்
8.  கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
  • இயல்
  • இசை
  • கூத்து
  • நாடகம்
9. நாவை அசைத்துப் பாடுவது

அ) தாலாட்டு
ஆ) ஏசல் பாட்டு
இ) தொழில் பாட்டு
ஈ) ஒப்பாரி

10. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு

அ) சேரநாடு - முத்தமிழ்
ஆ) சோழநாடு - முக்கனி
இ) பாண்டியநாடு - முத்தேன்

No comments:

Post a Comment