Breaking

Thursday, September 30, 2021

11TH TAMIL புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 15 ( வேர்ச்சொற்களை எச்சங்களாகவும் , வினைமுற்றாகவும் மாற்றுதல் )


மதிப்பீடு

1. வேர்ச்சொல் என்றால் என்ன ?

  • பிரிக்கமுடியாத அடிப்படைச் சொல்லே வேர்ச்சொல் ஆகும் .
  • சான்று - நட
2. வேர்ச்சொல்லின் முக்கியத்துவம் என்ன ?

சொற்கள் தோன்றுவதற்கும் , பொருள் புரிவதற்கும் வேர்ச்சொல்லே அடிப்படை ஆகும்.
         
3. பெயரெச்சம் என்றால் என்ன?

  • பெயரைக் கொண்டு முடியும் சொல் பெயரெச்சம் எனப்படும்.
  • "வந்த கண்ணன்"
  • இதில் வந்த என்ற எச்சச்சொல் கண்ணன் என்ற பெயரைக் கொண்டு முடிவதால் இது பெயரெச்சம் எனப்படும்.


4. வேர்ச்சொல் எப்படி வினைமுற்றுகளாக மாற்றமடைகின்றது என்பதை விளக்குக.

  • வினைமுற்று :
  • ஒரு செயல் முடிவதை சுட்டுவது வினைமுற்று ஆகும்.
  • நடி  - நடித்தான்
  • செல்  -  சென்றான்
  • இப்படி வேர்ச்சொல் வினையைக் கொண்டு முடிந்தால் வினைமுற்று ஆகும்

No comments:

Post a Comment