Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 3, 2025

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் - 04


சங்க இலக்கியம்

  • பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த காலம் சங்க காலம்எனப்படும்.
  • கி.மு. 2 நூற்றாண்டு முதல் கி.பி. 2 நூற்றாண்டுவரை உள்ள இடைப்பட்டக் காலத்தைச் சங்க காலம் என்பர்.
  • சங்க காலத்தில் எழுந்த நூல்கள் சங்க இலக்கியங்கள் எனப்பட்டன.
  • சங்க இலக்கிய செய்யுட்களைச் சான்றோர் செய்யுட்கள் என்று கூறுவார் பேராசிரியர்.
  • சங்க இலக்கிய நூல்களைத் தொகை, பாட்டு என இரண்டாகப் பிரிப்பர்.
  • பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பைத் தொகை என்றும் தனி ஒரு புலவர் பாடிய பாடலைப் பாட்டு என்றும் கூறுவர்
  • தொகை என்பது எட்டுத்தொகையைக் குறிக்கும்
  • பாட்டு என்பது பத்துப்பாட்டைக் குறிக்கும்.
  • எட்டுத்தொகை என்பது எட்டுத் தொகை நூல்களின் தொகுப்பாகும்.
  • சங்க இலக்கியங்களைத் திணை இலக்கியங்கள் என்றும் கூறுவர்.
  • சங்க இலக்கியத்தில் வரும் அகப்பாடல்கள் பாத்திரங்களின் கூற்றிலும் புறப்பாடல்கள் புலவர்கள் கூற்றிலும் அமைந்துள்ளன.
  • சங்க இலக்கியங்களை பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும் கூறுவர்.
  • எட்டுத் தொகையில் எட்டுத் தொகை நூல்கள் உள்ளன. அவை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநாநூறு என்பனவாகும்.
        நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
        
த்த பதிற்றுப்பத்து ங்கு பரிபாடல்
        கற்றறிந்தார் ஏத்தும் கலியோ
டு கம்புறமென்று
        இத்திறத்த எட்டுத் தொகை.
  • எட்டுத் தொகை நூல்களை அகம், புறம் (அகத்திணை நூல்கள், புறத்திணை நூல்கள்) என இரண்டாகப் பிரிப்பர்.
  • எட்டுத்தொகை நூல்களில் அகத்திணை நூல்கள் ஐந்து
  • வை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்பனவாகும்.
  • எட்டுத்தொகை நூல்களுள் புறத்திணை நூல்கள் இரண்டு
  • அவை, பதிற்றுப்பத்து, புறநானூறு என்பனவாகும்.
  • எட்டுத்தொகை நூல்களுள் அகமா? புறமா? என்ற ஐயம்கொண்ட நூல் பரிபாடல்.
  • பரிபாடலை அகப்புற நூல்கள் என்றும் கூறுவர்.
  • எட்டுத் தொகையுள் பாடப்பட்ட யாப்பினால் பெயர்பெற்ற நூல்கள் இரண்டு
  • அவை, கலித்தொகை (கலிப்பா), பரிபாடல் (பரிபாட்டு) என்பன.
  • இந்த கலிப்பாவும் பரிபாடலும் அகத்திணைப் பாடுதற்குரிய பாக்களாகத் தொல்காப்பியர் கூறுவார்.
  • எட்டுத் தொகை நூல்களுள் காலத்தால் முந்தைய நூல் புறநானூறு.
  • எட்டுத் தொகை நூல்களுள் காலத்தால் பிந்தைய நூல்கள் இரண்டு. அவை, கலித்தொகை. பரிபாடல் என்பன
  • நல் என்ற அடைமொழிக் கொண்ட நூல் நற்றிணை.
  • நல்ல என்ற அடைமொழிக் கொண்ட நூல் குறுந்தொகை.
  • ஒத்த என்ற அடைமொழிக் கொண்ட நூல் பதிற்றுப்பத்து.
  • ஓங்கு என்ற அடைமொழிக் கொண்ட நூல் பரிபாடல்.
  • கற்றறிந்தார் ஏத்தும் என்ற அடைமொழிக் கொண்ட நூல் கலித்தொகை.
  • எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, பரிபாடல் ஆகியன தனித்தனிப் பாடல்களாகப் பாடப்பட்டுத் தொகுக்கப்பெற்ற தனிநிலைச் செய்யுட்களாகும்.
  • ஐங்குறுநூறு. கலித்தொகை ஆகியன சொல்லாலும், பொருளாலும் தொடர்ந்து பாடப்பட்ட தொடர்நிலைச் செய்யுட்களாகும்.

No comments:

Post a Comment