Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 9, 2025

10TH TAMIL - முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்


செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்
பைம்பொனசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம் பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை * பா.எண்.8

 

சொல்லும் பொருளும்

பண்டி - வயிறு

அசும்பிய - ஒளிவீசுகிற

முச்சி - தலையுச்சிக் கொண்டை

இலக்கணக்குறிப்பு:

குண்டலமும் குழைகாதும் - எண்ணும்மை

ஆடுக - வியங்கோள் வினைமுற்று

பகுபத உறுப்பிலக்கணம்:

பதிந்து – பதி +த்(ந்) + த் + உ;

பதி - பகுதி

த் சந்தி (ந் - ஆனது விகாரம்)

த் இறந்தகால இடைநிலை

 - வினையெச்ச விகுதி

அணிகலன்கள்

சிலம்பு, கிண்கிணி - காலில் அணிவது
அரைநாண் - இடையில் அணிவது
சுட்டி - நெற்றியில் அணிவது
குண்டலம், குழை - காதில் அணிவது
சூழி - தலையில் அணிவது

நூல் வெளி

குமரகுருபரர் இயற்றிய முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவத்தின் எட்டாம் பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது. 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ். இதில் இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர். பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ். பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும்.

குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு. இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்; கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.

இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) - சிற்றில், சிறுபறை, சிறுதேர்

பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) - கழங்கு, அம்மானை, ஊசல்


1. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்

அ) குமரகுருபரர்
ஆ) இராமலிங்க அடிகள்
இ) தாயுமானவர்
ஈ) செயங்கொண்டார்

2. செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்

அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஒன்று

3. குமரகுருபரரின் காலம்.

அ) 16 ஆம் நூற்றாண்டு
ஆ) 17 ஆம் நூற்றாண்டு
இ) 18 ஆம் நூற்றாண்டு
ஈ) 19 ஆம் நூற்றாண்டு

4. கீழ்க்கண்டவற்றுள் குமரகுருபரர் அறிந்திராத மொழி.

அ) தமிழ்
ஆ) வடமொழி
இ) இந்துஸ்தானி
ஈ) மலையாளம்

5. கீழ்க்கண்டவற்றுள் குமரகுருபரர் இயற்றாத நூல்.

அ) கந்தர் கலிவெண்பா
ஆ) நீதிநெறி விளக்கம்
இ) மதுரைக் கலம்பகம்
ஈ) இரட்டணை கலம்பகம்

6. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சகலகலாவல்லி மாலை, திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூ ல்களை இயற்றியவர்.

அ) குமரகுருபரர்
ஆ) இராமலிங்க அடிகள்
இ) தாயுமானவர்
ஈ) ஞானியாரடிகள்

7. சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை

அ) 16
ஆ) 64
இ) 96
ஈ) 108

8. பிள்ளைத்தமிழில் இடம் பெறும் பருவங்கள்

அ) 8
ஆ) 10
இ) 12
ஈ) 7

9.  பொருத்தி விடை காண்க.

i) அரை நாண் – 1. தலையில் அணிவது
ii) சுட்டி – 2. காதில் அணிவது
iii) குண்டலம், குழை – 3. நெற்றியில் அணிவது
iv) சூழி – 4. இடையில் அணிவது

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 1, 2, 4, 3

10. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

அ) சிற்றில்
ஆ) சிறுபறை
இ) சிறுதேர்
ஈ) ஊசல்

11. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

அ) கழங்கு
ஆ) அம்மானை
இ) ஊசல்
ஈ) சிற்றில்

12. பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள்

அ) 6
ஆ) 7
இ) 8
ஈ) 10

13. பிள்ளைத் தமிழில் இருபாலருக்கும் இடையே வேறுபடும் பருவங்கள்.

அ) 6
ஆ) 3
இ) 7
ஈ) 5

14. காற்றில் ஆடுவது போன்று மிகவும் மென்மையாகக் குழந்தை ஆடும் பருவம்

அ) காப்பு
ஆ) செங்கீரை
இ) தால்
ஈ) சப்பாணி

15. செங்கீரைப் பருவத்தில் குழந்தையின் தலை அசைந்தாடும் மாதம்.

அ) 3 – 4
ஆ) 5 – 6
இ) 7 – 8
ஈ) 9 – 10

16. கிண்கிணி என்ற அணிகலன் அணியும் இடம்.

அ) காலில்
ஆ) இடையில்
இ) நெற்றியில்
ஈ) காதில்

17. குண்டலமும், குழைகாதும், ஆடுக. இச்சொற்களுக்கான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.

அ) எண்ணும்மை, வினையெச்சம்
ஆ) எண்ணும்மை, வியங்கோள் வினைமுற்று
இ) முற்றும்மை, வினையெச்சம்
ஈ) உம்மைத்தொகை, வியங்கோள் வினைமுற்று

18. ‘பதிந்து’  என்ற சொல்லைப் பகுத்தால் கிடைப்பது.

அ) பதி + த்(ந்) + த் + உ
ஆ) பதி + த் + த் + உ
இ) பதி + த் + ந் + உ
ஈ) பதிந்து + உ

19. குமரகுருபரர் எவ்விறைவனைச் செங்கீரை ஆடுமாறு வேண்டுகிறார்

அ) சுவாமி மலை முருகன்
ஆ) வைத்தியநாத முருகன்
இ) திருக்கழுக்குன்ற முருகன்
ஈ) திருச்செந்தூர் முருகன்

20. “கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட”
– என்ற அடிகளில்
இடம்பெற்றுள்ள இலக்கிய நயங்கள்.

அ) மோனை, இயைபு
ஆ) மோனை, எதுகை
இ) எதுகை, இயைபு
ஈ) இயைபு, முரண்

21. ‘சிறு பண்டி சரிந்தாடப்’ என்பதில் ‘பண்டி’ என்பதன் பொருள் .

அ) வயிறு
ஆ) பெருக்கம்
இ) தலை
ஈ) சுருக்கம்

22. அசும்பிய - பொருள் தருக

அ) ஒலிக்கின்ற
ஆ) ஒளிவீசுகிற
இ) அணிகின்ற
ஈ) மிளிர்கின்ற

No comments:

Post a Comment