- நிகழ்வுகளின் கருத்தைக் கூறும் தன்னுணர்ச்சிப் பாடல்களாக அமைந்தவை = சங்க இலக்கியங்கள்.
- அறக் கருத்துக்களை கூறும் இலக்கியங்கள் = பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.
- ஒப்பில்லாத தலைவன் ஒருவனது வாழ்க்கையைப் பாடுவதாக அமைந்தவை = காப்பியங்கள்.
- சீவகனைத் தலைவனாக கொண்டு உருவான காப்பியம் = சீவக சிந்தாமணி.
- சீவக சிந்தாமணி காப்பியத்தின் மையக்கருத்து = இன்பங்களைத் துறந்து துறவு பூனை வேண்டும்.
- சீவகனின் நாடு = ஏமாங்கத நாடு.
- புள்ளிகளும் வரிகளும் உடைய மீன் = வரால் மீன்கள்.
- நெற்பயிர்களின் தோற்றமானது = பச்சைப் பாம்பு போல் இருந்தது.
- நெற்பயிர்கள் கதிர்விட்டு நிமிர்ந்து நிற்பது = செல்வம் பெற்ற பக்குவம் இல்லாதவர் தலை நிமிர்ந்து நிற்பது போல் உள்ளது.
- முற்றிய நெற்பயிர்கள் சாய்ந்து நிற்பது = தெளிந்த நூலைக் கற்ற நல்லவர்களின் பணிவைப் போல் உள்ளது.
- “தேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்ந்தவே” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = சீவக சிந்தாமணி.
- ஏமாங்கத நாட்டில் நாள்தோறும் கிடைக்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை = ஆயிரம்.
- மகளிர் ஒப்பனை செய்து கொள்ளும் மணிமாடங்கள் = ஆயிரம்.
- ஏமாங்கத நாடு யாருக்கு இனிய இடமாகும் = உண்மையான தவம் புரிவோர்க்கும், இல்லறம் நடத்துவோருக்கும்
- சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
- இது விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியமாகும்.
- விருதப்பாவால் இயற்றப்பட்ட தமிழின் முதல் காப்பியம் = சீவக சிந்தாமணி.
- ‘இலம்பகம்’ என்ற உட்பிரிவுகளைக் கொண்டது.
- 13 இலம்பகங்களைக் கொண்டுள்ளது இந்நூல்.
- சீவக சிந்தாமணியில் உள்ள இலம்பகங்களின் எண்ணிக்கை = 13.
- ‘மணநூல்’ எனவும் அழைக்கப்படுகிறது இந்நூல்.
- “மணநூல் என அழைக்கப்படும் நூல் = சீவக சிந்தாமணி.
- நாமகள் இலம்பகத்தில் நாட்டுவளம் என்னும் பகுதி பாடமாக அமைந்துள்ளது.
- இதன் ஆசிரியர் திருத்தக்கதேவர்.
- சமண சமயத்தைச் சார்ந்த இவர், இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்றமுடியும் என்று நிறுவும் வகையில் இக்காப்பியத்தை இயற்றினார்.
- இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டு.
- சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக ‘நரிவிருத்தம்’ என்னும் நூலை இயற்றினார் என்பர்.
- “நரிவிருத்தம்” என்னும் நூலை இயற்றியவர் = திருத்தக்கதேவர்.
அருஞ்சொற்பொருள்
- தெங்கு = தேங்காய்
- இசை = புகழ்
- வருக்கை = பலாப்பழம்
- நெற்றி = உச்சி
- மால்வரை = பெரிய மலை
- மடுத்து = பாய்ந்து
- கொழுநிதி = திரண்ட நிதி
- மருப்பு = கொம்பு
- வெறி = மணம்
- கழனி = வயல்
- செறி = சிறந்த
- இரிய = ஓட
- சூல் = கரு
- அடிசில் = சோறு
- மடிவு = சோம்பல்
- கொடியனார் = மகளிர்
- நற்றவம் = பெருந்தவம்
- வட்டம் = எல்லை
- வெற்றம் = வெற்றி
இலக்கணக்குறிப்பு
- நற்றவம் = பண்புத்தொகை
- செய்கோலம் = வினைத்தொகை
- தேமாங்கனி (தேன் போன்ற மாங்கனி) = உவமைத்தொகை
- இறைஞ்சி = வினையெச்சம்
- கொடியனார் = இடைக்குறை
1. விருத்தப்பாக்களால்
இயற்றப்பட்ட முதல் காப்பியம்.
அ) சிலப்பதிகாரம்
ஆ) சீவகசிந்தாமணி
இ) குண்டலகேசி
ஈ) கம்பராமாயணம்
2. சீவகசிந்தாமணியின்
ஆசிரியர்.
அ) சீத்தலைசாத்தனார்
ஆ) திருத்தக்கத்தேவர்
இ) வர்த்தமான தேவர்
ஈ) கந்தியார்
3. சீவகசிந்தாமணி
.......... சமயம் சார்ந்த நூல்.
அ) சைவ
ஆ) வைணவ
இ) சமண
ஈ) பௌத்த
4. சீவகசிந்தாமணிக்கு
முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் இயற்றிய நூல்.
அ) சிந்தாமணிமாலை
ஆ) நரிவிருத்தம்
இ) சுரமஞ்சரி
ஈ) விருத்தமாலை
5. சீவக சிந்தாமணியின்
மற்றோரு பெயர்.
அ) இன்பநூல்
ஆ) துன்பநூல்
இ) துறவுநூல்
ஈ) மணநூல்
6. சீவகசிந்தாமணியின்
காலம்........... நூற்றாண்டாகும்.
அ) இரண்டாம்
ஆ) ஐந்தாம்
இ) ஒன்பதாம்
ஈ) பத்தாம்
7. சீவகசிந்தாமணியில்
அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை.
அ) 1300
ஆ) 2358
இ) 3145
ஈ) 4679
8. சீவகசிந்தாமணியில்
அமைந்துள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை.
அ) 13
ஆ) 23
இ) 30
ஈ) 49
9. சீவகசிந்தாமணியின் உட்பிரிவுகள் .......... என அழைக்கப்படுகிறது.
அ) காதை
ஆ) படலம்
இ) இலம்பகம்
ஈ) சருக்கம்
10. ‘இன்பங்களைத்
துறந்து துறவு பூணவேண்டும்’ என்ற மையக் கருத்தைக் கொண்ட காப்பியம்.
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) குண்டலகேசி




No comments:
Post a Comment