

வாழை இலையில் விருந்து
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது. நம் மக்கள் வாழை இலையின் மருத்துவப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர்.
தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர். உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும். ஏனென்றால் வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம். இலையில் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவார்கள். உண்பவர் மனமறிந்து, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறுவர்.
எத்திசையும் புகழ் மணக்க.

அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் 'வாழையிலை விருந்து விழா'வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது. தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்டு வாழையிலையில் விருந்து வைக்கின்றனர். முருங்கைக்காய் சாம்பார், மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம், வெண்டைக்காய்க் கூட்டு, தினைப் பாயசம், அப்பளம் எனச் சுவையாகத் தமிழர் விருந்து கொடுக்கின்றனர். அங்கு வாழும் தமிழர்கள் பலரும் இந்த விருந்தில் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர். தொடர்ந்து பல பண்பாட்டு நிகழ்வுகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.
3. விருந்தினரை அனிச்சம் மலரோடு ஒப்பிடுபவர் - திருவள்ளுவர்
4. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வர் என்றவர் - கம்பர்
விருந்தும் அன்றி விளைவன யாவையே" - கம்பராமாயணம்,1:2:36
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்ட லும் இலரே.- புறநானூறு, 182 (கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி)
13. குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ இலள் - புறநானூறு (333)
இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் - புறநானூறு, 316
19. "பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீ ரோ" இவ்வடிகள் இடம்பெற்ற நூல்- குறுந்தொகை (118)
முரமுரெனவே புளித்த மோரும் - திறமுடனே
புள்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந்து இட்டான்ஈது)
எல்லா உலகும் பெறும்" - ஔவையார் தனிப்பாடல்
1. பின்வருவனவற்றுள் முறையான தொடர்
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
2. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை
ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து
ஈ) உற்றாரின் விருந்து
3. மினசோட்டோ தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள இடம்
ஆ) அமெரிக்கா
இ) மலேசியா
ஈ) இலங்கை
4. தொல்காப்பியர் விருந்து என்பதை என்னவென்று கூறியுள்ளார்.
ஆ) முதுமை
இ) புதுமை
ஈ) இளமை
5. தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்று குறிப்பிடும் நூல் எது? இது யாருடைய கூற்றாக அமைகிறது?
ஆ) கம்பராமாயணம், சீதை
இ) நளவெண்பா, தமயந்தி
ஈ) சீவகசிந்தாமணி, காந்தருவதத்தை
6. பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்திவந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்து அன்றி விளைவான யாவையே என்று குறிப்பிடும் நூல்?
ஆ) நளவெண்பா
இ) சீவகசிந்தாமணி
ஈ) கம்பராமாயணம்
7. அல்லில் ஆயினும் விருந்து வரின்
உவக்கும் என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்.
ஆ) அகநானூறு
இ) புறநானூறு
ஈ) நற்றிணை
8. காலின் ஏழடிப் பின் சென்று என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்
ஆ) சிறுபாணாற்றுப்படை
இ) பெரும்பாணாற்றுப்படை
ஈ) கூத்தாராற்றுப்படை
9. “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலும் முகமலரும் மேலார் போல” இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
ஆ) கம்பராமாயணம்
இ) முக்கூடற்பள்ளு
ஈ) பெரியபுராணம்
10. தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள்
அ) பழையவாள், நெடுங்கோட்டு பெரியாழ்
ஆ) புதியவாள், நெடுங்கோட்டு பெரியாழ்
இ) பழையவாள், கருங்கோட்டு சீறியாழ்
ஈ) புதியவாள், கருங்கோட்டு சீறியாழ்
11. மருந்தே ஆயினும் விந்தோடு உண் என்று பாடியவர் யார்? நூல் எது?
ஒளவையார், ஆத்திச்சூடி
குமரகுரபரர், நீதிநெறிவிளக்கம்
வள்ளலால் ஜீவகாருண்ய ஒழுக்கம்
ஒளவையார், கொன்றைவேந்தன்
12. அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்க ஆண்டுதோறும் கொண்டாடும் விழா
அ) இறைச்சி உணவு விருந்து விழா
ஆ) வேட்டி சேலை உடுத்தும் விழா
இ) வாழையிலை விருந்து விழா
ஈ) நவதானிய விழா
13. விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர்
அ) திருவள்ளுவர்
ஆ) இளங்கோவடிகள்
இ) தொல்காப்பியர்
ஈ) கம்பர்
14. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர்
அ) திருவள்ளுவர்
ஆ) கம்பர்
இ) தொல்காப்பியர்
ஈ) இளங்கோவடிகள்
15. இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றி குறிப்பிடும் நூல்
அ) நற்றிணை
ஆ) பெரியபுராணம்
இ) பெரும்பாணாற்றுப்படை
ஈ) கம்பராமாயணம்
16. அமெரிக்காவில் நடைபெறும் வாழையிலை விருத்தில் அல்லாத ஒன்று.
அ) வேப்பம்பூ ரசம்
ஆ) தினைப்பாயசம்
ஈ) மோர்க்குழம்பு
பொருத்துக
| 1. விருந்தே புதுமை | அ. செயங்கொண்டார் |
| 2. இல்லறவியல் | ஆ. இளங்கோவடிகள் |
| 3. சிலப்பதிகாரம் | இ. தொல்காப்பியர் |
| 4. கலிங்கத்துப்பரணி | ஈ. திருவள்ளுவர் |
| விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ | |
பொருத்துக
| 1. விருந்தே புதுமை | அ. திருவள்ளுவர் |
| 2.மோப்பக் குழையும் அனிச்சம் | ஆ. தொல்காப்பியர் |
| 3. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் | இ. இளங்கோவடிகள் |
| 4. விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை | ஈ. ஒளவையார் |
| விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ | |




No comments:
Post a Comment