- கத்தியைத் தீட்டாதே – உந்தன் புத்த்யைத் தீட்டு” என்று கூறியவர் = ஆலங்குடி சோமு
- “கண்ணியம் தவறாதே – அதில் திறமையைக் காட்டு” என்று கூறியவர் = ஆலங்குடி சோமு.
- “மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா” என்று கூறியவர் = ஆலங்குடி சோமு.
- தடம் = அடையாளம்
- அகம்பாவம் = செருக்கு
- ஆலங்குடி சோமு திரைப்பட பாடலாசிரியர் ஆவார்.
- ஆலங்குடி சோமு பிறந்த ஊர் = சிவகங்கை மாவட்டம் ஆலங்குடி.
- தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றவர்.
1. ஆலங்குடி
சோமு ஒரு ............
அ) திரைப்பட எழுத்தாளர்
ஆ) திரைப்பட இயக்குநர்
இ) திரைப்பட பாடலாசிரியர்
ஈ) திரைப்பட நடிகர்
2. ஆலங்குடி
சோமு பெற்ற விருது.........
அ) பொன்மனச்செம்மல்
ஆ) கலைமாமணி
இ) பாரத ரத்னா
ஈ) பத்மஸ்ரீ
3. ஆத்திரம்
கண்ணை மறைத்திடும்போது எதற்கு வேலை கொடுக்க வேண்டுமென ஆலங்குடி சோமு குறிப்பிடுகிறார்.
அ) புத்திக்கு
ஆ) அறிவுக்கு
இ) அமைதிக்கு
ஈ) நிதானத்திற்கு
4. ‘மன்னிக்கத்
தெரிந்த மனிதனின் உள்ளம்.......... கோவில்’ என்கிறார் ஆலங்குடி சோமு.
அ) தங்கக்கோவில்
ஆ) மரகதக்கோவில்
இ) மாணிக்கக்கோவில்
ஈ) வைரக் கோவில்
5. ‘மறைந்தவன்
வாழ்வு தடம்தெரியாமல் மறைந்தே போகுமப்பா’ இத்தொடரில் ‘தடம்’ என்பதன் பொருள்.
அ) அடையாளம்
ஆ) வழி
இ) இருப்பிடம்
ஈ) இருப்பது




No comments:
Post a Comment