Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 18, 2026

10TH TAMIL - சிலப்பதிகாரம்‌








சொல்லும்‌ பொருளும்‌

சுண்ணம்‌ - நறுமணப்பொடி
காருகர்‌ - நெய்பவர்‌ (சாலியர்‌)
தூசு - பட்டு,
துகிர்‌ - பவளம்‌
வெறுக்கை - செல்வம்‌
காழியர்‌ - பிட்டு விற்போர்‌
கூவியர்‌ - அப்பம்‌ விற்போர்‌
பாசவர்‌ - வெற்றிலை விற்போர்‌
வாசவர்‌ - நறுமணப்‌ பொருள்‌ விற்போர்‌
பல்நிண விலைஞர்‌ - பலவகையான புலால்‌ கறிகளை விற்போர்‌
ஓசுநர்‌ - எண்ணெய்‌ விற்போர்‌
கண்ணுள்‌ வினைஞர்‌ - ஓவியர்‌
மண்ணீட்டாளர்‌ - சிற்பி, கிழி துணி

இலக்கணக்‌ குறிப்பு

வண்ணமும்‌ சுண்ணமும்‌ - எண்ணும்மை

பகுபத உறுப்பிலக்கணம்‌

1. மயங்கிய மயங்கு கூட்டல் இ(ன்‌) கூட்டல் ய்‌ கூட்டல் அ
மயங்கு - பகுதி
இ(ன்‌) - இறந்த கால இடை நிலை; 'ன்‌' புணர்ந்து கெட்டது.
ய்‌ - உடம்படுமெய்‌
௮ - பெயரெச்ச விகுதி

2. அளந்து = அள + த்(ந்) + த் + உ

அள – பகுதி
த் – சந்தி
ந் – ஆனது விகாரம்
த் – இறந்த கால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

3. குவித்த = குவி + த் + த் + உ

குவி – பகுதி
த் – சந்தி
த் – இறந்த கால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

4. காட்டும் = காட்டு + உம்

காட்டு– பகுதி
உம் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டு பெயரெச்ச விகுதி

மருவூர்ப்‌ பாக்கம்‌

வண்ணமும்‌ சுண்ணமும்‌ தண்நறுஞ்‌ சாந்தமும்‌
பூவும்‌ புகையும்‌ மேவிய விரையும்‌
பகர்வனர்‌ திரிதரு நகர வீதியும்‌;
பட்டினும்‌ மயிரினும்‌ பருத்தி நூலினும்‌
கட்டு நுண்வினைக்‌ காருகர்‌ இருக்கையும்‌;

தூசும்‌ துகிரும்‌ ஆரமும்‌ அகிலும்‌
மாசுஅறு முத்தும்‌ மணியும்‌ பொன்னும்‌
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்‌;

பால்வகை தெரிந்த பகுதிப்‌ பண்டமொடு
கூலம்‌ குவித்த கூல வீதியும்‌;

காழியர்‌, கூவியர்‌, கள்நொடை ஆட்டியர்‌,
மீன்விலைப்‌ பரதவர்‌, வெள்உப்புப்‌ பகருநர்‌,
பாசவர்‌, வாசவர்‌, பல்நிண விலைஞரோடு
ஓசுநர்‌ செறிந்த ஊன்மலி இருக்கையும்‌;

கஞ்ச காரரும்‌ செம்புசெய்‌ குநரும்‌
மரம்கொல்‌ தச்சரும்‌ கருங்கைக்‌ கொல்லரும்‌

கண்ணுள்‌ வினைஞரும்‌ மண்ணீட்டு ஆளரும்‌
பொன்செய்‌ கொல்லரும்‌ நன்கலம்‌ தருநரும்‌
துன்ன காரரும்‌ தோலின்‌ துன்னரும்‌
கிழியினும்‌ கிடையினும்‌ தொழில்பல பெருக்கிப்‌

பழுதுஇல்‌ செய்வினைப்‌ பால்கெழு மாக்களும்‌;
குழலினும்‌ யாழினும்‌ குரல்முதல்‌ ஏழும்‌
வழுவின்றி இசைத்து வழித்திறம்‌ காட்டும்‌
அரும்பெறல்‌ மரபின்‌ பெரும்பாண்‌ இருக்கையும்‌;

சிறுகுறுங்‌ கைவினைப்‌ பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும்‌ மருவூர்ப்‌ பாக்கமும்‌

புகார்க்காண்டம்‌, இந்திரவிழா ஊரெடுத்த காதை (அடி 13-39)


ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு

"சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்
கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா
வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான்
திளையாத குண்டலகே சிக்கும்" -  திருத்தணிகையுலா.

1. மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல்
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • குண்டலகேசி
  • வளையாபதி
2. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் 
  • இரண்டு
  • நான்கு
  • ஐந்து
  • மூன்று
3. சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள்
  • 10
  • 20
  • 30
  • 40
4. அடிகள் நீரே அருளக என்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டார்
  • கம்பர்
  • கபிலர்
  • திருத்தக்கத்தேவர்
  • சீத்தலைச்சாத்தனார்
5. சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம் 
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • குண்டலகேசி
  • வளையாபதி
6. மணிமேகலையின் ஆசிரியர் 
  • சீத்தலைச்சாத்தனார்
  • கம்பர்
  • கபிலர்
  • திருத்தக்கத்தேவர்
7. மண்ணீட்டாளர் எனக் குறிக்கப் பெற்றவர்
  • ஓவியர்
  • வணிகர்
  • சிற்பி
  • சாலியர்
8. இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம் 
  • வஞ்சிக்காண்டம்
  • புகார்க்காண்டம்
  • மதுரைக்காண்டம்
  • பால காண்டம்
9. சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை
  • உரைநடை
  • வசன நடை
  • செய்யுள்நடை
  • உரைப்பாட்டு மடை
10. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ______ ஆகும்
  • இணைக்காப்பியம்
  • முதற்காப்பியம்
  • பிணைக்காப்பியம்
  • இரட்டைக் காப்பியம்
11. கண்ணகியும், கோவலனும் சென்று அடைந்த ஊர்
  • காவிரிப்பூம்பட்டினம்
  • கொடும்பாளூர்
  • திருவரங்கம்
  • உறையூர்
12. இளங்கோவடிகள் ______ நாட்டைச் சேர்ந்தவர்
  • சேர
  • சோழ
  • பல்லவ
  • பாண்டிய
13. அழகர்மலை என்பது ______
  • மால்குன்றம்
  • வேலவன்குன்றம்
  • திருமால்குன்றம்
  • திருவரங்கம்
14. பெருங்குணத்துக் காதலாள் ______
  • மணிமேகலை
  • கண்ணகி
  • மாதவி
  • மாதிரி
15. மருவூர்பாக்கம் அமைந்த நகர் ______
  • புகார்
  • வஞ்சி
  • மதுரை
  • காஞ்சி
16. பொருந்தா சொல்லை எழுதுக
  • சுண்ணம் – நறுமணப்பொடி
  • காருகர் – நெய்பவர்
  • தூசு – பட்டு
  • துகிர் – முத்து
17. பொருந்திய சொல்லை கண்டுபிடி
  • சுண்ணம் – நெய்பவர்
  • காருகர் – பவளம்
  • தூசு – பட்டு
  • துகிர் – நறுமணப்பொடி
18. பொருந்திய சொல்லை கண்டுபிடி
  • வெறுக்கை – செல்வம்
  • நொடை – எண்ணெய் விற்போர்
  • ஓசநர் – வெற்றிலை விற்போர்
  • பாசவர் – விலை
19. பொருத்துக
1. தூசு          அ. செல்வம்
2. துகிர்           ஆ. பட்டு
3. வெறுக்கை           இ. விலை
4. நொடை           ஈ. பவளம்
விடை ; 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

20. பொருத்துக
1. கண்ணுள் வினைஞர் அ. சிற்பி
2. மண்ணீட்டாளர் ஆ. ஓவியர்
3. கிழி இ. தொழில்
4. வினை ஈ. துணி
விடை ; 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

No comments:

Post a Comment