Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 17, 2025

6TH TAMIL - சிறகின் ஓசை


  • பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன. 
  • அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன
  • குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன.
  • பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர்.
  • நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.
  • உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன. 
  • நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன. 
  • பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன.
  • பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன. 
  • சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.
  • பயணம் செய்யும்போது சிலவகைப் பறவைகள் இரை, ஓய்வு போன்ற தேவைகளுக்காகத் தரை இறங்கும். இடையில் எங்கும் நிற்காமல் பறந்து, வாழிடம் சேரும் பறவைகளும் உண்டு.
பறவைகள் வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  • தலையில் சிறகு வளர்தல்
  • இறகுகளின் நிறம் மாறுதல்
  • உடலில் கற்றையாக முடி வளர்தல்
  • ஒருவகைப் பறவை வேறுவகைப் பறவையாக உருமாறுதலும் உண்டு
தமிழ் இலக்கியத்தில் வலசைபோதல் செய்திக்குறிப்பு

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு பறவைகள் வந்து சென்ற செய்தியை ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் நாராய் நாராய்,செங்கால் தாராய்" என்னும் பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில் உள்ள "தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.

பறவைகளின் புகலிடம் தமிழ்நாடு

ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது தமிழ்நாடு.

சிட்டுக்குருவிகள் பற்றிய தகவல்கள்

  • தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் சிட்டுக் குருவி .
  • உருவத்தில் சிறியதாக இருக்கும் ஆண், பெண் வேறுபாட்டை உணர முடியும். 
  • ஆண்குருவியின் தொண்டைப்பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும். உடல்பகுதி அடர்பழுப்பாக இருக்கும். 
  • பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. 
  • கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும். 
  • கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். 
  • பதினான்கு நாள்கள் அடைகாக்கும். 
  • பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
  • துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக் குருவிகளும் வாழ்கின்றன. 
  • இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். 
  • இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன
  • தானியங்கள், புழுபூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன் போன்றவை சிட்டுக் குருவிகளின் உணவாகும். 
  • சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு, பூச்சிகளையே உட்கொள்ளும். அதனால், தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும். சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகன் ஆகும். சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும்.
சிட்டுக்குருவிகனின் அழிவுக்குக் காரணங்கள்
  • மனிதர்கள் விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் குருவிக் குஞ்சுகளுக்கு உணவான புழுபூச்சிகள் கிடைப்பதில்லை.
  • நவீன கட்டடங்கள் குருவிகள் கூடு கட்ட ஏற்றவையாக இல்லை.
  • தற்காலத்தில் தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப் படுகின்றன. எனவே சிட்டுக்குருவிகள் வாழ உகந்த வேலித் தாவரங்கள் குறைந்துவிட்டன. 
  • சிட்டுக்குருவிகள் ஓய்வெடுக்கும் புதர்ச்செடிகளும் இல்லை.
  • உணவுக்கும், இருப்பிடத்திற்கும் சிட்டுக் குருவிகளுடன் மற்ற பறவைகள் போட்டியிடுகின்றன.
பறவையினங்களைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியவை
  • ஆல், அரசு போன்ற மரங்களையும் அவரை, புடலை போன்ற கொடிகளையும் வளர்க்க வேண்டும்.
  • நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர்த் தாவரங்களையும் வளர்க்க வேண்டும்.
  • தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இந்தியாவின் பறவை மனிதர்
  • இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி டாக்டர் சலீம் அலி. 
  • தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றைப் படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார். 
  • அதனால், அவர் 'இந்தியாவின் பறவை மனிதர்' என்று அழைக்கப்படுகிறார். 
  • பறவைகள் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார். 
  • தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' (The fali of sparrow) என்று பெயரிட்டுள்ளார்.
  • மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது! என்கிறார் - சலீம் அலி. 
பிரித்தெழுதுக

  1. பெருங்கடல் = பெருமை + கடல்
  2. செங்காேல் = செம்மை + காேல்
  3. வடதிசை = வடக்கு + திசை
  4. இளந்தளிர் = இளமை + தளிர்
  5. பறவையினம் – பறவை + இனம்
சரியான விடையைத் தேர்வு செய்க

1. பறவைகள் இடம் பெயர்தலை என்னவென்று கூறுவர்.

அ) இடம் விட்டு இடம் பெயர்தல்
ஆ) கூட்டமாகச் செல்லுதல்
இ) வலசை போதல்
ஈ) பறந்து போதல்

2. என்பதன் பொருள்

அ) இடம் விட்டு இடம் பெயர்தல்
ஆ) கூட்டமாகச் செல்லுதல்
இ) வலசை போதல்
ஈ) பறந்து போதல்

3.எந்தவகைப் பறவைகள் வலசைபோகின்றன

அ) நீர்வாழ் பறவைகள்
ஆ) நிலவாழ் பறவைகள்
இ) கடல்வாழ் பறவைகள்
ஈ) மரம்வாழ் பறவைகள்

4. பறவைகள் இடம்பெயர்தலுக்காண காரணங்கள் அல்லாத ஒன்று.

அ) உணவு
ஆ) வாழ்வைத்தேடி
இ) தட்பவெப்பநிலை மாற்றம்
ஈ) இனப்பெருக்கம்

5.  கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் இடம்பெயர்தலுக்காண அடிப்படைக் காரணங்கள் அல்லாத ஒன்று.

அ) நிலவு
ஆ) விண்மீன்
இ) புவிஈர்ப்புப் புலம் 
ஈ) வானம்

6. பறவைகள் எத்திசைக்கு வலசை போகின்றன.

1. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி
2. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி
3. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி
4. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி

அ) 1, 2 சரி
ஆ) 1, 3 சரி
இ) 1, 4 சரி
ஈ) 1,3,4 சரி

7. கூற்றுகளை ஆராய்க

கூற்று 1.  பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன.
கூற்று 2. சில பறவை இனங்கள் போவதற்கும் ஒரு வழித்தடத்தையும் வருவதற்கும் வேநு வழித்தடத்தையும் பயன்படுத்துகின்றன.

அ) கூற்று 1, 2 சரி
ஆ) கூற்று 1 சரி, 2 தவறு
இ) கூற்று 1 தவறு, 2 சரி
ஈ) கூற்று 1, 2 தவறு

8. கூற்றுகளை ஆராய்க

கூற்று 1.  பயணம் செய்யும்போது சிலவகைப் பறவைகள் இரை, ஓய்வு போன்ற தேவைகளுக்காக தரை இறங்கும். 
கூற்று 2. முட்டை இடுவதற்காக சில பறவைகள் தரை இறங்கும்

அ) கூற்று 1, 2 சரி
ஆ) கூற்று 1 சரி, 2 தவறு
இ) கூற்று 1 தவறு, 2 சரி
ஈ) கூற்று 1, 2 தவறு

9. வலசைபோதல் - பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

அ) தலையில் சிறகு வளர்தல்
ஆ இறகுகளின் நிறம் மாறுதல்
இ) புதியதாக சிறகுகள் முளைத்தல்
ஈ) உடலில் கற்றையாக முடி வளர்தல்

10. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர்.

அ) சத்திமுத்தப் புலவர்
ஆ) காக்கைபாடினியார்
இ) நப்பச்சொல்லையார்
ஈ) 

11. சத்திமுத்தப்புலவர் எந்தப் பறவையை வலசைபோதலைப் பாடினார்

அ) மீன்கொத்தி
ஆ) பருந்து
இ) நாகனவாய்ப் பறவை
ஈ) செங்கால் நாரை

12. "தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்று பாடியவர்

அ) சத்திமுத்தப்புலவர்
ஆ) கணைக்கால் இரும்பொறை
இ) காக்கைபாடினியார்
ஈ) வானம்பாடியார்

13. "தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்ற பாடலடி எதனைக் குறிப்பிடுகிறது. 

அ) பறந்து செல்லல்
ஆ) வலசைபோதல்
இ) நீர்நிலை அடைதல்
ஈ) மீண்டும் திரும்புதல்

14. நாராய் நாராய் எனத்தாெடங்கும் பாடலை எழுதியவர்

அ) சத்திமுத்தப்புலவர்
ஆ) கணைக்கால் இரும்பொறை
இ) காக்கைபாடினியார்
ஈ) வானம்பாடியார்

15. செங்கால் நாரைகள் எங்கிருந்து தமிழகம் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன

அ) இங்கிலாந்து
ஆ) ஐரோப்பா
இ) எகிப்து
ஈ) ரஷ்யா

16. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாக அமைந்துள்ள இடம்.

அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரா
இ) தெலுங்கானா
ஈ) குஜராத்

17. தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம். 

அ) மைனா
ஆ) சிட்டுக் குருவி .
இ) கரிச்சாஞ்குருவி
ஈ) செம்போத்து

18.  கூடுகட்டும்போதே சத்தமிடும் பறவையினம்.

அ) மைனா
ஆ) சிட்டுக் குருவி .
இ) கரிச்சாஞ்குருவி
ஈ) செம்போத்து

19. பெண் சிட்டுக்குருவியின் உடல், முழுவதும் மங்கிய ............. நிறத்தில் இருக்கும்.

அ) பழுப்பு
ஆ) சிவப்பு
இ) கறுப்பு
ஈ) வெள்ளை

20. ஆண்குருவியின் தொண்டைப்பகுதி ................ நிறத்தில் இருக்கும்.

அ) பழுப்பு
ஆ) சிவப்பு
இ) கறுப்பு
ஈ) வெள்ளை

21. கூற்றுகளை ஆராய்க

கூற்று 1.  உருவத்தில் சிறியதாக இருக்கும் ஆண், பெண் வேறுபாட்டை உணர முடியும்.
கூற்று 2. சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது.

அ) கூற்று 1, 2 சரி
ஆ) கூற்று 1 சரி, 2 தவறு
இ) கூற்று 1 தவறு, 2 சரி
ஈ) கூற்று 1, 2 தவறு

22. சிட்டுக்குருவிகள் எத்தனை முட்டை வரை இடும்.

அ) இரண்டு முதல் மூன்று வரை
ஆ) இரண்டு முதல் ஐந்து வரை
இ) மூன்று முதல் ஆறு வரை
ஈ) கண்க்கில்லாமல்

23. சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் காலம்.

அ) பத்து நாட்கள்
ஆ) பதினைந்து நாட்கள்
இ) பதினான்கு நாள்கள் 
ஈ) இருபது நாட்கள்

24. துருவப் பகுதியில் வாழாத முடியாதப் பறவை

அ) சிட்டுக் குருவி
ஆ) காகம்
இ) மைனா
ஈ) கழுகு

25. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி 

அ) துருவப்பகுதி
ஆ) இமயமலை
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்

26. மனிதன் வாழும் இடங்களில் வாழும் பறவை.

அ) சிட்டுக் குருவி
ஆ) காகம்
இ) மைனா
ஈ) கழுகு

27. தானியங்கள், புழுபூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன் போன்றவை தேடி உண்ணும் பறவை

அ) சிட்டுக் குருவி
ஆ) காகம்
இ) மைனா
ஈ) கழுகு
  
28. சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் எதனை உண்ணும்

அ) தானியங்களை
ஆ) புழு, பூச்சிகளை
இ) தாவரங்களை
ஈ) பூக்கள்

29. சிட்டுக்குருவியின் வாழ்நாள் காலம்

அ) பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள்
ஆ) பத்து முதல் பன்னிரண்டு ஆண்டுகள்
இ) பத்து முதல் பதினைந்து ஆண்டுகள்
ஈ) ஐந்து முதல் ஏழு ஆண்டுகள்

30. உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும் பறவை.

அ) சிட்டுக் குருவி
ஆ) காகம்
இ) மைனா
ஈ) கழுகு

31.' தட்பவெப்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) தட்பம் + வெப்பம்’
ஆ) தட்ப + வெப்பம்
இ) தட் + வெப்பம்
ஈ) தட்பு + வெப்பம்

32.' வேதியுரங்கள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) வேதி + யுரங்கள்
ஆ) வேதி + உரங்கள்
இ) வேத் + உரங்கள்
ஈ) வேதியு + ரங்கள்

33. தரை + இறங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) தரையிறங்கும்
ஆ) தரைஇறங்கும்
இ) தரையுறங்கும்
ஈ) தரையிறங்கும்

34. வழி + தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) வழிதடம்
ஆ) வழித்தடம்
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்

35. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை 

விடை : ஆர்டிக் ஆலா

36. இந்தியாவின் பறவை மனிதர்

விடை : டாக்டர் சலீம் அலி

37. உலகச் சிட்டுக் குருவிகள் நாள் 

விடை : மார்ச் 20

38. டாக்டர் சலீம் அலியின் தன் வரலாற்று நூலின் பெயர்

விடை : சிட்டுக் குருவியின் வீழ்ச்சி.

39. ஆர்டிக் ஆலா எவ்வளவு தூரம் பயணம் செய்யும்.

விடை : 22,000 கி.மீ

40. காக்கைகுருவி எங்கள் சாதி என்று பாடியவர்

விடை : பாரதியார்

41. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை

விடை : கப்பல் பறவை (Frigate bird).

42. கப்பல் பறவை தரையிறங்காமல் எவ்வளவு தூரம் வரை பறக்கும்.

விடை : 400 கிலோ மீட்டர்

43. கப்பல் பறவை _______, _______ என்றும் அழைக்கப்படுகிறது.

விடை : கப்பல் கூழைக்கடா , கடற்கொள்ளைப் பறவை

44. பறவைகள் பற்றிய படிப்பு 

விடை : ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY) 

45. உலகச் சிட்டுக்குருவிகள் நாள் 

விடை :  மார்ச் - 20

No comments:

Post a Comment